Skip to main content

Posts

Showing posts from September, 2023

செய்யாறு: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு!

செய்யாறு: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக  செயலாளருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் இருந்து வருகிறார் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் கட்சி நிர்வாக வசதிக்காக நான்காக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து வடக்கு மாவட்ட கழக செயலாளராக தூசி கே.மோகன்  செய்யாறு வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார் செய்யாறுக்கு வருகை தந்த வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகனுக்கு அதிமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக சென்று ஆரணி கூட்டுச் சாலையில்  எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது உடன் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் விமலா மகேந்திரன் நகர கழக செயலாளர் கே.வெங்கடேசன் அவைத்தலைவர் ஜனார்த்தனம் அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஒ...

ஆரணி தொகுதி அதிமுக சார்பில், புதிய மத்திய மாவட்ட செயலாளர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

ஆரணி தொகுதி அதிமுக சார்பில், புதிய மத்திய மாவட்ட செயலாளர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயசுதா ஜெயகாந்தன் மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும்,ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் ராமச்சந்திரனிடம் ஆசி பெற்றார் ஆரணி, போளூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களுடன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ தலைமையில், பெரும் பேரணியாக பட்டாசுகள் வெடித்தும் பேண்டு வாத்தியங்களுடன் சென்று பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந் நிகழ்வில், நகர கழக செயலாளர் அசோக்குமார் நகர மன்றத் துணை தலைவர் பாரிபாபு ஒன்றிய கழக செயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன் வழக்கறிஞர் சங்கர் ஜெயபிரகாஷ் அருகாவூர் அரங்கநாதன் அனக்காவூர் சி.துரை மு.எம்எல்ஏ குணசீலன் மற்றும் உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் தகவல் தொழில்நுட்ப பிரிவு எஸ்.ப...

வந்தவாசி: வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி அமைத்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம்

வந்தவாசி: வடக்கு மாவட்ட அதிமுக  பூத் கமிட்டி அமைத்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் ஆவின் வளாகத்தில் வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நடைபெறும் முதல் கூட்டமான இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமை வகித்தார் மாவட்ட கழக அவைத்தலைவர் டிகேபி மணி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் பி. ஜாகீர் உசேன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னாள் எம்எல்ஏ நளினி மனோகரன் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர் உடன் மாவட்ட துணைச்செயலாளர் டி.பி.துரை ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜ்கணேஷ் ஒன்றிய கழக செயலாளர்கள் எம் மகேந்திரன் சி.துரை அருகாவூர் அரங்கநாதன்  ஆரணி ஜெயபிரகாஷ் ஜி.வி.கஜேந்திரன் கலசபாக்கம் பொய்யாமொழி வெம்பாக்கம் திருமூலன் ...

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் அக்டோபர் 14 ம் தேதி சென்னையில் "மகளிர் உரிமை மாநாடு "

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் அக்டோபர் 14 ம் தேதி சென்னையில் "மகளிர் உரிமை மாநாடு "  கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக மகளிர் அணி மாநாடு அக்டோபர் 14 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது என திமுக துணை பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் துணை தலைவருமான கனிமொழி எம்.பி.அறிக்கை  வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அனைத்துத் துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் - பெண்ணுரிமைக்காகவும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் மகத்தான பணிகளை ஆற்றி உள்ளார். அவர்தான், அரசு வேலைவாய்ப்பிலும் - உள்ளாட்சித் தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்டவற்றை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முதலமைச்சராக இருந்து சட்டமாக்கினார். தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் 'திராவிட மாடல்' ஆட்சியின் வாயிலாக, "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்", "பெண்களுக்குக் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம்", "புதுமைப் பெண் திட்டம்", "மகளிர் சு...

பாஜகவுடன் இன்றைக்கும், என்றைக்கும் கூட்டணி இல்லை - அதிமுக

பாஜகவுடன் இன்றைக்கும், என்றைக்கும் கூட்டணி இல்லை - அதிமுக   இன்று முதல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக  விலகிக் கொள்கிறது என்று  தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த தீர்மானத்தை அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே அதிமுக - பாஜக தலைவர்களிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்தன.. பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொள்ளும் என தகவல்கள் வெளியான நிலையில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் வகையில் இன்று முதல் தேசிய ஜ...

கூட்டணி குறித்து முடிவு? நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கூட்டணி குறித்து முடிவு? நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்   பாஜக உடனான கூட்டணி முறிவு  விவகாரத்தால் அதிமுகவில் கடந்த சில நாட்களாவே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அக் கட்சியின் பொதுச் செயலாளர்  எடப்பாடி கே.பழனிசாமி நாளை அழைப்பு விடுத்துள்ளார். கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா குறித்த அண்ணாமலையின் கருத்தால் கொதித்து போன அதிமுக, அண்ணாமலையை கடுமையாக சாடியது. அதோடு, பாஜக கூட்டணியில் தற்போது அதிமுக இல்லை என்றும் தேர்தல் நெருங்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என ஒரேயடியாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்து பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தார். தற்போது அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது. இதன்பிறகு பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. தற்போது அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக நிர்பந்திப்பதாக கூறப்படுகி...

வந்தவாசி பகுதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள்

வந்தவாசி பகுதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது வந்தவாசி ஸ்ரீ.ரங்கநாதப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தேறியது. பெரிய காலனி பகுதி கலியுக வரத சீனிவாச பெருமாள் கோவிலில் மகா தீபாராதனை நடைபெற்றது. தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் மூல மூர்த்திகள் திருப்பதி ஏழுமலையான் பத்மாவதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.‌ மேல்பாதி விஜயராகவப் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தெள்ளார் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் விடியற்காலை சிறப்பு தரிசனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

வந்தவாசியில் விநாயகர் ஊர்வலம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

வந்தவாசியில் வெகு விமரிசையாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வந்தவாசி அங்காளம்மன் கோவில் திடலில் மாம்பட்டு சக்தி உபாசகர் அருட்சக்தி ஆறு.‌ லட்சுமணன் ஸ்வாமிகள் தொடங்கி வைத்த 40 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமானது தேரடி, பஜார் வீதி, அச்சரப்பாக்கம் சாலை வழியாக பூமாலை செட்டிக் குளத்திற்கு சென்று அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டது. முன்னதாக, பழைய பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார். வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முன்னிலையில், வந்தவாசி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செய்தியாளர்: பா.சீனிவாசன்

டெல்லி ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல் காந்தி எம்பி!

டெல்லி ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல் காந்தி எம்பி!  டெல்லி ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி  பயணிகளின் உடைமைகளை தூக்கிக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்தாண்டு பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர்களுடன் கலந்துரையாடிக் கொண்டே லாரியில் பயணம், திடீரென்று மார்க்கெட் பகுதிகளுக்கு சென்று வியாபாரிகளுடன் கலந்துரையாடல், கடலுக்குள் மீனவர்களுடன் சென்று மீன்பிடிப்பது, விவசாயிகளுடன் நாற்று நடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு மக்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார். தமிழகம் வந்த ராகுல், ஊட்டியில் தோடர் மக்களுடன் அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து உற்சாகமாக நடனமாடினார். இதுபோன்று நாட்டின் பல்வேறு கூலித் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து அவர்களின் வேலைகளை செய்து கொண்டே அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார். இந்த நிலையில், ராகுல் காந்தியை காண வேண்டும் என்று ட...

வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா வின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா வின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் பேரறிஞர் அண்ணா வின் 115 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தொகுதி அதிமுக சார்பில் நடைபெற்றது அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கே.பாஸ்கர் ரெட்டியார் தலைமையில்,நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்ட கழக அவைத்தலைவர் டிகேபி மணி எம்ஜிஆர் மன்ற அவைத்தலைவர் ஜெ பாலு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்கேஏ லோகேஷ்வரன் டிவி பச்சையப்பன் எஸ்.திருமூலன் முன்னிலை வகித்தனர் இந் நிகழ்வில், வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள்  சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே. மோகன் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் பி ஜாகீர் உசேன் முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் அன்பழகன் சிறப்புரையாற்றினர்  உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.மகேந்திரன் சி.துரை அருகாவூர் அரங்கநாதன்  வி.குணசீலன் மு. எம்எல்ஏ பெரணமல்லூர் ஜி.செல்வராஜ் ஆரணி ஜி.வி கஜேந்திரன் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு மாவட்ட துணைச்செயலாளர் விஎஸ்எஸ் லதாகு...

சென்னையில் வருமான வரித்துறை சோதனை!

சென்னையில் வருமான வரித்துறை சோதனை ! வருமான வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, சகோதரர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனையானது நடைபெறுவதாக கூறப்படுகிறது. சென்னையில் துரைப்பாக்கம் பள்ளிக்கரணை எண்ணூர் நாவலூர் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனையில் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், பொன்னேரி வெள்ளிவாயில் சாவடியில் உள்ள சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம், நாவலூரில் உள்ள டேட்டா பேட்டர்ன்ஸ் வருமான வரித்துறை சோதனை (இந்தியா) லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர், இயக்குநர்கள் வீடுகளிலும் சோதனையானது நடைபெறுகிறது. மேலும் அம...

வந்தவாசி: நூலகத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி!

வந்தவாசி: நூலகத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிளை நூலகத்தில் அறிஞர் அண்ணா - தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடைபெற்றது. நூலகர் ஜா. தமீம் தலைமை தாங்கினார். பூங்குயில் சிவக்குமார், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் எம்.பி.வெங்கடேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, மருதாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் எம்.கே.ஏ. லோகேஸ்வரன் பங்கேற்று சிறப்புரை ஆற்றி ஓவியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி ஆசிரியை வகிதா பேகம், ஜி. புண்ணியகோட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலக வாசகர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ர. பிரேமலதா நன்றி கூறினார்.

வந்தவாசி: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாசிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி!

வந்தவாசி: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாசிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான வாசித்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், எய்டு இந்தியா திட்ட மேலாளர் க.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி ஆசிரியை சாந்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் வந்தவாசி கிளை இயக்குநர் சு.தனசேகரன் பங்கேற்று வாசித்தல் திறன் பயிற்சி பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் பங்கேற்ற பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர்.

வந்தவாசியில் முத்தமிழ் சமூகநீதி பேரவை சார்பில் முப்பெரும் விழா!

வந்தவாசியில் முத்தமிழ் சமூகநீதி பேரவை சார்பில் முப்பெரும் விழா!  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் முத்தமிழ் சமூகநீதி பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் வி.எஸ்.தளபதி தலைமை தாங்கினார். எம்.எஸ்.டி.கார்த்திகேயன், நகர மன்றத் தலைவர் எச்.ஜலால், நகர திமுக செயலாளர் தயாளன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவை நிறுவனரும் , நகர மன்ற துணைத் தலைவருமான அன்னை க.சீனுவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் நா.முத்துவேலன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். சமூக நீதிக்காக பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் ஆற்றிய பணிகள் குறித்து விவரித்தார். மேலும் இந்த நிகழ்வில் கவிஞர்கள் தமிழ்ராசா, பா.சீனிவாசன், மு.பிரபாகரன், கு.சதானந்தன், வந்தை குமரன் உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர். எக்ஸ்னோரா தலைவர் மலர் சாதிக், ரமேஷ் கண்ணன், திமுக பிரமுகர்கள் எஸ். அன்சாரி, பிச்சைக்கண்ணு நகர மன்ற உறுப்பினர்கள் நாகூர்...

செய்யாறு: வெம்பாக்கம், பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் அண்ணா-பெரியார் பிறந்த நாள் விழா!

செய்யாறு: வெம்பாக்கம், பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் அண்ணா-பெரியார் பிறந்த நாள் விழா! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் அண்ணா பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது  இதை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந் நிகழ்வில் அரிமா சங்க மாவட்ட சேவை தலைவர் தி. வடிவேல் தலைமை வகித்தார். ஊர்புற நூலகர் ஜா. தமீம் அனைவரையும் வரவேற்றார். ஓய்வு ஆசிரியர் சாலை குப்புசாமி முன்னிலை வகித்தார். பேரறிஞர் அண்ணாவைப் பற்றி டி.ஜி. கணேசன் அக்னிச் சிறகுகள் லயன் சங்க பொருளாளர் சிறப்புரை ஆற்றினார்  "சமூக சீர்திருத்த கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார் எனவும் மூடநம்பிக்கை அறியாமை சுயமரியாதை கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற ஒழுக்க நெறியோடு கொள்கை பற்றாளனாய் வாழ்ந்தார்" என கூறினார். ஆசிரியர் கு. தியாகராஜன் பெரியாரைப் பற்றி சிறப்புரை ஆற்றினார். "பெரியார் சமூக சீர்திருத்தவாதி எனவும் தீண்டாமை ஒழிப்பு சாதி ஒழிப்பு போன்ற கொள்கையோடு மக்களிடையே சாதி பாகுபாடுகளை கலைய அரும்பாடுபட்டார்" எனக் கூறினார். ...

திருவண்ணாமலை: தமிழ்ச் செம்மல் விருது பெற அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்

திருவண்ணாமலை: தமிழ்ச் செம்மல் விருது பெற  அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தமிழ் வளா்ச்சிக்காக பாடுபடும் ஆா்வலா்களின் தமிழ்த் தொண்டை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் ‘தமிழ்ச் செம்மல் விருது’ 2015 முதல் தமிழ் வளா்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறையின் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதவிர, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்தும் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும் நபா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, நிழற்படங்கள்-2, ஆற்றிய தமிழ்ப் பணி ஆகிய விவரங்களுடன் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் அக்டோபா் 10...

வந்தவாசி: அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை, பூத் கமிட்டி,அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம்

வந்தவாசி: அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை, பூத் கமிட்டி,அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் ஆவின் வளாகத்தில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை, பூத் கமிட்டி அமைத்தல், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி கூட்டம், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின்  திருஉருவ சிலைக்கு மரியாதை செலுத்துதல் குறித்த அதிமுக  ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர்   இந் நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பன்னீர்செல்வம் நளினி மனோகரன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் எம்ஜிஆர் மன்ற மாநில  துணைச்செயலாளர் பி.ஜாகீர் உசேன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் துணைச்செயலாளர் விஎஸ்எஸ் லதாகுமார் ஒன்றிய கழக செயலாளர்கள் செய்யாறு எம்.மகேந்திரன் அனக்காவூர்...

நாளை முதல் தொடர் போராட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

நாளை முதல் தொடர் போராட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!  மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மத்திய பாஜக அரசு, மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்துகிறது. எனவே, பிரதமர் மோடி தலைமையிலான அரசே வெளியேறு என வலியுறுத்தி செப்.12, 13, 14 ஆகிய தினங்களில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார். அதாவது "மோடி அரசே வெளியேறு" என்ற முழக்கத்தை முன்வைத்து நாளை முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் நாளை முதல் 3 நாட்களுக்கு நூற்றுக்கணக்கான மையங்களில் நடக்கும் மறியல் போராட்டத்தில் பல்லாயிரம் பேர் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் சமீபத்தில் நடத்தியது. மணிப்பூர் பிரச்சனை, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அதானி விவகாரம், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்,...

வந்தவாசி: டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா!

வந்தவாசி: டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா கல்வி மைய வளாகத்தில் நடைபெற்றது வந்தவாசி வட்டத்தை சேர்ந்த தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.அனந்தராஜன், வந்தவாசி ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் பெ.செல்வராஜ், தேசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் கே.ஆனந்தன் ஆகிய மூன்று ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்விற்கு செய்யாறு சட்டப் பணிக்குழு ஆலோசகர் வி. விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வி.எல். ராஜன், பூங்குயில் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரும்,  தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியின் இயக்குநருமான எஸ். அப்பாண்டைராஜன் பங்கேற்று, ஆசிரியர் பணியின் மகத்தான செயல்பாடுகளை விளக்கி பேசினார். இந்த நிக...