Skip to main content

Posts

Showing posts from April, 2025

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்!

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் ! ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த 22 ம் தேதி தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி டூரிஸ்ட்கள் 26 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இருநாடுகளும் எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, கடந்த 4 நாட்களாக எல்லையில் அத்துமீறி போரில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியப் படை விரட்டியடித்து வருகிறது. தொடர்ந்து போர் மற்றும் காஷ்மீரின் நிலைமை குறித்து மத்திய அமைச்சரவை இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், "எல்லையில் எங்களது படைகளைப் பலப்படுத்தியுள்ளோம்" என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது தெரிவித்துள்...

48 மணிநேரம் தான் டைம்! பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை! பஞ்சாப் விவசாயிகளுக்குஅதிரடி உத்தரவு

48 மணிநேரம் தான் டைம்! பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை! பஞ்சாப் விவசாயிகளுக்கு அதிரடி உத்தரவு நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது.இதற்கான சரியான நேரத்துக்காக நம் நாடு காத்திருக்கிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பஞ்சாப்பில் பாகிஸ்தானையொட்டி விவசாயிகளுக்கு எல்லை பாதுகாப்பு படையினர் 48 மணிநேரம் காலக்கெடு வழங்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு என்பது பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய தாக்குதலை இந்தியா முன்னெடுக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் அருகே பைசரன் என்ற புல்மேடு உள்ளது. இங்கு கடந்த 22 ம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிசூடு நடத்தினர். 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதில் 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு பதிலடி கொட...

கோவை தொண்டாமுத்தூர் எஸ்.டி.பி.ஐ யின் சார்பில்,வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

கோவை தொண்டாமுத்தூர் எஸ்.டி.பி.ஐ யின் சார்பில்,வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம்! மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதியின் சார்பில், கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்குட்பட்ட உக்கடம் அன்புநகர் பகுதி முழுவதும், வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைப்பெற்றது அன்புநகரில் 10-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. 2,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும் நேற்று கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து அன்புநகர் நுழைவாயில் முன்பு, அன்புநகர் பகுதி மக்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி தலைவர் முகமது காசிம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல்ஹமீத், மாவட்ட செயலாளர் உமர் பாரூக், மாவட்ட பொருளாளர் மன்சூர் அலி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கைய...

கோவை தொண்டாமுத்தூர் எஸ்.டி.பி.ஐயின் சார்பில்,வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

கோவை தொண்டாமுத்தூர் எஸ்.டி.பி.ஐயின் சார்பில்,வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம்! மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதியின் சார்பில், கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்குட்பட்ட உக்கடம் அன்புநகர் பகுதி முழுவதும், வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் இன்று (ஏப்.19) நடத்தப்பட்டது. அன்பு நகரில் 10-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. 2,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும் இன்று கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து அன்புநகர் நுழைவாயில் முன்பு, அன்புநகர் பகுதி மக்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி தலைவர் முகமது காசிம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல்ஹமீத், மாவட்ட செயலாளர் உமர் பாரூக், மாவட்ட பொருளாளர் மன்சூர் அலி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்...

ஒன்றிய பாஜக அரசின் வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஒன்றிய பாஜக அரசின் வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! சென்னை மாவட்டம் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் எதிரே நேற்று மாலை நடைபெற்றது  ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தமைமை தாங்கினார். தேசிய மகளிரணி தலைவர் ஏ.எஸ்.பாத்திமா முசாபர் துவக்க உரையாற்றினார். மாவட்டத் தலைவர்கள் மடுவை எஸ்.பீர் முஹம்மது, கமுதி பி.சம்சுதீன், ஏ.ஹெச். முஹம்மது இஸ்மாயில், யூசுப் குலாம் முஹம்மது, மாவட்டச் செயலாளர்கள் எம். முஹம்மது அபூபக்கர், எம்.என்.எம். இர்பான் சுபேர், கே.கோதர்ஷா, முஸப்பர் அகமது, மாவட்ட பொருளாளர்கள் கௌஸ்பேக், ஏ.எம்.என். காசிம், எம்.சுலைமான் மன்பஈ, எஸ்.ஏ. மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  தலைவர் செல்வப் பெருந்தகை, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் கழக பிரச்சார அணி செயலாளர் அருள்மொழி, ஜமாஅத்துல் உலமா மாந...

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் சார்பாக, கருப்பு கொடியுடன் கண்டன ஆர்பாட்டம்!

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் சார்பாக, கருப்பு கொடியுடன் கண்டன ஆர்பாட்டம்! புதிய வக்ஃபு சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக,  திருச்சி, தென்னூர் ஹை ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிவாசலின் வெளியே தூண்களிலும் கருப்பு கொடியை பறக்க விட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவியது. வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும், வக்ஃப் வாரிய சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் அனைத்து ஜமாத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி கூட்டமைப்பினர் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த பேரணியில், "எச்சரிக்கிறோம் எச்சரிக்கிறோம் வக்ஃபு திருத்த சட்டத்தை எச்சரிக்கிறோம்" "வக்ஃப் வாரிய சட்டத்தை நிராகரிப்போம்", "வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும்", "வக்ஃப் வாரிய சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது" போ...

கோயில் அறங்காவலராக ஒரு முஸ்லிமை நியமித்தால் இந்துக்கள் ஏற்பார்களா? கண்டன ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரம் கருத்து

கோயில் அறங்காவலராக ஒரு முஸ்லிமை நியமித்தால் இந்துக்கள்  ஏற்பார்களா? கண்டன ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரம் கருத்து சென்னை: வக்பு சட்ட திருத்தத்தில் ஏராளமான பிழைகள் இருப்பதால், இந்த சட்ட திருத்தம் செல்லாது என உச்ச நீதிமன்றம் நிச்சயம் அறிவிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார். வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழகம் வரும் பிரதமர் மோடியை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று முன்தினம் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:- "மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டுக்கு பிறகு, முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீரை இரண்டாக உடைத்து மாநில அந்தஸ்தை பறித்து யூனியன் பிரதேசத்தை உருவாக்கியது, பொது சிவில் சட்டம் என முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது வக்பு சட்ட திருத்தமும் சேர்ந்துள்ளது. இதில் ஏராளமா...

கோயில் அறங்காவலராக ஒரு முஸ்லிமை நியமித்தால் இந்துக்கள் ஏற்பார்களா? கண்டன ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரம் கருத்து

கோயில் அறங்காவலராக ஒரு முஸ்லிமை நியமித்தால் இந்துக்கள்  ஏற்பார்களா? கண்டன ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரம் கருத்து

புதிய வக்பு சட்ட மசோதா இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கிறது - தவ்ஹீத் ஜமாஅத்

புதிய வக்பு சட்ட மசோதா இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கிறது - தவ்ஹீத் ஜமாஅத் புதிய வக்பு சட்ட மசோதா இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கிறது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கேள்வி எழுப்பினர் இது சம்பந்தமாக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சந்தித்து வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். புதிய வக்பு சட்ட மசோதா இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கிறது, இஸ்லாமியர்கள் பொது நலனுக்காக வழங்கிய சொத்துக்களை நிர்வகிக்க இஸ்லாமியர்களுக்கு தான் உரிமை உண்டு, இந்நிலையில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை ஏன் வக்பு நிர்வாகத்தில் ...

வக்ப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை!

வக்ப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை! வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள், எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. வக்ப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட திருத்தங்களைக் கொண்ட வக்ப் சட்டத் திருத்த மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்குப் பிறகு மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொண்டு பின்னர் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. குட...

காஞ்சிபுரம்: கோளிவாக்கம் பல்லவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா!

காஞ்சிபுரம்: கோளிவாக்கம் பல்லவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா! காஞ்சிபுரம் கோளிவாக்கம் பல்லவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா "கலைமாமணி"  முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது.பள்ளி முதல்வர் சகிலா வரவேற்புரையாற்றினார் பள்ளி தாளாளர்,முனைவர் வி.முத்து குத்துவிளக்கேற்றி, நிகழ்வினை துவக்கி வைத்தார்.பள்ளியில் படிக்கும் எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்  பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர். மேலும் ஐந்தாம் வகுப்பு மாணவி பெண்ணுரிமை பற்றி சிறப்பாக பேசினார். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் சிறப்பான முறையில் சீருடை அணிந்து நடனமாடியது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. யோகா பயிற்சி செய்து காட்டியது பிரமிப்பாக இருந்தது. கலையின் வரலாற்றை யோகா ஆசிரியர் விளக்கி கூறினார். சிலம்பம், கராத்தே போன்ற அனைத்து துறைகளிலும் மாணவ மாணவிகள் பங்கேற்றது அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது. ஒருநாள்கூட விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருகைத் தந்த மாணவ மாணவிகளுக்கு தாளாளர் வி.முத்து, முதல்வர் சகீலா ஆகியோர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினர். எஸ்...

வக்பு சட்ட திருத்தம்! இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல.. தேசத்திற்கே எதிரானது! - தொல் திருமாவளவன்

வக்பு சட்ட திருத்தம்! இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல.. தேசத்திற்கே எதிரானது! - தொல் திருமாவளவன் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு நாடாளுமன்றத்தில் எழுந்திருக்கிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன், "இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல தேசத்திற்கே எதிரானது" என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, "திருத்தச் சட்ட மசோதாவை முற்றாக நான் எதிர்க்கிறேன். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆகவே இந்த சட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாக எதிர்க்கிறேன். இந்த சட்ட மசோதா இஸ்லாமியர்களுக்கான சொத்துக்களை முற்றாக அபகரிப்பதற்கான ஒரு சதி முயற்சியாகவே தெரிகிறது. இஸ்லாமியர்கள், இஸ்லாமியர்களின் நலன்களுக்காக உருவாக்கிக் கொண்ட வக்பு சொத்து, இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படுவதுதான் நீதியாகும். ஆனால், அதற்கென உருவாக்கப்பட்டு இருக்கிற நிர்வாக குழுவில் இஸ்லாமியர் அல்லாதவர்களை வாரிய...

மேல்நெமிலி ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா!

 மேல்நெமிலி ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா! திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியம் மேல் நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நேற்று நடைப்பெற்றது   தேசியகொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது முன்னதாக சேர்க்கை மாணவர்கள் வீடுதேடி அழைப்பு நடைபெற்றது தொடர்ந்து பள்ளியின் ஆண்டுவிழா கலாவதி, வட்டாரக்கல்வி அலுவலர் (ஓய்வு) தலைமையில், அனக்காவூர் வட்டாரக்கல்வி அலுவலர் தமிழரசி முன்னிலை வகித்தார் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது இரா.தேன்மொழி தலைமையாசிரியர் வரவேற்புரையாற்றினார். ஆண்டறிக்கையினை அப்ரின்பானு வாசிக்க, கல்வி உறுதிமொழியினை மீனா வாசிக்க பெற்றோர்கள் எஸ்.எம்.சி உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும்  உறுதிமொழி ஏற்றனர். மேலும் மாணவர்களை வாழ்த்த, முன்னாள் பள்ளி தலைமையாசிரியர்கள், ஊர் பெரியோர்கள் செய்யாறு லயன்ஸ்  சங்கத்தினர் அன்னை சண்முகம் சித்தார்த்த அறக்கட்டளை நிறுவனர் தசரதன் வந்தவாசி எக்ஸ்னோரா தலைவர் மலர் சாதிக், மூத்த பத்திரிகையாளர் அ.ஷாகுல்அமீது, வந்தை முன்னேற்ற சங்கத் தலைவர் பிரேம்,வந்தை குமரன், உள்ளிட்ட பலரும் கலந்து...

இயல் இசை நாடக மன்றத்தின் கலைச்சங்கமம், கிராமிய கலை நிகழ்ச்சி!

இயல் இசை நாடக மன்றத்தின்  கலைச்சங்கமம், கிராமிய கலை நிகழ்ச்சி! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானத்தில் இயல் இசை நாடக மன்றம் சார்பாக கலை சங்கமம் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் மாவட்டம் தோறும் கலை சங்கமும் கிராமிய கலை நிகழ்ச்சி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திர சேகர், உறுப்பினர் ,செயலர்  விஜயதாயன்பன் அவர்களின் வழிகாட்டுதல் படி சிறப்பாக நடைபெற்று வருகிறது அதன்படி பொதுக்குழு உறுப்பினர் வி.கே வாசுதேவன் தலைமையில், ஆரணி கோட்டை மைதானத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில்  ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.எஸ்.தரணி வேந்தன்  கொடி அசைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் மங்கல இசையுடன் நிகழ்ச்சி  தொடங்கப்பட்டு சிலம்பம்,கரகாட்டம், கட்டைகூத்து ,பரதநாட்டியம்,பம்பை உடுக்கை,10 க்கும் மேற்பட்ட கலை குழுக்கள் தாங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.மேலும் ஆரணி வி.சிவா அம்மு இவர்களின்  ஒருங்கிணைப்போடு, பல்வேறு நாடகக் கலைஞர்கள் மேடையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்வில், ஆரணி நகர மன்றத் தலைவர் ஏ.ச...