Skip to main content

Posts

Showing posts from August, 2024

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படுகிறது. இப்பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் டி. சகாயராஜ் கொடியை புனிதம் செய்து, ஏற்றி வைக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வுகளான சிலுவைப் பாதை நிகழ்ச்சி செப்டம்பர் 6-ஆம் தேதியும், சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியும், அலங்காரத் தேர் பவனியும் செப். 7-ஆம் தேதியும், நடைபெறுகின்றது. இறுதியாக செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை 6 மணியளவில் கொடியிறக்கத்துடன்விழா நிறைவடைகிறது. மேலும், விழா நாட்களில் பேராலயம், விண்மீன் கோயில், பேராலய கீழ்கோயில், பேராலய மேல் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கொங்கணி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்படும். குறிப்பாக திருத்தல கலையரங்கில் நாள்தோறும் நற்செய்தியின் அடிப்படையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இவ் விழாவிற்கு இந்தியாவில் இருந்து மட்டும் அல்ல, பல்வேறு பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் வேளா...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலை: நீதி கேட்டு நடத்தப்பட்ட மாணவர் பேரணியில் வன்முறை!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலை: நீதி கேட்டு நடத்தப்பட்ட மாணவர் பேரணியில் வன்முறை ! பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக மாறின. போலீஸ் தாக்குதலை கண்டித்து இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், 'பெண் மருத்துவர் மரணத்துக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்' என்பன உள்ளிட்ட...

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும் - இரா.முத்தரசன்

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும் - இரா.முத்தரசன் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்,பாலஸ்தீன மக்களை கொன்றுகுவிக்கும் இஸ்ரேல்-அமெரிக்காவின் போர் மற்றும் இனப் படுகொலையைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் பங்கேற்று பேசியதாவது: "இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கடந்த 10 நாட்களாக கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர்கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் முதல் பிரதமரான நேரு காலம் தொடங்கி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து இந்தியா ஆதரவு நிலை எடுத்தது. ஆனால், இப்போது மத்தியில் உள்ள பாஜக அரசு இஸ்ரேலில் உள்ள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படுவது, இந்தியாவின் அணி சேரா கொள்கைக்கு...

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வேடமிட்ட மாணவர்களுக்கு பரிசுகள்!

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வேடமிட்ட மாணவர்களுக்கு பரிசுகள்! வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் மா. ரகுபதி, புலவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜவகர் சிறுவர் மன்றம் ஒருங்கிணைப்பாளர் பெ. பார்த்திபன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கோ. ஸ்ரீதர் பங்கேற்று" கீதை காட்டிய வழி" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பாடல்கள் மற்றும் நடனமாடிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பூங்குயில் சிவக்குமார், வானவில் மன்ற பொறுப்பாளர் நிவேதித, சமூக ஆர்வலர் தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணர் வேடமிட்ட மாணவர்களை பாராட்டி வந்தை டைம்ஸ் ஆசிரியர் அ. ஷாகுல் அமீது பரிசு பொருட்களை வழங்கினார். இறுதியில் எய்டு இந்தியா திட்ட மேலாளர் க. முருகன் நன்றி கூறினார்.