Skip to main content

Posts

Showing posts from October, 2022

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: சிறப்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு:  சிறப்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின்  பாராட்டு!  கோயம்புத்தூரில் நடைபெற்ற கார்  சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் முபின் என்பவர்  சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். துரிதமாக செயல்பட்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோயம்புத்தூர் விவகாரத்தில் இன்று போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (31.10.2022) தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாநகரில், நடந்த கார் சிலிண்டர்  வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பித்தார். மேலும் அவர்களை சிறப்பிக்கும் வகையில் 58 காவல் அலுவலர் களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். மேல...

‘ஆளுநர் அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகின்றார்’ – வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன்

‘ஆளுநர் அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகின்றார்’ – வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன் ‘ஆளுநர் அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகின்றார்’ – வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன் ஆளுநர் அவர் வகிக்கும் பதவியை  மறந்து ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகின்றார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு விளம்பரமேனியா உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி விமர்சித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடலூருக்கு வந்திருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ‘குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் குஜராத் அரசும், மத்திய அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவும், ஆளுநரும் செயல்படுவது அதிர்...

சென்னை: பத்திரிக்கையாளர்கள் 41 பேருக்கு ஓய்வூதியம் ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: பத்திரிக்கையாளர்கள் 41 பேருக்கு ஓய்வூதியம் ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.   சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் 41 பேருக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று 31.10.2022 தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  அறிவித்தார் மேலும், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதோடு, நல வாரிய உதவித்தொகைகள், நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகை...

சேத்துப்பட்டு: பசும் பொன் முத்து ராமலிங்க தேவரின் 115 வது குரு பூஜை ஜெயந்தி விழா

சேத்துப்பட்டு: பசும் பொன் முத்து ராமலிங்க தேவரின் 115 வது குரு பூஜை ஜெயந்தி விழா சேத்துப்பட்டு: பசும் பொன் முத்து ராமலிங்க தேவரின் 115 வது குரு பூஜை ஜெயந்தி விழா திருவண்ணாமலை மாவட்டம்           சேத்துப்பட்டு பேரூராட்சியில் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 115 வது குரு பூஜை ஜெயந்தி விழாவை  முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது சிறப்பு விருந்தினராக பெரணமல்லூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ கே எஸ் அன்பழகன் தெய்வத் திருமகனார் தேவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் சேத்பட் தேவர் பேரவைத் தலைவர் சி.டி. அறிவழகன் உள்ளிட்ட  தேவர் சங்க நிர்வாகிகள் அனைத்து கட்சியினர்  பெருமளவில் கலந்து கொண்டனர் இந் நிகழ்வில் பாஜக மாவட்ட செயலாளர் பாஸ்கரன்  ஒன்றிய செயலாளர் தனசேகர் பெரணமல்லூர் நகர அதிமுக செயலாளர் மூர்த்தி முன்னாள் நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை: 50 சதவீத தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்! உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை: 50 சதவீத தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்! உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை: 50 சதவீத தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்! உதயநிதி ஸ்டாலின்                   50 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கூறினாா். திருவண்ணாமலையில் மாவட்ட நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, மாவட்ட திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நேற்றைய தினம்  நடைபெற்றது தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கட்சியின் உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் அமைச்சருமான எ.வ.வேலு தலைமை வகித்தாா். திமுக இளைஞரணிச் செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: “தமிழகத்தில் 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தோ்தலை அதிமுக அரசு நடத்தவில்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளாட்சித் தோ்தலை நடத்தியது திமுக. தமிழக அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களிடம் கொண்டு சோ்க்கும் பணி மக்கள் பிரதிநித...

பாஜக அறிவித்துள்ள பந்த் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது – அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய இயக்கங்கள்

பாஜக அறிவித்துள்ள பந்த் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது – அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய இயக்கங்கள் பாஜக அறிவித்துள்ள பந்த் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது – அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய இயக்கங்கள் கோவை : பாஜக அறிவித்துள்ள பந்த்   மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், தேவையின்றி கோவையில் மத பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதுமே தங்களது கோரிக்கையாக உள்ளது என அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பாஜக சார்பில் வரும் 31 ஆம் தேதி கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடையடைப்பு அன்று அனைத்து வணிகர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் , கடைகளை அடைக்கக் கோரி வற்புறுத்தப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அன்றைய தினம் அனைத்து பொருட்களும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் மாநகர காவல் துறை தெரிவித்திருந்தது. இந் நிலையில் அனைத்து ஜமாஅத், அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிர...

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய சம்பவம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய சம்பவம்:  தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை விளக்கம் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய சம்பவம்:  தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை விளக்கம் கோவை கார் வெடிப்பு தொடர்பாக  போலீஸ் அதிகாரிகள் விசாரணை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே, இறந்த முபினின் வீட்டில் எத்தனை கிலோ வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன, அவருக்கு யாருடன் தொடர்பிருக்கிறது உள்ளிட்ட விவரங்களை தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து கோவை சம்பவம் குறித்து ஆலோசனை நடத்திய அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது செந்தில் பாலாஜி, போலீஸாருக்கு முன்பே எல்லா தகவல்களையும் அண்ணாமலை சொல்கிறார். அப்படியென்றால் அண்ணாமலையைதான் என்ஐஏ முதலில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கொந்தளித்த அவர் மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள். நான் என்ன சொன்னேன். நீங்கள் சாப்பிடுங்கள், நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று தானே சொன்...

அரசியல் நாகரீகமற்று தலைக்கனத்துடன் பேசிய அண்ணாமலைக்கு மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள் – எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ

அரசியல் நாகரீகமற்று தலைக்கனத்துடன் பேசிய அண்ணாமலைக்கு மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள் – எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அரசியல் நாகரீகமற்று தலைக்கனத்துடன் பேசிய அண்ணாமலைக்கும் பாஜகவிற்கும் மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள் – எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தஞ்சாவூர்:  கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அம்மாப்பேட்டையில், ஊராட்சி ஒன்றிய நடுப்பள்ளிக்கு மனித நேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம் எச் ஜவாஹிருல்லா பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தேவையான 15 பென்ச், 15 டெஸ்க், 3 வட்ட மேசைகள், 20 நாற்காலிகள் ஆகியவற்றை தனது பாபநாசம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கினார். இதே போன்று இத்தொகுதிக்குட்பட்ட சுந்தரபெருமாகோயில், நாகக்குடி, வளையப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கும் தேவையான ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான தளவாட பொருட்களை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா, ‘அரசியலில், அநாகரீகமான போக்கை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடைபிடிக்கிறார். அண்ணாமலை தலைக்கனம் மிகுந்து உள்ளார். கடலூர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது செய்தியா...

மத்திய பாஜக அரசை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நவம்பர் 1 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் – தொல் திருமாவளவன்

மத்திய பாஜக அரசை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நவம்பர் 1 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் – தொல் திருமாவளவன் மத்திய பாஜக அரசை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நவம்பர் 1 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் – தொல் திருமாவளவன் மொழி உரிமை, மாநில உரிமை     மீது அக்கறையுள்ள அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருமாறு அறைகூவல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக வி.சி.கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்: “ஒன்றிய அரசின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் மொழிவழி தேசியத்தையோ மாநில உரிமைகளையோ ஏற்கும் முதிர்ச்சியான சனநாயகப் போக்குகளைக் கொண்டிருப்பதில்லை. மாறாக, மொழி உணர்வுகளை நசுக்குவதிலும் மாநில உரிமைகளைப் பறிப்பதிலும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படுவதைத் தொடர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதன்படியே தற்போது பாஜக அரசும் மாநில உரிமைகளைப் பறிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. நவம்பர் 1 மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மொழிவழி தேசிய உரிமை நாளான நவம்பர்-01 ஆம் நாள் சென்னையில் விடுதலைச் ...

4 மாநிலம்.. 1230 கி.மீ! 50வது நாளை எட்டியது ஒற்றுமை யாத்திரை!

4 மாநிலம்.. 1230 கி.மீ! 50வது நாளை எட்டியது ஒற்றுமை யாத்திரை! 4 மாநிலம்.. 1230 கி.மீ! 50வது நாளை எட்டியது ஒற்றுமை யாத்திரை! தெலுங்கானாவில் ராகுல் காந்தி இன்று நடைப்பயணம்     ஹைதராபாத்: எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி  நடைப்பயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை செல்லும் இந்த ‘தேச ஒற்றுமை யாத்திரை’ நேற்றுடன் 50 வது நாளை எட்டியுள்ளது. 50 வது நாளான நேற்று  தெலுங்கானாவின் மஹபூப் நகரிலிருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார். பயணத்திற்கு கட்சியினர் அமோக வரவேற்பளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு விலகினர். அவர்கள் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லையென்றும், ராகுல் காந்தி மீதும் கடும் அதிருப்தியையும் தெரிவித்திருந்தனர். இதையெல்லாம் கட்சி பெரியதாக எடுத்துக்கொள்ளாத நிலையில் அதன் முக்கிய தலைவரான குலாம் நபி ஆசாத் விலகியது பரபரப்பாக பேசப்பட்டது. எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வி எழுந்தது. இதனையடுத்து கட்சியை ப...

செய்யாறு: வெம்பாக்கம் தூசி மாமண்டூா் ஏரி பாசனத்துக்காக திறப்பு!

செய்யாறு: வெம்பாக்கம் தூசி மாமண்டூா் ஏரி பாசனத்துக்காக  திறப்பு! விவசாய பாசனத்துக்காக தூசி மாமண்டூர்         ஏரியிலிருந்து நேற்று  தண்ணீா் திறந்துவைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ளது தூசி மாமண்டூா் ஏரி. தூசி உள்வட்டத்தைச் சோ்ந்த 18 கிராமங்கள் பயன்பெறும் இந்த ஏரியின் கொள்ளளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், தற்போது சம்பா பருவத்துக்கான விவசாய நடவு பணிகளைத் தொடங்க ஏரியின் 4 -ஆவது மதகு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வெம்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் டி.ராஜி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன், காஞ்சிபுரம் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் நீள்முடியோன், இளநிலைப் பொறியாளா் மாா்க்கண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக செய்யாறு  சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி பங்கேற்று 4-ஆவது மதகின் ஷட்டரை பூஜைகள் செய்து நீரை திறந்து வைத்து மலா் தூவினாா். இந் நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர்  க.லோகநாதன், ஒன்றியச் செயலாளர்கள், என்.சங்கா், எம்.தினகரன், ஏ.ஞானவேல், சி.கே...

நாகை: நாகூர் தர்கா 466 வது வருடாந்திர கந்தூரி முன்னேற்பாடு கூட்டம்!

நாகை: நாகூர் தர்கா 466 வது வருடாந்திர கந்தூரி முன்னேற்பாடு கூட்டம்! நாகை: நாகூர் தர்கா 466 வது வருடாந்திர கந்தூரி முன்னேற்பாடு கூட்டம்!  நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற, நாகூர் தர்கா வருடாந்திர கந்தூரி முன்னேற்பாடு கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சையதினா அப்துல் காதர் ஷாகுல்அமீது பாதுஷா நாயகத்தின்  466 வது கந்தூரி விழா வரும்  டிசம்பர் 24 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஜனவரி 6 ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி நேற்று மாலை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நாகூர் தர்கா 466 வருட கந்தூரி ஏற்பாடு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் விழா ஏற்பாடு சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்தில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார் அப்போது அவர் பேசுகையில்: “உலகம் போற்றும் நாகூர் தர்கா கந்தூரி விழா ஏற்பாடுகளில் தான் பங்கேற்பதை பாக்கியமான கருதுகிறேன் கடந்த வருடத்தைவிட மிகச்சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகின்றேன்” என கூறினார். மேலும் விழாக்குழுவினர் கோரிக்கைக்கு உடனடி உத்தரவுகளை பிறப்பித்தார். தொடர்ந்து நாகை நகராட்சியி...

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: பாஜக தலைவர் அண்ணாமலையை என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: பாஜக தலைவர் அண்ணாமலையை என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் – அமைச்சர் செந்தில் பாலாஜி     கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: பாஜக தலைவர் அண்ணாமலையை என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் –  அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. national investigation agency  விசாரணைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:  கோவை சம்பவங்கள் தொடர்பாக ஒரு கட்சியினர் (பாஜக) சொல்லும் செய்திகளை பெரிதுபடுத்த வேண்டாம். கோவையில் தற்போது அமைதி நிலவுகிறது. அண்ணாமலைக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்? கோவை சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை தொடங்கு முன்பே சில தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். அவருக்கு எப்படி இந்த தகவல்கள் கிடைத்தன? கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர் கு...

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்       வழிகாட்டுதல் குழுவில் 47 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். இந் நிலையில் காந்தி குடும்பத்தை சாராதவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. காந்தி குடும்பத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் ஜி 23 என்ற அதிருப்தி குழுவும் உருவானது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த தலைமை முடிவு செய்தது. இதில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. அதே நேரம் காந்தி குடும்பத்தின் ஆதரவாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், கேரள மாநில காங்கிரஸ் எம்பி சசி தரூரும் இதில் போட்டியிட்டனர். கடந்த அ...