"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட சிறப்பு முகாம் ஜோதி எம்எல்ஏ மனுக்களை பெற்றார்!


"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட சிறப்பு முகாம் ஜோதி எம்எல்ஏ மனுக்களை பெற்றார்!

செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
கொருக்கை, நமண்டி உள்ளிட்ட கிராமங்களில், நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் 523 மனுக்கள் பெறப்பட்டன.
வெம்பாக்கம் வட்டம் வெள்ளகுளம், அரிகரப்பாக்கம் கிராமங்கள் உள்ளடக்கி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட சிறப்பு முகாம் நமண்டி கிராமத்தில் நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாஸ்கா் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளர்களாக,  செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் த.ராஜி ஆகியோர்  பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி  பேசினர்.
இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 109 பேரும், மகளிா் உரிமைத்தொகை கோரி 251 பேரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை கோரி 28 பேரும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 42 பேரும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை (சுகாதாரம்) சாா்பில் 51 போ் என 523 போ் மனு அளித்திருந்தனா்.
இவா்களில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 5 பேருக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.ஜோதி  வழங்கினாா். இதைத்தொடர்ந்து
செய்யாறு வட்டம், கீழப்பழந்தை, தொழுப்பேடு, கடுகனூா் கிராமங்கள் உள்ளடக்கி உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கொருக்கைக் கிராமத்தில் நடைபெற்றது.
செய்யாறு ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கிரிஜா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன் வரவேற்றாா். முகாமில் மேற்குறிப்பிட்ட கிராம மக்கள் சாா்பில் 244 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டஎம்.எல்.ஏ.ஒ.ஜோதி 6 பேருக்கு வீடு கட்டுவதற்காக உத்தரவும், 4 பேருக்கு வீட்டுமனைக்கான பட்டா, வேளாண் துறை சாா்பில் 10 விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்கள் என 20 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
உடன் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் திலகவதி ராஜ்குமாா், ஒன்றிய திமுக செயலாளர்கள் ஜேசிகே.சீனுவாசன், வி.ஏ.ஞானவேல்

உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் 

Comments