Chess Olympiad 2022: வாய்ப்புகளை தமிழகத்துக்கு தொடர்ந்து தாருங்கள்… பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Chess Olympiad 2022: வாய்ப்புகளை தமிழகத்துக்கு தொடர்ந்து தாருங்கள்… பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் Chess Olympiad 2022: வாய்ப்புகளை தமிழகத்துக்கு தொடர்ந்து தாருங்கள்… பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் செஸ் ஒலிம்பியாட் Chess Olympiad 2022: இதுபோன்று பன்னாட்டு போட்டிகளை நடத்த குறைந்தது 18 மாதங்களாவது ஆகும். ஆனால் நான் பெருமையுடன் கூறுகிறேன் 4 மாதங்களே ஆனது- முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்துவது இந்தியாவுக்கு கவுரவம் என்றும் இது போன்ற வாய்ப்புகளை தமிழகத்துக்கு தொடர்ந்து தாருங்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்தார். 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய – மாநில அமைச்சர்கள், சர்வதேச செஸ் அமைப்பின் பிரதிநிதிகள், நடிகர்- நடிகைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ...