Skip to main content

Posts

Showing posts from February, 2025

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா,கொண்டாட்டம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா,கொண்டாட்டம்! திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான, மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்த நாள் விழா, சிறப்பாக கொண் டாடப்பட்டு வருகிறது இதைத் தொடர்ந்து சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்ற 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஏற்புரை ஆற்றினார். அதன் விவரம்: 72-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நான் - 75-ஆவது ஆண்டு பவள விழா கொண்டாடிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகப் பணியாற்றி வருவதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை! கோடான கோடி உடன்பிறப்புகள் - இங்கு என்னை வாழ்த்திய தலைவர்கள் - தமிழ்நாட்டு மக்கள் - உங்களால்தான் நான் முதலமைச்சராக அமர வைக்கப்பட்டிருக்கிறேன்! தி.மு.க. தலைமை பொறுப்பாக இருந்தாலும் - தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பாக இருந்தாலும் - இரண்டுமே பேரறிஞர் அண்ணா இருந்த இடம்! நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் அமர்ந்த இடம்! அந்த இடத்தில், இந்த சாதாரண - சாமானிய ஸ்டாலினையும் உட்கார வைத்தது, கழகத்தின் கோடான கோடி உடன்பிறப்புகள்தான்! உங்களின் இல்லத்துக்கும் - உள்ளத்துக்கும் என்னுடைய மனமார்ந்த நன்...

வந்தவாசி: ஓசூா் மனுநீதி நாள் முகாமில் 456 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியில் நலத் திட்ட உதவிகள்!

வந்தவாசி: ஓசூா் மனுநீதி நாள் முகாமில் 456 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியில் நலத் திட்ட உதவிகள்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஓசூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது   மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் 456 பயனாளிகளுக்கு ரூ 1.24 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினர். இம் முகாமில், 34 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 19 பேருக்கு பட்டா மாற்றம், 11 பேருக்கு குடும்ப அட்டை, 46 பேருக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை, 16 பேருக்கு வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருள்கள் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 456 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில், 642 மனுக்கள் பெறப்பட்டதில் 456 மனுக்கள் ஏற்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 101 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 85 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. உடன் செய்யாறு கோட்டாட்சியர்  பல்லவி வா்மா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற...

இனி கும்பலாக நின்று வாகன ஓட்டிகளை பிடிக்கக் கூடாது..!! போக்குவரத்து போலீசாருக்கு அதிரடி உத்தரவு..!!

இனி கும்பலாக நின்று வாகன ஓட்டிகளை பிடிக்கக் கூடாது..!! போக்குவரத்து போலீசாருக்கு அதிரடி உத்தரவு..!! நாட்டில் அதிகளவு விபத்துக்கள் நிகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலமாக சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், பெரும்பாலும் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, காரில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டுவது என பலரும் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து காவல்துறையினரும் இதை கட்டுப்படுத்த அபராதம், லைசென்ஸ் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தாலும், விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஹெல்மெட், இன்சூரன்ஸ், லைசென்ஸ் இல்லையென்றால், அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட...

புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில்,உலக தாய்மொழி தினம்,மத்திய மாநில அரசின் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா!

புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில்,உலக தாய்மொழி தினம்,மத்திய மாநில அரசின் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா! புதுச்சேரி: புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில், உலக தாய்மொழி தின விழா, திருவள்ளுவர் விருது- பொற்கிழி வழங்கும் விழா,பாவாணர் பிறந்த நாள் விழா,மத்திய மாநில அரசுகளின் விருது பெற்ற அறிஞர்களுக்கு பாராட்டு விழா புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர்  கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது புதுவைத் தமிழ்ச் சங்க செயலர் பாவலர் சீனு மோகன்தாசு வரவேற்புரையாற்ற, புதுவைத் தமிழ்ச் சங்க துணைத் தலைவர்கள் ந.ஆதிகேசவன்,பாவலர் ப.திருநாவுக்கரசு, பொருளர்.பாவலர் மு.அருள் செல்வம் முன்னிலை வகித்தனர் இந் நிகழ்வில், முனைவர் வி.முத்து அறக்கட்டளையின் பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி திருவள்ளுவர் விருது மூத்த தமிழறிஞர் தமிழ் மாமணி துரைமாலிறையன் அவர்களுக்கு வழங்கப்பட்டது இதைத் தொடர்ந்து தாமல் கோ.சரவணன் காஞ்சிபுரம் சிறப்புரையாற்றினார் மேலும் மருத்துவர் கலைவேந்தன்,பாவலர் சு.சங்கர்,பாவலர் அன்புநிலவன், தேசிய விருதாளர் வி.மண்ணாங்கட்டி,டாக்டர் பூ.தட்சிணாமூர்த்தி,சிலம்பு நா.செல்வராசு...

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியினை கடந்த வருடத்தை விட, அதிகமாகவும் உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் - தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன்

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியினை கடந்த வருடத்தை விட, அதிகமாகவும் உரிய நேரத்திலும் வழங்க வேண்டும்  - தென்னிந்திய  தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தென்னிந்திய  தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன்  சார்பாக தமிழ்நாடு அரசுக்கு  ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை தமிழக அரசு கடந்த வருடத்தைவிட அதிகமாகவும்,  உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அசோசியேசன் தலைவர் ஹாஜி சையது முகம்மது கலிபா சாஹிப் காதிரி மற்றும் செயலாளர் முஜம்மில் ஜாபர் விடுவித்துள்ள கோரிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- "வருடா வருடம் தமிழக அரசு  இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை பள்ளி வாசல்களுக்கும் தர்காக்களுக்கும் வழங்கி வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசிற்க்கு தமிழக இஸ்லாமிய மக்கள் மனதார நன்றி செலுத்தி வருகின்றனர். கடந்த வருடம் தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்களுக்கு 6.5 மெட்ரிக் டன் விலையில்லா அரிசி வழங்க உத்தரவிடப்பட்டது.  ...

அமெரிக்க அதிகாரிகளால் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட கொடுமை! சீக்கிய மத அமைப்பு கண்டனம்

அமெரிக்க அதிகாரிகளால் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட கொடுமை! சீக்கிய மத அமைப்பு கண்டனம் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீக்கியர்களை அமெரிக்க அதிகாரிகள் தலைப்பாகையை அகற்றும்படி கட்டாயப்படுத்திய சம்பவத்திற்கு சீக்கிய மத அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்காவிலிருந்து சி-17 விமானத்தில் சனிக்கிழமை (பிப். 15) நள்ளிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தடைந்த 117 இந்தியர்கள் சிறைக் கைதிகளைப் போன்று நடத்தப்பட்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த விமானத்தில் இந்தியா வந்த சீக்கியர்களை அமெரிக்க ராணுவத்தினர் தலைப்பாகைகளை அகற்றுமாறு கட்டாயப்படுத்திய கொடுமை அரங்கேறியுள்ளது. அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தை அடைந்ததும், குடியுரிமை தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்க வரிசையில் நின்றபோது, ​​சீக்கியர்கள் பலரும் தலைப்பாகை இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 24 சீக்கியர்கள் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (எஸ்ஜிபிசி) ஊழி...

விகடன் இணையதளம் முடக்கம்; 'கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாஜக அரசின் ஃபாசிசத் தாக்குதல்' - திருமாவளவன்

விகடன் இணையதளம் முடக்கம்; 'கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாஜக அரசின் ஃபாசிசத் தாக்குதல்' - திருமாவளவன் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது 'கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாஜக அரசின் ஃபாசிசத் தாக்குதல்' என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தமிழ் வார இதழான ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடன் ஆகியவை கருத்துச் சுதந்திரத்தை உறுதியாகப் பற்றி நிற்கும் ஒரு ஊடகமாகும். நேற்று இரவு முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயனர்கள் விகடன் இணையதளத்தை அணுக முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விகடன் இணைய தளம் முடக்கப்பட்டது குறித்து இதுவரை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக இணையதளத்தை அணுக முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விகடன் இணைய தளம் முடக்கப்பட்டது குறித்து இதுவரை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பற்றிய கேள்விக...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள,நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கு! அதிர்ச்சியூட்டும் தகவல்

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள,நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களின்  கைகளில் விலங்கு! அதிர்ச்சியூட்டும் தகவல்  அமெரிக்காவிலிருந்து சி-17 விமானத்தில் சனிக்கிழமை(பிப். 15) நள்ளிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தடைந்த 117 இந்தியர்கள் சிறைக் கைதிகளைப் போன்று நடத்தப்பட்டுள்ள விதம் கவலையளிக்கச் செய்கிறது. அமெரிக்க விமானத்தில் நாடுகடத்தப்பட்டு தாயகம் வந்தடைந்த பயணிகளில் ஒருவரான தல்ஜீத் சிங், விமானத்தில் தாம் அனுபவித்த கொடுமைகளைப் பகிர்ந்துள்ளார். அவரது கூற்றுப்படி, தங்கள் கால்களை சங்கிலியால் கட்டிப்போட்டதாகவும், கைகளிலும் விலங்கால் பூட்டி விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அதே விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ள 20 வயது இளைஞரான சௌரவ் என்பவரும் மேற்கண்ட இதே கருத்தைப் பதிவு செய்துள்ளார். முன்னதாக, முதல்கட்டமாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களும் இம்மாதம் 5-ஆம் தேதி அமிர்தசரஸ் வந்திறங்கிய நிலையில், அவர்களும் அமெரிக்க விமானத்தில் இதே பாணியில் விலங்கிட்டு அழைத்து வரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ...

"விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது அராஜக செயல்" - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம்!

"விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது அராஜக செயல்" - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம்! இந்தியர்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் காவல் துறை, கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதை கருத்துப்படமாக வெளியிட்ட விகடன் பத்திரிகையின் இணையப்பக்கத்தை மோடி அரசாங்கம் முடக்கியிருப்பதற்கு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் கண்டனங்கள் எதிரொலித்தபடி இருக்கின்றன. இந்நிலையில் இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட விகடன் இணைய இதழான "விகடன் பிளஸ்" இதழில் அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கை விலங்கினோடு அழைத்துவரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததையும் குறிப்பிடும் வகையில் கேலிச் சித்திரம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இணைய இதழ் ஒன்றிய அரசால் முடக்கி வைக்கப்பட்டதாக விகடன் தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை சுதந்திரத்திலும் கருத்துச் சுதந்திரத்திலும் ஒன்றிய அரசு தனது சர்வாதிகாரப் போக்கைக் கையாண்டு வருவது வெட்ட வெளிச...

தெள்ளார்: இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி என்எஸ்எஸ் முகாம் சார்பில் இரத்ததான முகாம்!

தெள்ளார்: இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி என்எஸ்எஸ் முகாம் சார்பில் இரத்ததான முகாம்! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட முகாம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி‌. முத்து தலைமை தாங்கினார். தெள்ளாறு வட்டார மருத்துவ அலுவலகம் மற்றும் இராஜா நந்திவர்மன் கலைக்கல்லூரி இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் ஏராளமான மாணவர்கள் இரத்த கொடையாளர்களாக பங்கேற்றனர். மேலும் 'தேசிய நலனில் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் முதல்வர் பா.சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்விற்கு கல்லூரி இயக்குநர்கள் டிகேஜி ஆனந்தன், சங்கர், கல்லூரி துணை முதல்வர் முனைவர் ராஜேஷ்குமார், திட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் தெள்ளார் வட்டார மருத்துவ அலுவலர் ஹித்தேன் டி ஷா, சுகாதார ஆய்வாளர் கோதண்டராமன் உள்ளிட்ட செய்யாறு அரசு மருத்துவமனை குழுவினர் பங்கேற்றனர். இறுதியில் அனைவருக்கும் இரத்த கொடையாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல் இந்தியாவில் மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து அவர்கள் மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் விதத்தில் பொதுவெளியில் பேசும் சம்பவங்கள் கடந்த ஓராண்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளன. அமெரிக்காவை மையமாகக் கொண்டுள்ள தற்சார்பு நிறுவனமான இந்தியா ஹேட் லேப்(ஐஎச்எல்) 'இந்திய வெறுப்பு ஆய்வகம்' மேற்கொண்ட ஆய்வில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு இந்தியாவில் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகைய வெறுப்புப் பேச்சானது, ஆளும் பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஹிந்து தேசியவாத இயக்கங்களின் கொள்கை, சித்தாந்தங்களுடன் பிண்ணிப் பிணைந்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளன. கடந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் பரப்புரையின்போது, பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை ஏற்றுக்கொள்ளத்தகாத அளவுக்கு அதிகம் வெளிப்படுத்தியதாக விமர்சகர்களும் செயற்பாட்டாளர்களும் பிரதமர் நரேந்திர மோடி, அவர் சார்ந்துள்ள பாஜக மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். ஹிந்து பெரும்பான்ம...

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி என்எஸ்எஸ் முகாம்: தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், விழிப்புணர்வு!

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி என்எஸ்எஸ் முகாம்:  தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், விழிப்புணர்வு! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி என்எஸ்எஸ் முகாம் தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது இதில் தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், சட்ட ஆலோசனைகள்  விழிப்புணர்வு ஆகிய உரையரங்கம் பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு தலைமையில் நடைபெற்றது ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் கலைவாணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மு.பிரபாகரன் பங்கேற்று தீவிபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு உடனடியாக நிவர்த்தி செய்யும் முறைகளை விளக்கினார். மேலும் ஏரி, குளங்கள் மற்றும் ஆற்றுப் பகுதியில் குளிக்க சென்றால் பெற்றோர் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்கள் பாதுகாப்பு,சொத்துரிமை  சட்டம் சார்ந்த கருத்துக்களை மூத்த வழக்கறிஞர் சா.இரா.மணி எடுத்துரைத்தார் மனநல ஆலோசகர் டாக்டர் இரா.பாஸ்கரன், சட்ட ஆர்வலர் நடராஜன், ...

செய்யார் சிப்காட்: புகழ்பெற்ற லோட்டஸ் நிறுவனம் சார்பில்,மாரத்தான் போட்டி 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு!

செய்யார் சிப்காட்: புகழ்பெற்ற லோட்டஸ் நிறுவனம் சார்பில், மாரத்தான் போட்டி 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு! திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், சிப்காட் லோட்டஸ் நிறுனம் சார்பில், 'சாலை பாதுகாப்பு குறித்த - மாரத்தான்  விழிப்புணர்வு போட்டி நடைப்பெற்றது செய்யார் மாங்கால் கூட்ரோடு சிப்காட் தொழில் பூங்காவில் லோட்டஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் சில கிராமங்களை தத்தெடுத்து, அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. 2019 - 20 ம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பெரும் தொற்று காலத்தில், லோட்டஸ் நிறுவனம் நிறைய கிராமங்களை தேர்வு செய்து உணவுப் பொருட்களையும்,அடிப்படை வசதிகளையும் வழங்கி வந்தது குறிப்படத்தக்கது. இதுதவிர அரசு சார்பில்,  மக்களுக்கு வழங்கப்படும்  பல்வேறு நலத்திட்ட உதவிகள் சம்பந்தப்பட்ட துறைகளுடன் 'லோட்டஸ்' நிறுவனம் கைக் கோர்த்து கொண்டு அந்த திட்டத்தை தங்களது பங்களிப்புடன் செயல்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் நேற்று 'லோட்டஸ்' நிறுவனத்தில...

"நாட்டில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர், கல்வியுடன் வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும்"-மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ்

"நாட்டில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர் இவர்களுக்கு கல்வியுடன் வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும்"- மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகரில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்,பணி நியமன ஆணை வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற இந் நிகழ்வில்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு படிப்புக்களை பயின்ற  இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்துக் கொண்டனர். இவர்களுக்கு கல்வி தகுதிக்கு கேற்றவாறு நேர்காணல் மூலம் அந்தந்த துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்தனர். திட்ட இயக்குநர் சரண்யா தேவி வரவேற்புரையாற்றினார் சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் தலைமையுரையாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ், 'நாட்டில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட வாலிபர்கள் - இளம் பெண்கள் தான் அதிகளவில...

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வந்தை முன்னேற்ற சங்கம் சார்பில் உலக சாதனை நிகழ்வு!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வந்தை முன்னேற்ற சங்கம் சார்பில் உலக சாதனை நிகழ்வு! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் செயலாற்றி வரும் "வந்தை முன்னேற்ற சங்கம்" சார்பில்,உலக சாதனை நிகழ்வாக, தமிழில் ஒரு லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கையெழுத்திடும் நிகழ்வு வரும் 10.2.2025 திங்கள் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது இதற்கான அங்கீகாரம் ஆல் இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் வழங்குகிறது இந்த வரலாற்று சிறப்பு மிகுந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வந்தை முன்னேற்ற சங்கத்தின் தலைவர் வந்தை எம்.பிரேம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர் இதற்கான அழைப்பிதழ்களை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி செயலர் எம்.ரமணன் தெள்ளார் அரவிந்த் பள்ளியின் முதல்வர் மகாலட்சுமி சக்கரவர்த்தி கிங் நந்திவர்மன் முதல்வர் ஏழுமலை கீழ்கொடுங்காலூர் அரசு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜா சங்கீதா செந்தமிழ் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் குமரன் தெள்ளார் ஜோதி நிதியுதவி பள்ளியின் முதல்வர் பழ சீனிவாசன் கல்லாங்குத்து பள்ளியின் ஆசிரியை சா.ரசீனா ஆகியோருக்கு அழைப்பிதழ்களை வந்தை எம்.பிரேம்,கல்வித் துறை அலுவலக பணியாளர்கள் சங்...

தெருவோர வியாபாரிகளுக்கு 50,000 ரூபாய் மொபைல் நம்பர், ஆதார் போதும்.. குறைந்த வட்டியில்!

தெருவோர வியாபாரிகளுக்கு 50,000 ரூபாய் மொபைல் நம்பர், ஆதார் போதும்.. குறைந்த வட்டியில்! பட்ஜெட் 2025 இல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெருவோர வியாபாரிகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ப்ரைம் மினிஸ்டர் ஸ்ட்ரீட் வெண்டார் ஆத்மாநிர்பர் நிதி (Prime Minister Street Vendors Atmanirbhar Nidhi - PM SVANidhi Scheme) திட்டத்தின் கீழ், தெருவோர வியாபாரிகளுக்கு கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. இந்திய பிரதமரின் ஆத்மாநிர்பர் நிதி திட்டத்தின் கீழ் கிடைக்கும் இந்த கிரெடிட் கார்டுகளின் லிமிட் என்ன? இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சம் எவ்வளவு கடன் கிடைக்கும்? உண்மையிலேயே இதற்கு செக்யூரிட்டி தேவை இல்லையா? யார் கடன் கொடுப்பார்கள்? விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை? இந்த திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? இதோ விவரங்கள்: இந்த கிரெடிட் கார்டுகளின் வரம்பு ரூ. 30,000 ஆக இருக்கும், அதாவது இது தெருவோர விற்பனையாளர்கள் தங்கள் வணிகங்களுக்கு ரூ.30,000 வரை கடன் பெற அனுமதிக்கும் என்றும், இந்த கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது....

செய்யாறில் பிப்-8 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செய்யாறில் பிப்-8 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பிப்ரவரி-8 ஆம் தேதி நடைபெறும் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவண்ணாமலை மாவட்ட மகளிா் திட்டம் இணைந்து இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. வருகிற 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த முகாம் நடைபெறும் இதில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தகுதிகள் கொண்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா். 8- ஆம் வகுப்பு, 10, 12 ஆம் வகுப்பு, பட்டம், முதுநிலைப் பட்டம், பொறியியல், ஐடிஐ, பாலிடெக்னிக் தோ்ச்சி பெற்ற வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமுக்கு வரும்போது தங்கள...