தெள்ளாறு ஜோதி நிதியுதவி பள்ளியில் குழந்தைகள் தின விழா!

தெள்ளாறு ஜோதி நிதியுதவி பள்ளியில் குழந்தைகள் தின விழா!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளாறு ஜோதி நிதியுதவி பள்ளியில், குழந்தைகள் தின விழா 
தலைமை ஆசிரியர் பழ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் பூங்குயில் சிவகுமார் அனைவரையும் வரவேற்றார்.
இந் நிகழ்வில் அணைக்குடி. சு. சம்பத் எழுதிய "தடைகளைத் தாண்டுக தம்பி" என்ற சிறார் பாடல்கள் நூலினை கவிஞர் ஆரிசன்  வெளியிட்டு பேசினார்.

"குழந்தைகள் தினத்தில் மட்டுமல்ல தினம் குழந்தைகளை நாம் கொண்டாட வேண்டும் குழந்தைகளின் கல்வி சட்டம் உரிமை ஆகியவற்றை வீட்டிலும் பள்ளிகளிலும் நாம் நிலை நாட்ட வேண்டும்  தாய்மொழி வழி கல்வியில் பயில்வதை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்  தாய்மொழிக் கல்வியே குழந்தைகளுக்கு சிறந்த அறிவாற்றலை தரும் 
அறம் வளர்க்கும் திருக்குறளை பள்ளிகளில் முற்றோதல் செய்ய வேண்டும் அனைத்து திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு அரசு  சிறப்பு செய்து பரிசளிக்கிறது மாணவர்கள் அதனை அடைய வேண்டும் அணைக்குடி. சு. சம்பத் போன்ற கவிஞர்கள் குழந்தைகளுக்கு கிடைத்த பொக்கிஷம்" என்று பேசினார்.
முதல் பிரதியை தெள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.ஜி ஆனந்த் பெற்றுக்கொண்டார். புலவர் நா. பானு வந்தவாசி நகர மன்ற துணைத் தலைவர் அன்னை க. சீனிவாசன், பெ.எட்டியப்பன்  ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன்
விநாயகமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அணைக்குடி சு. சம்பத் தனது ஏற்புரையில், "மயிலை சிவமுத்து போன்ற முன்னோடி கவிஞர்களே என் எழுத்துக்கு வித்து" என குறிப்பிட்டார். இறுதியில் பள்ளி இடைநிலை ஆசிரியர் தமிழ் முல்லை நன்றி கூறினார். நிகழ்வில் தெள்ளாறு ரோட்டரி கிளப் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் பாக்கியலட்சுமி வளர்மதி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Comments