Skip to main content

Posts

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - வானிலை ஆய்வு மையம்

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - வானிலை ஆய்வு மையம் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. Heavy rain in 13 districts சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்க...
Recent posts

இந்திய தேசம் சந்தித்த மாபெரும் துயர நிகழ்வில் உயிர் நீத்த சகோதர, சகோதரிகள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்...

இந்திய தேசம் சந்தித்த மாபெரும் துயர நிகழ்வில் உயிர் நீத்த சகோதர, சகோதரிகள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்... தகவல்: போளூர் சுரேஷ் சம்பவ தினத்தன்று சரியாக பிற்பகல் 1.30 மணிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு 242 பேர் (169 இந்தியர்கள் + 53 பிரிட்டிஷார் + 7 போர்த்துகீசியர்கள் + ஒரு கனட நாட்டைச் சேர்ந்தவர்) கொள்ளளவு கொண்ட ஏர் இந்தியா 171 விமானம் தனது பயணத்தை லண்டன் மாநகரம் நோக்கித் தொடங்கியது. அதன் பயணம் முதல் கீழே விழுந்து நொறுங்கியது வரையிலான காணொளி விமான நிலைய கண்காணிப்புக் கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விமானம் ஓடுதளத்தில் வேகமாக ஓடி மேலெழும்பி அதற்கடுத்த கட்டமாக உயரத்தை தொட எத்தனிக்கையில் அதற்கு மேல் உந்து விசை கிடைக்காமல் ஏதோ கோளாறு நடக்க கீழே விழுந்து வெடித்துச் சிதறுகிறது. விமானத்தை இயக்கிய நிறுவனம் ஏர் இந்தியா விமானத்தை தயாரித்த நிறுவனம் போயிங் ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில்.  1932 இல் ஜே.ஆர்.டி.  டாட்டா அவர்களால் டாட்டா ஏர்லைன்ஸாக தொடங்கப்பட்டு பிறகு ஏர் இந்தியாவாக மாறி நாட்டின் அடையாளமாகவே இருந்தது. பிறகு த...

திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் டெல்டா மாவட்டங்களில் பகல் நேர வெப்ப நிலையானது தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி பதிவாகி வருகிறது. இன்றைய தினம் சென்னை மீனம்பாக்கம், மதுரை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சதமடித்துள்ளது. வேலூர், கடலூர், நாகை, தஞ்சை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில், இன்று இரவு நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்!

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்! இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவாக 2,165 ஆக பதிவாகி இருக்கிறது. குஜராத்தில் 1,281; டெல்லியில் 731 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 231 ஆக உள்ளது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் இன்று காலை 8 மணி வரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆறாயிரத்தை கடந்தது 24 மணி நேரத்தில் 6 பேர் பலி..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆறாயிரத்தை கடந்தது 24 மணி நேரத்தில் 6 பேர் பலி..!! மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த இரண்டு நாட்களில் 769 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் செயலில் உள்ள கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை இன்று  6,000 த்தை தாண்டியது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 6,133 செயலில் உள்ள கோவிட் வழக்குகள் உள்ளன, கடந்த 24 மணி நேரத்தில் ஆறு இறப்புகளை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கேரளா தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள வழக்குகளைப் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து குஜராத், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி உள்ளன. சுகாதார அமைச்சக தரவுகளின்படி, கேரளாவில் 1950 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், நேற்று முதல் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் மொத்தம் 822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதைத் தொடர்ந்து வங்காளத்தில் 693 பேரும், டெல்லியில் 686 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் முறையே 595 மற்றும் 366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முதல், கர்நாடகாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்...

வந்தவாசி எக்ஸ்னோரா கிளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா!

வந்தவாசி எக்ஸ்னோரா கிளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி எக்ஸ்னோரா கிளை சார்பில், புதிய பேருந்து நிலைய நகராட்சி பூங்காவில் உலக சுற்றுச்சூழல் தின மரக்கன்றுகள் நடும் விழா  நிகழ்வு நடைபெற்றது.  எக்ஸ்னோரா கிளைத் தலைவர் மலர் சாதிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு நகரமன்றத் தலைவர் எச்.ஜலால், துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் ம.ரகுபாரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் பா.இந்திரராஜன் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் எஸ்.குமார் ஆகியோர் பங்கேற்று சுற்றுச்சூழல் தின சிறப்புரை ஆற்றினர். மேலும் பூங்காவில் ஆங்காங்கு மரக்கன்றுகள் நடப்பட்டது. இந் நிகழ்வில் சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி நகர மன்ற உறுப்பினர் ராமஜெயம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, சமூக ஆர்வலர் வி. விஜயகுமார், துணைத் தலைவர்கள் பா. சீனிவாசன், கேப்டன் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, தென்னாங்கூர் ரஜினி மண்...

கொரோனா தொற்று 5,346 ஆக உயர்வு அதிகபட்சமாக கேரளாவில் 1,684 பேர் பாதிப்பு!

கொரோனா தொற்று 5,346 ஆக உயர்வு அதிகபட்சமாக கேரளாவில்  1,684 பேர்  பாதிப்பு! 2025 ஜூன் 5ஆம் தேதியான நேற்று 4,866ஆக இருந்த கொரோனா பாதிப்பு ஜூன் 6 ஆம் தேதியான இன்று 500 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,346 ஆக உயர்ந்ததுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 1,684 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 597 பேரும், கர்நாடகாவில் 451 பேரும், மேற்கு வங்கத்தில் 596 பேரும், உத்தர பிரதேசத்தில் 2025 பேரும், ராஜஸ்தானில் 107 பேரும், குஜராத்தில் 615 பேரும், டெல்லியில் 592 பேரும், ஆந்திராவில் 62 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025 ஜூன் 5ஆம் தேதியான நேற்று வரை 221 ஆக இருந்த நிலையில், தற்போது 330 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் 2025 ஜனவரியில் இருந்து இது...