மணிப்பூரில் 2 பெண்களை நிா்வாணமாக்கி இழிவுபடுத்திய சம்பவம்: காவல் துறையே மூலகாரணம் - சிபிஐ புது தில்லி: கடந்த ஆண்டு மணிப்பூரில் 2 பெண்களை நிா்வாணமாக்கி இழிவுபடுத்திய சம்பவத்தில், இரு பெண்களையும் கலவரக்காரா்களிடம் ஒப்படைத்ததே காவல்துறை தான் என்று சிபிஐ குற்றப் பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 200-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அங்கு வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் இன்றளவும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. இரு சமூகத்தினா் இடையிலான மோதலின்போது கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி அந்த மாநிலத்தில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் 2 குகி பெண்களை, சுமாா் 1,000 போ் கொண்ட மைதேயி கலவரக்காரா்கள் நிா்வாணப்படுத்தி ஊா்வலமாக இழுத்துச் சென்று இழிவுபடுத்தினா். இது தொடா்பான காணொலி சுமாா் 2 மாதங்களுக்குப் பின்னா், சமூக ஊடகத்தில் பரவி நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, கடந்த ஆண்டு அக்டோபரில் அஸ்ஸாம் மாநிலம் ...