ஆரணி: விடியா திமுக அரசின் அவல நிலையை கண்டித்து அதிமுக துண்டு பிரசுரம்!
ஆரணி சட்டமன்ற தொகுதி மேற்கு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் கஞ்சா போதை பொருள் மற்றும் கள்ளச் சாராயம் தலைவிரித்து ஆடுவதை கண்டித்து,
முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில்,
தி,மலை மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதா லட்சுமிகாந்தன் முன்னாள் எம்எல்ஏ கலந்து கொண்டு அரையாளம், மருசூர், தச்சூர் தேவிகாபுரம், பகுதிகளில் விடியா திமுக அரசின் அவலநிலையை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்கள்.
இந் நிகழ்வில்,மாவட்ட கழக அவை தலைவர் கோவிந்தராஜன், ஒன்றிய கழக செயலாளர்கள் வழக்கறிஞர் கே.சங்கர், ஜெயபிரகாஷ் ஆரணி நகர கழக செயலாளர் எ.அசோக்குமார்,
மாவட்ட கழக பொருளாளர் அரையாளம் எம்.வேலு,
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரி பி.பாபு, தி,மலை மத்திய மாவட்ட, ஒன்றிய,பேரூராட்சி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment