Skip to main content

Posts

Showing posts from May, 2023

செய்யாறு நகர அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!

செய்யாறு நகர அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நகர கழக செயலாளர் கே.வெங்கடேசன் தலைமையில், சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தனர் இளைஞர்கள் இளம்பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் தங்களது பெயர்களை பதிவு செய்தனர் அவைத்தலைவர் ஜனார்த்தனம் முன்னிலையில், நடைபெற்ற இந் நிகழ்வில் அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் பி ஜாகீர் உசேன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்  

ஏனாதவாடி: அதிமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம்!

ஏனாதவாடி: அதிமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு ட்பட்ட ஏனாதவாடி கிராமத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது அதிமுக விற்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், முன்னதாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் போர் கால அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில், முன்னாள் அமைச்சர் கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ போன்றோர் சுழன்று சுழன்று களப்பணியாற்றி வருகின்றனர் அவ் வகையில் செய்யாற்றை பொறுத்தவரை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் உறுப்பினர்கள் சேர்க்கையில் முன்னிலை வகிக்கிறார் என கூறலாம் நேற்று ஏனாதவாடியில் ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமையில், அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ...

சித்தாத்தூர்: அதிமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம்!

அதிமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு ட்பட்ட சித்தாத்தூர் கிராமத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம் ஒன்றிய கழக செயலாளர் திருமூலன் (எ) பையாகுட்டி தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தனர் பொதுமக்கள் ஆர்வத்தோடு தங்களது பெயர்களை பதிவு செய்தனர் இந் நிகழ்வில், மாவட்ட துணைச்செயலாளர் டி.பி.துரை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு ஒன்றிய துணைச்செயலாளர் வி.பாஸ்கர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்  நமண்டி பாலன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் 

ஆரணி: விடியா திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆரணி: விடியா திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், விடியா திமுக ஆட்சியில் தொடரும், கள்ளச்சாராய மரணம், போலிமதுபானங்கள் விற்பனை, ஊழல் முறைகேடுகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள்முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ முன்னாள் எம்எல்ஏ க்கள் கலசபாக்கம் வி.பன்னீர்செல்வம் பாபு முருகவேல் கலந்து கொண்டு திமுக அரசின் அவலநிலையை பட்டியலிட்டு பேசினர் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் எழுச்சியுரையாற்றி, திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார். அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் இணைந்து கோஷமிட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் பி.ஜாகீர் உசேன்  தி.மலை வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந...

இதற்காவது பதில் வருமா? அமைச்சர் உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி

இதற்காவது பதில் வருமா? அமைச்சர் உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி   நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன?' 'நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதற்காவது பதில் வருமா?' என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அண்ணாமலை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம். முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை. முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது. நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதற்காவது பதில் வருமா? என அந்தப் ப...

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி   நேற்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஐடி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக குண்டர்கள் அடித்து விரட்டியதுடன், அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை காட்டுவதாக சாடியுள்ளார். மேலும், ஆளும் கட்சியினருக்கு கைக்கட்டி சேவகம் செய்யும் ஒருசில காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி தர்ணா!

ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி தர்ணா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து நேற்று தா்ணா  போராட்டத்தில் ஈடுபட்டனா். மீசநல்லூா் கிராமத்தில் ஏரிக் கால்வாயை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து பயிா் செய்வதாகவும், இதனால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இந்த ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து நேற்றைய தினம் தா்ணா போராட்டத்தில்  ஈடுபட்டனா். போராட்டத்துக்கு வட்டாரச் செயலாளர் அ.அப்துல் காதா் தலைமை வகித்தாா். முன்னாள் செயலாளர்  ந.ராதாகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளா் சு.சிவக்குமாா், வழக்குரைஞா் சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையடுத்து, ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் கி.ராஜேந்திரன் உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனா்.

கலசபாக்கம்: அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது

கலசபாக்கம்: அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட பகுதிகளில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழக செயலாளருமான வி.பன்னீர்செல்வம் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மு.எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் ஆகியோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்டனர் உடன் எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் பி ஜாகீர் உசேன் ஒன்றிய கழக செயலாளர்கள் பொய்யாமொழி அனக்காவூர் சி.துரை போளூர் அன்பழகன் வெம்பாக்கம் அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்  

'3 அணிகளும் ஒன்றாக 2024 தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது'-வி.கே. சசிகலா

'3 அணிகளும் ஒன்றாக 2024 தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது'-வி.கே. சசிகலா ”எல்லோரையும் ஒன்றாக சேர்த்து கொண்டு செல்வதுதான் எனது வேலை, இதனை ஏற்கெனவே ஜானகி அம்மா இருந்த காலகட்டத்திலேயே இதனை நான் செய்துள்ளேன்” என சசிகலா கூறினார் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா கூறுகையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மூன்று ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளார்கள் அதனை பிரதமர் திறந்து வைக்கிறார். எதிர்க்கட்சிகள் இதனை இந்தியாவிற்கு பெருமை என்று நினைத்து நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் இருக்கிறோம் என்று தெரிவிப்பதற்காக் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர் என்றார். டிடிவி தினகரனை சந்தித்துள்ள ஓபிஎஸ் உங்களை சந்திப்பதாக கூறி உள்ளாரே சந்தித்தால் அரசியலில் என்ன மாற்றம் நடக்கும்? என்ற கேள்விக்கு, "மாற்றம் 2024 தேர்தலில் உங்களுக்கு தெரியும். இந்த சந்திப்பு நிச்சயம் நடக்கும். அனைவரும் ஒன்றுதான் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன். கட்சி என்று இருந்தால் அதில் தொண்டர்கள் விருப்பம்தான் என்றும் வெற்றி பெறும். அதன் அடிப்படையில் தொண்டர்கள் விருப்பம் என...

ஸ்டாலின் வெளிநாட்டில் முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா? முதலீடு செய்யப் போகிறாரா? - இ.பி.எஸ்

ஸ்டாலின் வெளிநாட்டில் முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா? முதலீடு செய்யப் போகிறாரா? - இ.பி.எஸ் "முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க போகிறாரா? இல்லை முதலீடு செய்ய போகிறாரா? என மக்களுக்கு சந்தேகம்”, என்று அதிமுக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி  கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று சிங்கப்பூர் செல்ல முடிவு செய்துள்ளார். அங்கிருந்து ஜப்பான் செல்லும் வகையில் பயண திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகவும், சமீபத்தில் துபாய் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் மீண்டும் வெளிநாடு சுற்றுலாவா?”, என்று கேள்வி எழுப்பினார். “முதல்வர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க போகிறாரா? இல்லை முதலீடு ச...

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள்: ஆளும் திமுக அரசைக் கண்டித்து மே 29-ல் ஆர்ப்பாட்டம் - அதிமுக அறிவிப்பு

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள்: ஆளும் திமுக அரசைக் கண்டித்து மே 29-ல் ஆர்ப்பாட்டம் - அதிமுக அறிவிப்பு சென்னை: “தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும்; இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும்; கழகத்தின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் மே 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என முன்னாள் முதல்வரும், எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊழலும், வன்முறையும், அராஜகமும் ஒன்றாய் சேர்ந்தது தான் திமுக என்பதை நிரூபிக்கும் வகையிலும்; திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குக் கூட மிகுந்த சிரமத்துடனும், அச்சத்துடனும் வாழ்ந்து வரும் நிலையிலும்; திமுக ஆட்சி `திராவிட மாடல்’ ஆட்சி என்று தன்னைத் தானே தம்பட...

திருவாரூரில் கலைஞர் கோட்டம்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஜூன் 20 ஆம் தேதி திறந்துவைக்கிறார்.

திருவாரூரில் கலைஞர் கோட்டம்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஜூன் 20 ஆம் தேதி திறந்துவைக்கிறார். மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது தொடர்பாக ஆலோசிக்க திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் 3 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவை எழுச்சியோடும், உணர்ச்சியோடும் ஒரு ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 3 ஆம் தேதி வட சென்னையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து, கருணாநிதி பெயரில் அமைக்கப்பட்ட கோட்டத்தினை ஜூன் 20ஆம் தேதி பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் திறந்துவைப்பார் என்றும் கருணாநிதி சிலைகளை எங்கெங்கு நிறுவலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து, 70 வயதுக்கு மேற்பட்ட கழக முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டத...

கோடைக்கால இலவச பயிற்சி: மாணவர்களுக்கு வளர் இளம் மேதை விருது!

கோடைக்கால இலவச பயிற்சி:  மாணவர்களுக்கு வளர் இளம் மேதை விருது! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில் கடந்த ஏப்ரல் 29 முதல் நடைபெற்ற மாணவர்களுக்கான கோடைகால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் ( ஓவியம், யோகா, திருக்குறள் ஒப்பித்தல், அடிப்படை இந்தி பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், கையெழுத்து பயிற்சி, கராத்தே)  உள்ளிட்டவை நடைபெற்றது. இந்த வகுப்பின் நிறைவு விழாவில் பயிற்சி பெற்ற 66 மாணவர்களுக்கு "வளர் இளம் மேதை " சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது. திண்டிவனம் சாலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா தலைமை தாங்கினார். அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.பி. வெங்கடேசன், இலவச சட்டப் பணிக்குழு ஆலோசகர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி காவல்துறை சார் ஆய்வாளர் ராமு‌ அவர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு "வளர் இளம் மேதை " விருதை வழங்கி சிறப்புரையாற்றினர். மேலும் மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை மேற்கொ...

2000 ரூபாய் நிறுத்தம் விவகாரம்.. ‘இது மோடி அரசின் கோமாளித்தனம்’ - கொந்தளித்த திருமாவளவன்!

2000 ரூபாய் நிறுத்தம் விவகாரம்.. ‘இது மோடி அரசின் கோமாளித்தனம்’ - கொந்தளித்த திருமாவளவன்! "ஏழைகளிடம் புழக்கமில்லாத பணம் தான் எனினும் இது மதிப்பிழக்கிறபோது அனைத்துத் தரப்பிலும் அதன் பாதிப்பு ஏற்படும். பொருளாதார நிலைத்தன்மையும் பாதிக்கப்படும்" தற்போது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி நேற்று (20-05-2023) அதிரடியாக அறிவித்தது. மேலும் மே மாதம் 23 ஆம் தேதியில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் வரும் 2023 செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் என்றும் தெரிவித்தது. இது மட்டுமல்லாமல் தினமும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றலாம் என்றும் வங்கிகளில் செலுத்தப்படும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவும், எதிர்ப்பும் சேர்ந்தே எழுந்துள்ளன. இந்த நிலையில் இந்த அறிவிப்பு குறி...

செய்யார்: வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் தூளி கிராமத்தில் கழக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்!

செய்யார்: வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் தூளி கிராமத்தில் கழக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூளி கிராமத்தில்  வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், கழக உறுப்பினர்கள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது  வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னிலையில், நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார் இம் முகாமில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்  

இயற்கையின் எழிலரசி தேனி மாவட்டம்

தேனி: கேரளாவின் நுழைவு வாயில், மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியமான முகப்பு பகுதி, கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, வாகமன், சபரிமலைக்கு நுழைவு வாயிலே தேனி தான். தமிழ்நாடு, கேரளாவின் எல்லையை ஒட்டியுள்ள தேனி மட்டுமே முற்றிலும் மலைகளால் சூழப்பட்ட மாவட்டம் ஆகும். தேனி மாவட்டத்திற்கு வத்தலக்குண்டு வழியாக வந்தால் மட்டுமே நிலப்பரப்பாக இருக்கும். மற்ற எல்லா பகுதிகளுமே மலைப்பகுதிகள் வழியாகத்தான் வர முடியும். தேனி மாவட்டத்தில் தான் வற்றாத ஊற்றாக எப்போது ஓடிக்கொண்டே இருக்கும் முல்லை பெரியாறு இருக்கிறது. இந்த தண்ணீர் தான் தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது. தேனி மாவட்டம் என்பது இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். இங்கு எத்தனை அருவிகள் உள்ளன என்பதை எண்ணவே முடியாது. அந்த அளவிற்கு அருவிகள் உள்ளன. சுருளி அருவி, சின்ன சுருளி அருவி, கும்பக்கரை அருவி ஆகியவை மிகவும் பிரபலம் ஆனவை அகும். தேனி மாவட்டம் என்பது கடவுளே குடியிருக்க விரும்பும் பூமி என பலரும் கூறுவார்கள்  ...

வந்தவாசி தாலுக்கா அலுவலகத்தில் தொடங்கிய ஜமாபந்தி விழா!

வந்தவாசி தாலுக்கா அலுவலகத்தில் தொடங்கிய ஜமாபந்தி விழா!    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் 10 நாள் ஜமா பந்தி விழா தொடங்கப்பட்டது இன்று மழையூர் பிர்காவை சேர்ந்த கிராம பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். இந் நிகழ்வில், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் வெங்கடேசன் கலந்து கொண்டு முதலில் மழையூர் பிர்காவை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.     மேலும் பட்டா, பட்டா மாற்றம், பட்டா உள்பிரிவு, புதிய ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு பெயர் நீக்கம், இறப்பு சான்று, வாரிசு சான்று, முதியோர் உதவித்தொகை என பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். வட்டாட்சியர்கள் ராஜேந்திரன் (சமூக பாதுகாப்பு) சுபாஷ் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கலைக் கல்லூரி நிறுவனர் முனிரத்தினம் மற்றும் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர் செந்தில் நாதன் கிராம நிர்வாக அலுவலர்கள் முரளிமனோகரன், முருகேசன், பாபு, மோகன், உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.   வந்தவாசி தாலுக்கா அலுவலகத்தில் நடந்...

திருவண்ணாமலை: 12 வட்டங்களில் இன்று ஜமாபந்தி தொடக்கம்!

திருவண்ணாமலை: 12 வட்டங்களில் இன்று ஜமாபந்தி தொடக்கம்! திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் 1432 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்குகளை சரிபாா்க்கும் ஜமாபந்தி நிகழ்வு இன்று (மே 19) தொடங்குகிறது. தண்டராம்பட்டு வட்டத்தில் மே 19 முதல் 23-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகிறது. திருவண்ணாமலை வட்டத்தில் மே 29-ஆம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி தலைமையிலும், செய்யாறு வட்டத்தில் 30-ஆம் தேதி வரை சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலா், வெம்பாக்கம் வட்டத்தில் 25-ஆம் தேதி வரை செய்யாறு சாா் -ஆட்சியா், போளுா் வட்டத்தில் 25-ஆம் தேதி வரை ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வீ.வெற்றிவேலு, கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் 23-ஆம் தேதி வரை திருவண்ணாமலை வருவாய்க் கோட்ட அலுவலா் ஆா்.மந்தாகினி தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதேபோல, ஆரணி வட்டத்தில் 25-ஆம் தேதி வரை வருவாய்க் கோட்ட அலுவலா், செங்கம் வட்டத்தில் 25-ஆம் தேதி வரை ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்), கலசப்பாக்கம் வட்டத்தில் 23-ஆம் தேதி வரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாது...

’கர்நாடக தேர்தல் வெற்றியை வைத்து நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது’ பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

’கர்நாடக தேர்தல் வெற்றியை வைத்து நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது’ பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை ”மக்களவைத் தேர்தலில் என்ன காத்திருக்கிறது என்பதற்கான முன்னோட்டமாக கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவை தவறாகப் புரிந்துகொள்வதற்கு எதிராக கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை எச்சரிக்கை விரும்புகிறேன்” கர்நாடகாவில் வென்றதால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார் கர்நாடகாவில் நடைபெற்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் தனிப்பெரும்பன்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி அடுத்து வர உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பலம் சேர்க்கும் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக தேர்தல் வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், கடந்த 2013 கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், அடுத்து நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடம் தோல்வியைத் தழுவியது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் வரு...

இந்த நாட்டை சுற்றிப் பார்க்கவே மொத்தமாக 45 நிமிடங்கள் தான் ஆகிறதாம் – உலகின் மிகச்சிறிய நாடு!

இந்த நாட்டை சுற்றிப் பார்க்கவே மொத்தமாக 45 நிமிடங்கள் தான் ஆகிறதாம் – உலகின் மிகச்சிறிய நாடு! உலகிலேயே மிகப்பெரிய நாடு ரஷ்யா என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே! ஆனால் உலகின் மிகச்சிறிய நாடு எது என்பது நம்மில் பாதி பேருக்கு தெரியாது. பரப்பளவில் 0.44 சதுர கிலோமீட்டர் அளவுடன் 1000க்கும் குறைவான மக்கள் தொகையுடன் கூடிய அந்த சிறிய நாட்டின் பெயர் - வாடிகன் சிட்டி. இப்போது நமக்கு நியாபகம் வருமே - வாடிகன் நகரம் பற்றியும், அங்கிருக்கும் உலகப்புகழ்பெற்ற தேவாலயம் பற்றியும், போப் ஆண்டவர் பற்றியும் நாம் அவ்வப்போது செய்திகளில் பார்த்திருப்போம். இந்த மொத்த நாட்டையும் சுற்றிப் பார்ப்பதற்கே மொத்தமாக 45 நிமிடங்கள் தான் ஆகிறது. சிறை இல்லாத ஒரே நாடு, முற்றிலும் ஒரே நாட்டால் சூழப்பட்டிருக்கும் நாடு என பல சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டிருக்கிறது கலை மற்றும் கட்டிடக்கலையின் தலைநகரம் வெறும் 44 ஹெக்டேர் பரப்பளவில், வாடிகன் நகரம் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் உள்ள கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகள் பழமையான எகிப்திய தூபி முதல் சிஸ்டைன் சேப்பலின் கூரையில் மைக்கேலேஞ்சலோவின் தலைசிறந்த 16 ஆம் நூற்றாண்டின் ஓவியங்கள் வரை ...