முதலமைச்சர் மு.க ஸ்டாலின், புதுடெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், புதுடெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்!

புதுடெல்லி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார் இருவரும் சுமார் 45 நிமிடங்கள் உரையாடினார். அப்போது, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டது.

மேலும், சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comments