வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா, தமிழ்நாடு நாள் விழா மற்றும் விண்வெளியில் முதன் முதலில் வீரர்கள் கால் பதித்த தினம் உள்ளிட்ட முப்பெரும் விழாவானது ஆசியன் மெடிக்கல் அகாடமியில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா தலைமை தாங்கினார்.
சங்க செயலாளர் இரா. பாஸ்கரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் லோ. இராஜசேகரன் பங்கேற்று, தமிழ் கல்வியும் அறிவியலும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்வில் துணைத் தலைவர்கள் முகமது அப்துல்லா, பா. சீனிவாசன், துணைச் செயலாளர்கள் சா.ரஷீனா, எ. ராஜ்குமார் ஆகியோர் கவிதை வாசித்தனர். மேலும் துணைத் தலைவர் வந்தை பிரேம், உறுப்பினர் கு. சதானந்தன் ஆகியோர் சிற்றுரை வாசித்தனர். முதன்மை செயற்குழு உறுப்பினர் இரா. அருண்குமார், செல்வி சஹானா ஆகியோர் தமிழிசைப் பாடல்கள்களை பாடினர். இந் நிகழ்வில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் வெ.அரிகிருஷ்ணன், முரளி, அ.ஷாகுல் அமீது, ம.சுரேஷ்பாபு , காவல்துறை அதிகாரி மா. கதிரொளி, வினோத் குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இறுதியில் பொருளாளர் சீ. கேசவராஜ் நன்றி கூறினார்.
Comments
Post a Comment