Skip to main content

Posts

Showing posts from February, 2024

உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா அமைந்துள்ள நாகூர் ரயில் நிலையம் முதற்கட்ட அம்ரித் பாரத் திட்ட பட்டியலில் இடம்பெறவில்லை - கலீபா சாஹிப்

உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா அமைந்துள்ள நாகூர் ரயில் நிலையம் முதற்கட்ட அம்ரித் பாரத் திட்ட பட்டியலில் இடம்பெறவில்லை - கலீபா சாஹிப்  "மிகவும் தொன்மையான, நாகூர் ரயில்நிலையத்தை மேம்படுத்துதல் மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் பல லட்சக் கணக்கான மக்கள் பயனடைவார்கள். உலகெங்குமிருந்து மக்கள் தினமும் நாகூர் வருகை புரிகிறார்கள் எனவே நாகூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டும்" என மீண்டும் நாகூர் தர்கா ஆலோசனைக்குழு தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் நாகை பாரளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு இதே கோரிக்கையை அனுப்பி பாராளுமன்றத்தில் இதனை பேசிட கோரியுள்ளார். நாகூர் நாகப்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கத்தினர் இந்த கோரிக்கைக்கு தொடர் அழுத்தம் கொடுத்து இதனை சாத்தியமாக்கி தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். மத்திய அரசு துவக்கியுள்ள அம்ரித் பாரத் திட்டத்தினை, இதன்மூலம் நாடு முழுவதும் 1,000 சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ...

ஆரணி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை!

ஆரணி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை! ஆரணி சட்ட மன்றத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என உயா் கல்வித் துறை அமைச்சரிடமும், ஆரணியில் இருந்து புதிய விரிவாக்க பூட்டுதாக்கு சி.எம்.சி மருத்துவமனைக்கு செல்ல, அரசுப் பேருந்து இயக்கவேண்டும் எனவும்  போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து ஆரணியில் செய்தியாளா்களிடம் பேசுகையில்:- "திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்ட மன்றத் தொகுதியில் ஆரணி நகரம், வேலூா், ஆற்காடு, ராணிப்பேட்டையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் ஆரணி மையப் பகுதி மண்டி வீதி வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும், ஆரணி மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து சேத்துப்பட்டு சாலையில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், ஆரணி மண்டி வீதி வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால், அந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆற்காடு - விழுப்புரம் சாலை...

லோக்சபா தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறச் செய்திட, நாம் அனைவரும் உழைப்போம் - எடப்பாடி பழனிசாமி

லோக்சபா தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறச் செய்திட, நாம் அனைவரும் உழைப்போம் - எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மறைந்த முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளாகும். நாளைய தினம் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அதிமுக முன்னாள் முதல்வரும், பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவல் தெய்வம், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் வழிவந்த அரசியல் ஞானி, தமிழக மக்களின் பாசத்திற்குரிய அன்பு அம்மா அவர்களின் 76ஆவது பிறந்த நாளில் அவரைப் பற்றிய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவும், அவர் காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்கவும், கழக உடன்பிறப்புகளை அழைக்கும் இந்த அன்பு மடல் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். "ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வதே முறை" என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி, எந்தவிதத்திலும் சமரசம் இல்லாமல், யாருக்கும் எந்தத் தீங்கு...

நெருங்கும் பாராளுமன்ற தேர்தல்.. தமிழகத்தில் நடைபெறும் ஏற்பாடுகள் - தலைமை தேர்தல் ஆணையர் நேரில் ஆய்வு!

நெருங்கும் பாராளுமன்ற தேர்தல்.. தமிழகத்தில் நடைபெறும் ஏற்பாடுகள் - தலைமை தேர்தல் ஆணையர் நேரில் ஆய்வு! தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் 3 துணை தேர்தல் ஆணையர்கள் கொண்ட குழுவினர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழுவினரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகள் வரவேற்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தேர்தல் ஆணையர்கள், மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்கினர். இன்று பிப்ரவரி 23 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியில் இருந்து பகல் ஒரு மணி வரையில் மீனம்பாக்கத்தில் நட்சத்திர ஹோட்டலில் தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்றத் தேர்தல் குறித்து கருத்துக்களை கேட்டு அறிகின்றனர். பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தல் ஆயத்தை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ...

டெல்லி சலோ போராட்டம்: 14,000 விவசாயிகள் தயார்: பஞ்சாப் எல்லையில் துணை ராணுவ படை!

டெல்லி சலோ போராட்டம்: 14,000 விவசாயிகள் தயார்: பஞ்சாப் எல்லையில் துணை ராணுவப் படை! புதுடெல்லி: மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டத்துக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். அவர்களை டெல்லி நோக்கி முன்னேறவிடாமல் தடுக்க காவல்துறையினரும் தயார்நிலையில் இருக்கின்றனர்.  வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின்படி 23 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். இதை உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டத்துக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். பஞ்சாப் - ஹரியாணாவை ஒட்டிய ஷாம்பு எல்லையில் 14 ஆயிரம் விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர். 1200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களில் விவசாயிகள் குவிந்துள்ளனர். இதனை ஒட்டி பஞ்சாப், ஹரியாணா என டெல்லியை ஒட்டிய எல்லைகளில் போலீஸார், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்தமுறை ட...