Skip to main content

Posts

Showing posts from March, 2023

திருவாரூர்: உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் ஆழித்தேர் இன்று காலை இழுக்கப்பட்டது

திருவாரூர்: உலகப் பிரசித்தி பெற்ற  அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் ஆழித்தேர் இன்று காலை இழுக்கப்பட்டது திருவாரூர்: பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான  உலகப் பிரசித்தி பெற்ற ஆழித்தேர் இன்று காலை சரியாக 7:30 மணி அளவில் தேர் இழுக்கப்பட்டது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன், திருப்புகலூர் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், தருமையாதீன ராஜாங்க கட்டளை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் "ஆரூரா தியாகராஜா" என்ற கோஷத்துடன் ஆழித்தேரை வடம் பிடித்து இழுக்க,உடன் இந்து சமய அறநிலையத்துறையை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பக்த கோடிகள் என லட்சக்கணக்கானோர் "ஆரூரா தியாகராஜா " என்ற கோஷத்துடன் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர் 

"சங்க இலக்கியங்களை இளைஞர்கள் வாசிக்க வேண்டும்" மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேச்சு

"சங்க இலக்கியங்களை இளைஞர்கள் வாசிக்க வேண்டும்" மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேச்சு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்விற்கு செய்யாறு சப் கலெக்டர் அனாமிகா ஐஏஎஸ் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் பா. முனிரத்தினம், செயலாளர் மு. ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக,  எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பங்கேற்று, சங்க இலக்கியங்களில் உள்ள தொன்மை பற்றி சிறப்புரை ஆற்றினார். மேலும் "சங்க இலக்கியத்தை இன்றைய சமூகத்திற்கு விளக்கும் ஊடகமாக  இளைஞர்கள் திகழ வேண்டும்" என்று வலியுறுத்தினார்.  திரைப்பட இயக்குனர் ராஜூ முருகன் பேசுகையில்: "கலையும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கொண்டு தான் இருக்கிறது. இதை ஒப்பு நோக்கியே இன்று வரை சரித்திரம் தொடர்கிறது" என குறிப்பிட்டார் மேலும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ... மாணவிகள்  பங்கேற்றனர். மேலும் இலக்கியம் சார்ந...

அதிமுக தொண்டர்களின் வாழ்த்து மழையில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி!

அதிமுக தொண்டர்களின் வாழ்த்து மழையில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி! அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சமீபத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக எதிர் கட்சித் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி பொறுப்பேற்றார் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் அவ் வகையில் வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் செய்யாறு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை கூறி வாழ்த்துக்களை பெற்றனர் உடன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் கலசபாக்கம் முன்னாள் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம்  

செய்யாறு: அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்தையொட்டி,தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!

செய்யாறு: அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தையொட்டி,தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்! பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையொட்டி அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி நேற்று பொறுப்பேற்றார் இதைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற முன்னாள்  உறுப்பினருமான தூசி கே.மோகன் அவர்களின் சீரிய வழிக்காட்டுதலின்படி, செய்யாறு நகர கழக செயலாளர் வெங்கடேசன் தலைமையில், அவைத்தலைவர் ஜனார்த்தனம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆரணி கூட்ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்  தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் இந் நிகழ்ச்சியில் செய்யாறு நகர கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்

அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பால் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!

அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பால் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்! விழா கோலம் பூண்ட செய்யாறு நகரம்! அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து,கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி கே பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் வழிகாட்டுதலின்படி, மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் தலைமையில், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் ஏற்பாட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் தொடர்ந்து செய்யாறு வடக்கு ஒன்றிய கழக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் உடன் ஒன்றிய கழக நிர்வ...

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பாவலர் ப.குப்பன் பேச்சு!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பாவலர் ப.குப்பன் பேச்சு! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் டி‌ஆர். நம்பெருமாள் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற வட்டார கல்வி அலுவலர் பொன். சந்திரசேகரன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பி. சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் பாவலர் ப. குப்பன் பங்கேற்று, குறள் காட்டும் வழி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் திருக்குறளை தேசிய நூலாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர் சுப. தமிழ்நேசன், வழக்கறிஞர் சா.இரா. மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஆசிரியர் அ‌.பச்சையப்பன் நன்றி கூறினார்.

புதுடெல்லி: ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் பார்லிமெண்டில் எதிர்க்கட்சிகள் அமளி!

புதுடெல்லி: ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் பார்லிமெண்டில் எதிர்க்கட்சிகள் அமளி! சபாநாயகர் மீது காகிதம் வீச்சு: இரு அவைகளும் ஒத்திவைப்பு ராகுல் காந்தி பதவி நீக்கம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் பார்லிமெண்டின் இரு அவைகளும் இன்று துவங்கிய ஒரு நிமிடத்திலேயே ஒத்தி வைக்கப்பட்டது. பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 9வது நாள் அமர்வு தொடங்கியதும் ராகுல் காந்தி சிறை மற்றும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ஆளும் பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவதூறு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ராகுலை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்க கோரி, சபாநாயகர் இருக்கை முன்பு சென்று திமுக, கா...

கோழிக்கோடு: லீக் ஹவுஸ் அரங்கில் கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம்

கோழிக்கோடு: லீக் ஹவுஸ் அரங்கில் கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம் கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம் மாநில தலைவர் செய்யிது சாதிக் அலி சிகாப் தலைமையில் நடைப்பெற்றது தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய பொதுச் செயலாளரும், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான பி.கே.குஞ்ஞாலிக் குட்டி எம்.எல்.ஏ., தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வஹாப் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்  கேரள மாநில பொதுச் செயலாளர் பி.எம்.ஏ.ஸலாம் வரவேற்புரையாற்றினார். இக் கூட்டத்தில் பவளவிழா அகில இந்திய மாநாட்டை சிறப்புடன் நடத்தியமைக்கு தமிழ்நாடு மாநில கிளைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் கே. நவாஸ் கனி எம்.பி. உள்ளிட்டோர் உரையாற்றினர். இக்கூட்டத்தில் புதிதாக கேரள மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்- செயலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சி தூக்கி எறியப்படும் வரை போராட்டம் ஓயாது - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சி தூக்கி எறியப்படும் வரை போராட்டம் ஓயாது - முன்னாள் முதல்வர் நாராயணசாமி மத்தியில் உள்ள நரேந்திரமோடி  தலைமையிலான பாஜக ஆட்சி தூக்கி எறியப்படும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என புதுவை மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார் புதுவை மாநிலத்தில் காங்கிரசார் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உட்பட 48 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "பிரதமர் மோடியின் திறமையின்மையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. விலைவாசி அதிகரித்துள்ளது. இதனை எடுத்துக்கூறி ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். அனைத்து பகுதிகளிலும் மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதனால் பாஜக அவரது பாதயாத்திரயை தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து தோல்வி அடைந்தது தற்போது ராகுல் காந்தியின் பதவியை பறித்து வரும் தேர்தலில் போட்டியிடாமல் செய்துள்ளனர் இது கடும் கண்டனத்துக்குரியது" என கூறினார் இதைத் தொடர்ந்து புதுச்சேரி காங்கிரஸ் கட்...

செய்யாறு: மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது

செய்யாறு: மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நேற்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது இந் நிகழ்வில்,92 நிறுவனங்கள் கலந்து கொண்டன மாவட்ட திட்ட இயக்குனர் பா.அ. சையத் சுலைமான் தலைமை உரையாற்ற,யோக லட்சுமி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திட்ட விளக்கயுரை ஆற்றினார் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் கலைவாணி வாழ்த்துரை வழங்கினார் உதவி பேராசிரியர்கள் வெங்கடேசன்  துரை தண்டபாணி பேராசிரியர் கண்ணன் பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் உதவி திட்ட அலுவலர் எஸ் சந்திரகுமார் நன்றி கூறினார் இவ் வேலை வாய்ப்பு முகாமில் 701 ஆண் 470 பெண்கள் கலந்து கொண்டனர் மொத்தம் 1171 தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆண் 183 பெண் 122 இந்த மாபெரும் வேலை வாய்ப்புக்கான முகாம்  ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளர் ரேகா செய்திருந்தார் ...

டெல்லி: பாரதிய ஜனதாவை கண்டித்து 14 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

டெல்லி: பாரதிய ஜனதாவை கண்டித்து 14 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனுவை 14 கட்சிகள் சார்பில் அபிஷேக் சிங்வி தாக்கல் செய்தார். முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஏப்ரல் 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது கர்நாடகத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், 'அனைத்துத் திருடர்களும் 'மோடி' என்ற பின்னொட்டுப் பெயரைக் கொண்டிருப்பது எவ்வாறு எனத் தெரியவில்லை' என்றார். ராகுலின் இந்தக்கருத்துஒட்டுமொத்த மோடி சமூகத்தினரையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.-வும், மாநில முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  இந்த விவகாரத்தில் இந்திய தண்டனையியல் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா விசாரித்து வந்தார்.  ராகுல் காந்...

உலக காச நோய் தினம்: மருத்துவர் காளிச் செல்வம் தலைமையில், மருத்துவர் ரேவதி தேவி சிறப்புரை!

உலக காச நோய் தினம்: மருத்துவர் காளிச் செல்வம் தலைமையில், மருத்துவர் ரேவதி தேவி சிறப்புரை! வந்தவாசி ஆரம்ப சுகாதார மருத்துவ மனையில் உலக காச நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது மருத்துவர் காளிச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்பு விருந்தினராக நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனு எக்ஸ்னோரா  தலைவர் மலர் சாதிக் கலந்து கொண்டனர் காச நோய் விழிப்புணர்வு குறித்து மருத்துவர் ரேவதி தேவி சிறப்புரையாற்றினார் உடன் கலைஞர் முத்தமிழ்ச்சங்க துணைத் தலைவர்அறிவொளி க.வெங்கடேசன் தலைவர்வந்தை குமரன் தமிழாசிரியர் பெ.செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி, கெளரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில். மருந்தகர் குணசீலன் நன்றி கூறினார்

பத்திரிகையாளர் நல வாரிய குறைபாடுகள் களைய, அரசிடம் பேசி ஏற்பாடுசெய்கிறேன் - தொ.மு.ச.பேரவை,பொதுச் செயலாளர் சண்முகம் எம்.பி.

பத்திரிகையாளர் நல வாரிய குறைபாடுகள் களைய, அரசிடம் பேசி ஏற்பாடுசெய்கிறேன் -  தொ.மு.ச.பேரவை,பொதுச் செயலாளர் சண்முகம் எம்.பி. பத்திரிக்கையாளர் நல வாரிய குறைபாடுகள் மற்றும் அச்சு, காட்சி  ஊடக வியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு  அரசிடம் பேசுவேன் என, சென்னையில்டி.யு.ஜெ.ஒருங்கிணைத்த  கோரிக்கை கருத்தரங்கில் தொமுச பேரவைபொதுச்செயலாளர் எம் சண்முகம்எம்பி உறுதிஅளித்தார். இதுகுறித்தவிபரம்வருமாறு: தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (டி.யு.ஜெ)  ஒருங்கிணைத்து, மாநில அளவில்  பத்திரிகையாளர்களுக்கான  கோரிக்கை கருத்தரங்கம் மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ்  மாநில தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கே முத்து, துணைப் பொதுச் செயலாளர் எஸ் டேவிட்குமார், அமைப்புச் செயலாளர்கள்  ஏ தமிழ்ச்செல்வன், பி ஆர் வேளாங்கன், இணைச் செயலாளர்கள் எம் கே சாகுல் ஹமீது ,ஆர் முருகக்கனி, ஏஆர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வந்திர...

செய்யாறு: மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

செய்யாறு: மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம், 25.3.23 சனிக்கிழமை காலை 9.30 லிருந்து மாலை 3 மணி வரை  நடைபெற உள்ளது அது சமயம் மேற்படி முகாமிற்கு, திருவண்ணாமலை மாவட்ட அளவிலான அனைத்து ஒன்றியங்களிலிருந்தும் படித்த வேலைவாய்ப்பற்ற, 18 வயது முதல் 35 வரையிலான ஆண்/பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இப் பயிற்சி முகாமிற்கு வருகை தரும் ஆண்/பெண் இருபாலரும் கல்விச் சான்று, குடும்ப அட்டை,ஆதார் கார்ட், ஜாதி சான்றிதழ்களின் நகல்களை எடுத்து வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு வட்டார இயக்க மேலாளர் ரேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது  

ஜூன் 3-க்குள் தி.மு.க உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்துவோம்: தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

ஜூன் 3-க்குள் தி.மு.க உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்துவோம்: தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்  தீர்மானம் கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க கொண்டாடுவோம் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், தி.மு.க.தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது கலைஞர் பிறந்த திருவாரூரில், நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு ஜூன் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. “தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க கொண்டாடுவோம்!”, என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: “உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர், பல்லாயிரம் ஆண்டுப் பழந்தமிழின் முத்தமிழ் அறிஞர், இந்திய நிலப்பரப்பில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த சிற்பி, பல முறை இந்திய பிரதமர்களை உருவாக்கிய பிதாமகர் 95 ஆண்டு கால வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்த ஓய்வ...

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை: தகுதியானவர்கள் யார்?

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை: தகுதியானவர்கள் யார்? தமிழக பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை செப்டம்பர் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள், யார் தகுதியானவர்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழக பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை செப்டம்பர் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள், யார் தகுதியானவர்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்குவார்கள் என்று குடும்பத் தலைவிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவதைப் பற்றிய அறிவிப்...

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம்!

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம்! தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, நமக்கு நாமே திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந் நிலையில் தமிழக முழுவதும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சிகளிலும் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதித்தல், பொது நிதி செலவினம் மற்றும் சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. கிராம பொதுமக்கள் இதில் பங்கேற்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ...

இந்தியாவிலுள்ள 14 மாவட்டங்களில் 10% அதிகமான கொரோனா! புதிதாக 963 பேருக்கு பாதிப்பு

இந்தியாவிலுள்ள 14 மாவட்டங்களில் 10% அதிகமான கொரோனா! புதிதாக 963 பேருக்கு பாதிப்பு இந்தியாவில் 10% அல்லது அதற்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் 14 மாவட்டங்களில் 10% மேல் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக இந்திய குடும்ப நலத்துறை தெரிவித்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 963 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6559 ஆக உயர்ந்துள்ளது. கேரளா, கர்நாடகாவில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில் ராஜஸ்தானில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந் நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 808 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 59,617ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 12 முதல் 18 ந்தேதி வரை உள்ள நாட்களில், இந்தியாவில் உள்ள 34 மாவட்டங்களில், 5 முதல் 10 % வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மார்ச் 8 முதல் 14...

ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு... வேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..!

ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு... வேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..! ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். விவசாயிகளின் அடையாளமாக கருதப்படும் பச்சைத் துண்டை அணிந்து வந்த அமைச்சர், வேளாண் பட்ஜெட்டை வாசித்தார். சிறுதானியங்கள் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க 82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுதானிய உற்பத்தி பரப்பை அதிகரிக்கும் பொருட்டு கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட இரண்டு சிறு தானிய மண்டலங்களில், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும். சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினருக்கு கேழ்வரகு வழங்கும் நடவடிக்கை எடுக்க...

வந்தவாசி: இலவச தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வழங்கினார்

வந்தவாசி: இலவச தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வழங்கினார் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி  ஆசியன் அகாடமி வளாகத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் இலவச தையற்கலை பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு முகம்மது இஸ்மாயில் நினைவு அறக்கட்டளை தலைவர்  டி.எம்.பீர்முகமது தலைமை தாங்கினார். அறக்கட்டளை இயக்குநர் பீ.ரகமத்துல்லா  அனைவரையும் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பா.அ. சையத் சுலைமான் பங்கேற்று, இலவச தையற் பயிற்சி பெற்ற 180 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி மகளிர் திட்டம் குறித்தும், பயிற்சி பெற்ற மகளிர்,தையற் தொழில் தொடங்கி சொந்தக்காலில் நிற்க வேண்டும் எனவும் பேசினார். மேலும் இந் நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர் வெங்கடேசன் மற்றும் ஆஷிக், பயிற்சிஆசிரியைகள், பயிற்சி பெற்றோர் என 200 க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் முகம்மது இஸ்மாயில் நினைவு அறக்கட்டளை இயக்குநர் ஆர்.ஆசியாபர்வீன் நன்றி கூறின...

வந்தவாசி: 10 ஆம் வகுப்பு தனித் தேர்வு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்!

வந்தவாசி: 10 ஆம் வகுப்பு தனித் தேர்வு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் 10 ஆம் வகுப்பு தனித் தேர்வு மாணவர்களாக 59 நபர்கள் அரசு பொது தேர்வு எழுதுகிறார்கள். அவர்களுக்கான தேர்வுக்கூட ஹால்டிக்கெட் கல்வி மைய புதிய வளாகத்தில் வழங்கப்பட்டது. இந் நிகழ்விற்கு இரும்பேடு ஊ.ஒ.தொ.பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு பங்கேற்று சிறப்புரை ஆற்றி அனுமதி சீட்டை வழங்கினார். மேலும் கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் செல்வராஜ், எய்டு இந்தியா திட்ட பயிற்றுநர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தேர்வு எழுதும் முறைகள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. அனைவருக்கும் எழுதுகோல் வழங்கப்பட்டது.

செய்யாறு: முதல்வர் ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா திமுக இளைஞரணி சார்பில் அன்னதானம் நலத்திட்ட உதவிகள்!

செய்யாறு: முதல்வர் ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா திமுக இளைஞரணி சார்பில் அன்னதானம் நலத்திட்ட உதவிகள்!    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் நகர திமுக இளைஞரணி சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது நகர இளைஞரணி அமைப்பாளர் துரை தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில், நகர கழக செயலாளர் விஸ்வநாதன் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் நகர மன்றத்தலைவர் மோகனவேல் விவசாய அணி அமைப்பாளர் ஏ.என்.சம்பத் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், உடல் ஊனமுற்றோருக்கு அன்னதானம், காய்கறி வகைகள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கி பேசினார் தொடர்ந்து பேசிய நகர கழக செயலாளர் விஸ்வநாதன், " உலகத்திற்கே வழிகாட்டும் ஆட்சியாக தளபதி ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி திகழ்கிறது தளபதி ஸ்டாலின் ஒரு முன்னுதாரணமான முதல்வராக திகழ்கிறார் " என குறிப்பிட்டார்