கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: சிறப்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: சிறப்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு! கோயம்புத்தூரில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். துரிதமாக செயல்பட்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோயம்புத்தூர் விவகாரத்தில் இன்று போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (31.10.2022) தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாநகரில், நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பித்தார். மேலும் அவர்களை சிறப்பிக்கும் வகையில் 58 காவல் அலுவலர் களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். மேல...