Skip to main content

தெலுங்கானா பட்ஜெட் சிறுபான்மையினர் நலத்துறைக்கு அதிக நிதிஎஸ்சி, எஸ்டி துறைக்கு நிதி குறைப்பு

தெலுங்கானா பட்ஜெட் சிறுபான்மையினர் நலத்துறைக்கு அதிக நிதி
எஸ்சி, எஸ்டி துறைக்கு நிதி குறைப்பு

காங்கிரஸ் தலைமையிலான தெலுங்கானா அரசு, நடப்பாண்டு பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கான நலனுக்காக ரூ.3,003 கோடியை ஒதுக்கியிருக்கிறது.

இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 36 சதவிகிதம் அதிகமாகும். அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி சமூக வளர்ச்சிக்கான நிதியை குறைத்திருக்கிறது.

நேற்று தெலுங்கான மாநில சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பாட்டி விக்ரமார்கா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மொத்த பட்ஜெட் தொகையாக ரூ.2.91 லட்சம் கோடி என்று அறிவித்த அவர், 

"சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பது மாநிலத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்" 

என்று கூறியிருந்தார்.

இந்த பட்ஜெட்டில் சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக ரூ.3,003 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ரூ.2,195 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 36% அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேசிய விக்ரமார்கா,

"பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் பயிற்சி வசதிகளைப் போலவே சிறுபான்மை மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும். தொழிற் பயிற்சி பெறும் மாணவர்கள் உள்ளூர் மாணவராக இருந்தால் அவருக்கு ரூ.2500 வழங்கப்படும். இதே அம்மாணவர் வெளியூரை சேர்ந்தவராக இருந்தால்
ரூ.5000 உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த ஆண்டு ஜனவரியில் தப்லிக் ஜமாத், இஜ்திமா வுக்கு தெலுங்கானா அரசாங்கம் ரூ.2.4 கோடியை வழங்கியுள்ளது.

அதேபோல, ஹஜ் யாத்ரீகர்களுக்கு ரூ.4.43 கோடியை விடுவித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை 14 சதவிகிதமாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே கூடுதல் நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

சிறுபான்மையினர் தவிர, பெண்கள் முன்னேற்றத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு ரூ.2,736 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இந்த துறைக்கு ரூ.2,131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகளின் கல்வியை பொறுத்தவரை, அங்கன்வாடி பள்ளிகள் சிறப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அம்மா ஆதார் பாடசாலை குழுக்களை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை பொறுத்தவரை கடந்த ஆண்டு ரூ.6,229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இந்த துறைக்கு ரூ.9,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் பட்டியலின மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு பட்டியல் சமூகத்தினர் மேம்பாட்டு துறைக்கு ரூ.21,072 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு வெறும் ரூ.7,638 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.13,434 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல பழங்குடியினர் நலத்துறைக்கு இந்த ஆண்டு ரூ.3,969 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ரூ.4,365 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

சிறுபான்மையினர் நலனுக்காக நிதி கூடுதலாக ஒதுக்கியது வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால், அதற்காக பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வெட்ட வேண்டுமா? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...