Skip to main content

Posts

Showing posts from April, 2024

மணிப்பூரில் 2 பெண்களை நிா்வாணமாக்கி இழிவுபடுத்திய சம்பவம்: காவல் துறையே மூலகாரணம் - சிபிஐ

மணிப்பூரில் 2 பெண்களை நிா்வாணமாக்கி இழிவுபடுத்திய சம்பவம்: காவல் துறையே மூலகாரணம் - சிபிஐ புது தில்லி: கடந்த ஆண்டு மணிப்பூரில் 2 பெண்களை நிா்வாணமாக்கி இழிவுபடுத்திய சம்பவத்தில், இரு பெண்களையும் கலவரக்காரா்களிடம் ஒப்படைத்ததே காவல்துறை தான் என்று சிபிஐ குற்றப் பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 200-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அங்கு வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் இன்றளவும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. இரு சமூகத்தினா் இடையிலான மோதலின்போது கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி அந்த மாநிலத்தில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் 2 குகி பெண்களை, சுமாா் 1,000 போ் கொண்ட மைதேயி கலவரக்காரா்கள் நிா்வாணப்படுத்தி ஊா்வலமாக இழுத்துச் சென்று இழிவுபடுத்தினா். இது தொடா்பான காணொலி சுமாா் 2 மாதங்களுக்குப் பின்னா், சமூக ஊடகத்தில் பரவி நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, கடந்த ஆண்டு அக்டோபரில் அஸ்ஸாம் மாநிலம் ...

பிரஸ், காவல், வக்கீல் போன்ற ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டக்கூடாது: மீறினால் 2 ம் தேதி முதல் ரூ.500 அபராதம், போலீஸ் எச்சரிக்கை!

பிரஸ், காவல், வக்கீல் போன்ற ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டக்கூடாது: மீறினால் 2 ம் தேதி முதல் ரூ.500 அபராதம், போலீஸ் எச்சரிக்கை சென்னை: அரசால் அங்கீகரிக்கப்படாத, பிரஸ், காவல், டாக்டர், வக்கீல், மின்வாரியம் போன்ற ஸ்டிக்கர்கள் தனியார் வாகனங்களில் ஒட்டக்கூடாது என்றும், மீறி வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தால் வரும் 2ம் தேதி முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனியார் வாகனங்களின் வாகன எண் தகட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள், குறிகள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனி நபர்களுக்கு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் பரவலான எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தலாம். பெரும்பாலும், சென்னை பெருநகரில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி (மின்வாரியம்), ஜிசிசி (சென்னை மாநகராட்சி), காவல் துறை உள்பட முப்படை போன்ற துறைகள், நிறுவனங்களின் பெயர்களை காணலாம். இதுபோன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும...

இங்கு பி.வி.நரசிம்ம ராவ்க்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை.முயற்சித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டனர், கடத்தப்பட்டனர் மற்றும் கொல்லப்பட்டனர்"

"இங்கு பி.வி.நரசிம்ம ராவ்க்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை.முயற்சித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டனர், கடத்தப்பட்டனர் மற்றும் கொல்லப்பட்டனர்" ஆட்கடத்தல்கள், துப்பாக்கிகள், மிரட்டல்களுக்கு மத்தியில் பி.வி., தேர்தலில் அமோக வெற்றி பெற்றார் "பி.வி.நரசிம்ம ராவ் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் துப்பாக்கி ஏந்தி நிற்பதாக நான் நாளிதழுக்கு செய்தி எழுதியபோது, எனது பாதுகாப்புக்காக லாட்ஜை காலி செய்யும்படி சொன்னார்கள்" "நான் கலெக்டரைச் சந்திக்கச் சென்றபோது, மிகவும் வலிமையான ஆண்கள் சிலர் நடுத்தர வயதுடைய ஒருவரை அடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த யாருமே தடுக்கவில்லை. அவரை அடித்து லாரியில் ஏற்றிச் சென்றனர். அது யார் என்று விசாரித்ததில், வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளரை காங்கிரஸ் கட்சியினர் அடித்து உதைத்ததாக தெரிவித்தனர். அங்கு தேர்தல் தொடர்பான செய்தி சேகரிப்பில் நேரடியாகப் பங்கேற்ற சில ஊடகவியலாளர்களின் அனுபவங்கள் இவை. பிவி நரசிம்மராவ் பிரதமரான பிறகு நந்தியாலா தொகுதியில் இருந்து எம் பி யாக வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனை. அந்த காலகட்டத்தில் இந்த சம்பவம் கின்...

"பிரதமராக ராஜிவ் காந்தி இருந்தார் அவரது உடலை துண்டு துண்டாக வீட்டிற்கு கொண்டு வந்தேன்.தனது உயிரை நாட்டிற்காக தியாகம் செய்தார்" - பிரியங்கா காந்தி

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19 ஆம் தேதி, முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது கட்டமாக நேற்று 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், குஜராத்தில் வரும் மே மாதம் 7ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இந் நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம் மேற்க்கொண்டார் வல்சாட், தரம்பூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மறைந்த தன்னுடைய தந்தை ராஜீவ் காந்தி குறித்து உருக்கமாக பேசினார், "எனது குடும்பத்தில் இருந்து மட்டுமல்ல, பல பிரதமர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆம், இந்திரா காந்தி அவர்களில் ஒருவர். அவர் இந்த நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்தார். ராஜீவ் காந்தியும் பிரதமராக இருந்தார். இறந்த பிறகு, அவரின் உடலை துண்டு துண்டாக வீட்டிற்கு கொண்டு வந்தேன். அவரும் தனது உயிரை ...