இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் ! ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த 22 ம் தேதி தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி டூரிஸ்ட்கள் 26 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இருநாடுகளும் எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, கடந்த 4 நாட்களாக எல்லையில் அத்துமீறி போரில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியப் படை விரட்டியடித்து வருகிறது. தொடர்ந்து போர் மற்றும் காஷ்மீரின் நிலைமை குறித்து மத்திய அமைச்சரவை இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், "எல்லையில் எங்களது படைகளைப் பலப்படுத்தியுள்ளோம்" என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது தெரிவித்துள்...