நாடு முழுவதும் தோற்கவிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வெற்றிபெறும்? – கே.பாலகிருஷ்ணன் நாடு முழுவதும் தோற்கவிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வெற்றிபெறும்? – கே.பாலகிருஷ்ணன் மதுரையில் தீக்கதிர் நாளிதழின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசும்போது: “மோடி அரசு பத்திரிகை சுதந்திரத்தைக் காலில் போட்டு மிதிக்கிறது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது. நாட்டில் நடப்பதைக் கண்டுகொள்ளாமல், வெளிநாடுகளில் ஜனநாயகம் இல்லை எனப் பேசிவருகிறார். ஜனநாயகத்துக்காகக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து கைதுசெய்யும் அவலம் தொடர்கிறது. அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயகக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவருவது பாராட்டுக்குரியது, இது போன்று குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பழைய பென்ஷன் திட்டம் போன்ற வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களின் கோர...