மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கிரிக்கெட் போட்டி!
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான "அம்மா ட்ராபி 2025" மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் கிரிக்கெட் போட்டிகள் இரண்டு தினங்கள் நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியில்
இந்தியா ஏ.பி.சி என்ற மூன்று அணிகள் பங்கேற்றனர்.
இறுதி போட்டியில் இந்தியா பி டீம் மற்றும் இந்தியா சி டீம் மோதியதில் இந்திய சி டீம் வெற்றி பெற்றது முதல் இடத்தை பிடித்தது.
இந்திய பி டீம் இரண்டாம் இடத்தை பிடித்தது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறநிலையத்துறை துணைத் தலைவர் கோ.பா. அன்பழகன் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேகலை, தொழிலதிபர் அப்துல்நபில், மற்றும் தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் சங்கத் தலைவர் துரைநம்பிபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ், முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சமும், இரண்டாவது பரிசாக 50,000 வழங்கி சிறப்புரையாற்றினர்.
போட்டி ஏற்பாடுகளை ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி முதல்வர் நா.கண்ணன், சமூக மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் முருகன், நிர்வாக அலுவலர் லிங்கநாதன், சக்தி கோபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments
Post a Comment