Skip to main content

Posts

Showing posts from May, 2025

இந்தியாவில் 2,710 பேருக்கு கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் 2,710 பேருக்கு கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழப்பு இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான தொற்றுகள் கேரளாவில் உள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக பாதிப்புகள் குறைவாக இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.   தற்போதைய நிலவரப்படி, கேரளாவில் 1,147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 424 பேர், டெல்லியில் 294 பேர் மற்றும் குஜராத்தில் 223 பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா 148 பேரும், மேற்கு வங்கத்தில் 116 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏழு பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது....

கொரோனா பரவல்:பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

கொரோனா பரவல்: பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்! கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவலைத் தடுக்க, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தெற்காசிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகின்றது. மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க கூட்டம் கூடும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இத்துடன், சுவாச நோய் அறிகுறி, காய்ச்சல் உள்ளவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது பாதுகாப்பானது என்றும், உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்குமாறும், தடுப்பூசிகளை முறையாகச் செலுத்திக்கொள்ளுமாறும் பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. இத்துடன், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா பரவலைக் கண்காணிக்கவும், நோய் பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ...

"எனக்கே முழு அதிகாரம்" - மா.செ. கூட்டத்தில் அன்புமணி பேச்சு!

"எனக்கே முழு அதிகாரம்" - மா.செ. கூட்டத்தில் அன்புமணி பேச்சு! பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல், நேற்று உச்ச கட்டத்தை எட்டியுள்ளது திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். இதற்குப் பதிலளிக்காத அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்தார். அவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர்கள் மத்தியில் பேசிய அவர்,  "எனக்குச் சொந்த வீடு தி.நகரில் உள்ளது. இந்தப் பகுதியில் இருப்பது வாடகை வீடுதான். அதனால், தி.நகர் பகுதி செயலாளரிடம்தான் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை நான் பெற்றேன். உலகமே பாராட்டக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய மாநாட்டை நாம் நடத்தினோம். அந்த மாநாட்டை, நான் நடத்தவில்லை நீங்கள்தான் நடத்தினீர்கள். அந்த மாவட்டப் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வெற்றிகரமாக நடத்தினார்கள். நீங்கள் நினைத்தால்தான் எங்களை நியமனம் செய்ய முடியும்; நீக்க முடியும்; அதுத...

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

கடந்த 7 நாட்களில் 5,037 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - உலக சுகாதார அமைப்பு

அமெரிக்கா மற்றும் ஆசியாவில் கடந்த 7 நாட்களில் 5,037 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  - உலக சுகாதார அமைப்பு கொரோனா பாதிப்பானது சிங்கப்பூர், ஹாங் காங், தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் திடீரென அதிகரித்து வருவதாகவும், இந்தியாவைப் பொறுத்தவரை கேரளத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய கொரோனா பரவலுக்கு ஒமைக்ரானின் திரிபு வகையான ஜே.என். 1, என்பி.1.8.1 மற்றும் எல்எஃப் .7 ஆகியவையே காரணம் என உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. உலக நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் மட்டுமே கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா, வாஷிங்டன், விர்ஜினியா மற்றும் நியூ யார்க் ஆகிய நகரங்களில் என்பி.1.8.1 மற்றும் எல்எஃப் .7 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பரவல் இந்தியாவைப் பொறுத்தவரை கேரளத்தில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. இதுவரை 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரம், தில்லி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் காணப்படுகிறது. நேற்று முன்தினம்  மகாராஷ்ட...

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது! தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில்,இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 752 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 430 பேரும் மகாராஷ்டிராவில் 209 பேரும் டெல்லியில் 104 பேரும் குஜராத்தில் 83 பேரும் தமிழகத்தில் 69 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 7 பேர் இறந்துள்ளனர். கொரோனா தொற்று தற்போது பரவி வரும் இந்த கொரோனா வைரஸ், 2023 டிசம்பரில் தோன்றிய ஜேஎன் 1 (JN.1) என்ற வகையிலிருந்து உருமாறிய எல்எஃப் 7 (LF.7)மற்றும் என்பி 1.8 (NB.1.8) ஆகிய வைரஸ்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன. தற்போது பரவி வரும் இந்த கொரோனா வைரஸ், 2023 டிசம்பரில் தோன்றிய ஜேஎன் 1 (JN.1) என்ற வகையிலிருந்து உருமாறிய எல்எஃப் 7 (LF.7)மற்றும் என்பி 1.8 (NB.1.8) ஆகிய வைரஸ்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த கொரோனா பரவல் முன்பை போல ஒரு பருவகாலமாக இல்லாமல், ஆண்டு முழுவதும் குறிப்பிட்...

"இனி அமைதியாக இருக்க மாட்டோம்" பாகிஸ்தானை கண்டித்த கனிமொழி எம்.பி!

"இனி அமைதியாக இருக்க மாட்டோம்" பாகிஸ்தானை கண்டித்த கனிமொழி எம்.பி! பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பாகிஸ்தானின் எந்த ஒரு விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் (Operation sindoor) குறித்து விளக்கம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட திமுக எம்.பி கனிமொழி, இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்து, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த தாக்குதல், 2025 மே 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந் நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், பயங்கரவாதம் குறித்தும், பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் எந்த அளவுக்கு ஆதரவு அளிக்கிறது என்பது குறித்து விவரிக்க 7 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது. கிட்டதட்ட 33 நாடுகளுக்கு 7 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு விரைந்துள்ளது. இந்த குழுவுக்கு காங்கிரஸ்...

கேரளாவில் 182 பேருக்கு கொரோனா தொற்று பொதுஇடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

கேரளாவில் 182 பேருக்கு கொரோனா தொற்று  பொதுஇடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்! கேரளாவில் 182 பேருக்கு  கோவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா தொற்று  பதிவாகியுள்ளன, இதையடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மும்பை உள்பட பல பகுதிகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. கேரளாவில் மே மாதத்தில் மட்டும் (மே 22ந்தேதி வரை) 182 கோவிட்-19 கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. குறிப்பாக கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 'கேரளாவில் கொரோனா பரவல் கணிசமான அளவு அதிகரிக்கிறது. மக்கள் மருத்துவமனை உட்பட பொதுஇடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். மாநிலத்தில் அதிகபட்சமாக கோட்டயத்தில் 57 பேருக்கும், எர்ணாகுளத்த...

சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில்  அதிகரித்து வரும் கொரோனா தொற்று!  இந்தியாவிலும் அச்சுறுத்தும் அளவுக்கு இல்லையென்றாலும், கவனிக்கத் தக்க வகையில் நோய் பாதிப்பு பதிவாகி வருகிறது. குறிப்பாக மும்பை, சென்னை, அகமாதாபாத் நகரங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், முக்கிய நகரங்களில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் மிகவும் சிக்கலான அதாவது உடலுறுப்பு மாற்று சிகிச்சை, பைபாஸ் அறுவைசிகிச்சை, இதய நாள மாற்று அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் தள்ளிவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மும்பையில் மே மாதத்தில் மட்டும் 95 புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜனவரி முதல் மகாராஷ்டிர மாநிலத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பே வெறும் 106 தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தற்போது 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு கடுமையான அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. புனே வில், இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையிலும் கூட, முக்கியமான சில மருத்துவமனைகளில் கொரோனா பிரிவு தொடங்கப்ப...

திமுகவோடும் கொள்கை எதிரி பாஜகவோடும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் - ஆதவ் அர்ஜுனா

திமுகவோடும் கொள்கை எதிரி பாஜகவோடும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் - ஆதவ் அர்ஜுனா திமுக வோடும் கொள்கை எதிரி பாஜக வோடும் கூட்டணி இல்லை என்பதில்  உறுதியாக இருக்கிறோம் என தமிழக வெற்றிக் கழக  அரசியல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறினார் இது சம்பந்தமாக  செய்தியாளர்களிடம் பேசுகையில்:- 'வக்பு சட்டத்திருந்த மசோதாவுக்கு எதிராகத் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்றோம். ஆனால், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. கேரள சிஐஏ க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதே மாதிரி தமிழக அரசும் வக்பு திருத்தச் சட்டத்துக்காக வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். இதை திருமாவளவனும் கம்யூனிஸ்ட்களும் தமிழக அரசுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டும். இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையின மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறும் வகையிலான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு, அரசியலமைப்புச் சட்டத்துடன் சம்பந்தப்பட்டது. தனிமனிதர்கள் வழக்கு தொடுத்தால் அரசியல் லாபங்கள் இருக்குமோ என நீதித்துறை கர...

இஸ்லாமியர்கள் இந்தியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்... - விசிக தலைவர் தொல் திருமாவளவன்

இஸ்லாமியர்கள் இந்தியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்... - விசிக தலைவர் தொல் திருமாவளவன் இஸ்லாமியர்கள் இந்தியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்  ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் "இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிற பதிலடி தாக்குதலை வரவேற்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பேரணிநடத்தியுள்ளார். பயங்கரவாதம் துடைத்தெறியப்பட வேண்டும்.காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது.இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதலுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடத்தும் பேரணி அமைந்துள்ளது.தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தற்போது ஒரே அணி தான் உள்ளது. தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மட்டும்தான். அ.தி.மு.க. கூட்டணி உறுதி பெறவில்லை. கூட்டணி அமைத்துக் கொண்ட...

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி இந்தியா நடத்திய தாக்குதலில் 70 - க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்!

 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி இந்தியா நடத்திய தாக்குதலில் 70 - க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்!  ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந் நிலையில் இந்த  தாக்குதலில் தானும் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும், இந்தியா நடத்திய தாக்குதலில் தனது குடும்பமே அழிந்துவிட்டதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார் மசூத் அசார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை நேற்று காலை 1-44 க்கு  துல்லியமாக,  தாக்கியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன என தகவல்கள் கூறுகின்றன தொடர்ந்து ப...

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக திருச்சியில் மே 31 விசிக​ பேரணி - தொல் திருமாவளவன்

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக திருச்சியில் மே 31-ம் தேதி விசிக​ பேரணி - தொல் திருமாவளவன் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக விசிக நடத்தவுள்ள பேரணி தொடர்பாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக முகநூல் பக்கத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது:- "வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக விசிக சார்பில் மே 31-ம் தேதி திருச்சியில் பேரணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மே 8-ம் தேதி சேலம், மே 9-ம் தேதி சென்னை, மே 10-ம் தேதி வேலூர், மே 12-ம் தேதி மதுரை, மே 13-ம் தேதி திருச்சி ஆகிய இடங்களில் பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறேன். மதச்சார்பின்மை காப்போம் என்ற பெயரில் பேரணியை நடத்த இருக்கிறோம். தேர்தல் நெருங்கும் சூழலில் இந்தப் பேரணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசம் காப்போம் என்ற பெயரில் திருச்சியில் பேரணி நடத்தினோம். இந்நிலையில் விசிகவின் பேரணி மதச்சார்பின்மைக்கு ஆபத்து இருக்கிறது என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் அறப்போராக அமையும். மதச்சார்பின்மை குறித்து நாம் எழுப்பும் கே...