அனக்காவூா்: வட்டார கலைத் திருவிழா! செய்யாற்றை அடுத்த செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், அனக்காவூா் வட்டார அளவிலான கலைத் திருவிழா தொடங்கியது. அனக்காவூா் ஒன்றியக்குழு பெருந்தலைவர் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.பி.ஜெ கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் அன்பரசு வரவேற்றாா் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலைத் திருவிழாவைத் துவக்கிவைத்து, கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினாா். செங்காடு, ஆக்கூா், அனக்காவூா் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். விழாவில் திருவத்திபுரம் நகரமன்றத் தலைவா் ஆ.மோகனவேல், நகராட்சி ஆணையா் கே.ரகுராமன் செய்யாறு நகர திமுக செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.