Skip to main content

Posts

Showing posts from September, 2022

மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் அரசியல் கட்சிகளான சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகளை ஒப்பிட்டு பார்ப்பது ஏற்புடையது அல்ல – தொல் திருமாவளவன்

மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் அரசியல் கட்சிகளான சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகளை ஒப்பிட்டு பார்ப்பது ஏற்புடையது அல்ல – தொல் திருமாவளவன் மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் அரசியல் கட்சிகளான சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகளை ஒப்பிட்டு பார்ப்பது ஏற்புடையது அல்ல       – தொல் திருமாவளவன் மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன் அரசியல் கட்சிகளான சிபிஎம்,சிபிஐ மற்றும் விடுதலைச் சிறுத்தைகளை ஒப்பிட்டு அக்டோபர் 2-ந் தேதி மனித சங்கிலிக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  கூறியுள்ளார். இது தொடர்பாக தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: அக்டோபர் 02 – காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. அவ்வமைப்பு அரசியல் கட்சியல்ல; மாறாக, மதவாத இயக்கம் என அறியப்பட்ட நிலையில், அரசுக்கு எழும் அச்சத்தில் நியாயமுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அதே நாளில் நடத்தவிருந்த மனித சங்கிலி அ...

``ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்கக் காரணம் என்ன?" - பாஜக தலைவர் அண்ணாமலை

``ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்கக் காரணம் என்ன?" - பாஜக தலைவர் அண்ணாமலை  ``இந்தியா முழுவதும் நடைபெறும் ஒரு பாரம்பர்யமிக்க ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்கக் காரணம் என்ன?'' - அண்ணாமலை கேள்வி தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை  வெளியிட்டுள்ள  அறிக்கையில்:` இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும், இந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம், நம் தமிழ்நாட்டிலும் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தில், அரசு அனுமதியுடன் ஆர்.எஸ்.எஸ் சீருடையுடன், ஒழுங்குடன், கட்டுப்பாட்டுடன், இசை வாத்தியங்கள் முழங்க நடைபெறுவது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கியமான அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்த அனுமதி கோரிய வழக்கில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆனால், அக்டோபர் 2-ம் தேதி, ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ள ஊர்வலம் நடத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும் நடைபெறும் ஒரு பாரம்பர்யமிக்க ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தமி...

‛356’ ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்க திட்டம்! ‛பேட்டை’ ரவுடி அண்ணாமலையை கைது பண்ணுங்க – மா.கம்யூனிஸ்ட்

‛356’ ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்க திட்டம்! ‛பேட்டை’ ரவுடி அண்ணாமலையை கைது பண்ணுங்க – மா.கம்யூனிஸ்ட் கோவை:  ‛‛356 பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர திட்டமிடுகின்றனர். ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியவில்லை என்பதால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைக்க முயற்சிக்கின்றனர். பேட்டை ரவுடியை போல அண்ணாமலை பேசுகின்றார். அவரை கைது செய்ய வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே பாலகிருஷ்ணன் ஆக்ரோஷமாக கூறினார். கோவை பாஜக அலுவலகம் உள்பட பல இடங்களில் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனை எதிர்த்து நேற்று கோவையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “கோவையை பதட்டமான இடமான மாற்றி விடக்கூடாது. கோவையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டம் மூலம் கோவை அமைதியாக இருக்க ஆர்எஸ்எஸ், பாஜக விரும்பவில்லை. நேற்று கூட்டத்தில் பேசிய பேச்சிற்காக பாஜக தலைவர் அண்ணாமலையை...

அக் – 2, சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம்: திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் – தொல் திருமாவளவன்

அக் – 2, சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம்: திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் – தொல் திருமாவளவன் இது தொடர்பாக விசிக தலைவர்  தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; அக்டோபர்- 2 காந்தி பிறந்த நாளன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஒன்றியம் , நகரம் மற்றும் மாநகரத் தலைமையிடங்களில் சுமார் 500 இடங்களில் ‘சமூக நல்லிணக்கப் பேரணி’ நடத்துவதென ஏற்கனவே செப்-24 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிவிப்புச் செய்திருந்தோம்.  பின்னர், செப்டம்பர் -26 அன்று மாலை 5.00 மணியளவில் சிபிஐ (எம்), சிபிஐ ஆகிய இடதுசாரி தோழமை கட்சிகளுடன் கலந்துரையாடியதையொட்டி, இது தொடர்பாக இடதுசாரிகளும் விசிகவும் இணைந்து செயல்படுவதென தீர்மானித்தோம். அதன்படி, இம்மூன்று கட்சிகளும் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கப் பேரணிக்கு மாற்றாக ‘சமூக நல்லிணக்க மனித சங்கிலி’ போராட்டம் நடத்துவதென கூட்டாக முடிவெடுத்தோம். அதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இம்முடிவை அறிவித்தோம். இந்த அறப்போராட்டத்தை ஒரு முன்மொழிவாக அறிவித்து, பிற சனநாயக ...

அக். 2- சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு!

அக். 2- சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு! அக். 2.சமூகநல்லிணக்க மனிதச்சங்கிலி  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு! தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கேஎம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை வரவேற்கின்றோம். ஒன்றிய பாஜக அரசுகொண்டுவந்துள்ள தேசியபுலனாய்வு முகமை என்ஐஏ சட்டத்தை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்த நிலையிலிருந்தே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்ததோடு என்ஐஏ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கையும் செய்தனர். அமைதிப் பூங்காவான தமிழகத்தில் தற்போது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் தொடர்ச்சியாக என்ஐஏ சட்டத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை: கோவையில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை: கோவையில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை: கோவையில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு !   நாடு முழுவதும் 15 மாநிலங்களில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த 22 ம் தேதி தேசிய புலனாய்வு முகமை NIA மற்றும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இரண்டாவது முறையாக நேற்று 8 மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதற்கு தொடர்புடைய அமைப்புகள் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த ராமலிங்கம், சசிகுமார், கர்நாடகாவை சேர்ந்த பிரவீன் நெட்டார் உள்ளிட்டோர் கொலை வழக்கில் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்...

செய்யாறிலிருந்து பிற கட்சிகளை சேர்ந்த 200 பேர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுக வில் இணைந்தனர்!

செய்யாறிலிருந்து பிற கட்சிகளை சேர்ந்த 200 பேர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுக வில் இணைந்தனர்! செய்யாறிலிருந்து பிற கட்சிகளை சேர்ந்த 200 பேர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுக வில் இணைந்தனர்! திருவண்ணாமலை மாவட்டம்                   செய்யாறை சேர்ந்த பிற கட்சிகளின் நிர்வாகிகள்,தொண்டர்கள் என 200 பேருக்கும் மேற்பட்டோர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகன் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில், முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர் திருவண்ணாமலை திமுக மாவட்ட விவசாய அணி தலைவரும், ராஜ மலர் ரியல் எஸ்டேட் உரிமையாளருமான புல்லட் ராஜேந்திரன்  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களை பெற்று தன்னை அதிமுக வில் இணைத்துக்கொண்டார் செய்யாறு ஒன்றிய தேசிய முற்போக்கு திராவிட கழக அவைத்...

ராகுல் காந்தி கேரளத்தில் இருந்து தமிழகம் வருகிறார் – கே.எஸ்.அழகிரி

ராகுல் காந்தி   கேரளத்தில் இருந்து தமிழகம் வருகிறார் – கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி  கேரளத்தில் இருந்து தமிழகம் வருகிறார் – தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ்    தலைவர் கே.எஸ்., அழகிரி செய்தியாளர் சந்திப்பில், ‘ராகுல் காந்தி கேரளத்தில் இருந்து வருகிற 29ஆம் தேதி கூடலூர் வருகிறார். இங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் 1 லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்கிறார்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி காங்கிரஸ் கட்சி இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர்கள் எனப் பார்கிறது. இதைத் தான் ராகுல் காந்தியும் ஒவ்வொரு முறையும் கூறுகிறார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர் இல்லை எனக் கூறுகிறது. மகாத்மா காந்தியடிகளும் இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்தியர் என்றே கூறினார். இந்தியர்கள் மத வேற்றுமை கடந்து அனைவரும் போராடிதான் சுதந்திரம் பெற்றனர்’ என்றார். தொடர்ந்து, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கே.எஸ். அழகிரி, ‘காலை 11 மணிக்கு ராகுல் காந்தி கூடலூர் வ...

மத்திய அரசின் புலனாய்வு ஏஜென்சிகள் மீது நடவடிக்கை! – சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல்

மத்திய அரசின் புலனாய்வு  ஏஜென்சிகள் மீது நடவடிக்கை! – சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் மத்திய அரசின் புலனாய்வு  ஏஜென்சிகள் மீது நடவடிக்கை! –  சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தேவையில்லாமல் யாரையாவது குறிவைத்து மத்திய ஏஜென்சிகள் ரெய்டுகள் நடத்துவதாக மக்கள் புகார் அளித்தால், ஏஜென்சி அதிகாரிகள் மீது மாநில அரசு  கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேல், “மத்திய புலனாய்வுத் துறை அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இவைகளுக்கு மக்கள் பயப்படத் தேவையில்லை. சத்தீஸ்கர் அரசின் முதல்வர் என்ற முறையில் நீங்கள் தேவையில்லாமல் குறிவைக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மாநிலத்தின் ஏதேனும் காவல் நிலையத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது தொடர்பாக மத்திய ஏஜென்சிகளின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். மேலும், “நாம் உண்மைப் போரி...

வருகிற 29 ம் தேதி கூடலூருக்கு வருகை தரும் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வாருங்கள் – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

வருகிற 29 ம் தேதி கூடலூருக்கு வருகை தரும் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வாருங்கள் – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வருகிற 29 ம் தேதி கூடலூருக்கு வருகை தரும் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வாருங்கள் – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பாக தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கி அரசியல் மூலம் ஆதாயம் தேடி வருகிற பா.ஜ.க.வுக்கு எதிராக மக்களை ஒன்று படுத்துகிற முயற்சியில் இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த 20 நாட்களாக தலைவர் ராகுல் காந்தி நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தொடங்கிய முதற்கட்ட நடைப் பயணம் 59 கி.மீ., கன்னியாகுமரி மாவட்டத்திலும், அதன் பின்னர் 450 கி.மீ., கேரள மாநிலத்தை கடந்து வருகிற 29-ந்தேதி தமிழக பகுதியிலுள்ள நீலகிரி மாவட்டத்தில் கூடலூருக்கு தலைவர் ராகுல் காந்தி பயணத்தை மேற் கொள்ள இருக்கிறார். வருகிற 29-ந்தேதி மாலை 4 மணிக்கு கூடலூர் ஆமைக்...

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மீண்டும் அதிரடி சோதனை!

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மீண்டும்  அதிரடி சோதனை! கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மீண்டும்  அதிரடி சோதனை! இந்த அதிரடி சோதனைகளின் போது இன்றும் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். வெளிநாடுகளின் நிதி உதவியைப் பெற்று பயங்கரவாத செயல்களுக்கு இந்த அமைப்பு துணை போகிறது என்பது இந்துத்துவா அமைப்பினர் குற்றச்சாட்டு. இந்நிலையில் கடந்த 22- ந் தேதி நாட்டின் 15 மாநிலங்களில் பி.எப்.ஐ. இயக்க நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட 93 இடங்களில் மாநில போலீசாரின் ஒத்துழைப்புடன் NIA ரெய்டு நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது அந்த இயக்கத்தின் 106 தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதத்துடன் தொடர்பு? தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்க...

கோவை பெட்ரோல் குண்டு பிஎஃப்ஐ நிர்வாகி கைது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா? கமிஷனர் சொன்ன விளக்கம்!

கோவை பெட்ரோல் குண்டு பிஎஃப்ஐ நிர்வாகி கைது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா? கமிஷனர் சொன்ன விளக்கம்! கோவை பெட்ரோல் குண்டு! பிஎஃப்ஐ நிர்வாகி கைது! தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா? கமிஷனர் சொன்ன விளக்கம்! கோவை :   கோவை பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தொடர்பாக ஓருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார். கடந்த வியாழக்கிழமை இரவு கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் மாநகர பாஜக அலுவலகம் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர். அதைத்தொடர்ந்து கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. இந் நிலையில், கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம...

உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய 17 வயது இளைஞரின் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்! 3 ஆண்டு சிறை தண்டனை!

உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய 17 வயது இளைஞரின் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!  3 ஆண்டு சிறை தண்டனை! உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய 17 வயது இளைஞரின் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!  3 ஆண்டு சிறை தண்டனை! திருவண்ணாமலை மாவட்டம்   வந்தவாசி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வந்தவாசி 5 கண் பாலத்தின் அருகில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ஆணையின் பேரில் வந்தவாசி உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வந்தவாசி வட்ட ஆய்வாளர் அறிவுரைப்படி காவல் உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது வெற்றி பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் வாகன உரிமம் இல்லாமல் வாகனத்தை  ஓட்டி வந்தவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் சிறுவனுக்கு 17 வயது என தெரிய வந்ததால் அவரின் தந்தை மேகேந்திர குமார் வ/50 த/பெ டீகாராம், தலையாரி தெரு, கீழ் சாத்தமங்கலம் கிராமம் என்பவர் மீது வந்தவாசி தெற்கு காவல் நிலைய குற்ற எண்: 178/22 U/s 199(A),180 MV ACT மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு ...

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பபெற கோரி உயர்நீதிமன்றத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மனுத் தாக்கல்

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பபெற கோரி உயர்நீதிமன்றத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மனுத் தாக்கல் தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மனுத் தாக்கல் செய்துள்ளார். தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் முந்தைய கால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அதன் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட...

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசுவது இஸ்லாமியர்களா? பாஜக வினர்களா? – சீமான்

தமிழகத்தில் பாஜக  நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசுவது இஸ்லாமியர்களா? பாஜக வினர்களா? – சீமான் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் நிர்வாகிகள் வீடுகளில் மத்திய அரசின் புலனாய்வு முகமை என்ஐஏ அதிரடி சோதனை நடத்தி நிர்வாகிகளை கைது செய்தனர் பெரும் பரபரப்பான சூழலில் கோவை மதுரை உள்ளிட்ட இடங்களில் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் தொடர் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன இதை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையில் 250 பேருக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது இந்த நிலையில் பெட்ரோல் குண்டுகளை வீசுவது இஸ்லாமியர்களா? அல்லது பாஜகவினர்களா? என்ற கேள்வியை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார் பெட்ரோல் குண்டுகளை வீசுவது உண்மையிலேயே இஸ்லாமியர்களா? அல்லது பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களா? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பாஜகவினர் தங்கள் அலுவலகம், வீடுகளில்  பெட்ரோல் குண்டுகளை வீசி ம...

அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மக்கள் இரையாக கூடாது - சீமான்

அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மக்கள் இரையாக கூடாது - சீமான் கோவை மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெட்ரோல்,மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசப்பட்டு வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதுகூட அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. ஒருபுறம், இஸ்லாமிய இயக்கங்களைக் குறிவைத்து, தேசியப் புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறையும் விசாரணை, கைது என அதிகாரப்பலத்தின் மூலம் வேட்டையாடிக் கொண்டிருக்க, மறுபுறம், மாநிலம் முழுமைக்கும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தயாராகிக் கொண்டிருப்பது திட்டமிடப்பட்டச் சதியின் செயல்பாட்டு வடிவமேயாகும். திமுக அரசு, உயர் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை வைக்காது விட்டதன் விளைவாகவே, ஆர்.எஸ்.எஸ்-ஸின் பேரணிக்கு அனுமத...

சேலம்: மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது

சேலம்: மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்ற வைத்து, வீட்டின் முன்பு மர்ம நபர்கள் வீசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக சேலம் மாநகர், அம்மாபேட்டை காவல் நிலையத்தில், ராஜன் அளித்த புகாரின்பேரில் ஏழு பேரை அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிசிடி கேமரா பதிவின்படி காதர் உசேன், சையத் அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் பாட்டில் வீசியதாக போலீசாருக்குத் தெரியவந்தது. இதை தொடர்ந்து எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் சையத் அலி மற்றும் 34 வது கோட்ட கிளை எஸ்டிபிஐ தலைவர் காதர் உசேன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த இருவர் மீதும் தீவைத்து பாதிப்பு ஏற்படுத்த முயற்சித்தல், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல் ...

பாஜகவின் அழுத்தம் கூடாது பெட்ரோல் குண்டு வீச்சில் போலீஸ் தீர விசாரிக்கணும் பிஎப்ஐ வலியுறுத்தல்

பாஜகவின் அழுத்தம் கூடாது பெட்ரோல் குண்டு வீச்சில் போலீஸ் தீர விசாரிக்கணும் பிஎப்ஐ வலியுறுத்தல் பாஜகவின் அழுத்தம் கூடாது பெட்ரோல் குண்டு வீச்சில் போலீஸ் தீர விசாரிக்கணும் பிஎப்ஐ வலியுறுத்தல் சென்னை: ‛‛பிஎப்ஐ, எஸ்டிபிஐ  அமைப்புகள் ஒருபோதும் வன்முறையை கையில் எடுக்காது. தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக போலீசார் பாஜகவின் அழுத்தத்துக்கு ஆளாகாமல் தீர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக தலைவர் முகமது சேக் அன்சாரி கூறினார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 3 நாட்களாக கோவை, ஈரோடு, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. பாஜக அலுவலகம், அக்கட்சி பிரமுகர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலகத்தை தொடர்ந்து கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக மண்டலத...