Skip to main content

Posts

Showing posts from August, 2022

பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்தக் கூடாது சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்தக் கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்தக் கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு பெங்களூரு ஈத்கா        மைதான வழக்கில், விநாயகர் சதுர்த்தி விழாவை ஈத்கா மைதானத்தில் கொண்டாடக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களுக்கு பெங்களூரு ஈத்கா மைதானத்தை விநாயகர் உற்சவத்தையொட்டி பயன்படுத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதிகள் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்று கூறி மூன்று ...

நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது நாகப்பட்டிணம்: அன்னை மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8 ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா. இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7ஆம் தேதி நடைபெற உள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா’ என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது. வங்கக்கடல் ஓரத்தில் ஆலயம் அமைந்திருப்பது மேலும் சிறப்பு. மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8 ஆம்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆண்டு தோறும் ஆகஸ்ட் இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று மாலை 5.45 மணிக்கு கொடி கடற்கரை சாலை ஆரியநாட்டு தெரு வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்...

பெருங்கட்டூர்: ‘தடம்’ நூல் அறிமுக விழா!

பெருங்கட்டூர்: ‘தடம்’ நூல் அறிமுக விழா! பெருங்கட்டூர்: ‘தடம்’ நூல் அறிமுக விழா! திருவண்ணாமலை மாவட்டம்செய்யாறு       அடுத்த பெருங்கட்டூர்  ஊர்புற நூலகத்தில் செய்யாறு வருவாய் ஆய்வாளர் மா. சுந்தரமூர்த்தி அவர்களின் ‘தடம்’ நூல் அறிமுக விழா நடைபெற்றது. இந் நிகழ்வில் அரிமா சங்க மாவட்ட தலைவர் ம. சிவானந்தம் தலைமை வகித்தார். நூலகர் ஜா.தமீம் அனைவரையும் வரவேற்றார். அரிமா சங்க மாவட்ட சேவை தலைவர் தி. வடிவேல், காளத்தி குமரன் அரிமா சங்க வட்டாரத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர் விருது பெற்ற வெம்பாக்கம் ப. ஜீவகாருண்யன் ‘தடம்’ நூல் அறிமுகம் செய்து அறிமுக உரை நிகழ்த்தினார். இந்த நூல் வரலாற்று நூலாகும் அனைத்தும் சேர்ந்த ஒரு தொகுப்பு நூலாக விளங்குகிறது என்றார் பல்வேறு தலைப்புகளில் நூலாக்கம் செய்துள்ளார் என்றார். ‘தடம்’ நூல் குறித்து ஏற்புரை வழங்கிய மா. சுந்தரமூர்த்தி அவர்கள் இது என்னுடைய முதல் நூல் என்றார் அடுத்ததாக கவிதை நூல் வெளியிட உள்ளதாக தெரிவித்தார். என்னுடைய இந்த நூல் அனைத்தும் சேர்ந்த தொகுப்பு நூலாக விளங்குகிறது என்றார். அசனமா பேட்டை அக்னி சிறகுகள...

நாட்டு மக்களைப் பற்றி கவலைப் படாத நண்பர்களின் அரசாங்கம்- ராகுல் காந்தி எம்பி

நாட்டு மக்களைப் பற்றி கவலைப் படாத நண்பர்களின் அரசாங்கம்-  ராகுல் காந்தி எம்பி நாட்டு மக்களைப் பற்றி கவலைப் படாத நண்பர்களின் அரசாங்கம்-  ராகுல் காந்தி எம்பி நேர்மையுடன் உழைத்திருந்தால் வேலை வாய்ப்பு எப்படி குறைந்திருக்கும்?. உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிந்து விட்டதால், இலவச ரேஷன் முடிந்து விட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கோல் இந்தியா மற்றும் எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் 2020 முதல் 2022 வரை வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதை விளக்கும் வரைபடத்தையும் தமது டுவிட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது: இளைஞர்களின் கனவுகள் உண்மைதான், ஆனால் ராஜா (மோடி) வின் வாக்குறுதிகள் பொய்யானவை, அவரது பேச்சுகள் வெற்றுத்தனமானது. நேர்மையுடனும் உழைத்திருந்தால் வேலை வாய்ப்பு பெருகுவதற்குப் பதிலாக எப்படி குறைந்திருக்கும்? உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிந்துவிட்டதால், இலவச ரேஷன் முடிந்துவிட்டது. இப்போது தகுதியான கார்டு வைத்திருப்பவர்களுக்கு உத்தரபிரதேசத்தில் இலவச ரேஷன் கி...

கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை ரத்து செய்த திமுக அரசை கண்டித்து அதிமுக மாபெரும் உண்ணாவிரத போராட்டம்!

கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை ரத்து செய்த திமுக அரசை கண்டித்து அதிமுக மாபெரும் உண்ணாவிரத போராட்டம்!  கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை ரத்து செய்த திமுக அரசை கண்டித்து அதிமுக மாபெரும் உண்ணாவிரத போராட்டம்!   தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்,  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டி, பல ஆண்டுகால கோரிக்கையை எனது தலைமையிலான ஜெயலலிதா அரசு கனிவுடன் ஆய்வு செய்து, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 MLD கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்து, அதன்மூலம் விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சி, மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம், வானூர், மைலம், விக்கிரவாண்டி, காணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 692 கிராம குடியிருப்புகளுக்கும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் மற்றும் திண்டிவனம் சிப்காட்டுக்கு...

ரூ.800 கோடி மூலம் டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

ரூ.800 கோடி மூலம் டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.800 கோடி மூலம் டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். புதுடெல்லி: முதல்வர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் ஆட்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் அரசில்  துணை முதல்வராக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, 2021-22ம் ஆண்டுக்கான  மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள்  நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதன்மீது  நடவடிக்கை எடுக்கும் ஒரு பகுதியாக மணீஷ் சிசோடியாவின் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 19ம் தேதி சிபிஐ அமைப்பு அதிரடி சோதனையிலும் ஈடுபட்டது. இதற்கிடையே, ஆம் ஆத்மி எம்.எல்ஏக்கள் பாஜவில் இணைந்தால் ரூ.20 கோடி  கொடுப்பதாக பாஜவில் இருந்து பேரம் பேசப்பட்டதாகவும், இணையாவிட்டால் பொய்  வழக்கு தொடரப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஆம் ஆத்மி  தரப்பில் ந...

புதுச்சேரி பட்ஜெட் 2022-23.. சாமானியர்களுக்கு பயனுள்ள 5 முக்கிய அறிவிப்புகள்!

புதுச்சேரி பட்ஜெட் 2022-23.. சாமானியர்களுக்கு பயனுள்ள 5 முக்கிய அறிவிப்புகள்! புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை, நிதித்துறை பொறுப்பினை வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று சட்ட பேரவையில் தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரியில் கடந்த 10 தேதியே பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், மத்திய அரசு பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்காததால் காலவரையின்றி பேரவை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் நீண்ட இழுபறி நிலைக்கு மத்தியில் , மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. ஒப்புதலுக்கு பிறகு நேற்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் துறை வாரியாக பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். இதில் சில அறிவிப்புகள் புதுச்சேரி மக்களிடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளன. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற அறிவிப்பு வெளியானது. இது குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதன் மூலம் பெண்கள் குறைந்தபட்சம் வாழ்வாதாரங்களை பெற முடியும் என நம்பப்படுகிறது. எனினும் இந்த உதவித் தொகையானது 21 வயது முதல் 57 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்ப தலைவிகளுக்கு என அறிவிக்கப்பட்டு...

நாகூர் மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

நாகூர் மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான  விழிப்புணர்வு பேரணி! நாகூர் மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான  விழிப்புணர்வு பேரணி! நாகப்பட்டினம்: நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணியை நடத்தினர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை, நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணியில் மாணவ மாணவிகளுடன் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நெளஷாத், நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் காமில் சாஹிப், நாகை நகரமன்ற உறுப்பினர் நத்தர், கௌதியா மேல்நிலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சாதிக் சாஹிப் மற்றும் தர்கா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாகூர் தர்கா அலங்கார வாசலில் ஆலோசனைக் குழு தலைவரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான கலீபா சாஹிப் போதை ஒழிப்பு சம்பந்தமாக மாணக்கர்களிடம் சிறப...

“பிரதமரே இன்னும் எத்தனை நாட்களுக்கு அமைதியாக இருப்பீர்கள் பதில் சொல்லுங்கள்” – ராகுல் காந்தி எம்பி

“பிரதமரே இன்னும் எத்தனை நாட்களுக்கு அமைதியாக இருப்பீர்கள் பதில் சொல்லுங்கள்” – ராகுல் காந்தி எம்பி “பிரதமரே இன்னும் எத்தனை நாட்களுக்கு அமைதியாக இருப்பீர்கள் பதில் சொல்லுங்கள்” – ராகுல் காந்தி எம்பி புதுடில்லி: குஜராத்தில் தொடர்ந்து போதைப்பொருட்கள் சிக்குவது குறித்து பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி  ‘இன்னும் எத்தனை நாட்களுக்கு அமைதியாக இருப்பீர்கள், பதில் சொல்லுங்கள்’ எனக் கூறியுள்ளார். குஜராத்தில் சமீப காலமாக போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 513 கிலோ போதைப்பொருட்கள் கொண்ட மூட்டைகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். குஜராத்தில் அடுத்தடுத்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி  வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குஜராத்தில் போதை பொருட்கள் வியாபாரம் செய்வது அத்தனை எளிதாக உள்ளதா? பிரதமரே...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தோம் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தோம் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன்   தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தோம் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் தலைமையில் இன்று தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் சந்தித்து, 75-வது நிறுவன ஆண்டு தினமான 2023 மார்ச் 10-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிற முஸ்லீம் லீக் பவளவிழா நிகழ்ச்சியில் பல்சமய சான்றோர் பெருமக்களுக்கு சமய நல்லிணக்க விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்குமாறு கேட்டுக் கொண்டார் அனைத்து தகவல்களையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்ட  முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு  தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வே இறை...

தமிழகத்தில் தடம் பதிக்க ஆர்.எஸ்.எஸ். பகீர் செயல் திட்டங்கள்.. பட்டியல் போட்டு கி.வீரமணி எச்சரிக்கை

தமிழகத்தில் தடம் பதிக்க ஆர்.எஸ்.எஸ். பகீர் செயல் திட்டங்கள்.. பட்டியல் போட்டு கி.வீரமணி எச்சரிக்கை தமிழகத்தில் தடம் பதிக்க ஆர்.எஸ்.எஸ். பகீர் செயல் திட்டங்கள்.. பட்டியல் போட்டு கி.வீரமணி எச்சரிக்கை சென்னை: தமிழகத்தில் தடம்        பதிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டிருக்கும் செயல் திட்டங்களைப் பட்டியலிட்டு சமூக நீதிப் போராளிகள் இதற்கு எதிர்வினையாக எப்படி செயலாற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. இது தொடர்பாக கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இணைய தளத்தில் வந்துள்ள கீழ்க்காணும் செய்திகளை ஆழ்ந்து படியுங்கள்! நண்பர் ‘ராஜ சங்கீதன்’ அனுப்பியுள்ள இச்செய்தியை, தமிழிலும், ஆங்கிலத்திலும், தனிச் செய்தியாகவும் இணையத்தில் படித்தேன்! எப்படி கோவிட்-19 பல மாற்று உருவம் எடுத்து, குரங்கு அம்மை மற்றும் வேறு வகை உருமாறிய கோவிட் ஆக மீண்டும்படையெடுத்து, மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாக உலா வருகிறதோ, அப்படி ஆரிய சனாதன மதவெறி பரப்பி இந்திய நாட்டின் பன்முக கலாச்சாரத்தை அழித்து, ஒழித்து, ‘இந்துராஷ் டிரம்’ என்ற ஒரே மதம், ஒரே மொழி ‘சமஸ்கிருதம்’, ஒரே ஒற்...

சென்னை மாநகராட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 34-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்

சென்னை மாநகராட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 34-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 34-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்: 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டம்! சென்னை: சென்னை மாநகராட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 34-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டுவருகிறது. 12.09.2021 அன்று முதல் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 33 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற 33 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41,26,183 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் 55,46,797 நபர்களுக்கு ம...

நாகை: நாகூர் தர்காவில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்! மேனேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் தேசிய கொடியேற்றினார்

நாகை: நாகூர் தர்காவில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்! மேனேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் தேசிய கொடியேற்றினார் நாகை: நாகூர் தர்காவில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்! மேனேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் தேசிய கொடியேற்றினார் நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் தர்காவில் இந்த வருடம் மிகச்சிறப்பான முறையில்  சுதந்திர தின ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாண்புமிகு நீதிமன்ற உத்தரவுப்படி நாகூர் தர்காவிற்க்கு புதிய நிர்வாகம் கடந்த ஏப்ரல் முதல் அமைந்துள்ளது. அதன்படி நாகூர் தர்கா நிர்வாகத்தை ஸ்கீம் படி போர்டு ஆப் டிரஸ்டிகள் நிர்வாகித்து வருகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக திகழும் 465 வருட பாரம்பரியமிக்க நாகூர் தர்கா பெரிய மினராவில் தேசிய கொடி மின்னொளி அமைக்கப்பட்டது. பெரும் வரவேற்பைப் பெற்றது நேற்று நாகூர் தர்கா அலுவலக முகப்பில் நாகூர் தர்கா அலங்கார வாசலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, முதன் முறையாக சுதந்திர தின விழா அன்னதான நிகழ்வு நடைப்பெற்றது நாகூர் தர்கா அலங்கார வாசலில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்விற்க்கு தலைமையேற்ற, தர்கா ஆலோசனைக் குழு தலைவர்  செய்யது முஹம்மது கலீபா சாஹிப் வரவேற்புரைய...

வந்தவாசி நகராட்சியில் 75 வது சுதந்திர தினம் சேர்மன் ஜலால் தேசியக் கொடியேற்றினார்!

வந்தவாசி நகராட்சியில் 75 வது சுதந்திர தினம் சேர்மன் ஜலால் தேசியக் கொடியேற்றினார்! வந்தவாசி நகராட்சியில் 75 வது சுதந்திர தினம் சேர்மன் ஜலால் தேசியக் கொடியேற்றினார்! :       திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் 75 வது இந்திய சுதந்திர தின விழா பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடபட்டது வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் துணைத் தலைவர் அன்னை சீனு முன்னிலையில், நகர மன்றத் தலைவர் எச் ஜலால் தேசிய கொடியேற்றினார்  சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட திமுக பொறுப்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இது தமிழ்நாடு! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இது தமிழ்நாடு! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது நேற்று பாஜகவினர் காலணிகளை வீசினர். இதுதொடர்பாக ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிடிஆரிடம் மன்னிப்பு கேட்ட டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகுவதாகவும் நேற்று இரவு அறிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் உத்தரவாத மடல். இந்திய ஒன்றியத்தின் 76-ஆவது விடுதலைநாள் விழா, உணர்வில் கலந்த கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், நாட்டுக் கொடியை உயர்த்துகிறேன். மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலத்தில் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருக்கு நெஞ்சத்தில் நன்ற...