தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - வானிலை ஆய்வு மையம் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. Heavy rain in 13 districts சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்க...
இந்திய தேசம் சந்தித்த மாபெரும் துயர நிகழ்வில் உயிர் நீத்த சகோதர, சகோதரிகள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்...
இந்திய தேசம் சந்தித்த மாபெரும் துயர நிகழ்வில் உயிர் நீத்த சகோதர, சகோதரிகள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்... தகவல்: போளூர் சுரேஷ் சம்பவ தினத்தன்று சரியாக பிற்பகல் 1.30 மணிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு 242 பேர் (169 இந்தியர்கள் + 53 பிரிட்டிஷார் + 7 போர்த்துகீசியர்கள் + ஒரு கனட நாட்டைச் சேர்ந்தவர்) கொள்ளளவு கொண்ட ஏர் இந்தியா 171 விமானம் தனது பயணத்தை லண்டன் மாநகரம் நோக்கித் தொடங்கியது. அதன் பயணம் முதல் கீழே விழுந்து நொறுங்கியது வரையிலான காணொளி விமான நிலைய கண்காணிப்புக் கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விமானம் ஓடுதளத்தில் வேகமாக ஓடி மேலெழும்பி அதற்கடுத்த கட்டமாக உயரத்தை தொட எத்தனிக்கையில் அதற்கு மேல் உந்து விசை கிடைக்காமல் ஏதோ கோளாறு நடக்க கீழே விழுந்து வெடித்துச் சிதறுகிறது. விமானத்தை இயக்கிய நிறுவனம் ஏர் இந்தியா விமானத்தை தயாரித்த நிறுவனம் போயிங் ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில். 1932 இல் ஜே.ஆர்.டி. டாட்டா அவர்களால் டாட்டா ஏர்லைன்ஸாக தொடங்கப்பட்டு பிறகு ஏர் இந்தியாவாக மாறி நாட்டின் அடையாளமாகவே இருந்தது. பிறகு த...