Skip to main content

Posts

Showing posts from June, 2022

நாடு முழுவதும் தோற்கவிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வெற்றிபெறும்? – கே.பாலகிருஷ்ணன்

நாடு முழுவதும் தோற்கவிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வெற்றிபெறும்? –  கே.பாலகிருஷ்ணன் நாடு முழுவதும் தோற்கவிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் எப்படி  வெற்றிபெறும்? –  கே.பாலகிருஷ்ணன் மதுரையில் தீக்கதிர் நாளிதழின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசும்போது: “மோடி அரசு பத்திரிகை சுதந்திரத்தைக் காலில் போட்டு மிதிக்கிறது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது. நாட்டில் நடப்பதைக் கண்டுகொள்ளாமல், வெளிநாடுகளில் ஜனநாயகம் இல்லை எனப் பேசிவருகிறார். ஜனநாயகத்துக்காகக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து கைதுசெய்யும் அவலம் தொடர்கிறது. அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயகக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவருவது பாராட்டுக்குரியது, இது போன்று குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பழைய பென்ஷன் திட்டம் போன்ற வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களின் கோர...

டீஸ்டா செதால்வட், முகமது ஜூபர் கைது அரச பயங்கரவாதம்- அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி: சீமான் கண்டனம்

டீஸ்டா செதால்வட், முகமது ஜூபர் கைது அரச பயங்கரவாதம்- அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி: சீமான் கண்டனம் டீஸ்டா செதால்வட், முகமது ஜூபர் கைது அரச பயங்கரவாதம்- அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி: சீமான் கண்டனம் சென்னை: சமூக ஆர்வலர் டீஸ்டா        செதால்வட், பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கைதுகள் அறிவிக்கப்படாத அவசரநிலை; அரச பயங்கரவாதம் என்றும் சீமான் தமது அறிக்கையில் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: குஜராத் மதவெறிப்படுகொலைகளுக்கெதிராகக் குரல்கொடுத்து வரும் சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் அவர்களும், பாஜகவின் அவதூறுப்பரப்புரைகளைத் தோலுரித்து வரும் பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் அவர்களும் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அறிவிக்கப்படாத அவசரநிலை போல, நாடு முழுக்க ஒரு அசாதாரணச் சூழலை உருவாக்கி, சனநாயகச்சக்திகள், சமூகச்செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மண்ணுரிமைப்போராளிகள் என யாவரின் குரல்வளையையும...

“பாஜக வினர் கட்சி மாறி ஓடும்போது அந்த வலி என்னவென்று அப்போதுதான் மோடிக்கும் அமித்ஷா வுக்கும் தெரியும்” – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

“பாஜக வினர் கட்சி மாறி ஓடும்போது அந்த வலி என்னவென்று அப்போதுதான் மோடிக்கும் அமித்ஷா வுக்கும் தெரியும்” – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி    “பாஜக வினர் கட்சி மாறி ஓடும்போது அந்த வலி என்னவென்று அப்போதுதான் மோடிக்கும் அமித்ஷா வுக்கும் தெரியும்” – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி  புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்: “மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியைக் கொண்டு வருவதற்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறார்கள். 2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறிய சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. அதை பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க., மெஜாரிட்டி இல்லாத தேவேந்திர பட்னாவிஸுக்கு இரவோடு இரவாக கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தது. அந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளம்பியது. ஆனால் முதல்வராகப் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் தோல்வ...

“மதநல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையுமே நமது தேசத்தின் பலம்” – தமிழ்ச் சங்க விழாவில் பேரா. அப்துல் காதர்

“மதநல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையுமே நமது தேசத்தின் பலம்” – தமிழ்ச் சங்க விழாவில் பேரா. அப்துல் காதர் “மதநல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையுமே நமது தேசத்தின் பலம்” – தமிழ்ச் சங்க விழாவில் பேரா. அப்துல் காதர் வந்தவாசி:             மதநல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையுமே நமது இந்திய தேசத்தின் பலமாக இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என பேரா அப்துல் காதர் குறிப்பிட்டார் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் மனிதநேய தமிழ்த் திருவிழா நடைபெற்றது வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் 100-ஆவது நிகழ்வாக நடைபெற்ற மனிதநேய தமிழ்த்திருவிழா வந்தவாசி கோட்டை மூலையில் அமைக்கப்பட்ட ஆசிரியர் அ.மு.உசேன் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்கத் தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார். செயலாளர் பா.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார். சங்க ஆலோசகர் மு.முருகேஷ் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். கிராமிய பாடல்களை பெ.பார்த்திபன், இரா.அருண்குமார் ஆகியோர் பாடினர். விழாவை அரவிந்த் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் எம்.எஸ்.தரணிவேந்தன் துவக்கி வைக்க, மத ஒற்றுமை உரையரங்...

அதிமுக பொதுக்குழுவில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிப்பு!அசிங்கப்பட்ட ஓபிஎஸ்!

அதிமுக பொதுக்குழுவில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களும்  நிராகரிப்பு! அசிங்கப்பட்ட ஓபிஎஸ்! சென்னை: சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் கூடி இருந்த எடப்பாடி ஆதரவாளர்களால் ஓ பன்னீர்செல்வம் கடுமையாக அவமதிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம்  சர்ச்சையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தமிழக சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு கட்சியின் பொதுக்குழுவில் ஒட்டுமொத்த தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது, என்றைக்கு ஒற்றைத்தலைமை தீர்மானம் வருகிறதோ அன்றைய பொதுக்குழுவே உண்மையான ஒன்று என்று கே.பி.முனுசாமி மேடையில் அறிவித்தார். என்ன சொன்னார் தமிழ் மகன் உசேன் அதன்பின் இந்த கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தொடர வேண்டிய தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிந்தார் . இதையடுத்து தமிழ் மகன் உசேன் அதிமுகவின் அவை தலைவராக தேர்வு செய்யப்படுவதாக எடப்ப...

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சைகள் வெடித்திருக்கும் நிலையில், பொதுக்குழு கூட்டம் பரபரப்பு!

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சைகள் வெடித்திருக்கும் நிலையில், பொதுக்குழு கூட்டம் பரபரப்பு! புறப்பட்ட ஓ.பி.எஸ், இ.பி.எஸ்! அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 9 மணிக்கு மேல் தொடங்க இருக்கும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தனது வீட்டில் இருந்து, ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் புறப்பட்டார். புறப்படும் முன்னர் வீட்டில் கோமாதா பூஜைகள் நடத்தப்பட்டது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே  பழனிசாமி, தனது வீட்டில் இருந்து பூரண கும்ப மரியாதையுடன் புறப்பட்டார். அவருக்கு சாலையின் இருபுறமும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டம் நடைபெறும் வானகரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது. கூட்டம் நடக்கும் மண்டபத்துக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து அதிமுக நிர்வாகிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். முறையான அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஜெயக்குமார் ஓ.பி.எஸ் தரப்பு பொதுக்குழு தொடர்பாக தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான உத்...

வானகரம்: அதிமுக பொதுக்குழு! "ஒற்றைத் தலைமை"க்கு பெருகிவரும் ஆதரவு!

வானகரம்: அதிமுக பொதுக்குழு! "ஒற்றைத் தலைமை"க்கு பெருகிவரும் ஆதரவு! சென்னை: அதிமுக ஒற்றை தலைமைக்கு ஆதரவு அதிகரித்து வரும் சூழலில் எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்ப்பார் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது ஆங்காங்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கோஷங்கள் அதிகரித்து வருகின்றன இச்சூழலில் இன்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூடுகிறது ஏகமனதாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்டங்களை சேர்ந்த அதிமுக வினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் மாவட்ட கழக செயலாளர்கள் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தூசி கே மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ இவர்களின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் வானகரத்தில் திரண்டுள்ளனர் படத்தில்: ஆதரவு கோஷங்கள் எழுப்பும் வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் செய்யாறு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்,த...

"இலக்கும் முயற்சியுமே நம்மை சான்றோா் ஆக்கும்" மயில்சாமி அண்ணாதுரை

"இலக்கும் முயற்சியுமே நம்மை சான்றோா் ஆக்கும்" மயில்சாமி அண்ணாதுரை இலக்கும் முயற்சியுமே நம்மை சான்றோா் ஆக்கும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் திட்ட இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை கூறினாா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் நேற்று  நடைபெற்ற 21-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: "நம்மால் என்ன முடியும் என்பதை நிா்ணயிப்பது நமது மனம் மட்டுமே. மூச்சு உள்ளவரை முயற்சி இருக்க வேண்டும். அந்த முயற்சி நமது சுற்றம் மற்றும் நாட்டை உயா்த்துவதாக இருக்க வேண்டும். பிறக்கும் போதே யாரும் சான்றோராகப் பிறப்பதில்லை. அவா்களின் இலக்கும் முயற்சியுமே அவா்களை சான்றோா்களாக ஆக்குகிறது. விரும்பியதை அடைவது மட்டுமே வெற்றியல்ல. விருப்பத்துக்கு மாறாகக் கிடைப்பதும் வெற்றியைத் தரும் என்பது எனது அனுபவம். இந்திய விண்வெளி ஆய்வகத்தில் புதிது புதிதாக செயற்கைக்கோள்களை உருவாக்கும் ஆராய்ச்சிப் பணியை விரும்பினேன். ஆனால், கிடைத்ததோ செயற்கைக்கோள்களின் செயல் இயக்கத்தை கவனிக்கும் பணி. அ...

அக்னிபாத் எதிர்ப்பு போராட்டங்கள் - தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் இதோ!

அக்னிபாத் எதிர்ப்பு போராட்டங்கள் - தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் இதோ! மத்திய அரசு அறிமுகப்படுத்திய “அக்னிபாத் திட்டம்” நாடு முழுவதும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான டாப் 10 தகவல்கள் இதோ! 1. ராணுவத்தில் வழங்கப்படும் கடுமையான பயிற்சிகளை தாக்குப்பிடிக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறும் இளைஞர்களும், முழுமையாக பணியை முடித்து வெளியேறி வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களும் ஆயுதப் பயிற்சிகளை பெற்றவர்கள் என்பதால் வேலை இல்லாததால், அவர்கள் எளிதில் தீவிரவாத இயக்கங்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் முன்னாள் ராணுவ வீரர்கள். 2. ராணுவ ரகசியங்களை தெரிந்துகொள்ள தீவிரவாத இயக்கங்களும் தங்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை 4 ஆண்டுகால ராணுவப் பணிக்கு அனுப்பக் கூடும் எனவும் முன்னாள் ராணுவ வீரர்கள் எச்சரிக்கின்றனர். 1970-களில் ராணுவத்தில் சுமார் 6, 7 ஆண்டுக்கால பயிற்சி பெற்று திரும்பியவர்களே, காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தில் அதிகம் சேர்ந்தா...

அக்னிபாத்: இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் ரூ.700 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதமாகியுள்ளதாக தகவல்

அக்னிபாத்: இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் ரூ.700 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதமாகியுள்ளதாக தகவல் இந்திய ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்கள், 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மீதம் உள்ளவர்கள் ஒய்வூதியம் இன்றி வெறும் சம்பளத்துடன் வெளியேறும் நிலையில் அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இளைஞர்கள் போராட்டம் இதனைக் கண்டித்து பீஹார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, தெலுங்கானா உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நேற்று சென்னையிலும் வெடித்தது. வடமாநிலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில், ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், ரயில்வே சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. பீஹாரில...