Skip to main content

Posts

Showing posts from March, 2025

சென்னை என் கவுன்ட்டர்: மும்பையில் பதட்டம்!

 சென்னை என் கவுன்ட்டர்: மும்பையில் பதட்டம்! சென்னையில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிர கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் இரானியின் சொந்த ஊரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 25-ம் தேதி காலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து 6 இடங்களில் வழிப்பறி நடைபெற்றது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த ஜாபர் குலாம் உசேன் இரானி, அவரது கூட்டளிகள் சல்மான் உசேன் இரானி, மிசம்சா மேசம் இரானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருடிய நகைகள், திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை மீட்க 3 பேரும் சென்னை தரமணி பகுதிக்கு கடந்த 26-ம் தேதி அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பைக்கில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீஸார் மீது ஜாபர் குலாம் உசேன் இரானி 2 முறை சுட்டார். போலீஸார் தற்காப்புக்கு சுட்டபோது அவர் உயிரிழந்தார். இதன்காரணமாக இரானியின் சொந்த ஊரான மகாராஷ்டிராவின் ஆம்பிவளி பகுதியின் பாட்டீல் நகரில் பதற்றம் எழுந்திருக்கிறது. அந்த பகுதியில் மகாராஷ்டிர போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் கூறியதாவது: ம...

தென்னிந்திய தர்காக்கள், பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக மத நல்லிணக்க இப்தார் விழா!

தென்னிந்திய தர்காக்கள், பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக மத நல்லிணக்க இப்தார் விழா! வருடம் தோறும் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல் அசோசியேசன் சார்பாக சென்னையில் ரமலான் மத நல்லிணக்க இப்தார் விழா நடைபெற்று வருகிறது  கடந்த பத்து வருடமாக நடைப்பெற்று வரும் இந்த இப்தார் நிகழ்வு இந்த வருடம் திருவல்லிக்கேணி ஹோட்டல் அல் நூரில், நடைபெற்றது. இந் நிகழ்வில் தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி,  சென்னை மேற்கு தி.மு.கழக மாவட்ட செயலாளர் சிற்றரசு,  திருவல்லிக்கேணி தி.மு.கழக மேற்கு மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர்  ரஹ்மத்துல்லாஹ் , ஊடகவியலாளர் ஆர்.ஜே ஷா, திரைப்பட இசையமைப்பாளர் ரேயான், தமிழக அரசு வக்ப் வாரிய உறுப்பினர் சையது ரேஹான், நவீத், ஹசனுத்தின் , வழக்கறிஞர் சையது ரகுமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் தொடக்கமாக சென்னை மொய்தீன் அப்துல் காதர் மௌலவி ரமலான் குறித்து பயான் செய்தார்கள். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் தலைவர் நாகூர் ஹாஜி சையது முகமது கலிபா சாகிப் வரவேற்றார், விழாவிற்கு வருகை தந்த அனை...

அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!

அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்! பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வீடியோ,செய்தி  பதிவிட்ட மூத்த பத்திரிகையாளர் ஒருவர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கராச்சியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், ரஃப்தார் எனும் டிஜிட்டல் செய்தி நிறுவனத்தின் உரிமையாளருமான ஃபர்ஹான் மாலிக் என்பவர் மீது, அவரது செய்தி நிறுவனத்தின் சேனலில் முக்கிய அதிகாரிகளைக் குறிப்பிட்டு அரசுக்கு எதிரான வீடியோ பதிவு களை பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 20 கராச்சியிலுள்ள அவரது இல்லத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் இன்று (மார்ச் 25) கராச்சி நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மாலிக் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதன் விசாரணையின் போது, அவர் அரசுக்கு எதிராக பதிவிட்ட வீடியோக்களை குறிப்பிட்டுக் காட்டுமாறு அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். பின்னர், இந்த விசாரணையைத் தொடர்ந்து 1...

உ.பி சிறையில் ரமலான் மாதம் 5 தொழுகைக்கு அனுமதி: யோகி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உ.பி சிறையில் ரமலான் மாதம் 5 தொழுகைக்கு அனுமதி: யோகி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு உத்தரப் பிரதேசத்தில் ரமலான் மாதத்தில் முஸ்லிம் கைதிகள் ஐந்து வேளை தொழுகை நடத்த அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உ.பி.யின் எட்டவாவிலுள்ள சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் ஃபர்ஹாம் அகமது. இவரது மனைவி உஸ்மா ஆபித் உ.பி.யின் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான தீர்ப்பு இன்று வெளியான நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அஸ்வனி குமார் மிஸ்ரா மற்றும் நந்த் பிரபா சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, 'ஓர் உயர்மட்ட வழக்கில் தண்டனை பெற்ற கைதியை, ரமலான் மாதத்தில் தனது மதக் கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும். இதன்படி, ஐந்து முறை தினசரி தொழுகை நடத்தவும், அந்த கைதி தன்னுடன் குர்ஆனை வைத்திருக்வும் அனுமதிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அலகாபாத்தைச் சேர்ந்த ஃபர்ஹான் அகமது, பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராஜு பால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர். இவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண...

வந்தவாசி நகரில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

வந்தவாசி நகரில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை  உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 நாட்களாக கடும் குடிநீர் பிரச்சனை நிலவுவதால் அதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என நேற்று நடைப்பெற்ற நகரமன்றக் கூட்டத்தின்போது, உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். நேற்று நடைப்பெற்ற வந்தவாசி நகர மன்றக்கூட்டத்தில் பொது மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி  உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டத்துக்கு நகரமன்றத் தலைவா் (திமுக) எச்.ஜலால் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆா்.சோனியா, துணைத் தலைவா் க.சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மயானத்துக்கு பாதை அமைக்க வேண்டும், புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரில் சரிவர தூய்மைப் பணி மேற்கொள்ளாத தனியாா் ஒப்பந்த துப்புரவு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நீரேற்று நிலையத்தில் அடிக்கடி மின்மோட்டாா் பழுது எனக் கூறி பணம் முறைகேடாக செலவிடுவது குறித்து நடவ...

அளத்துறை: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா!

அளத்துறை: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா! திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியம் அளத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அளத்துறை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.முருகன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ப.பரணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக வட்டாரக் கல்வி அலுவலர் ஏ.புவனேஸ்வரி, ஆசிரியப் பயிற்றுநர் உதயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பற்றியும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றியும் பேசினர்.பட்டதாரி ஆசிரியர் இரா.அருள்ஜோதி அனைவரையும் வரவேற்றார்.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலைநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீ.ஜெயமாலினி, ரா.சந்தியா, ப.சுபஶ்ரீ, .த. வெங்கடேசன்,ச.திவ்யபாரதி உள்ளிட்ட ஆசிரிய,ஆசிரியைகள் செய்திருந்தனர். மாணவர்கள் அனைவருக்கும்  பரிசுப்பொருட்கள் சிறப்பு அழைப்பாளர்களால் வழங்கப்பட்டது பொறுப்பு தலைமையாசிரியர் ரா.ரகுபதி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

வந்தவாசி: தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா!

 வந்தவாசி: தெள்ளாறு   இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது நேற்று  கல்லூரி அரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, கல்லூரித் தலைவர் கலைமாமணி, முனைவர் வி. முத்து   குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்  எட்டயபுரம் ஆய்வாளர்  செல்வ முத்துமாரி கலந்து கொண்டு பெண்களின் இன்றைய நிலைகுறித்தும் எதிர்காலத்தில் மாணவிகள் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந் நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக இயக்குநர் பா. போஸ் முன்னிலை வகித்தார். கல்லூரிப் பொருளாளர் எஸ். பழனிச்சாமி முதல்வர் முனைவர் இரா. ஏழுமலை  வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக உயிர்வேதியியல் துறைத்தலைவர்  முனைவர் மரகதவள்ளி வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக வேதியியல் துறைத்தலைவர் தமிழ்ச்செல்வி அவர்கள் நன்றி உரையாற்றினார் இந் நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர்கள்  அப்பாண்டைராஜன்,  ஆனந்தன், இராதா, மண...

தமிழக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய பாஜக கோரிக்கை.. மக்களவை சபாநாயகர் அமைச்சருடன் தீவிர ஆலோசனை!

தமிழக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய பாஜக கோரிக்கை.. மக்களவை சபாநாயகர் அமைச்சருடன் தீவிர ஆலோசனை! த மிழ்நாடு எம்.பி.க்களின் அமளியால் மக்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி அமளி செய்தனர். தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இது தொடர்பாக விவாதிக்க திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்தார். ஆனால், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியதும் திமுக கூட்டணி எம்.பி.க்கள் தொகுதி மறுவரையறை தொடர்பான வாசகங்களுடன் டி-ஷர்ட் அணிந்து இரண்டு அவைகளிலும் பங்கேற்றனர். "நியாயமான மறுசீரமைப்பு.. தமிழகம் போராடும்.. தமிழகம் வெல்லும்" ஆகிய வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து வாசகங்களுடன் டி-ஷர்ட் அணிந்து வந்ததால் வெளியேற செல்லுமாறு தமிழக எம்.பி.க்களுக்கு கண்டனம் தெரிவித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அவர்களை அவையை விட்டு வெளியேறுமாறு கூறினார். அவை விதி...

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி! தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு, திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வந்தவாசி அருகே மாலையிட்டான்குப்பம் பகுதியில் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் யாசர் அரபாத் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில், மாவட்ட செயலாளர் அப்துல்காதர் வரவேற்றார்.  இந் நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ப.செல்வன், மாவட்ட செயற்குழு எம்.வீரபத்திரன்,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுகுணா,  மாரிமுத்து,  வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சுகுமார், மற்றும் இந்திய குடியரசு கட்சியின் மாநில பொறுப்பாளர் வந்தை மோகன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் பீர் முகமது மனிதநேய மக்கள் கட்சி யாசர் தாஹா பள்ளிவாசல் நிர்வாகி கலியுல் ரகுமான் முகமது யூசுப் நகர தலைவர் ஐ.மு.மு.க. அண்ணாமலை,  ஆனந்தன், சேட்டு கலந்துகொண்டனர். இறுதியாக ஷாஜஹான் நன்றியுரை ஆற்றினார்.

நூறு நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு; ரூ.3,796 கோடியை நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு!

நூறு நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு; ரூ.3,796 கோடியை நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு ! மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் முறைகேடு செய்வதற்காக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக பணியாற்றியவர்களுக்கு, 3,796 கோடி ரூபாய் மத்திய அரசு விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக, 100 நாள் வேலை அளிக்கும் திட்டத்தை, 2005-இல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இந்நிலையில்,தமிழகத்தில், 2008 - 09 ஆம் ஆண்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அதாவது, பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு, 5 கி.மீ., சுற்றளவுக்குள், ஓராண்டில் 100 நாட்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாலைகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட பொது சொத்துக்களை உருவாக்குவதே, இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது, நாடு முழுதும், 740 மாவட்டங்களில், 13.42 கோடி பேர் பயனாளிகளாக உள்ளனர். இத்திட்டத்தால், கிராமப்புறங்களின் வாழ்வாதாரம் உயர்ந்தாலும், ...

வந்தவாசி உழவர் சந்தை மீண்டும் புதுப்பொலிவுடன் திறப்பு விழா!

வந்தவாசி உழவர் சந்தை மீண்டும் புதுப்பொலிவுடன் திறப்பு விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில்  வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், வந்தவாசி உழவர் சந்தை மீண்டும் புதுப்பொலிவுடன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்‌.எஸ்.தரணி வேந்தன் பங்கேற்று, உழவர் சந்தையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் உழவர் சந்தையை அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இந் நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் கண்ணகி, வேளாண் துணை இயக்குனர் ஷாமிலா ஜெயந்தி, வட்டாட்சியர் பொன்னுசாமி, நகராட்சி ஆணையர் சோனியா, நகர திமுக செயலாளர் தயாளன், நகர மன்ற தலைவர் எச்.ஜலால், நகர் மன்ற துணைத் தலைவர் அன்னை க. சீனுவாசன்,நகர மன்ற உறுப்பினர்கள் அன்பரசு,நாகூர் மீரான்,  வேளாண்மை அலுவலர் அர்ச்சனா, உதவி இயக்குனர் குமரன், வேளாண் விற்பனை குழு வேலன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மருதாடு சந்திரன், ஒன்றிய திமுக செயலாளர்கள் டி.டி. ராதா, சி.ஆர்.பெருமாள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் பலரும் ...

தமிழக பட்ஜெட் 2025-26 முக்கிய அம்சங்கள்..!தமிழக பட்ஜெட்டில் வெளியான 10 சிறப்பான அறிவிப்புகள்!

தமிழக பட்ஜெட் 2025-26 முக்கிய அம்சங்கள்..! தமிழக பட்ஜெட்டில் வெளியான 10 சிறப்பான அறிவிப்புகள்! வரும் 2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பலராலும் வரவேற்கப்படும் பத்து முக்கிய அறிவிப்புகள் தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் எண்ணற்ற அறிவிப்புகள் வெளியாகின. அதில் முக்கியமான அறிவிப்பாக, 1. சென்னைக்கு அருகே புதிய நகரம் சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு முதன்மையானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த புதிய நகரம், மெட்ரோ வசதி, பேருந்துகள், சாலை வசதிகள் உள்ளிட்டவற்றுடன் உருவாக்கப்படும் என்றும், நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் புதிய நகரில் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. ஈட்டிய விடுப்பு சரண் சலுகை கொரோனா காலத்தில் நிதி நெருக்கடியின் காரணமாக ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறும் முறை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்...

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 346 பயணிகளை பத்திரமாக மீட்ட பாக் இராணுவம்!

 பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 346 பயணிகளை பத்திரமாக மீட்ட பாக் இராணுவம்! பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ரயிலில் இருந்த 346 பயணிகளையும் பத்திரமாக மீட்டது. இந்த நடவடிக்கையில், 33 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், 27 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு ராணுவ அதிகாரி உயிரிழந்தனர். "346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர், மேலும் 30 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்," என்று ராணுவ அதிகாரி செய்தி முகமையிடம் தெரிவித்தார். சுமார் 400 பயணிகளுடன் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தபோது, வெடிபொருட்களைப் பயன்படுத்தி ரயிலை தடம் புரள வைத்து தீவிரவாதிகள் கைப்பற்றினர். குவெட்டாவிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  மலைப்பகுதிக்கு அருகே இந்த தாக்குதல் நடந்தது. பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) இந்த கடத்தலுக்குப் பொறுப்பேற்றது, பயணிகள் ரயில் கடத்தல்  முதல் சம்பவமாக இது பார்க்கப்படுகிறது. ராணுவ அதிகாரிகள் கூற்றுப்படி, ரயிலை மீட்கும் நடவடிக்கை மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட்டது, ஏனெனில் தீவிரவாதிகள் பெண்கள் மற...

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விடுபட்ட விவசாயிகளை இணைக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன்

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ்  விடுபட்ட விவசாயிகளை இணைக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ்  விடுபட்ட விவசாயிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் ஆரணி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன்  கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் கேள்வி நேரத்தின்போது பேசியதாவது:- "பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பயனடையும் விவசாயிகள் எண்ணிக்கை மேலும் விடுபட்டவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . பாரதிய கிசான் திட்டம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒன்றிய அரசு எந்தவிதமான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பிரதமர் கிசான் திட்டம் மூலமாக விவசாயிகளுக்கு  முறையாக பணம் செல்கின்றதா, கண்காணிக்கப்படுகின்றதா?" என கேள்வி எழுப்பினார் இதற்கு பதில் அளித்தவேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் சிவராஜ் சிங்  சவுகான், "நில உரிமையாளர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக  பிரதமரால் கொண்டுவரப்பட்டது. விவசாயிகள். இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்ட...

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 104 பிணைக் கைதிகள் விடுவிப்பு!

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 104 பிணைக் கைதிகள் விடுவிப்பு! இஸ்லாமாபாத்: உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர், 104 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் நேற்று (மார்ச் 11) சிறைபிடித்தனர் அதில் பயணம் செய்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். உலகளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 104 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய பயணிகளை மீட்கும் வகையில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகளை வீழ்த்தும் பணி தொடரும், அனைத்து பிணைக் கைதிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட பயணிகளில் 58 பேர் ஆண்கள், 31 பேர் பெண்கள், 15 பேர் குழந்தைகளாவர். அவர்கள் அனைவரும்...

உ.பி.யில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை! பதட்டநிலை!

உ.பி.யில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை! பதட்டநிலை! உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப் பிரதேசத்தில் ஹிந்தி பத்திரிகை ஒன்றில் செய்தியாளராகப் பணியாற்றிய ராகவேந்திரா பாஜ்பாய்(35) என்ற இளைஞர் நேற்று  தமது இருசக்கர வாகனத்தில் தில்லி-சீதாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹெம்பூர் ரயில்வே கிராஸிங் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரை பைக்கில் சென்று வழிமறித்த சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து மாயமாகிவிட்டனர். குண்டடிபட்டதில் படுகாயமடைந்த பாஜ்பாயை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மஹோலி தாலுகாவில் நெல் கொள்முதல் மற்றும் நில ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடப்பதை வெளிக்கொண்டு வந்ததால், அவருக்கு ஏற்கெனவே கைப்பேசி அழைப்பு வழியாக கொலை மிரட்டல்கள் பல வந்திருந்ததாகவும் அவர் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது கைப்பேசி அழைப்பு விவரங்களைச...

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள 26,000 பெண் போலீஸாருக்கு பயிற்சி!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள 26,000 பெண் போலீஸாருக்கு பயிற்சி ! பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள தமிழகத்தில் 22 இடங்களில் 26,000 பெண் போலீஸாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளுவதில் பெண் போலீஸாரின் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திறன் பயிற்சி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந் நிலையில், இதனைச் செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள பெண் சார்பு ஆய்வாளர்கள் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரை உள்ள 2,100 பெண் காவல் அதிகாரிகளுக்கு 5 நாட்கள் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திலும், 2-ம் நிலை பெண் காவலர் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர் வரை உள்ள 23,805 பெண் போலீஸாருக்கு 3 நாட்களும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேல...

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா...!

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா...! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா சன்னதி தெருவில் உள்ள ஆசியன் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு சங்கத் தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் பா.சீனிவாசன், முகமது அப்துல்லா, எ.தேவா, துணை செயலாளர் க.வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் இரா.நளினா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, "பெண்மையை போற்றுவோம்" என்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கினார். மேலும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நகராட்சி ஆணையர் ரா.சோனியா, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பொ.பத்மாவதி, அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தி.சாந்தி, ஆசியன் இன்ஸ்டிடியூட் தாளாளர் ஆசியா பர்வீன் ஆகியோருக்கு "சாதனை மகளிர்" விருதுகளை எம்.எஸ்.தரணிவேந்தன் எம்பி வழங்கினார்  நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் தயாளன், நகர மன்ற உறுப்பினர்கள் அன்பரசு,நாகூர் மீரான் மற்றும் சங்க துணை...

'இந்தியாவின் எந்த மாநிலமும் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தவில்லை' - ப.சிதம்பரம்

' இந்தியாவின் எந்த மாநிலமும் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தவில்லை' - ப.சிதம்பரம் இந்தியாவின் எந்த மாநிலமும் மும்மொழி கொள்கையை செயல்படுத்தவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது இரு மொழி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை இடையே தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் திமுக, தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே உறுதியாக பின்பற்றப்படும் என கூறி வருகிறது. திமுகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. அதேநேரத்தில், புதிய கல்விக் கொள்கையை பின்பற்றி தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும், தனியார் பள்ளிகள் நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டும் பாஜக, அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் 3-வது மொழி மறுக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகிறது. மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ச...

வந்தவாசி: உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு சாதனை மகளிருக்கு விருதுகள்...!

வந்தவாசி: உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு சாதனை மகளிருக்கு விருதுகள்...! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், உலக மகளிர் தின விழா அமையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வட்டார கல்வி அலுவலர் இரா.செந்தமிழ் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், எஸ்.ஆர்.எம் கணினி மைய நிர்வாகி எ.தேவா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் புலவர் மா.மங்கையர்கரசி பங்கேற்று, 'சங்க இலக்கியத்தில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட ரெட் கிராஸ் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் பங்கேற்று, 'பெண் கல்வியின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் பேசினார். இதைத் தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் ஆர்.பிரியா அவர்களுக்கு 'அன்னை தெரசா' விருதும், அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தி.சாந்தி அவர்களுக்கு 'வீரமங்கை வேலுநா...

"கையெழுத்து பிரச்சாரத்தை பார்த்து பயப்படுகிறார்கள்" - முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

"கையெழுத்து பிரச்சாரத்தை பார்த்து பயப்படுகிறார்கள்" - முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் சென்னையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து வாங்க பாஜக திட்டமிட்டுள்ளது.டிஜிட்டல் முறையில் கையெழுத்து பெறவும் பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இதனையொட்டி சென்னை கோயம்பேட்டில் தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா,புதுவை மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பொழுது அங்கு வந்த போலீசார் அனுமதி வாங்காமல் கையெழுத்து போராட்டம் நடத்தக்கூடாது எனத் தெரிவித்தனர். போலீசார் தமிழிசை சௌந்தரராஜனிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே தமிழிசை சௌந்தரராஜன், "மக்களிடம் தங்களுடைய கோரிக்கையை எடுத்து வைத்து மும்மொழிக் கொள்கை தேவை என்பது குறித்து கையெழுத்து வாங்க இருக்கிறோம். பொதுமக்கள் பார்வையில் ந...

தி,மலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா,நலத்திட்ட உதவிகள்!

தி,மலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா,நலத்திட்ட உதவிகள்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி தெள்ளார் கிழக்கு ஒன்றியம், மாவட்ட அம்மா பேரவை சார்பில், முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்த நாள் விழா மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, முக்கூர் என்.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன்  ஆகியோர் கலந்து கொண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சி கால சாதனைகளை  எடுத்துரைத்தனர். இதைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள், அன்னதானம்  வழங்கப்பட்டது நிகழ்வில், மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன், மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராணி பெருமாள், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தூளி தவமணி ஒன்றிய கழக செயலாளர்கள் டி.வி பச்ச...