திருவாரூர்: உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் ஆழித்தேர் இன்று காலை இழுக்கப்பட்டது
திருவாரூர்: உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் ஆழித்தேர் இன்று காலை இழுக்கப்பட்டது திருவாரூர்: பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் பிரசித்தி பெற்ற ஆழித்தேர் இன்று காலை சரியாக 7:30 மணி அளவில் தேர் இழுக்கப்பட்டது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன், திருப்புகலூர் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், தருமையாதீன ராஜாங்க கட்டளை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் "ஆரூரா தியாகராஜா" என்ற கோஷத்துடன் ஆழித்தேரை வடம் பிடித்து இழுக்க,உடன் இந்து சமய அறநிலையத்துறையை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பக்த கோடிகள் என லட்சக்கணக்கானோர் "ஆரூரா தியாகராஜா " என்ற கோஷத்துடன் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர்