உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா அமைந்துள்ள நாகூர் ரயில் நிலையம் முதற்கட்ட அம்ரித் பாரத் திட்ட பட்டியலில் இடம்பெறவில்லை - கலீபா சாஹிப்
உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா அமைந்துள்ள நாகூர் ரயில் நிலையம் முதற்கட்ட அம்ரித் பாரத் திட்ட பட்டியலில் இடம்பெறவில்லை - கலீபா சாஹிப் "மிகவும் தொன்மையான, நாகூர் ரயில்நிலையத்தை மேம்படுத்துதல் மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் பல லட்சக் கணக்கான மக்கள் பயனடைவார்கள். உலகெங்குமிருந்து மக்கள் தினமும் நாகூர் வருகை புரிகிறார்கள் எனவே நாகூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டும்" என மீண்டும் நாகூர் தர்கா ஆலோசனைக்குழு தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் நாகை பாரளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு இதே கோரிக்கையை அனுப்பி பாராளுமன்றத்தில் இதனை பேசிட கோரியுள்ளார். நாகூர் நாகப்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கத்தினர் இந்த கோரிக்கைக்கு தொடர் அழுத்தம் கொடுத்து இதனை சாத்தியமாக்கி தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். மத்திய அரசு துவக்கியுள்ள அம்ரித் பாரத் திட்டத்தினை, இதன்மூலம் நாடு முழுவதும் 1,000 சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ...