Skip to main content

Posts

Showing posts from February, 2023

டெல்லி: மனீஷ் சிசோடியா கைது ஆம் ஆத்மிக்கு இக்கட்டான சூழல்!

டெல்லி: மனீஷ் சிசோடியா கைது  ஆம் ஆத்மிக்கு இக்கட்டான சூழல்! நேற்று முன்தினம் டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. டெல்லி முதலமைச்சராக மட்டுமின்றி கல்வி, நிதி, கலால் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகவும் செயல்பட்டார். எனவே, அவரின் கைது ஆம் ஆத்மி கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. அவர்கள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக சாடி வருகிறார். மனீஷ் சிசோடியாவை போன்று, டெல்லி அமைச்சர்களுக்குள் ஒருவரான சத்யேந்தர் ஜெயினை கடந்தாண்டு மே மாதம், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, சிறையிலடைத்தது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் உள்ளார். அவர் சிறையில் இருந்து வந்த நிலையிலும், டெல்லியின் சுகாதாரம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். இந் நிலையில், கைதான சத்யேந்தர் சிங், மனீ...

வந்தவாசி: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்!

வந்தவாசி: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இன்றைய சூழலில் அறிவியலின் வளர்ச்சி ஆக்கத்தை நோக்கியா..! அழிவை நோக்கியா...! என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பூங்குயில் சிவக்குமார் தலைமை தாங்கினார். எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் பட்டிமன்றத்தை தொடங்கி வைத்தார். பட்டதாரி ஆசிரியரும், சமூக ஆர்வலருமான ஆர்.எஸ். சிவக்குமார் நடுவராக பங்கேற்றார். மேலும் அறிவியல் வளர்ச்சி 'ஆக்கத்தை நோக்கியே' என்ற அணியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், கலாம் டிரீம் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ், மாணவிகள் சமீகா பர்வீன், மோனிஷா ஆகியோர் பங்கேற்றனர். 'அழிவை நோக்கியே' என்ற அணியில் சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் ம. சுரேஷ் பாபு, ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் மொ. ஷாஜகான், மாணவிகள் கலையரசி, நிவேதா ஆகியோர் பங்கேற்று பேசினர். இறுதியில் நடுவர் அறிவியலின் வளர்ச்சி ஆக்கத்தை நோக்கியே செயல்படுகிறது என்று தீர்ப்பு வழங்கினார். இறுதியில் ஆர்.ஜி மாடர்ன் ...

இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்..ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு..இத்தனை சிறப்பா?

இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்..ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு..இத்தனை சிறப்பா? ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் இலம்பாடி முள்ளு கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் அதன் சிறப்புகளைப் பார்க்கலாம். காரசாரமான ராமநாதபுரம் குண்டு மிளகாய், ருசியான வேலூர் இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள இந்த நேரத்தில் அவற்றின் சிறப்புகளை பார்க்கலாம். பல நாட்களாகவே புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு புவிசார் குறியீடு அளித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பாரம்பரியமாகவும் தனித்தன்மையுடன் பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களின் வாழக்கையை மேம்படுத்தவும், கலைநயமிக்க பொருட்களின் உற்பத்தி நலிவடையாமல் இருக்கவும், போலிகளை தடுத்திடவும் மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கிறது. சர்வதேச சந்தைகளில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின சந்தை மதிப்பு உயர்ந்து, கலைஞர்களுக்கு நல்ல வருவாய் ஏற்படுத்திடவும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. 1999ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புவிசார் கு...

செய்யாறு: இளைஞர்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

செய்யாறு: இளைஞர்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் மூலம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட திட்ட இயக்குனர் ஆகியோரின் ஆலோசனைப்படி இளைஞர்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது வட்டார இயக்க மேலாளர் முருகன் வரவேற்புரையாற்ற,உதவி திட்ட அலுவலர் எஸ் சந்திரகுமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் இந்த வேலை வாய்ப்பு முகாமில் செய்யாறு,அனக்காவூர்,வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் கலந்து கொண்டனர் . 12 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயன் பெற்றனர் . இதற்கான ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளர்கள் ரேகா மகாலட்சுமி முருகன் செய்திருந்தனர் .

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் - அமைச்சா் எ.வ.வேலு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் - அமைச்சா் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை நலத் திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாட வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு கேட்டுக்கொண்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், கிளைக் கழக திமுக நிா்வாகிகளும், அணி சாா்ந்த அமைப்பின் நிா்வாகிகளும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். பொதுமக்களுக்கு உதவும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மரம் நடுதல், ரத்த தானம் செய்தல், நீா்நிலைகளைச் செப்பனிடுதல், மாா்ச் 1, அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல், மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், கட்சிக் கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல் மற்றும் திமுக அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்களை நடத்துதல் போன்ற பணிகளில் திமுக நிா்வாகிகள் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

சுப்ரீம் கோர்ட்டின் சாதகமான தீர்ப்பால் உற்சாகம்- டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி விரைவில் திறக்கிறார்

சுப்ரீம் கோர்ட்டின் சாதகமான தீர்ப்பால் உற்சாகம்- டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி விரைவில் திறக்கிறார் அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக அலுவலக திறப்பு விழா தள்ளிப்போய் கொண்டே இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போடலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலிலும் அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டிருப்பதை இரட்டை வெற்றியாகவே அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் கட்சிகள் டெல்லி அலுவலகம் கட்டிக்கொள்வதற்கு மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது டெல்லியில் அ.தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து ரூ.8 கோடி செலவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து டெல்லி அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவுக்காக...

செய்யாற்றில் வட்டார அளவில் இளைஞா்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

செய்யாற்றில் வட்டார அளவில் இளைஞா்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்! இதுகுறித்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் ரேகா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், திருவண்ணாமலை மாவட்டம் மூலம் வட்டார அளவில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், செய்யாற்றில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகேயுள்ள தனியாா் மண்டபத்தில் திங்கட்கிழமை பிப்.27 நாளை காலை 9.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் செய்யாறு, அனக்காவூா், வெம்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 18 முதல் 35 வயது வரை உள்ள படித்த இளைஞா்கள் பங்கேற்கலாம். கல்விச் சான்று, புகைப்படம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு ரூ.1000 பற்றி நான் சொன்னது விதிமீறலா? “இல்லவே இல்லை” முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

பெண்களுக்கு ரூ.1000 பற்றி நான் சொன்னது விதிமீறலா? “இல்லவே இல்லை” முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! அதிமுகவின் தேர்தல் விதிமீறல் புகார் பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு : மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறுவது தேர்தல் விதிமீறல் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.1,000 உரிமைத் தொகை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் பற்றி பேசுவது தேர்தல் விதிமீறலில் வராது என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது தேர்தல் நடத்தை விதிமீறல் எனக் கூறி தேர்தல் அலுவலரிடம் அதிமுக புகார் மனு அளித்தது. இந்நிலையில், தான் பேசியது தேர்தல் நடத்தை விதி மீறலில் வராது என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் தீவிர பிரச்சாரம்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்றுடன் பிர...

வந்தவாசி:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா கோலாகலம்!

வந்தவாசி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா கோலாகலம்! வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் தலைமையில், சிறப்பாக நடைபெற்றது திருவண்ணாமலை வடக்கு கழக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ வழிகாட்டுதல்படி, நகர கழக செயலாளர் ஓட்டல் பாஷா ஏற்பாட்டில் கோட்டை மூலையில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள், சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது . ஒன்றிய கழக செயலாளர் முனுசாமி ஏற்பாட்டில் வெண்குன்றத்தில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது . இதைத் தொடர்ந்து சென்னாவரம், பெரியகாலனி, தீயணைப்பு நிலையம் எதிரே,பொட்டிநாயுடுதெரு, புதிய பஸ் நிலையம் எதிரே, அ...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் அன்பழகன் தலைமையில் ஏழைகளுக்கு அன்னதானம்!

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் அன்பழகன் தலைமையில் ஏழைகளுக்கு அன்னதானம்! திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடபட்டது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ வழிகாட்டுதல்படி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது நகர கழக செயலாளர் ஆர் மூர்த்தி துணைச்செயலாளர் ஏகேஎஸ் அறிவழகன் அனைவரையும் வரவேற்றனர் அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . தொடர்ந்து அங்கு குழுமியிருந்த ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் ஏகேஎஸ் அன்பழகன் வழங்கினார் . இந்நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் அன்பழகன் முன்னிலையில், மாற்றுக் கட்சியினர் அதிமுக வில் இணைந்தனர் . உடன் ஒன்றிய,நகர கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் .

செய்யாறு: வெம்பாக்கம் ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா!

செய்யாறு: வெம்பாக்கம் ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றிய அதிமுக சார்பில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா வெம்பாக்கம் எம்ஜிஆர் சிலை அருகில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது முன்னதாக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகனின் வழிகாட்டுதல்படி, ஒன்றிய கழக செயலாளர்கள் பி.கே.நாகப்பன் எஸ்.திருமூலன் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் கோமதி ரகு தலைமையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . தொடர்ந்து அங்கு குழுமியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது தூசி,மாமண்டூர், சிப்காட் உள்ளிட்ட நான்கைந்து இடங்களில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது உடன் செய்யாறு சர்க்கரை ஆலை தலைவர் கே.குமரேசன் மாவட்ட துணைச்செயலாளர் ...

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து மழை!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து மழை! ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம்,சூடுபிடித்து தணியும் நிலையில், வரும் 27 ந்தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது இரண்டு மூன்று தினங்களே பாக்கியுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் முன்னாள் முதல்வரும், கழக பொதுச்செயலாளரும் எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமிக்கு ஆதரவான வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது இடைத் தேர்தலில் கிடைக்கும் வெற்றியை விட அதிமுக வினருக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிகம் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது எனக் கூறலாம் தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சி யை வெளிப்படுத்தி வருகின்றனர் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் முன்னாள் எம்எல்ஏ,ஆலோசனையின் பேரில், செய்யாறு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் தலைமையில், வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அண...

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமானதை யொட்டி செய்யாறு விழாக் கோலம்!

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமானதை யொட்டி செய்யாறு விழாக் கோலம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில், அதிமுக ஒற்றைத் தலைமைக்கான சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு சாதகமானதை யொட்டி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகன் ஆலோசனையின் பேரில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் தலைமையில், அதிமுகவினர் பட்டாசுகள் கொளுத்தியும், இனிப்புகள், அன்னதானம், வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர் முன்னதாக வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னிலை வகிக்க, நூற்றுக்கணக்கான அதிமுக வினர் ஊர்வலமாக சென்று புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் ஐநூறுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்  

பிபிசி க்கு எங்கிருந்து பணம் வருகிறது?

பிபிசி க்கு எங்கிருந்து பணம் வருகிறது? இது சம்பந்தமாக பிபிசி விளக்கமளித்துள்ளது கடந்த சில நாட்களாக பிபிசியின் நிதி ஆதாரங்கள் பேசுபொருளாக இருந்து வருவதுடன், ஊடகங்களில் பல தவறான செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. பல வகையான வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. பிபிசி சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிபிசியின் பணிகள் மற்றும் நிதியாதாரம் பற்றிய அனைத்து தகவல்களும் பொதுவெளியில் கிடைக்கின்றன. உங்கள் வசதிக்காக, பிபிசியின் கட்டமைப்பு மற்றும் நிதியாதாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நாங்களே தொகுத்து வழங்குகிறோம். பிபிசியின் தோற்றம் பிபிசி 18 அக்டோபர் 1922 இல் உருவாக்கப்பட்டது. அந்தக் காலத்தில், மார்கோனி உட்பட சிறந்த வயர்லெஸ் தயாரிப்பாளர்களால் இது உருவாக்கப்பட்டது. அதன் உருவாக்கத்தின் போது, ​​அதன் பெயர் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங்க் கம்பெனி என்பதாகும். பிபிசியின் வழக்கமான ஒளிபரப்பு 1922 நவம்பர் 14 அன்று மார்கோனியின் லண்டன் ஸ்டுடியோவில் இருந்து தொடங்கியது. 33 வயதான ஸ்காட்டிஷ் பொறியியலாளர் ஜான் ரீத் பிபிசியின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார். இன்றைய பிபிசி அதாவது பிரிட்ட...

கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக தாய்மொழி தின விழா!

கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக தாய்மொழி தின விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக தாய்மொழி தினவிழா சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் க. ஜோதி பாபு, துணைத் தலைவர் எ. தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச் சங்க துணைத் தலைவர் பா. சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற முதுகலை தமிழாசிரியை புலவர் அ. ராஜகுமாரி பங்கேற்று, தாய்மொழியாம் தமிழ் மொழி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் துணைச் செயலாளர் தமிழ்ராசா, செயற்குழு உறுப்பினர் அ. ரஷுத்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு போட்டிகளில பங்கேற்ற மாணவர்களுக்கும், திருவள்ளுவர் மற்றும் ஔவையார் உள்ளிட்ட மாறுவேட போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் சாந்தி, விஜயகாந்த், செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் பள்ளி பட்டதாரி ஆசிரியை மு. சத்யபாமா நன்றி கூறினார். ...

ஈரோடு கிழக்குஇடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்!

ஈரோடு கிழக்குஇடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்! ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. முக்கிய தலைவர்களின் நேரடி பிரச்சாரங்கள் தொடங்கி விட்டதால் தேர்தல் களம் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் காணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக கே.எஸ் தென்னரசு நாம் தமிழர் மேனகா தேமுதிக ஆனந்த்  ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் இதையடுத்து 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்தது. செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது.  தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், க...