Skip to main content

Posts

Showing posts from November, 2022

அனக்காவூா்: வட்டார கலைத் திருவிழா!

அனக்காவூா்: வட்டார கலைத் திருவிழா!               செய்யாற்றை அடுத்த செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், அனக்காவூா் வட்டார அளவிலான கலைத் திருவிழா தொடங்கியது. அனக்காவூா் ஒன்றியக்குழு பெருந்தலைவர் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.பி.ஜெ கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் அன்பரசு வரவேற்றாா் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்  ஒ.ஜோதி கலைத் திருவிழாவைத் துவக்கிவைத்து, கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய  மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினாா். செங்காடு, ஆக்கூா், அனக்காவூா் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். விழாவில் திருவத்திபுரம் நகரமன்றத் தலைவா் ஆ.மோகனவேல், நகராட்சி ஆணையா் கே.ரகுராமன் செய்யாறு நகர திமுக செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு   சீரழிந்து விட்டதுடன், போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதுடன், போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். எடப்பாடி பகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொது செயலாளரும் எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக தமிழகத்தை சீரழித்து விட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். அதனால் சில விளக்கங்களை கொடுப்பதாக தெரிவித்தார். அதன்படி, அகல பாதாளத்தில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை மீட்டெடுத்து தொழில் வளர்ச்சியில் முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றதாகவும், சட்ட ஒழுங்கு முறையாக செயல்படுத்தப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்...

திருச்சி- சென்னை சாலையில் அதிக விபத்துகளுக்கு காரணமே இதுதான்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

திருச்சி- சென்னை சாலையில் அதிக விபத்துகளுக்கு காரணமே இதுதான்: அன்புமணி ராமதாஸ்  அறிக்கை  திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை 22 ஆண்டுகளாக மேம்படுத்தவில்லை. இந்த சாலை 4 வழி சாலையாக உள்ளது. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தினமும் குறைந்தபட்சம் 1.40 லட்சம் வாகனங்கள் செல்லும் இந்த சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:- “சென்னை – திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆண்டுகளில் 6,131 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றில் 2,076 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிர்களை பலிவாங்கும் சாலையாக மாறியுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும். இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணம் சாலைகளில் போதுமான அளவில் சேவை சாலைகள் இல்லாததும், சாலைகளின் வடிவமைப்பு மிகவும் மோசமாக இருப்பதும் தான். சாலை விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட, அ...

சிறுபான்மை மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் நிறுத்தம்: சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும் – நவாஸ் கனி எம்பி

சிறுபான்மை மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் 1முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருப்பது  சிறுபான்மையினருக்கு  இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும் – நவாஸ் கனி எம்பி சிறுபான்மை மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் 1 முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வழங்கப் படாது என அறிவிக்கப் பட்டிருக்கும்  வஞ்சிக்கும், இம்முடிவினை ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் மறு ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் அவர்களுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி  கடிதம் எழுதியுள்ளார் இதுகுறித்து ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்களுக்கு நவாஸ்கனி எம்பி எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறுபான்மை நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த Pre Matric Scholarship இனி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது சிறுபான்மை சமூக மாணவர்களை  வெகுவாக பாதி...

திருவண்ணாமலை: தகுதியானவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை: தகுதியானவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் அமைச்சா் எ.வ.வேலு பொதுமக்களிடமிருந்து  பெறப்பட்ட தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  கீழ்கச்சிராப்பட்டு, மேல்கச்சிராப்பட்டு, மெய்யூா், நாச்சானந்தல், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வரகூா் ஊராட்சிகளில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் வீா் பிரதாப் சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து புதிய மின் இணைப்பு, இலவச மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, ஏரி தூா்வாருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதை...

செய்யாறு: நகர அதிமுக அலுவலகம் திறப்பு! மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் திறந்துவைத்தார்

செய்யாறு: நகர அதிமுக அலுவலகம் திறப்பு! மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் திறந்து வைத்தார்        திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு நகர அதிமுக அலுவலகத்தை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ திறந்துவைத்தார் நகர கழக செயலாளர் கே வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வில், அவைத்தலைவர் ஜனார்த்தனம் வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னிலை வகித்தனர் தொடர்ந்து நகர அதிமுக புதிய அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதிமுக மூத்த முன்னோடிகள் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர் செய்யார் நகரம் 6-வது வார்டு செல்வ விநாயகர் கோயில் தெருவில் அதிமுக கொடியேற்றி அன்னதானம் இனிப்புகள்  வழங்கப்பட்டது இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் எம் மகேந்திரன் சி துரை அருகாவூர் அரங்கநாதன் குணசீலன் மு எம்எல்ஏ திருமூலன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் உக்கல் பி லட்சுமி அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் பூக்கடை கோபால...

வந்தவாசி: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்!

வந்தவாசி: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்!       வந்தவாசி: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின்  இரண்டாவது மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம்  வந்தவாசி நகரில், இரண்டாவது  மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம், வட்டத் தலைவர் கணபதி தலைமையில் நடைபெற்றது மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் மாவட்ட மகளிர் அணி புனிதா செயலாளர் ரேணுகா  முன்னிலை வகித்தனர்   துணைத்தலைவர் பிரகாஷ் வரவேற்புரையாற்ற, மாநில தலைவர் ஆர் ராஜசேகர்  மாநில பொதுச் செயலாளர் எஸ் தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினர் மாநில செயலாளர் கேப்டன் எம்.பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார் மேலும் இந்நிகழ்வில், வந்தவாசி வட்ட புதிய பொறுப்பாளர்கள் எம் கணபதி தலைவர், வட்ட செயலாளர் ரேணுகா, பொருளாளர் பானுமதி ஆகியோர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர் மேலும் அண்மையில் மாநில செயலாளர் கேப்டன் எம்.பிரபாகரன் மகள் திருமணம் நடைபெற்றது தம்பதியர்களை வாழ்த்திய, மாநில மாவட்ட, வட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் தனது நன்றிதனை காணிக்கையாக்குகின்றார் கேப்...

செய்யாறு: தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்!

செய்யாறு: தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில்,  மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்! செய்யாறு: தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், இரண்டாவது மாநில மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம்! செய்யாறு:   திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், விருதுநகரில் நடைபெறும் இரண்டாவது மாநில மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம், வட்டத் தலைவர் ஆர் சேகர் தலைமையில் நடைபெற்றது எ.தவமணி  வட்டப் பொருளாளர் மு வாசு கெளரவ தலைவர் எம் இளங்கோ வட்ட துணைத் தலைவர் முன்னிலை வகிக்க, மாநில தலைவர் ஆர் ராஜசேகர் மாநில பொதுச்செயலாளர் எஸ் தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினர். மேலும் இரண்டாவது மாநில மாநாடு சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்கினர் இந்நிகழ்வில், திருவண்ணாமலை மாவட்ட புதிய  தலைவராக கே வெங்கடேசன் பொறுப்பேற்று கொண்டார் இக்கூட்டத்தில் மாநில செயலாளர் கேப்டன் எம் பிரபாகரன் மாவட்ட அவைத்தலைவர் ஆர் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினர் வட்டப் பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்

வட இந்திய தொழிலாளர்கள் படையெடுப்பு: விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?

வட இந்திய தொழிலாளர்கள் படையெடுப்பு: விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு? வட இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்னென்ன பிரச்சினைகள் உருவாகும்? அரசு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் சமீபத்தில் வந்திறங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பிற்காக தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் வட இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை,திருப்பூர்  போன்ற பெரு நகரங்கள் மட்டுமல்லாமல் குக்கிராமங்கள் வரை வட இந்திய தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் வேலை பார்த்து வருவது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்திய அளவில் வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலத்துக்கு வட இந்தியர்கள் வருகின்றனர். பெரிய நிறுவனங்கள் முதல் செங்கல் சூளைகள், சிறிய கடைகள் வரை கட்டுமானப் பணிகள் முதல் தூய்மைப் பணிகள், விவசாயப் பணிகள் வரை நீக்கம்ற நிறைந்திருக்கிறார்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று பெருமிதப்பட்டுக் கொள்வதில் தவறில்லை...

சென்னை: தோளை தட்டிக் கொடுத்து கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்திய ஸ்டாலின்

சென்னை: தோளை தட்டிக் கொடுத்து கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்திய ஸ்டாலின் சேப்பாக்கம்-     திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். தி.மு.க. இளைஞரணி செயலாளரான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி இன்று காலையில் எழுந்ததும் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் காலை தொட்டு ஆசி பெற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். பதிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு பட்டு வேஷ்டியை சால்வையாக அணிவித்தார். பின்னர் உதயநிதியின் தோளை தட்டிக் கொடுத்து உச்சி முகர்ந்தார். அதன் பிறகு உதயநிதியின் தோளில் கைபோட்டு அருகே அரவணைத்து வாழ்த்தினார். அப்போது அருகில் தயாநிதிமாறன் எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்...

ஆரணியில் வாக்காளா் சோ்ப்பு முகாமில் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு!

ஆரணியில் வாக்காளா் சோ்ப்பு முகாமில் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு! ஆரணியில் வாக்காளா் சோ்ப்பு முகாமில் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு! ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் சோ்ப்பு முகாமை முன்னாள் அமைச்சரும்,ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார் ஆரணியில் நேற்று நடைபெற்ற, வாக்காளா்கள் சோ்ப்பு முகாமில் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். ஆரணி நகராட்சி 2-ஆவது வாா்டு, 3-ஆவது வாா்டு பகுதிகளுக்கு வாக்காளா் சோ்க்கை முகாம் சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 4-ஆவது வாா்டுக்கான சிறப்பு முகாம் சிஎஸ்ஐ பள்ளியிலும் நடைபெற்றது. மேலும், அக்ராபாளையம், வெட்டியாந்தொழுவம், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்காளா் சோ்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். நகர அதிமுக செயலாளர் எ.அசோக்குமாா், ஒன்றிய அதிமுக  செயலாளர் ஜெயப்பிரகாஷ், நகரமன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், தேவராஜ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சரவணன், முன்னாள் நகரமன்ற உறுப்பின...

திருவண்ணாமலை தீபத் திருவிழா: துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது

திருவண்ணாமலை தீபத் திருவிழா: துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது துர்கை அம்மன் உற்சவம் திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாட வீதிகளில் வான வேடிக்கைகளுடன் காமதேனு வாகனத்தில் வலம் வந்த துர்க்கை அம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27 ம்தேதி அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த தீபத் திருவிழா வெகு விமர்சையாக தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. நிறைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை திருக்கோயில் பின்புறம் உள்ள 2668அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ச...

திருவண்ணாமலை: டிசம்பர் 6 ஆம் தேதி காலை 4 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம்,மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம்

திருவண்ணாமலை: டிசம்பர் 6 ஆம் தேதி காலை 4 மணியளவில்  அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம்,மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டு தமிழ் மாதம் கார்த்திகை 20 ஆம் தேதியிலும், ஆங்கிலம் மாதத்தில் டிசம்பர் 6 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழா நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கார்த்திகை மகா தீபம் இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்திருநாள். கார்த்திகை மாதம் என்றாலே நினைவிற்கு வருவது தீபம் தான். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளிலும், கோவில்களிலும் விளக்கு ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம். தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது திருவண்ணாமலை தீபம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் சிவனே மலையாக காட்சி தருவதாகவும், திருக்கார்த்திகை தீபத் திருநாளில் ஜோதி வடிவாக காட்சி தருவதாகவும் ஐதீகம். மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகுதான் பொதுமக்கள் அவர்களின் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதும் ஐதீகம். தமிழ் ...

அனைவரையும் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது விளையாட்டுத் துறையில் உலகப் புகழை அடைந்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைவரையும் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது விளையாட்டுத் துறையில் உலகப் புகழை அடைந்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை: தமிழக அரசின் ஜவுளித்துறை, மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசும்போது:- “ஒவ்வொரு துறையிலும் நமது அரசு பன்னாட்டளவிலான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அதில் தொழில் துறை முன்னணியில் இருக்கிறது. உலகத்தரத்திலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். விளையாட்டுத் துறையில் உலகப் புகழை அடைந்து வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நிறுவனங்களைத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த வரிசையில் துணிநூல் துறையின் சார்பில் முதன்முறையாக ஜவுளித்தொழில் குறித்தான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்முடைய போட்டி என்பது இந்திய மாநிலங்களோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு இணையானதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. தமிழக கைத்தறி மற...