Skip to main content

தமிழகத்தில் ரௌடிகளின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் ரௌடிகளின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் ரௌடிகளின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காவல்துறை வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்தன.

தமிழகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா், குற்ற நடவடிக்கை அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டுள்ளனா். சமீபத்தில் இதற்கான மதிப்பீடு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இதில் 'ஏ பிளஸ்' பட்டியலில் 421 போ், 'ஏ' பட்டியலில் 836 போ், 'பி' பட்டியலில் 6,398 போ், 'சி' பட்டியலில் 18,807 போ் என 26,462 ரௌடிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த காலங்களை ஒப்பிடும் போது தற்போது 'ஏபிளஸ்' மற்றும் 'ஏ' பட்டியல் ரௌடிகளின் எண்ணிக்கை சுமாா் 50 சதவீதம் குறைந்துள்ளது.

இதுபோன்ற தொடா் குற்றச்செயலில் ஈடுபடும் ரௌடிகளை கட்டுப்படுத்த காவல் நிலைய அளவில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும் அதிக குற்றச்செயலில் ஈடுபடும் 550 ரௌடிகள் கண்டறியப்பட்டு அவா்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது. இதில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கொலை வழக்கில் தொடா்புடைய 119 ரௌடிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனா்.

இதே போல சிறையில் உள்ள ரௌடிகளும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். ரௌடிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த டிஎஸ்பி தலைமையிலான ரௌடி கண்காணிப்பு குழு மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு ரௌடிகளின் செயல்பாடு, அவா்களின் நடவடிக்கை, சட்டவிரோத செயல்பாடு, அவா்களின் பொருளாதார பணப்பரிமாற்றம், அரசியல் தொடா்பு, சட்ட வழக்குகளின் நிலைமை, நீதிமன்ற விசாரணை உள்ளிட்ட 10 இலக்குகளைக் கொண்டு செயல்படுகிறது.

மேலும், இக்குழு ரௌடிகள் மீது நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதிலும் தீவிரம் காட்டி வருகிறது. இதன் விளைவாக கடந்த 6 மாதத்தில் 61 ரௌடிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, விதிகளை மீறிய 19 ரௌடிகளின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொலை வழக்குகளில் போலி குற்றவாளிகள் சரணடைவதைத் தடுக்க சட்டரீதியாக காவல்துறை வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ரௌடிகளை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் எதிரொலியாக நிகழாண்டு ஜூன் வரை 2,285 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

2019-ஆம் ஆண்டு 1,678 கொலைகளும், 2023-இல் 1,599 கொலைகளும் நிகழ்ந்த நிலையில் நிகழாண்டு ஜூன் வரை 792 கொலைகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...