திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம்!
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யார் தொகுதி, வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வயலூர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது
வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்
சிறப்பு அழைப்பாளர்களாக,
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே. மோகன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச் செயலாளர் வழக்கறிஞர் பி.ஜாகீர் உசேன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர்
உடன் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜ்கணேஷ் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஜெ.சிவா உள்ளிட்ட ஒன்றிய, பேரூராட்சி வட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்
Comments
Post a Comment