Skip to main content

Posts

Showing posts from October, 2024

"ரெட் கிராஸ் சேவை அளப்பரியது" ரெட் கிராஸ் நிறுவனர் படத்திறப்பு விழா நிகழ்வில் வட்டாட்சியர்

"ரெட் கிராஸ் சேவை அளப்பரியது" ரெட் கிராஸ் நிறுவனர் படத்திறப்பு விழா  நிகழ்வில் வட்டாட்சியர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ரெட் கிராஸ் சங்க கிளை சார்பில் ரெட் கிராஸ் சங்க நிறுவனர் ஹென்றி டுனான்ட் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படம் திறப்பு விழா மற்றும் 'சேவையே தூய்மை' என்ற தலைப்பில் உரையரங்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு ரெட் கிராஸ் சங்க துணை தலைவர் ஆர். சரவணன் தலைமை தாங்கினார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆ. தீனதயாளன் முன்னிலை வகித்தார். ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டாட்சியர் ஆர்.பொன்னுசாமி பங்கேற்று ரெட் கிராஸ் அரும்பணி களையும், சேவைகளை பற்றியும் விளக்கினார். மேலும் ஜூனியர் ரெட்கிராஸ்  கையேடு தொகுப்புகளை மாணவர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் உறுப்பினர் எ.தேவா, பள்ளி ஜெஆர்சி ஒருங்கிணைப்பாளர்கள் பார்த்திபன், வனஜா, முதுகலை ஆசிரியர் எம்.எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ரெட் கிராஸ் சங்க பொருளாளர் அ. விஜய...

வந்தவாசி: கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்!

வந்தவாசி: கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு அதன்  தலைவர் வி.கவிதா தலைமை தாங்கினார் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு ப.சக்கரவர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார் எஸ்.எம்.சி உறுப்பினர்களின் முன்னிலையில் பேசிய  ஆசிரியை தேன்மொழி பெற்றோர்கள், ஆசிரியர்களின் கடமைகளை எடுத்துரைத்தார் இடைநிலை ஆசிரியர் வே.துரைராஜ் நன்றி கூற, கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன "வரும் தீபாவளி பண்டிகையை மாணவர்கள் பாதுகாப்புடன் கொண்டாட அறிவுறுத்துவது எனவும் ஆறுதலை கிணறு அமைக்க வேண்டி வலியுறுத்தல் பள்ளியின் பெயர்ப்பலகை அமைத்தலுக்கான தொகை எடுத்துக் கொள்ள ஒப்புதல் பள்ளிக்கு அருகில் போதை பொருள் விற்பனை இல்லா பகுதியாக மாற்றுவது எனவும் அனைத்து மாணவர்களையும் அரசு பள்ளியிலேயே சேர்க்க பெற்றோர்களை வலியுறுத்துவது" எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீவிர புயலாக மாறிய டாணா; 200 ரயில்கள் ரத்து! மூடப்படும் கொல்கத்தா விமான நிலையம்

 தீவிர புயலாக மாறிய டாணா; 200 ரயில்கள் ரத்து! மூடப்படும் கொல்கத்தா விமான நிலையம் வங்கக்கடலில் உருவாகிய டாணா புயல் இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மழை பெய்து வருகிறது.இந்த புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இரண்டு மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக மாறிய டாணா: தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள டாணா புயல் காரணமாக காற்று 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள டாணா புயல் நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசாவின் பிதர்கனிகா தேசிய பூங்கா மற்றும் தம்ரா துறைமுகம் இடையே மிக கடுமையான தாக்கம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 200 ரயில்கள் ரத்து: டாணா புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மிக கடுமையான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. புயல் தாக்கம் மிக அதிகளவில் இருக்கும் என்ற காரணத்தால் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ரயில்வே இரு மாநிலங்களிலும் ஓடும் மற்றும் இரு ...

ஆர்எஸ்எஸ் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..!

ஆர்எஸ்எஸ் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "திருமாவளவன் என்னை ஆர்எஸ்எஸ் காரன் என்றிருக்கிறார். ஆர்எஸ்எஸ் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சி, சமுதாய ஒற்றுமை, அனைத்து சமுதாயத்தைச் சார்ந்து அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்கிற உயரிய கொள்கையோடு இருக்கும் இயக்கம் ஆர்எஸ்எஸ். இட ஒதுக்கீட்டில் என்னுடைய பங்கு என்ன என திருமாவளவன் கேட்டிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு அருந்ததியின இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக சார்பில் கலந்து கொண்ட அப்போதைய துணை தலைவர் சுப நாகராஜன் அறிக்கை ஒன்றை கொடுத்திருந்தார். அந்த அறிக்கையில், அருந்ததியின மக்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் என ஒரு விவரம் இணைக்கப்பட்டது. அந்த விவரத்தையும் இளம் வழக்கறிஞராக இருந்தபோது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக நான்தான் எடுத்துக் கொடுத்தேன். உச்ச நீதிமன்றத்தில் சிறந்த தீர்ப்பை பெற்றதற்கு காரணம் எங்களத...

110 கிமீ வேகத்தில் காற்று சுழன்றடிக்கும்.. அதிதீவிரமாகும் டானா புயல்!

110 கிமீ வேகத்தில் காற்று சுழன்றடிக்கும்.. அதிதீவிரமாகும் டானா புயல் ! சென்னை: வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாக உள்ள டானா புயல் தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த சேதத்தை டானா புயல் ஏற்படுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புயல் காரணமாக காற்று மிக வேகமாக வீசும். கரையை கடக்கும் போது 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு இடையே காற்று வேகம் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று காலை வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி. மத்திய கிழக்கு வங்கக் கடல்,வடக்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது  புயலாக வலுப்பெறும். இந்த தாழ்வு பகுதி அக்.24 இல் மேற்குவங்கம், ஒடிசா கடற்கரையையொட்டி 'டானா' புயல் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இது ஓடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒடிசாவ...

எம்பி சுதா அவர்களின் முயற்சியால் மீட்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள்!

எம்பி சுதா அவர்களின் முயற்சியால் மீட்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள்! மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, 4 பைபர் படகுகளில் கடந்த மாதம் செப்டம்பர் 20 -ம் தேதி 43 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் மறுநாள் கரை திரும்ப வேண்டிய நிலையில் அவர்கள் கரை திரும்பாததால் மீனவர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது தெரியவந்தது. 37 மீனவர்கள் கைது இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை பணி மேற்பார்வையாளர்கள் தீனதயாளன் மற்றும் வாசன் ஆகியோர், இதுகுறித்து பூம்புகார் துறைமுகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு பைபர் படகுகளில் இருந்த, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், சந்திரபாடி கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 37 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்...

கவுரி லங்கேஷ் கொலையாளிகளுக்கு வரவேற்பு சாய்பாபாவுக்குக் கொடுமை - சீமான்

கவுரி லங்கேஷ் கொலையாளிகளுக்கு வரவேற்பு சாய்பாபாவுக்குக் கொடுமை - சீமான் நாம்  தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக பத்திரிகையாளர் அம்மையார் கௌரி லங்கேஸ் அவர்களைப் படுகொலை செய்த கொலையாளிகள் பிணையில் வெளிவந்துள்ளதை இந்துத்துவவாதிகள் வரவேற்றுக் கொண்டாடியுள்ளது அருவருக்கத்தக்கது. கருத்தினைக் கருத்தினால் எதிர்கொள்ளும் திறனற்று, பெண் என்றும் பாராமல் ஊடகவியலாளர் கௌரி லங்கேஸ் அவர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு, அதனைக் கொண்டாடவும் செய்கிறார்கள் என்றால் மனம் முழுவதும் மதவெறி நிரம்பிய சிறிதும் மனசாட்சியற்ற மனிதகுல விரோதிகள்தான் இவர்கள் என்பது இத்தகைய இழிசெயல் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், இந்திய ஒன்றிய அரசால் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊஃபா கொடுஞ்சட்டத்தின் கீழ் சிறைக்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைப்போராளி, டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஐயா ஜி.என்.சாய்பாபா அவர்கள் சிறைக்கொடுமைகளால் உடல்நலிவுற்று மரணிக்கப்பட்டுள்ளார். நீதி, சனநாயகம், அடிப்படை மனித...

பிடிவாதமாக சாக மறுத்தேன்' - 10 ஆண்டு சிறை; விடுதலையான 8 மாதங்களில் மரணம்!

`பிடிவாதமாக சாக மறுத்தேன்' - 10 ஆண்டு சிறை; விடுதலையான 8 மாதங்களில் மரணம்! "என் புன்னகையை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை நான் மீண்டும் கைதுசெய்யப்பட்டேன். மீண்டும், நான் சாக மறுத்தபோது 'என்ன இவன் வாழ்க்கை' எனச் சலித்துப்போய் சிறையிலிருந்து என்னை விடுவித்தனர் நான் வெளியே நடந்தேன் பசுமையான பள்ளத்தாக்குகளுக்குள் உதயசூரியனின் கீழ் அசைந்தாடும் புல்லின் கத்திகளைப் பார்த்துச் சிரித்தேன் என் அழியாத புன்னகையால் கோபமடைந்து அவர்கள் என்னை மீண்டும் கைது செய்தனர் நான் இன்னும் பிடிவாதமாகச் சாக மறுத்தேன் சோகமான விஷயம் என்னவென்றால் என்னை எப்படிச் சாகடிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை ஏனெனில் இப்போதும் நான் அந்த வளரும் புல்லின் ஓசைகளை காதலிக்கிறேன் நான் சாக மறுத்தபோது என் சங்கிலிகள் தளர்த்தப்பட்டன நான் வெளியே வந்தேன் விசாலமான புல்வெளிகளுக்குள் புல்லின் இலைகளைப் பார்த்துச் சிரித்தேன் என் புன்னகையை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை நான் மீண்டும் கைதுசெய்யப்பட்டேன். மீண்டும், நான் சாக மறுத்தபோது 'என்ன இவன் வாழ்க்கை' எ...

வந்தவாசி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்!

வந்தவாசி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மேற்கு  ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள்,வீராங்கனைகள்  ஆலோசனை கூட்டம் வந்தவாசி தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய கழக செயலாளர் அர்ச்சுனன் ராஜேஷ்  தலைமையில்நடைபெற்றது  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் மாவட்ட பொருளாளரும்,ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவருமான ஆலத்தூர் எம்.சுப்பராயன் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தேர்தல் பொறுப்பாளருமான வாலாஜாபாத் கணேசன் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன்  மாநில எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் வழக்கறிஞர் பி.ஜாகீர் உசேன்  ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி பேசினர் உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் அனக்காவூர் சி.துரை வெம்பாக்கம் வயலூர் ராமநாதன்  பெரணமல்லூர் ஜி.செல்வராஜ்  டி.வி.பச்சையப்பன் எம்கேஏ லோகேஷ்வரன் தெள்ளார் தனசேகர் வெண்குன்றம் முனுசாமி மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராணி பெருமாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செ...

வந்தவாசி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் உரையரங்கம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல்!

வந்தவாசி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் உரையரங்கம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல்! முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் 93 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில் "ஆகலாம் கலாம் " மாணவர்களுக்கான சிந்தனை அரங்கம் மற்றும் 101 மரக்கன்றுகள் வழங்கும் விழா பாலாம்பாள் ஐடிஐ வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவை மரக்கன்றுகளை நட்டு வந்தவாசி நகர் மன்ற தலைவர் எச். ஜலால் தொடங்கி வைத்தார்.  தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் என்.எஸ். குமார் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா. கதிரொளி, யுரேகா திட்ட மேற்பார்வையாளர் க.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, செய்யாறு ரெட் கிராஸ் சங்க தலைவர் டாக்டர் ஏ.பி. மாதவன் பங்கேற்று, "ஆகலாம் கலாம்" என்ற தலைப்பில் கலாமின் வாழ்க்கை வரலாற்று நெறிகளை மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். மேலும் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்று...