Skip to main content

Posts

Showing posts from December, 2023

மோரணம்: அதிமுக 52 ம் ஆண்டு துவக்க விழா, கழக கொடியேற்றி, அன்னதானம் வழங்கப்பட்டது

மோரணம்: அதிமுக 52 ம் ஆண்டு துவக்க விழா, கழக கொடியேற்றி, அன்னதானம் வழங்கப்பட்டது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், 52 ம் ஆண்டு துவக்க விழா மோரணத்தில் நடைபெற்றது கழக கொடியேற்றி கல் வெட்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஒன்றிய கழக செயலாளர்கள் வயலூர் ராமநாதன் திருமூலன் (எ) பையாகுட்டி ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்புஅழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான வாலாஜாபாத் கணேசன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக கொடியேற்றி, கல் வெட்டு திறந்து வைத்தனர் இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.மகேந்திரன் சி.துரை அருகாவூர் அரங்கநாதன் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருள் மாவட்ட விவசாய அணி செயலாளர் நமண்டி பாலன்  மாவட்ட அமைப்புச்சாரா ஓட்டுனர் அணி செயலாளர் என்.ரகு மாவட்ட மா...

செய்யாறில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் 404 மனுக்கள் பெறப்பட்டது.

செய்யாறில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் 404 மனுக்கள் பெறப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 13, 16,19, 20, 21, 22 ஆகிய வாா்டு பகுதிகளுக்காக 3-ஆம் கட்ட ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் மண்டித்தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம் முகாமுக்கு, திருவத்திபுரம் நகரமன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா். செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், நகர கழக செயலாளா் கே.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையாளா் (பொ) கே.பி.குமரன் வரவேற்றாா். செய்யாறு கோட்டாட்சியர் பல்லவி வா்மா பங்கேற்று முகாமை துவக்கி வைத்தாா். இம் முகாமில், வாா்டு மக்களின் சாா்பில் வருவாய்த்துறைக்கு 286 மனுக்களும், மின்சாரத்துறைக்கு 38 மனுக்களும், நகராட்சிக்கு 43 மனுக்கள் உட்பட மொத்தம் 404 மனுக்கள் அளிக்கப்பட்டது. விழாவில், வட்டாட்சியா் முரளி, நகரமன்ற துணைத் தலைவா் பேபிராணி பாபு, ஓன்றிய குழு உறுப்பினா் வி.ஏ.ஞானவேல், முன்னாள் நகர மன்றத் தலைவா் ஏ.என்.சம்பத், ஒன்றிய கழக  செயலாளா்கள் ஜேசிகே.சீனிவாசன், எம்.தினகரன் ...

ஜனவரி 1-ந்தேதி முதல் சென்னை, புதுச்சேரி ஆகிய பாஸ்போர்ட் மையங்களில் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் - சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன்

ஜனவரி 1-ந்தேதி முதல் சென்னை, புதுச்சேரி ஆகிய பாஸ்போர்ட் மையங்களில் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் - சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு (2023) 5 லட்சம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2018-ம் ஆண்டு 4 லட்சத்து 83 ஆயிரம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பாக போலீஸ் நிலையத்தில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என காவல்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும். சென்னை நகரை பொறுத்தமட்டில் இந்த ஆய்வுக்கு 8 முதல் 10 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது 3 முதல் 4 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட 12 மாவட்டங்களில் இந்த ஆய்வுக்கு 14 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது 7 முதல் 8 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் சென்னை சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் செயல்படும் பாஸ்போர்ட் மைய...

செல்போன்களில் டார்ச்சை ஒளிரவிட்டபடி கேப்டன் விஜயகாந்துக்கு பிரியாவிடை

செல்போன்களில் டார்ச்சை ஒளிரவிட்டபடி கேப்டன் விஜயகாந்துக்கு பிரியாவிடை  சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் திரண்டுள்ள மக்கள் கூட்டம் செல்போன்களில் டார்ச்சை ஒளிரவிட்டபடி கேப்டன் விஜயகாந்துக்கு பிரியாவிடை அளித்தனர். தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் மதியம் 2.30 மணிவரை அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றப்பட்டது. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி இறுதி ஊர்வலமாக வந்தடைந்தது. வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க தமிழக...

மக்களே அலர்ட்..!! தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைகள் தீவிரம்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

மக்களே அலர்ட்..!! தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைகள் தீவிரம்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!! ம துரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு ஜேஎன் 1 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3 அலைகளாக பரவி பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, கடந்த ஓராண்டாக கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசியாவைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் ஜேஎன்1 வகை கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், புதிய வகை கொரோனா தொற்றாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை மறுத்த தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், பரிசோதனைகள் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றனர். இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன...

அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை:வழிகாட்டு நெறிமுறையை அறிவித்த எய்ம்ஸ்!

அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை:வழிகாட்டு நெறிமுறையை அறிவித்த எய்ம்ஸ்! நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் கொண்ட நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந் நிலையில், டெல்லியில் முதல் ஜேஎன்.1 திரிபு தொற்று நேற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், தீவிர சுவாசப் பிரச்சினை இருப்பவர்கள், 38 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு கிட்டத்தட்ட உடல் வெப்பத்துடன் காய்ச்சல் இருப்பவர்கள், கடந்த 10 நாட்களாக தொடர் இருமல் இருப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தென் கிழக்காசிய நாடுகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு உலக நாடுகளில் குளிா்காலம் தொடங்...

தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!! நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும், மகாராஷ்டிராவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனாவில் 90 சதவீதம் இந்த மாநிலங்களிலேயே பதிவாகி வருகிறது. இந்தியாவில் பதிவாகும் கொரோனா எண்ணிக்கைகளில் கேரளா மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. சுமார் 95 சதவீதம் கொரோனா தொற்று எண்ணிக்கை கேரளாவில் பதிவாகி வருகிறது. இதற்கிடையே, நோய் தொற்று வேகமாக பரவக்கூடிய ஜே.என்.1 என்ற கொரோனா இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 பேருக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இணை நோய்க்காக சிகிச்சை பெற வந்த போது அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஜே.என்.1 வகை தொற்று இருப்பது தெரியவந்து...

மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஜன.8-ல் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஜன.8-ல் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்! சென்னை: ‘பேரிடர் நிவாரண நிதி வழங்காத மத்திய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்க வலியுறுத்தியும் வரும் ஜன.8-ம் தேதி, தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த பெருமழையால் தலைநகர் சென்னையும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போனது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவித்த மக்களை பாதுகாக்கவும், மீட்டு மறுவாழ்வு தொடங்கவும் தமிழக அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட்டது. பேரிடர் நிவாரண உதவிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டிய மத்திய அரசு மாற்றாந்தாய் போக்கில் அலட்சியம் காட்டி வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் 18-ம் தேதி தென் தமிழகத்தில் பெய்த...

"எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணிக்கே வெற்றி திமுகவுக்கு இறங்கு முகம்"- இபிஎஸ்

"எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணிக்கே வெற்றி திமுகவுக்கு இறங்கு முகம்"- இபிஎஸ்  "அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். திமுகவுக்கு இறங்குமுகம் தொடங்கிவிட்டது.மக்களவைத் தேர்தலுக்கு முன் திமுக அமைச்சர்கள் பலர் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள்" என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் தொடங்கியது. எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆன பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் வரவேற்பு பேனர்கள் முதல் கூட்ட அரங்கு வரை எல்லாவற்றிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், "அதிமுக மாநாடு ஆகஸ்ட் மாதம் மதுரையே குலுங்கும் அளவுக்கு நடந்து முடிந்தது. எதிரிகள் அஞ்சுகின்ற அளவுக்கு நடந்த மதுரை மாநாட்டை பற்றி, உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசியிருக்கிறார். உதயநிதி சொன்னதில் இருந்து திமு...

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அதிமுக தீர்மானம்!

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அதிமுக தீர்மானம்! சென்னை: 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுகவுக்கும், பாஜகவுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய சமுதாயத்தினரின் கவனத்தை ஈர்த்துள்ளார் இஸ்லாமிய சிறைவாசிகள் முன் விடுதலைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயுள் சிறைவாசிகளின் தண்டணையை ரத்து செய்யவோ, குறைக்கவோ முழுமையாக அதிகாரத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. குற்றவியல் சட்டம் 432 அடிப்படையில் தண்டனை குறைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும். அதே நேரத்தில், அரசியல் சட்டப்பிரிவு 161ன் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு முன் விடுதலை செய்வதற்கு உரிமை உண்டு. இருபது ஆண்டுகள் சிறைவாசம் கழித்தவர்களை விடுதலை செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு முன் விடுதலை திட்டத்தை 1994ஆம் ஆண்டு கொண்டு வந்தது. மாநில அரசு தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி கருணை அடிப்படைய...

நாகூர் கந்தூரி விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகை!

நாகூர் கந்தூரி விழாவுக்கு தமிழக ஆளுநர்  ஆர்.என். ரவி வருகை! நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் தர்காவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார் உலக புகழ் பெற்ற நாகூர் தர்கா மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக திகழ்கிறது இங்கு ஹஜ்ரத் ஷாகுல்அமீது பாதுஷா நாயகத்தின் 467 வது சந்தனக்கூடு கந்தூரி வைபவம் நடைபெற்று வருகிறது இந் நிகழ்வில், பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் வருகை தந்தார் அவருக்கு தர்கா நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது ஆளுநர் ரவி, ஆண்டவர் சமாதியில் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா நிகழ்வில் பங்கேற்றார். பின்னர் தர்கா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், ''467 வது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாசாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழமை வாய்ந்த இந்த தர்கா பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று எழுதினார். இது தொடர்பான ஆளுநர் மாளிகை எக்ஸ் தள பதிவில், ``ஆளுநர் அவர்கள், நாகூர் தர்காவின் வ...

இந்தியாவில் புதிதாக 628 பேருக்கு கோவிட் பாதிப்பு; கேரளாவில் ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் புதிதாக 628 பேருக்கு கோவிட் பாதிப்பு; கேரளாவில் ஒருவர் உயிரிழப்பு   புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கேரளாவில் ஓர் உயிரிழப்பும் பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையே, மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் 20 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில், ஜேஎன்.1 வகை மாறுபாடு 5 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜேஎன்1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஒரேநாளில் புதிதாக 656 பேருக்கு கொரோனா தொ...

TN govt will allocate funds for renovation of places of worship:minister ks masthan

TN govt will allocate funds for renovation of places of worship:minister ks masthan  NAGAPATTINAM:  Mentioning ‘unity in diversity’ as an objective of the Dravidian model of governance, Minister for Minorities Welfare Gingee KS Masthan here on Sunday said the state government will allocate funds towards the renovation of old dargahs and churches. Addressing media persons after taking part in the 467th annual Kanduri festival of Nagore Dargah, the minister said, “An amount of Rs 2 crore was released and a further Rs 2 crore has been allocated towards Nagore Dargah’s renovation. Similarly, funds will be allocated for the renovation of old mosques, dargahs and churches in the state. The government also provides support for various pilgrimages.” While welcoming Governor RN Ravi’s visit to Nagore Dargah on Saturday, Masthan said, “We are only asking him to approve the bills passed by our government and not be an obstacle as we reach out to people. Hopefully, after the visit (on Sat...

Governor R.N. Ravi offers worship at Nagore Dargah, police foil attempt to stage black flag demo

Governor R.N. Ravi offers worship at Nagore Dargah, police foil attempt to stage black flag demo - the Hindu Police foil attempt to stage black flag demonstrations by political parties by detaining the protesters before the Governor’s convoy passes through Tiruvarur, Nagapattinam districts Tamil Nadu Governor R.N. Ravi on Saturday offered worship at Nagore Dargah in Nagapattinam district on the occasion of the ongoing two-week-long ‘Kanduri Urs’ festival. He offered worship at Dargah as the annual ‘Kanduri Urs’ festival is currently under way. The annual festival at Nagore started with the flag-hoisting at the shrine’s five minarets on December 14. The two-week-long festival commemorates the death anniversary of Saint Abdul Qadir and attracts followers from different faiths across the world. The festival will end with the lowering of the flags on December 27. Nagapattinam Collector Johny Tom Varghese, Superintendent of Police Harsh Singh and Dargah committee members accompanied the Gov...

செய்யாறு: திருவத்திபுரம் நகராட்சியில் 2 - ம் கட்ட "மக்களுடன் முதல்வர் "முகாம்!

செய்யாறு: திருவத்திபுரம்  நகராட்சியில் 2 - ம் கட்ட "மக்களுடன் முதல்வர் "முகாம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் 2-ஆம் கட்டமாக 7,10,14,15 ஆகிய வாா்டுகளுக்கு நடைபெற்ற " மக்களுடன் முதல்வர்" முகாமுக்கு, திருவத்திபுரம் நகரமன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை தாங்கினார் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்  ஒ.ஜோதி, கோட்டாட்சியர் பல்லவி வா்மா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையா் (பொ) கே.பி.குமரன் வரவேற்றாா். இதில், பொதுமக்கள் அளித்த 383 மனுக்களில் 9 மனுக்கள் உடனடியாக தீா்வு காணப்பட்டது. இந் நிகழ்வில், சிறப்பு விருந்தினா்களாக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், செய்யாறு சர்க்கரை ஆலை இயக்குனருமான,  எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோா் பங்கேற்று 9 பேருக்கு சான்றிதழ் வழங்கினா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷிணி, கூடுதல் ஆட்சியா் ரிஷப், வட்டாட்சியா் முரளி, நகரமன்ற துணைத் தலைவா் பேபி ராணி பாபு, ஒன்றியக்குழுத் தலைவா்கள் திலகவதி ராஜ்குமாா்(அனக்...

செய்யாறு: வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் கு.பிச்சாண்டி

செய்யாறு: வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் கு.பிச்சாண்டி  தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு தனியாா் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 37,247 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாக தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி நேற்று நடைபெற்ற விழாவில் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நேற்றைய தினம் நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் பாா்வதி சீனிவாசன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இயக்குனருமான எம்.எஸ்.தரணிவேந்தன் வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பா.அ.சையத் சுலைமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சென்னை மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) இர.தேவேந்திரன் வரவேற்றாா். முகாமில் சிறப்பு விருந்தினராக சட்டப் பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பங்கேற்று, தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது: "தமிழகத்தில் உள்ள இளைஞா்கள...

கோவிட் நோய் பலி எண்ணிக்கை 5,33,327! பீதியைக் கிளப்பும் கொரோனாவின் புதிய அவதாரம்

கோவிட் நோய் பலி எண்ணிக்கை 5,33,327! பீதியைக் கிளப்பும் கொரோனாவின் புதிய அவதாரம் இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள், ஜே.என். 1 துணை மாறுபாடு : கோவிட்-19 மேலாண்மைக்காக பிரத்யேக குழுவை அமைக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவெடுத்துள்ளது, நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. இந்தியாவில் 594 புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2,311 இலிருந்து 2,669 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர், கர்நாடகத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் பஞ்சாப்பைச் சேர்ந்த ஒருவர் - வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஆறு பேருடன் இறப்பு எண்ணிக்கை 5,33,327 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்-19 இன் JN.1 துணை மாறுபாடு கோவிட்-19 இன் JN.1 துணை மாறுபாடு பரவுவது, நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பரவல் குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும், மக்களுக்கு அச்சம் வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டாலும், இந்தியாவில் கோவிட் 19 பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. JN.1 என்பது 'பைரோலா' வகை BA 2.86...

குஜராத்: 1400 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல்!

குஜராத்: 1400 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல்! குஜராத்தில் பாவ்நகரின் கோகா கிராமத்தில் சுமார் 1400 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் இன்றும் உள்ளது, அதன் கிப்லா அணுகுமுறை பைத்துல் முகதஸைப் பற்றியது…  இந்த பள்ளிவாசளின் கட்டுமானம் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது, பள்ளிவாசலுக்குள் சுமார் 25 பேர் ஒன்றாக தொழுகை நடத்த முடியும்.  பள்ளிவாசலில் 12 தூண்கள் உள்ளன, அதன்மேல் பள்ளிவாசலின் கூரை கட்டப்பட்டுள்ளது, கூரைக்கு மேலே குவிமாடம் மற்றும் பள்ளிவாசலின் சுவர்களும் செதுக்கப்பட்டு பள்ளிவாசல் உள்ளது.  அரபியில் 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹிம்' செதுக்கப்பட்டுள்ளது  ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில், பைத்துல் முகதஸை எதிர்கொள்ளும் பூமியின் முகத்தில் உள்ள ஒரே பள்ளிவாசலாகவும் இது இருக்கலாம், முதல் அரபு வர்த்தகர்கள் இங்கு கடல் வழியாக இறங்கினர், பின்னர் அவர்கள் இந்த பள்ளிவாசலை இங்கே கட்டியுள்ளனர்.    இந்த பழங்கால பள்ளிவாசல் "ஜூனி மஸ்ஜித்" என்று அழைக்கப்படுகிறது.  இந்த பள்ளிவாசல் இந்தியாவின் மற்ற அனைத்து பள்ளிவாசல்களையும் ஒத்திருக்கிறது, அதன் வளைவுகள் மக்காவை ...

உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தினால் தகுதி இழப்பு இருக்காது! பொன்முடிக்காக களமிறங்கிய என்.ஆர்.இளங்கோ

உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தினால் தகுதி இழப்பு இருக்காது! பொன்முடிக்காக களமிறங்கிய என்.ஆர்.இளங்கோ பொன்முடிக்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முழுவீச்சில் களமிறங்கியிருக்கிறார் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ. இதனிடையே பொன்முடிக்கு இன்று வழங்கப்பட்ட தண்டனை குறித்து அண்ணா அறிவாலயத்தில் என்.ஆர்.இளங்கோ நடத்திய செய்தியாளர் சந்திப்பில்  கூறியதாவது; ''2006 - 2011 ஆம் ஆண்டு காலத்தில் பொன்முடி அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் எண்ணத்தோடு தொடரப்பட்ட வழக்கில் கீழ் நீதிமன்றத்தில் விடுதலை கிடைத்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் , விசாரனை நிறைவு பெற்று கீழமை நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ரத்து செய்து குற்றவாளி என்று தீர்ப்பளித்து, தண்டனை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை வருட பழைய வழக்கு என்பதாலும், வயோதிக காரணத்தாலும் , கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது அதை உயர்நீதிமன்றம் மாற்றி எழுதியுள்ளது போன்ற காரணங்களால் 3 வருட சாதாரண சிறை தண்டனையும் , தலா 50 லட்சும் ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது...

"இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள்"- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

"இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள்"- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி எம்எல்ஏ-வின் தந்தை அண்மையில் காலமானார். இதனையடுத்து, துக்கம் விசாரிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் உள்ள கே.பி முனுசாமியின் இல்லத்திற்கு இன்று வருகை புரிந்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:- "சென்னையில் ஏற்பட்ட மழை - வெள்ளத்தால் அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தமிழக முதல்வருக்கு நிர்வாகம் எவ்வாறு செய்வது என தெரிகிறதா என தெரியவில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால் அவர் செயல்பட்டிருப்பார். தமிழகத்தில் ஊழல் செய்வதுதான் திமுகவின் சாதனையாக உள்ளது. இன்னும் தமிழக அமைச்சர்கள் பலர், நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள் பருவ மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழக அரசுக்கு பலத்த மழை குறித்து தகவல் தெரிவித்தது. தமிழக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டது. பருவ மழை குறித்து, தமிழக அரசு மக்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ...

"முதல்வரின் நோக்கத்தை புரிந்து அலுவலர்கள் செயல்பட வேண்டும்" - மாவட்ட ஆட்சியர்

"முதல்வரின் நோக்கத்தை புரிந்து அலுவலர்கள் செயல்பட வேண்டும்" - மாவட்ட ஆட்சியர்  "மக்களின் பிரச்சனையை தீர்க்கவே  முகாம் என்பதனை புரிந்து கொண்டு முதல்வரின் நோக்கத்தை நிறைவேற்ற அலுவலர்கள் செயல்பட வேண்டும்" என வந்தவாசியில் நடந்த "மக்களுடன் முதல்வர்" முகாமில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் எச்சரிக்கை செய்தார். வந்தவாசி நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாம் ஆரணி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இம் முகாமிற்கு சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் தலைமை தாங்கினார். நகர மன்றத் தலைவர் தலைவர் எச். ஜலால், துணைத் தலைவர் க.சீனிவாசன், தெள்ளார் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே.ஆர்.சீதாபதி,  ஆணையாளர் என். மகேஸ்வரி, மேலாளர் ஜி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்களுடன் முதல்வர் திட்ட அலுவலர் ஜெ. ராமகிருஷ்ணன் வரவேற்றார். முகாமினை செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம் எஸ் தரணி வேந்தன் துவக்கிவைத்து பேசினார். இதனைத் தொடர்ந்து பிற்பகல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் முகாம் நடக்கும் பகுதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது இ சேவை மையம் முகப்பில...

சென்னை: 4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 புயல் நிவாரண தொகையை இன்றே பெற்றுக் கொள்ள லாம்..!!

சென்னை: 4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 புயல் நிவாரண தொகையை இன்றே பெற்றுக் கொள்ள லாம்..!!  சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 புயல் நிவாரண தொகையை இன்றே பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல இடங்களில் கடந்த 3, 4ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இந்த மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ரூ.6,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, சென்னை மாவட்டம் முழுவதும், மற்ற 3 மாவட்டங்களில் மழை பாதித்த தாலுகாக்களில் மட்டும் ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது வெள்ள நிவாரண நிதி ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது. 'மிக்ஜாம்' புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 17ம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைத்தார். இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 ப...

புதுடெல்லி: நள்ளிரவில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

புதுடெல்லி: நள்ளிரவில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்! தமிழ்நாடு வெள்ள பாதிப்புகளுக்கான நிரந்தர தீர்வு பணிகளுக்கு 12 ஆயிரத்து 659 கோடி நிதி வழங்க வேண்டும் என, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, மிக்ஜம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்து, அப்பாதிப்புகளை சீரமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கோரிக்கை மனுவினை அளித்தார். மிக்ஜம் புயல் கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்தும், புய...

தூத்துக்குடியில் வடியாத வெள்ளத்தில் மக்கள் பரிதவிப்பு - மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்!

தூத்துக்குடியில் வடியாத வெள்ளத்தில் மக்கள் பரிதவிப்பு - மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்! வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி- திருநெல்வேலி, தூத்துக்குடி- திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடித்த வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதி கனமழை பெய்தது. கடந்த சனிக்கிழமை காலை முதல் திங்கட்கிழமை மதியம் வரை இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையால் தூத்துக்குடி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.மேலும், தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் குளம் உள்ளிட்ட சில குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அந்தத் தண்ணீரும் தூத்துக்குடி நகருக்குள் புகுந்தது. இதனால் தூத்துக்குடி நகரமே வெள்ளக்காடாக மாற...

செய்யாறு: கரந்தை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.28 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம்!

செய்யாறு: கரந்தை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.28 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம்!  செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியம் கரந்தை கிராமத்தில், ஊராட்சித் துறை சாா்பில் குழந்தை நேயபள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட நிதி மூலம் ரூ.28 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் தலைமை வகித்தாா். வெம்பாக்கம் ஒன்றிய குழுத் தலைவா் த.ராஜி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி புதிய பள்ளிக் கட்டடத்தை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களுடன் இனிப்பு வழங்கினாா். முன்னதாக, வெம்பாக்கம் மத்திய ஒன்றியம், ஆலந்தாங்கல் கிராமத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினாா் சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி இந் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம் ஊராட்சிக் குழு உறு...

ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கியுள்ள ரயில் பயணிகள் நாளை மீட்கப்படுவர் - ரயில்வே நிர்வாகம்

தமிழக வரலாற்றில் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச கனமழை! திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 14 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருசெந்தூரில் 679 மி.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 618 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. தமிழக வரலாற்றில் சமவெளிப் பகுதிகளில் பெய்த அதிகபட்ச கனமழை இது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழக வரலாற்றில் நீலகிரி மாவட்டம் கக்காச்சி என்ற பகுதியில் 1992-ஆம் ஆண்டில் 24 மணிநேரத்தில் 965 மி.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, மண் அரிப்பால் தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுவிட்ட நிலையில், தண்டவாளம் எந்த பிடிமான...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ரூ. 1000 ஜனவரி முதல் கூடுதல் பெண்களுக்கு!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ரூ. 1000 ஜனவரி முதல் கூடுதல் பெண்களுக்கு!  சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வரும் டிசம்பர் மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்காக வரும் ஜனவரியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-3-2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது. மகளிர் உரிமை திட்டம்: தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு ச...

வெள்ள நிவாரணம் ரூ.6,000 பெற்ற மக்கள்: "துயர் நீக்கும் பயணம் தொடரும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெள்ள நிவாரணம் ரூ.6,000 பெற்ற மக்கள்: "துயர் நீக்கும் பயணம் தொடரும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்    ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும் என்று தெரிவித்துள்ளார் சமீபத்தில் சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கிட்டதட்ட 24 மணி நேரம் தொடர்ச்சியாக சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் சென்னையின் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் சென்னை வாழ் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இன்னும் சென்னையின் பிற பகுதிகளில் வெள்ளம் வடியாத  நிலையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து வட்டங்களில் வசிப்பவர்களுக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படவுள்ளது...

மீண்டும் கொரோனா! வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மீண்டும் கொரோனா! வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்    கொரோனாவின் அடுத்த வேரியண்ட் பரவி வரும் சூழலில், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார் கடந்த 2020ஆம் ஆண்டு உலக நாடுகளை பந்தாடிய கொரோனா தொற்றை யாராலும் எளிதாக மறக்க முடியாது. 2020 மார்ச் மாதம் தொடங்கி, பல மாதங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது கொரோனா. சில மாதங்களுக்குப் பிறகு கொரோனாவின் அடுத்த வேரியண்ட் வந்து, பரவல் அதிகமானது. பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் அளிக்கப்பட்டதன் மூலம், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. உலகெங்கும் கொரோனா தொற்று 90% குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும், கொரோனா தொற்று ஆங்காங்கே உருமாறி பரவி வரவே செய்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.அங்கு, கடந்த சில நாட்களில் சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக...