முடக்கப்பட்ட பி.பி.சி ஆவணப் படத்தின் முக்கிய உண்மைகள்! - ஆசிஷ் ரே குஜராத் கலவரச் சதியில் இருந்து தப்பித்துக் கொண்ட நரேந்திர மோடியை மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் பிபிசியின் இரு ஆவணப்படங்கள் அதிகார அழுத்த தால் நீக்கப்பட்டுவிட்டன! ஆயினும், அவற்றில் சொல்லப்பட்டவற்றின் சாராம்சத்தை பிரண்ட் லைனில் ஆசிஷ் ரே எழுதியுள்ளார்! இதோ அதன் தமிழாக்கம்! ”மோடி உள்ளிட்ட இந்துத்துவ வாதிகளுக்கு இந்த கலவரத்தில் உள்ள நேரடி தொடர்புகளை பிபிசி ஆவணப்படம் தோலுரித்து காட்டுவதால், பதறிய மத்திய பாஜக அரசு அவசரகால சட்டங்களை வைத்து இதை முடக்கியுள்ளது. இது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, சட்ட விரோதமும் கூட” என இந்தியாவின் அனைத்து எதிர்கட்சிகளும் கண்டித்துள்ளன! இந்த கலவரம் குறித்து, இங்கிலாந்தில் 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா வெளிப்படுத்திய கருத்துக்கள், குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகள், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டி பேசுவோரின் வீடியோக்கள் மட்டுமின்றி மோடியின் பேட்டியையும...