Skip to main content

"எங்களை 25 தொகுதிகளிலும் ஜெயிக்க வைத்திருக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

 "எங்களை 25 தொகுதிகளிலும் ஜெயிக்க வைத்திருக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

ஒரு பட்ஜெட் என்றால்இந்தியாவுக்கு பொதுவானது தமிழ்நாட்டுக்கு இது கேரளாவுக்கு இதுதான் என்று தனித்தனியே பெயர் சொல்ல முடியாது.

பட்ஜெட்டில் தமிழ்நாடுபெயர் வந்திருக்கவேண்டும்
என்றால் எங்களுக்கு 25  எம்பிக்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆட்சி செய்யும் பீகார் மற்றும் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்யும் ஆந்திரா மாநிலங்களுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் தமிழ்நாட்டுக்கு பிரத்யேகமாக எந்த திட்டமும்அறிவிக்கப்படவில்லை. இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கோபமடைந்துள்ளன. தமிழகத்தை திமுக ஆட்சி செய்யும் நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வென்றதால் தான் மத்திய பாஜக அரசு இப்படி நடந்து கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இந் நிலையில் தான் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பிரத்யேகமாக எந்த திட்டமும் அறிவிக்கப்படாதது பற்றி பாமக தலைவர் அண்புமணி ராமதாஸிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டது. பாஜக கூட்டணியில் பாமக உள்ள நிலையில் சென்னையில்  அன்புமணி ராமதாஸிடம் இதுபற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அன்புமணி ராமதாஸ் 'இந்த பட்ஜெட் 48 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட். இந்த 48 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்று எதுவும் வந்திருக்காதா? '' என்று பதில் கேள்வி கேட்டார். இதையடுத்து பத்திரிகையாளர் ஒருவர், ''தமிழ்நாட்டுக்கு என்று தனியாக எதுவும் அறிவிக்கவில்லை'' என்று கூறினார் அதற்கு அன்புமணி ராமதாஸ், ''தனியாக பெயர் சொல்ல முடியாது. ஒரு பட்ஜெட் என்றால் இந்தியாவுக்கு பொதுவானது தான். தமிழ்நாட்டுக்கு இது கேரளாவுக்கு இதுதான். கர்நாடகாவுக்கு இதுதான் என்று பெயர் சொல்ல முடியாது. பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வந்திருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு 25 எம்பிக்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும்'' என காட்டமாக கூறினார்.

"இந்த வேளையில் இதுதான் காரணமா சார்'' என்று பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு அன்புமணி ராமதாஸ், ''காரணம் அதுவல்ல.. நான் சும்மா சொல்கிறேன். உண்மையில் வருத்தமாக தான் இருக்கிறது. இன்னும் ஒருநாள் கழித்து பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு ஒதுக்கி உள்ளார்கள் என்பதை எடுத்து சொல்கிறேன். இதுதொடர்பாக டேட்டா எடுத்து கொண்டிருக்கிறேன். நாளை இதுபற்றி தெளிவுப்படுத்துகிறேன். ''என கூறி சென்றார்.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் அளித்த இந்த பேட்டி தொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு தனியாக திட்டம் எதையும் மத்திய அரசு அறிவிக்காத நிலையில் பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வந்திருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு 25 எம்பிக்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும் எனக்கூறியதை மேற்கொள்காட்டிய அன்புமணி ராமதாஸை அனைவரும் தாக்கி பேசி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...