Skip to main content

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்: திமுக எச்சரிக்கை

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்: திமுக எச்சரிக்கை

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மீண்டு்ம் திறக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. அவற்றைத் திறக்கக்கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ரேஷன் கடைகளை திறந்து அரிசி மற்றும் உணவுப் பொருட்களை தர கடந்த மக்களவைத் தேர்தலின் போது முதல்வர் ரங்கசாமியிடம் மக்கள் வலியுறுத்தினர். தேர்தல் முடிந்த நிலையிலும் இதுவரை ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை.

இது தொடர்பாக இன்று  செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா,

"தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களில் நியாய விலைக்கடைகளில் அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களோடு, எண்ணெய், பருப்பு வகைகள், மாவுப் பொருட்கள், காய்கறிகளும் விநியோகம் செய்யப்படுகின்றன. இவைமட்டுமல்லாது அன்றைய சந்தையில் விலையேறி அரிதாக உள்ள பொருள்களும் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுவது மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் உள்ளன. ஆனால் புதுச்சேரி இதற்கு விதிவிலக்காக ரேஷன் கடைகளே இல்லாத ஒரே மாநிலமாக விளங்குவது மக்கள் விரோதச் செயலாகும். கடந்த காலங்களில் ஏன் ரேஷனில் அரிசி போடுவது நின்று போனது என்பது இன்றைய முதல்வருக்கும் ஊருக்கும் தெரியும். மத்திய அரசின் கொள்கை திணிப்புக்கு உடன்பட்டே ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இக்கடைகளை நம்பியிருக்கும் லட்சக் கணக்கான மக்களும், நூற்றுக் கணக்கான ஊழியர்களும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்த துறையை கையில் வைத்திருக்கின்ற பாஜக அமைச்சரும் கடந்த மூன்று ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது உடனடியாக ரேஷன் கடைகளை திறந்து விடுவோம் என்று முதல்வர் ஒப்புதல் கொடுத்தார். ஆனால், இதுவரை ரேஷன் கடைகளை திறக்க புதுச்சேரி அரசிடம் எந்த நடவடிக்கையும் இல்லை. புதுச்சேரி அரசியலில் பாஜக–வுக்கும், என்.ஆர்.காங்கிரசுக்கும் இடையில் நடக்கும் கூட்டணி சண்டைகூட பதவிக்காகத்தானே தவிர மக்களுக்காக அல்ல.

ரேஷன் கடைகளை திறக்க தாமதமாவதற்குக் காரணம் அதில் கிடைக்கும் கமிஷனும், கரப்ஷனும் தானோ என்ற அச்சம் தொடர்கிறது. செயலற்ற இந்த அரசு மீது ரேஷன் கடைகளை திறக்கச் சொல்லும் மக்களின் கோபம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே, பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டும், நியாய விலைக்கடையே இல்லாத மாநிலம் புதுச்சேரி என்ற அவப்பெயரை நீக்கிட வேண்டியும், உடனடியாக ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்று மீண்டும் இந்த அரசை திமுக வலியுறுத்துகிறது.

அதிமுக்கியமான இத்துறையை முதல்வரின் அதிகாரத்திற்குள் கொண்டு வந்தால் செயல்பாடு விரைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து இந்த அரசு மெத்தனம் காட்டுமேயானால் மாநில அளவில் மட்டுமின்றி ஒவ்வொரு ரேஷன் கடை முன்பாகவும் பொதுமக்களையும், ஊழியர்களையும் திரட்டி மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும்.” என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...