Skip to main content

டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை கண்டதும் சுட உத்தரவு!

டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை கண்டதும் சுட உத்தரவு!

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டோரின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் தரப்படும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக வெடித்துள்ளன.

இந்தப் போராட்டங்களில் இதுவரை 130 க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கைத் தாண்டி வெளியே வருவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு அரசு வேலைகளில் சுமார் 30 இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், இந்த இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ளன.

வங்கதேசத்தில் தொடரும் வன்முறையில் இதுவரை குறைந்தது 133 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆளும் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு இந்த போராட்டம் மிகப் பெரிய ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. ஹசீனா வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் செல்லவிருந்தார். இருப்பினும், போராட்டம் தொடர்ந்த நிலையில், தனது திட்டங்களை ரத்து செய்துவிட்டார்.

அங்கே பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வன்முறைப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு போலீசார் திணறி வருகின்றனர் மேலும், ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

கண்டதும் சுட உத்தரவு: மக்கள் அத்தியாவசியப் பணிகளைச் செய்ய அனுமதிக்கும் வகையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஊரடங்குச் சட்டம் சில மணி நேரம் மட்டும் நீக்கப்பட்டது. இருப்பினும், சில மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அனைத்து கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை வங்கதேச அரசு எடுத்து வரும் நிலையில், ஊரடங்கை மீறி வெளியே வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த கடந்த வியாழக்கிழமை முதலே அங்கு இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

 வங்க தேசத்தில் வன்முறை போராட்டங்கள் தொடரும் நிலையில், சுமார் 1,000 இந்திய மாணவர்கள் வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர வெளியுறவு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவர்கள் நேபாளம், பூடான் வழியாக இந்தியா திரும்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல வங்கதேசத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்காவும் தனது நாட்டுக் குடிமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

1971இல் பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு அரசு வேலைகளில் பொதுப் பிரிவினருக்கு 44 சதவீதம் வழங்கப்படும் நிலையில், மீதமுள்ள 56 சதவீதம் பல்வேறு பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது.

போராட்டம் ஏன்: குறிப்பாகச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு 30 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. மேலும், பெண்களுக்கு 10 சதவீதம், பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு, சிறுபான்மை இன மக்களுக்கு 5 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. 

இதில்  சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் போராட்டக்காரர்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டோரின் இட ஒதுக்கீட்டை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...