Skip to main content

Posts

Showing posts from January, 2023

முடக்கப்பட்ட பி.பி.சி ஆவணப் படத்தின் முக்கிய உண்மைகள்!- ஆசிஷ் ரே

முடக்கப்பட்ட பி.பி.சி ஆவணப் படத்தின் முக்கிய உண்மைகள்! - ஆசிஷ் ரே குஜராத் கலவரச் சதியில் இருந்து தப்பித்துக் கொண்ட நரேந்திர மோடியை மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் பிபிசியின்  இரு ஆவணப்படங்கள் அதிகார அழுத்த தால் நீக்கப்பட்டுவிட்டன! ஆயினும், அவற்றில் சொல்லப்பட்டவற்றின் சாராம்சத்தை பிரண்ட் லைனில் ஆசிஷ் ரே எழுதியுள்ளார்! இதோ அதன் தமிழாக்கம்! ”மோடி உள்ளிட்ட இந்துத்துவ வாதிகளுக்கு இந்த கலவரத்தில் உள்ள நேரடி தொடர்புகளை பிபிசி ஆவணப்படம் தோலுரித்து காட்டுவதால், பதறிய மத்திய பாஜக அரசு அவசரகால சட்டங்களை வைத்து இதை முடக்கியுள்ளது. இது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, சட்ட விரோதமும் கூட” என இந்தியாவின் அனைத்து எதிர்கட்சிகளும் கண்டித்துள்ளன! இந்த கலவரம் குறித்து, இங்கிலாந்தில் 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா வெளிப்படுத்திய கருத்துக்கள், குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகள், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டி பேசுவோரின் வீடியோக்கள் மட்டுமின்றி மோடியின் பேட்டியையும...

வந்தவாசி தொகுதி திமுக சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

வந்தவாசி தொகுதி திமுக சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் தொகுதி திமுக சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் கோட்டை மூலையில் நடைபெற்றது வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார் தலைமையில் நடைபெற்ற இப் பொதுக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம் எஸ் தரணிவேந்தன் தலைமை கழக பேச்சாளர்கள் நாகை நாகராஜன் மானூர் புகழேந்தி சிறப்புரையாற்றினர் தலைமை செயற்குழு உறுப்பினர் கே ஆர் சீதாபதி நகர மன்றத்தலைவர் எச் ஜலால் துணைத் தலைவர் அன்னை க.சீனு  ஒன்றிய கழக செயலாளர்கள் எ.எஸ்.பிரபு ப.இளங்கோவன் தேசூர் பேரூர் செயலாளர் டி.கே.மோகன் முன்னாள் நகர செயலாளர் எஸ் அன்சாரி  முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகர கழக செயலாளர் எ.தயாளன் வரவேற்புரையாற்றினார்

Latin America was the deadliest region for journalists in 2022

Latin America was the deadliest region for journalists in 2022 Journalist killings in 2022 rose nearly 50% globally amid lawlessness and war New York, January 24, 2023—The number of journalists killed worldwide increased sharply in 2022, according to a  report published  Tuesday by the Committee to Protect Journalists. Latin America was the deadliest region for the press, with 30 journalists killed, accounting for nearly half of the 67 journalists and media workers killed worldwide. The global total of 67 was the highest number killed since 2018 and a nearly 50% increase from 2021. More than half of the killings occurred in just three countries—Ukraine (15), Mexico (13), and Haiti (7)—the highest yearly numbers CPJ has ever recorded for these countries. Notably, despite countries across Latin America being nominally at peace, the region surpassed the high number of journalists killed in the Ukraine war. “These figures point to a precipitous decline in press freedom, with ...

நான் உயிருடன் இருக்கும்வரை இரட்டை இலைக்கு ஆபத்து இல்லை - சசிகலா

நான் உயிருடன் இருக்கும்வரை இரட்டை இலைக்கு ஆபத்து இல்லை - சசிகலா தஞ்சாவூர் : இரட்டை இலை சின்னத்தை எந்தக் காலத்திலும் எதுவும் செய்ய முடியாது, நான் உயிருடன் இருக்கும் வரை அதற்கு ஆபத்து வரவிடமாட்டேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா இதனைத் தெரிவித்துள்ளார். பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, என்னை எல்லாம் யாராலும் எதுவும் செய்ய முடியாது. என் நிழலை கூட அவர்களால் நெருங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும், திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் விமர்சித்துள்ளார் சசிகலா. செய்தியாளர்களைச் சந்தித்த வி.கே.சசிகலா பேசுகையில்: அரசால் என்ன செய்ய முடியுமா அதைத்தான் நாங்கள் வாக்குறுதியாகக் கொடுப்போம். கடந்த தேர்தலின்போது 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்று ஒரு பெட்டி நிறைய மனுக்களை வாங்கி, பூட்டி, சாவி என்னிடம் இருக்கும், ஆட்சிக்கு வந்ததும் இதனை திறந்து குறைகளை தீர்ப்பேன் எனக் கூறினார். ஆனால், இன்னும் அந்தப் பெட்டி திறக்கப்படவே இல்லை. நான் நினைக்கிறேன் சாவி தொலைந்து போய்விட்டது போல. ...

தமிழ்நாடு அமைதி பூங்காவா? இல்லையா?.. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கில் பரபரப்பு வாதம் ஒத்திவைப்பு

தமிழ்நாடு அமைதி பூங்காவா? இல்லையா?.. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கில் பரபரப்பு வாதம் ஒத்திவைப்பு  சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது ஆர்எஸ்எஸ் தரப்பும், காவல்துறை தரப்பும் பரபரப்பான வாதங்களை முன்வைத்தன. ‛‛ஒருபுறம் அமைதி பூங்கா என கூறிவிட்டு மறுபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என காவல் துறை அனுமதி மறுக்கிறது''என ஆர்எஸ்எஸ் தரப்பு வாதிட்ட நிலையில் ‛‛தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளதாகவும், அமைதி பூங்காகவே திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம். உளவுத்துறை தகவல் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டது'' என காவல்துறை தரப்பு பரபரப்பான வாதங்கள் செய்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டு போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. பல இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஊர்வல...

பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 42 பத்திரிகையாளர்கள் கொலை!

பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 42 பத்திரிகையாளர்கள் கொலை! பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 42 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முர்தாசா ஜாவேத் அப்பாசி தெரிவித்துள்ளார். தகவல் அமைச்சகத்தின் தகவலின்படி, கொல்லப்பட்ட 15 பத்திரிகையாளர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 11 பேர் சிந்துவையும், 13 பேர் கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 3 பேர் பலுசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஆவார். பத்திரிகையாளர்கள் பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் தற்போது ஜாமீனில் உள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரில் 5 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எட்டு சந்தேக நபர்கள் தப்பியோடினர். குற்றம் சாட்டப்பட்ட ஒருர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். சிந்துவில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஏழு பேர் விசாரணையில் உள்ளனர். இதுகுறித்து செனட்டில் பேசிய ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் முஷ்டாக் அகமது கூறுகையில், பத்திரிகையார்களை பாதுகாக்க மத்திய மற்றும் மாகாண அரசுகள் த...

செய்யாறு அரசுக் கல்லூரியில் மின்னணு நூலகக் கட்டடம் திறப்பு!

செய்யாறு அரசுக் கல்லூரியில் மின்னணு நூலகக் கட்டடம் திறப்பு! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மின்னணு நூலகக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்ததைத் தொடா்ந்து, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ. ஒரு கோடியில் கட்டப்பட்ட மின்னணு நூலகக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்துவைத்தாா். இந்தக் கல்லூரியில் கிராமப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 8,216 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில், இவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக, 2022 - 23ஆம் கல்வியாண்டில் ருசா திட்டத்தின் கீழ் நூலகா் அறை, படிப்பகம், பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் 376.30 சதுர மீட்டா் பரப்பளவில் நூலகக் கட்டடம் கட்டப்பட்டது. இதை தமிழக முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, நூலகத்தில் கல்லூரி முதல்வா் (பொ) சிதா.ரவிச்சந்திரன் முன்னிலையில், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்  ஒ.ஜோதி குத்துவிளக்கு ஏற்றி, கல்லூரி ...

ஆளுநர்களின் பொறுப்பை முதல் அமைச்சர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்: துணை நிலை ஆளுநர் தமிழிசை பேச்சு

ஆளுநர்களின் பொறுப்பை முதல் அமைச்சர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்: துணை நிலை ஆளுநர் தமிழிசை பேச்சு புதுச்சேரி: புதுச்சேரி: ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம்,  ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் காணும் பொங்கல் விழா ஆகியவை துணைநிலை ஆளுநர் மாளிகையில்  நேற்று மாலை நடைபெற்றது  துணைநிலை ஆளுநர் டாக்டர்  தமிழிசை சௌந்தர்ராஜன்  தலைமை தாங்கினார். இதில் ஆரோவில் அமைப்பின் செயலாளர்  ஜெயந்தி ரவி,  பிரதீப் பிரேம், தஜெயா உள்ளிட்ட ஆரோவில், அரவிந்தர் சொசைட்டி மற்றும் அரவிந்தர் ஆசிரம அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியில் ஆரோவில் வளர்ச்சித் திட்டம் தொடர்பான காணொளி காட்சிப்படங்கள் திரையிடப்பட்டது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில்: "அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீ அரவிந்தரின், அன்னையின் கனவுகளை நிறைவேற்ற நாம் செய்கின்ற முயற்சிகளில் ஒரு முன்னேற்றத்தை இந்த கூட்டம் கொண்டு வரும் என்று நம்புகிறேன். நாட்டின் 75 ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இவ் வேளையி...

செய்யாறு: வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா

செய்யாறு: வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் சிறப்பாக கொண் டாடப்பட்டது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ மேலான ஆலோசனையின்  பேரில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் தலைமையில், அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து அங்கு குழுமியிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை பிரியாணி பொட்டலங்களை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் வழங்கினார் உடன் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்  

செய்யாறு: நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா

செய்யாறு: நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாள் விழா செய்யாறு நகர அதிமுக சார்பில் சிறப்பாக நடைபெற்றது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ அறிவுறுத்தலின் படி நகர கழக செயலாளர் கே வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவைத்தலைவர் ஜனார்த்தனம் முன்னிலை வகித்தார் தொடர்ந்து ஆரணி கூட்டுச் சாலையில் அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அங்கு குழுமியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது உடன் அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட  அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்  

வெம்பாக்கம்: ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா

வெம்பாக்கம்: ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய கழக செயலாளர் திருமூலன் (எ) பையாகுட்டி தலைமையில், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கோமதி ரகு மாவட்ட துணைச்செயலாளர் டி பி துரை முன்னிலையில், வெம்பாக்கம் தூசி மாமண்டூர் சிப்காட் ஆகிய இடங்களில் அதிமுக கொடியேற்றி அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் வேட்டி சேலை அன்னதானம் வழங்கப்பட்டது இந் நிகழ்வில் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் உள்ளிட்ட  அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் 

பொங்கல் பண்டிகை: உலகம் முழுவதும் கொண்டாட்டம் தமிழர்கள் உற்சாகம்

பொங்கல் பண்டிகை: உலகம் முழுவதும் கொண்டாட்டம் தமிழர்கள் உற்சாகம் சென்னை: உழவர் திருநாளாம் பொங்கல் விழா இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, புத்தாடைகள், பொங்கலிட தேவையான பொருட்கள் வாங்க குவிந்ததால் பஜார்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையில் இருந்து மட்டும் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக மக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை விழா, போகியுடன் தொடங்கி காணும் பொங்கல் வரை 4 நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படும். அதன்படி நேற்று காலை போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் காப்பு கட்டி விளக்கேற்றி மக்கள் வழிபட்டனர். பொங்கல் என்பது பொங்கு என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். அறுவடை முடிந்து புதுநெல் வந்திருக்கும். ஆதலால் அதை குத்தி அதில் தான் பொங்கலிட வேண்டும் என்பது விவசாய பெருமக்களின் நம்பிக்கை. நம் வாழ்க்கையில் வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உ...

வந்தவாசி: திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பாக "சமத்துவ பொங்கல் " திருவிழா!

வந்தவாசி: திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பாக "சமத்துவ பொங்கல் " திருவிழா! வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில், சமத்துவ பொங்கல் திருவிழா திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பாக பொட்டி நாயுடு தெரு ராஜேஸ்வரி திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது திருவள்ளுவர் நற்பணி மன்ற தலைவரும், வந்தவாசி நகர மன்றத் துணை தலைவருமான அன்னை க சீனு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட திமுக செயலாளர் எம்எஸ் தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார் தொழிலதிபர் முகமது முஸ்தபா கலந்து கொண்டு "சமத்துவ பொங்கல் " நிகழ்வை துவக்கி வைத்தனர் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என அனைவரும் ஒருங்கிணைந்து பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என சப்தமிட்டு மத நல்லிணக்க சூழலை உருவாக்கினர் உடன் நகர மன்றத் தலைவர் எச் ஜலால் நகர திமுக செயலாளர் தயாளன் ஒன்றிய திமுக செயலாளர் பிரபு  முன்னாள் நகர செயலாளர் எஸ் அன்சாரி காங்கிரஸ் பிரமுகர் கலீம் நகர மன்ற உறுப்பினர் நாகூர் மீரான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்...

''ஆளுநர் பதவிக்கு சற்றும் தகுதியில்லாதவர் ரவி''! ராஜ்பவனை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ கட்சி போராட்டம்!

''ஆளுநர் பதவிக்கு சற்றும் தகுதியில்லாதவர் ரவி''!  ராஜ்பவனை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ கட்சி போராட்டம்! சென்னை:  ஆளுநர் பதவிக்கு சற்றும் தகுதியில்லாதவர் ரவி என எஸ்.டி.பி.ஐ. கட்சி விமர்சித்துள்ளதோடு ரவியை தமிழக ஆளுநர் பதவியிலிருந்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைப்பெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள், மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவளித்து பங்கேற்றன. இதனிடையே ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் கண்டன உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் பேசியதாவது; ''தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட பின்னர், அவரின் தொடர் தமிழர் விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ஆளுநரின் நடவடிக்கை என்பது அரசியல் சாசனப்படியும், வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். ஆனால், இத்தகைய நடைமுறைகளை மீறும் வகையிலே தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன. மாநில அரசி...

யாரு விரட்டறாங்களோ இல்லயோ ஆர்எஸ்எஸ்ஸை நாங்க விரட்டுவோம்: தொல் திருமாவளவன்

யாரு விரட்டறாங்களோ இல்லயோ ஆர்எஸ்எஸ்ஸை நாங்க விரட்டுவோம்: தொல் திருமாவளவன் சென்னை:  யாரும் பாஜக கட்சியில் கூட இருக்கலாம், ஆனால் ஆர்எஸ்எஸ் தொண்டனாக மட்டும் இருக்கவே கூடாது. ஏனென்றால், அது ஒரு ஆபத்தான இயக்கம். தமிழ்நாட்டை பாஜக குறி வைத்து விட்டார்கள். அவர்களை யார் விரட்டுகிறார்களோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் விரட்டும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்  திருமாவளவன் சூளுரைத்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ரவி, ஆளுநர் உரையில் இருப்பதை படிக்காமல் விட்டுவிட்டார். மேலும், தன்னிச்சையாக தன்னுடைய கருத்துக்களை பேசியிருந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், உடனே எழுந்து ஆளுநர் பேசிய தனிப்பட்ட கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்கக்கோரி தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் இதையடுத்து ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து உடனடியாக வெளிநடப்பு செய்தார். முன்னதாக, ஆளுநர் உரையை கண்டித்து திமுக கூட்டணியை கட்சியினர் சட்டப்பேரவைக்குள்ளேயே...

பொங்கல் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் - நவாஸ் கனி எம்பி

பொங்கல் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் - நவாஸ் கனி எம்பி பொங்கல் திருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே நவாஸ் கனி எம்பி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள கோரிக்கையில்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநகரங்கள் மற்றும் வெளியூர்களில் பணியாற்றி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விழாவான பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் சொந்த ஊருக்கு வந்து கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர். அவர்கள் கூட்ட நெரிசலின்றி எளிதாக வந்து செல்லும் வகையில் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கிட தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  மேலும் சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் வரையிலும் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக ராமேஸ்வரம் வழியிலும் இரு மார்க்கமும் சிறப்பு ரயில்கள...

முதல்வர் மு.க.ஸ்டாலினை முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்தித்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலினை முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்தித்தார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீன் தலைமையில், கேரளா மாநில தலைவர் சாதிக் அலி ஷிகாப் தங்கள், தேசிய பொதுச் செயலாளரும், கேரளா சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான பி.கே. குஞ்சாலிகுட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. பஷீர், அப்துல் வஹாப், அப்துல் சமது சமதாணி, கே. நவாஸ் கனி, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் சந்தித்தனர். இச் சந்திப்பின் போது எதிர்வரும் மார்ச் மாதம் 10 ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பவள விழா மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ அனுமதி கொடுக்குறதுக்கு நீங்க யாரு? மோகன் பாகவத்தை விளாசிய ஓவைசி!

இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ  அனுமதி கொடுக்குறதுக்கு நீங்க யாரு? மோகன் பாகவத்தை விளாசிய ஓவைசி! டெல்லி:  இந்தியா இந்துஸ்தானாகவே இருக்கும்; ஆனால் முஸ்லிம்களும் இங்கு அச்சமின்றி வாழலாம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியதற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதின் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முஸ்லிம் வாழ்ந்து கொள்ளலாம் என அனுமதி கொடுப்பதற்கு மோகன் பாகவத் யார் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், முஸ்லிம்கள் இந்தியராக இருப்பதற்கு நிபந்தனை போடும் அளவுக்கு மோகன் பாகவத்துக்கு துணிச்சல் வந்துவிட்டதா என்றும் அவர் வினவியுள்ளார். முஸ்லிம்களை சீண்டியமோகன்பாகவத் டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்ற மோகன் பாகவத் முஸ்லிம்களை சீண்டும் வகையில் சில கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறுகையில்: 'இந்தியா எப்போதுமே இந்துஸ்தான் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்து ராஷ்டிரமாகவே இந்தியா இருக்க வேண்டும். அதே சமயத்தில், இந்தியாவில் முஸ்லிம்களும் அச்சமின்றி வாழலாம். அவர்களுக்கு எந்த தீங்கும் நிகழாது. ஆனால், சில விஷயங்...

திருக்கோயில்களில் பணியாற்றும் அனைவருக்கும்கருணைக்கொடையாக ரூபாய் 3,000 வழங்க தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு

திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 34% லிருந்து, 38%-ஆக உயர்த்தி வழங்கவும், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  திருக்கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் கருணைக்கொடையாக ரூபாய் 3,000 வழங்கவும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திருக்கோயில்களின் ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.1,000-ஐ ரூ.3,000 ஆக உயர்த்தியும், கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.3,000-ஐ ரூ.4,000 ஆக உயர்த்தியும் வழங்க ஆணையிடப்பட்டது. திருக்கோயிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்கான கட்டணம் விலக்களித்து, அப்பணியை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு இணை புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்து...

வந்தவாசி நகரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா!

வந்தவாசி நகரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா! வந்தவாசி: திருவண்ணாமலை     மாவட்டம் வந்தவாசி நகரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக நடைபெற்றது மு.கமலக்கண்ணன் துணை பதிவாளர்  தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், ஏ.பிரகாஷ் கூட்டுறவு சார் பதிவாளர் ப.மூர்த்தி கூட்டுறவு சார் பதிவாளர் முன்னிலை வகித்தனர் ஆனந்த குமார் வட்டார விநியோக அலுவலர் வரவேற்புரையாற்றினார் சிறப்பு விருந்தினராக வந்தவாசி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு  ஆயிரம் ரூபாயுடன் கூடிய தொகுப்பினை ஒவ்வொருவருக்கும் வழங்கினார் உடன் நகர மன்றத் தலைவர் எச் ஜலால் துணைத் தலைவர் அன்னை க.சீனு  நகர கழக செயலாளர் தயாளன் முன்னாள் நகர செயலாளர் எஸ் அன்சாரி நகர மன்ற உறுப்பினர் கிஷோர் குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலாளர் எஸ் காலேஷா நன்றியுரையாற்றினார்