நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படுகிறது. இப்பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் டி. சகாயராஜ் கொடியை புனிதம் செய்து, ஏற்றி வைக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வுகளான சிலுவைப் பாதை நிகழ்ச்சி செப்டம்பர் 6-ஆம் தேதியும், சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியும், அலங்காரத் தேர் பவனியும் செப். 7-ஆம் தேதியும், நடைபெறுகின்றது. இறுதியாக செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை 6 மணியளவில் கொடியிறக்கத்துடன்விழா நிறைவடைகிறது. மேலும், விழா நாட்களில் பேராலயம், விண்மீன் கோயில், பேராலய கீழ்கோயில், பேராலய மேல் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கொங்கணி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்படும். குறிப்பாக திருத்தல கலையரங்கில் நாள்தோறும் நற்செய்தியின் அடிப்படையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இவ் விழாவிற்கு இந்தியாவில் இருந்து மட்டும் அல்ல, பல்வேறு பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் வேளா...