Skip to main content

"அதானி - அம்பானி A1, A2" நாடாளுமன்றத்தில் அனல் தெறிக்க பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி!

"அதானி - அம்பானி A1, A2"  நாடாளுமன்றத்தில் அனல் தெறிக்க பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி!

2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜூலை 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதையடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,

" மோடி ஆட்சியைக் கண்டு அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள், ஏன் இந்த ஆட்சியில் ஒன்றிய அமைச்சர்களே ஒருவித அச்சத்தில் தான் உள்ளார்கள். பாஜக ஆட்சியில் பிரதமராக மோடி மட்டுமே அனைத்தையும் செய்கிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமராக விரும்பினால் அவர் பல பிரச்சனைகளை எதிர்க்கொள்ள நேரிடும்.

பாஜகவின் பிரச்சனை என்னவென்றால், பிரதமராக வேண்டுமென்ற கனவைக் காண அக்கட்சியில் ஒருவருக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. ஒருவேளை பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரதமராக விரும்பினால், பெரும் ஆபத்து வருமென்கிற அச்சம் இருக்கிறது. என்னுடைய கேள்வி ஒன்றுதான். பாஜகவில் இருக்கும் நண்பர்களும் அமைச்சர்களும் இந்தளவுக்கு பயப்பட என்ன காரணம்?.

மகாபாரத்தில் சக்கர வியூகம் நடந்தது. மோடி ஆட்சியில் தாமரை வியூகம் நடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குருஷேத்ரா போரில் அபிமன்யுவை சக்கர வியூகம் அமைத்து கொன்றார்கள். அபிமன்யுவை கொன்ற 6 பேரை போலவே இப்போதும் ஒன்றிய அரசில் 6 பேர் தான் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்

வருமானவரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுகின்றன. ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் பயங்கரவாதத்தை ஒன்றிய அரசு ஏவியுள்ளது.

ஜி.எஸ்.டி-யால் சிறு, குறு தொழில்கள் அழிந்து வருகின்றன. ஆனால், பெரும் முதலாளிகளுக்கான பட்ஜெட்டை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவின் வணிகமே இருவரை சார்ந்து தான் இருக்கிறது. அவர்களிடம் தான் விமான நிலையம், தொலைத்தொடர்பு, துறைமுகங்கள் என பல துறைகள் உள்ளன. அதில் ரயில்வேவும் விரைவில் இடம்பெறவுள்ளது.

நீங்கள் கட்டியமைத்திருக்கும் சக்கர வியூகம் கோடிக்கணக்கான மக்களுக்கு பாதிப்பை தந்து கொண்டிருக்கிறது. உங்களின் சக்கர வியூகத்தை நாங்கள் உடைப்போம். அதை செய்யத்தான், நீங்கள் பயந்து நடுங்கும், சாதி வாரி கணக்கெடுப்பு என்கிற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறோம்.

அக்னிவீர் இளைஞர்களின் ஓய்வூதியம் குறித்து ஒரு வார்த்தையும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அக்னிவீர் திட்டம் என்கிற பெயரில் 'சக்கர வியூக'த்துக்குள் இந்திய இளைஞர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீர மரணமடைந்த அக்னிவீர் திட்ட ராணுவ வீரர் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியதாக கடந்த முறை கூறியது பொய்யான தகவல். காப்பீட்டுத் தொகை தான் வழங்கப்பட்டுள்ளது.

மோடி, அமித் ஷா, அஜித் தோவல், மோகன் பகவத், அதானி மற்றும் அம்பானி அமைத்த சக்கர வியூகத்தில் இந்தியா சிக்கியிருக்கிறது.

அபிமன்யு கொல்லப்பட்டது போல், அவர்கள் நம் நாட்டை கொன்று கொண்டிருக்கிறார்கள்.

கை தட்டுவது, செல்போனில் டார்ச் அடிப்பதுதான் இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்பா?, இளைஞர்களுக்கு இண்டெர்ன்ஷிப் திட்டம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய காமெடி. இளைஞர்களின் கால்களை உடைத்துவிட்டு தற்போது பேண்டேஜ் போட முயல்கிறீர்கள்.

பட்ஜெட்டுக்கு முன் அல்வா தயாரிக்கும் நிகழ்வில் கூட பழங்குடியினர், ஒபிசி பிரிவினர், சிறுபான்மையினர் ஒருவரும் இல்லை" என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அதானி - அம்பானி பெயர்களை ராகுல் காந்தி குறிப்பிட்டபோது, சபாநாயகர் இடைமறித்ததார். பிறகு அதானி - அம்பானி என குறிப்பிடுவதற்கு பதில் A1, A2 என குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...