Skip to main content

Posts

Showing posts from January, 2025

ஜகபர் அலி கொலை வழக்கு: மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

ஜகபர் அலி கொலை வழக்கு: மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!  கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை, பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலரான இவர் சமூக ஆர்வலரும் கூட. இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார். எனினும், தொடர்ந்து இதுபோன்று கனிம வள கொள்ளைக்கு எதிராக மனுக்களை கொடுத்து வந்துள்ளார். பெயருக்கு ஒரு அரசு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்பட்ட அளவை விட பல மடங்கு கனிமங்கள் வெட்டி அள்ளப்பட்டு, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வருவது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி 10 ஆம் தேதி ஜகபர் அலி புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் கனிம வள ...

இந்திய குடியரசு தினம்: நாகூர் தர்காவில் கோலாகல கொண்டாட்டம்!

இந்திய குடியரசு தினம்: நாகூர் தர்காவில் கோலாகல கொண்டாட்டம்! நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் இந்திய குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது 400 ஆண்டு கால பழமையான பாரம்பரியமிக்க தஞ்சாவூர் மகாராஜாவில் கட்டித் தரப்பட்ட நாகூர் தர்கா பெரிய மினரா முழுவதும் இந்திய அரசின் மூவர்ண கொடி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலித்தது, அதை போல் நாகூர் ஆண்டவர் சமாதியின் நேர் மேல் உள்ள தங்க கலசமும் இந்திய அரசு மூவர்ண கொடியின் நிறத்தில் வண்ண விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. நாகூர் தர்கா அலங்கார வாசலில் அமைந்துள்ள தர்கா அலுவலகம் முன்பு வழக்கம்போல் இந்திய அரசின் மூவர்ண கொடி ஆலோசனைக் குழு தலைவர் கலீபா சாஹிப் அவர்களால் ஏற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  இஸ்லாமிய முறைப்படி புனித பாத்திஹா ஓதி, பின்னர் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. நாகூர் தர்காவில் உள்துறை பாதுகாவலர்கள், தர்கா அலுவலர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கொடி வணக்கம் செலுத்தினர்.இதைத் தொடர்ந்து  அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது இந் நிகழ்வில், நாகூர் தர்கா பரம்பரை டிர...

40 ஆண்டுகள் தொடர்ந்து குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றி வரும் முனைவர் வி.முத்து அவர்களுக்கு உலக சாதனையாளர்சான்றிதழ் வழங்கும் விழா!

40 ஆண்டுகள் தொடர்ந்து குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றி வரும் முனைவர் வி.முத்து அவர்களுக்கு உலக சாதனையாளர் சான்றிதழ் வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியின் சேர்மனும்,புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான கலைமாமணி முனைவர் வி.முத்து தலைவராக உள்ள ஸ்ரீ சுவாமி விவேகானந்தா ஐ.டி.ஐ யில் 40 ஆண்டு தொடர்ந்து குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றி உலக சாதனை புரிந்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நிகழ்வு இராஜா நந்திவர்மன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில், புதுவை தமிழ் சங்க நிர்வாகிகள்,கல்லூரி தாளாளர்கள்,கல்லூரி இயக்குநர்கள், பேராசிரியர்கள்,பேராசிரியைகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உலக சாதனையாளர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்கட்கு வாழ்த்துரை வழங்கினர் தொடர்ந்து மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது 

அனக்காவூர்: மேல்நெமிலி ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் குடியரசு தினம்

அனக்காவூர்: மேல்நெமிலி ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் குடியரசு தினம் திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியம் மேல் நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண் டாடப்பட்டது பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கிருஷ்ணவேணி முருகன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் தலைவர் சோலை முன்னிலை வகித்தார் பள்ளி ஆசிரியை அப்ரின் பானு, மூத்த பட்டதாரி ஆசிரியை மீனா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்  தலைமையாசிரியை இரா.தேன்மொழி  தேசியக்கொடியினை ஏற்றினார். இவ்விழாவில், ஜே.ஆர்.சி   மாணவர்கள் அணிவகுப்பு  மிகச்சிறப்பாக நடைபெற்றது மாணவர்கள் குடியரசு சார்ந்த பேச்சு, கவிதை, வீர சாகசங்களில் தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பங்கேற்ற  மாணவர்களுக்கு அனக்காவூர்  வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பணி மேற்பார்வையாளர் சுஜாதா அவர்கள் எழுதுபொருட்களை வழங்கினார். மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள்  வழங்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை ரம்யா நன்றி கூறினார...