Skip to main content

Posts

Showing posts from December, 2024

செய்யாறு:வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் அரசுக் கட்டிடங்கள் எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தார்

செய்யாறு:வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் அரசுக் கட்டிடங்கள் எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தார் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியத்தில் ராந்தம், நாயன்தாங்கல், வடமணப்பாக்கம், கொடையம்பாக்கம், செய்யனூா் ஆகிய கிராமங்களில் ரூ.86.70 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசுக் கட்டிடங்கள்  திறந்துவைக்கப்பட்டன. வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சோ்ந்த ராந்தம் கிராமம் துரைராஜ் நகரில் ஊராட்சித் துறை சாா்பில் 2024 - 25ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி மாநில நிதிக் குழு மானியம் மூலம் ரூ.10.11 லட்சத்தில் புதிய நியாய விலை கடைக் கட்டடம், நாயந்தாங்கல் கிராமத்தில் 2023 - 24 ஆம் ஆண்டு திட்டத்தின் மூலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.32.80 லட்சத்தில் கட்டப்பட்ட இரு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம், வடமணப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.17.79 லட்சத்தில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம், கொடையம்பாக்கம் கிராமத்தில் 2024 - 25ஆம் ஆண்டு திட்டத்தின் மூலம் ரூ.16.55 லட்சத்தில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம், செய்யனூா் கிராமத்தில் இதே திட்டத்...

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா: கண்ணாடி இழை நடைபாலம் முதல் லேசர் ஒளிக்காட்சி வரை சிறப்பம்சங்கள்!

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா: கண்ணாடி இழை நடைபாலம் முதல் லேசர் ஒளிக்காட்சி வரை சிறப்பம்சங்கள்! கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கடல் நடுவே விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தையும் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இந்த சிலையை அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை நிறுவி வரும் 1-ம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி, தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் நேற்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதன் சிறப்பம்சமாக, திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில், ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்துக்கு கண்ணாடி இழை நடைபாலம் அமைக்கப்பட்டுள...

டெல்லியில் திமுக ஆட்சிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஏபிவிபி! மாணவர்கள் கைது!

டெல்லியில் திமுக ஆட்சிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்  ஏபிவிபி! மாணவர்கள் கைது! சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனின் ஏபிவிபி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகம் விளங்குகிறது. பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகம் சென்னை கிண்டியில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்திலேயே விடுதியும் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர் இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலை...

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரும் விழா!

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு வந்தவாசி  கிளை நூலகத்தில் முப்பெரும் விழா! கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு வந்தவாசி கிளை நூலகத்தில் திருவள்ளுவர் படம் திறப்பு விழா, மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள், குறள் காட்டும் பாதை உரையரங்கம் உள்ளிட்ட 'முப்பெரும் விழா' நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கிளை நூலகர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார்.  தலைமை ஆசிரியர் க.வாசு, எக்ஸ்னோரா கிளை இயக்குநர் சு.தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் புலவர் மா.மங்கையர்க்கரசி பங்கேற்று, திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து, 'குறள் காட்டும் பாதை' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், வழக்கறிஞர் மணி, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி, தலைமை ஆசிரியர்கள் ஆ.சித்ரா, டி.ஆ...

காஞ்சிபுரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு! முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது!

காஞ்சிபுரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு! முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது! கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன இதைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  அறிவித்திருந்தார் அதைத் தொடர்ந்து யார் அந்த சார் ? என கோஷங்கள் எழுப்பி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், யார் அந்த சார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுகவினர் போராட்டத்தில், ஈடுபட உள்ளதாக எடப்பாடி கே பழனிசாமி அறிவித்திருந்தார். இந் நிலையில் இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில், அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செ...

திருவண்ணாமலை: ஆட்சி மொழிச் சட்ட விழிப்புணர்வுப் பேரணி!

திருவண்ணாமலை: ஆட்சி மொழிச் சட்ட விழிப்புணர்வுப் பேரணி! திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக ஆட்சி மொழிச் சட்ட விழிப்புணர்வுப் பேரணி நடைப்பெற்றது பேரணிக்கு திருநெல்வேலி மாவட்ட மண்டல தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட உதவி இயக்குனர் சுந்தர் தலைமை வகித்தார் திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன்  முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கோட்டாட்சியர் மந்தாகினி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் திருக்குறள் தொண்டுமையப் பாவலர் ப.குப்பன் தமிழா தமிழா என்னும் கவிதைத் தொகுப்பினைப் பாடி கோட்டாட்சியரிடம் அளித்தார்  பேராசிரியர் பிரேம்குமார் தலைமையில் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் வைத்திடுக, வைத்திடுக, தமிழில் பெயர் வைத்திடுக, போன்ற முழக்கங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டனர் உதவியாளர் கவிதா நன்றி கூறினார்

மலைவாழ் மக்களுக்கு இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவை: அமைச்சர்கள் எ.வ.வேலு மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்

திருவண்ணாமலை: மலைவாழ் மக்களுக்கு இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவை: அமைச்சர்கள் எ.வ.வேலு  மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்  திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவையை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோா் தொடங்கி வைத்தனா். ஜமுனாமுத்தூா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவக் கட்டடங்கள் திறப்பு மற்றும் பல்வேறு துறைகள் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோா் கலந்து கொண்டு, போக்குவரத்து வசதியற்ற மலைக் கிராமங்களில் வாழும் பழங்குடியினா் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைக்கு ரூ.1.60 கோடி செலவில் 25 இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவையைத் தொடங்கிவைத்தனா். மேலும், ரூ.14 லட்சத்தில் 20 நடமாடும் மருத்துவ வாகனங்களும், ரத்தப் பரிசோதனைக்கான பகுப்பாய்வு கருவிகளும் வழங்கினா். இதைத் தொடா்ந்து, அத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில...

சமூகநீதி திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்? - எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக்

சமூகநீதி திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்? - எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் தாடி வைத்திருந்த விவகாரத்தில் முஸ்லிம் காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சமூகநீதி திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்?என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மதுரையை சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் என்ற முதல்நிலை காவலர், பணியின் போது தாடி வைத்திருந்ததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் விதமாக, வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானாது. இதனை ஒருகுற்றமாக கருதி முதல்நிலை காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் காவல் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தாடி வைத்ததற்காகவும், அதனை முறையிட்ட...

"தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" - கே.பாலகிருஷ்ணன்

"தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" - கே.பாலகிருஷ்ணன் தமிழ்நாட்டில் அனுதினமும் தலித் கொடுமைகள் நிகழ்வதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். பகுத்தறிவு பகலவன் என கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, அவரது உருவசிலைக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி செய்து வருகின்றன. ஆனாலும் கூட, இந்தியாவிலேயே அதிக ஆணவக் கொலை நிகழும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. தலித் மக்களுக்கு அனுதினமும் கொடுமைகள் இழைக்கக் கூடிய மாநிலமாக தமிழ...

கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் தரவேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி

கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் தரவேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி சென்னை: கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் தரவேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், கோவிட் காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் தரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசு தரமறுக்கிறது. இம்மாதம் வெளிவந்துள்ள ஒன்றிய அரசின் நாளிதழில் இதழில் மூத்த குடிமக்கள் 63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன் வந்து ரயில் பயணசலுகையை விட்டுக்கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர். பறிக்கப்பட்டதை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? இந்த 63 லட்சம் பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? நான் நாடாளுமன்றத்தில் 2021 – 2024 மற்றும் 2025 நிதியாண்டின் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் எத்தனை முறை மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளார்கள், மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை திரும்ப பெற்றதன் மூலம் இதே காலகட்டத்தில் ஒன்றிய அரச...

செய்யாறு வெம்பாக்கம் ஒன்றியத்தில், 2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

செய்யாறு வெம்பாக்கம் ஒன்றியத்தில், 2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம், அழிவிடைதாங்கியில் 2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில்  புதிய கட்டடங்களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு நேற்று வழங்கினாா். இவ் விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். ஆரணி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன்,  செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, ஒன்றியக் குழு பெருந்தலைவர் டி.ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் வரவேற்றாா். இதில் அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று, வெம்பாக்கம் ஊராட்சியில் மாநில நிதிக் குழு மானியத்திட்டம் 2023-24 (மாவட்ட ஊராட்சி) திட்டத்தின் கீழ் ரூ. 70 லட்சத்தில் கட்டப்பட்ட கலைஞா் நூற்றாண்டு நிறைவு வணிக வளாகக் கட்டடம், அதனைத் தொடா்ந்து செய்யாறு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 30 லட்ச...

வன்னியர் இடஒதுக்கீடு: பாமக நாளை போராட்டம் விழுப்புரத்தில் ராமதாஸ், காஞ்சியில் அன்புமணி பங்கேற்பு!

வன்னியர் இடஒதுக்கீடு: பாமக நாளை போராட்டம் விழுப்புரத்தில் ராமதாஸ், காஞ்சியில் அன்புமணி பங்கேற்பு! சென்னை: தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நாளை (டிசம்பர் 24) போராட்டம் நடத்த உள்ளது. விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்கிறார். காஞ்சிபுரத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பாமக தலைமை நிலையம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து வரும் 24-ந் தேதியுடன் 1000 நாட்கள் ஆகும் நிலையில், இன்று வரை வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதைக் கண்டித்தும், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் டிசம்பர் 24-ந் தேதி காலை 10.00 மணிக்கு விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வ...

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வந்தவாசி கோட்டம் சார்பில்,தேசிய மின் சிக்கன வாரம்!

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வந்தவாசி கோட்டம் சார்பில்,தேசிய மின் சிக்கன வாரம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் தேசிய மின் சிக்கன வாரம் கொண்டாடப்பட்டது வந்தவாசி கோட்டம் சார்பில்,இன்று மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது வந்தவாசி செயற்பொறியாளர் வே.சரவண தங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, வந்தவாசி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் நகர மன்றத் தலைவர் எச்.ஜலால்  ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர் உடன் உதவி செயற்பொறியாளர்கள் தி.நாராயணன்,ரா.ஜெகன்நாதன்,சு.சசிகுமார் மற்றும்   உதவி பொறியாளர்கள்,மின் வாரிய ஊழியர்கள்,எ.எ.பி.நர்சிங் கல்லூரி மாணவ,மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர். மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்தும் பதாகைகள் ஏந்தியும், கோஷமிட்டும் பேரணியில் சென்றனர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர் பேரணி கோட்டை மூலையில் புறப்பட்டு பழைய பேருந்து நிலையம்,பஜார் வீதி,தேரடி வழியாக புதிய பேருந்து...

மக்களைத் தேடி மருத்துவம்: 2 கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருத்துவ பெட்டகம்!

மக்களைத் தேடி மருத்துவம்: 2 கோடியே ஒன்றாவது  பயனாளிக்கு மருத்துவ பெட்டகம்! ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியே ஒன்றாவது  பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று ஈரோட்டிற்கு வருகைத் தந்தபோது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளி நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தராம்பாள் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். தொடர்ந்து, இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தா இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டு, சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்...

மஞ்சப் பை பயன்பாட்டை வலியுறுத்தி ஜோதி எம்எல்ஏ தலைமையில் மாணவ,மாணவியருக்கு விழிப்புணர்வு!

மஞ்சப் பை பயன்பாட்டை வலியுறுத்தி ஜோதி எம்எல்ஏ தலைமையில் மாணவ,மாணவியருக்கு விழிப்புணர்வு! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியம் சித்தாத்தூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் மாணவ,மாணவியருக்கு மஞ்சப் பை பயன்பாட்டை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றியக் குழு பெருந்தலைவர் டி.ராஜி தலைமையில், நடைபெற்றது முன்னதாக இறை வணக்க கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்  தெ.பாஸ்கரபாண்டியன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பார்வதி சீனிவாசன் கோட்டாச்சியர் பல்லவிவர்மா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக  கலந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து  மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மஞ்சப்பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்  இந் நிகழ்ச்சியின் போது மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜேசிகே சீனிவாசன்,மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்  

அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: அமித்ஷாவுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: அமித்ஷாவுக்கு அரசியல் கட்சிகள்  கண்டனம் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, 'இந்த காலத்தில் அம்பேத்கர் என கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பதிலாக, பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்' எனக் கூறினார். அமித்ஷாவின் இந்த பேச்சு அரசியல் களம் மட்டுமல்லாது நாட்டு மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந் நிலையில், அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 'அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.' என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இரு...

மீண்டும் சாம்சங் நிறுவனத்தில் வெடித்த போராட்டம்! தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

மீண்டும் சாம்சங் நிறுவனத்தில் வெடித்த போராட்டம்! தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி ஸ்ரீ பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் ஆலை தொழிலாளர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் கடந்த செப்டம்பர் மாதம் 30 நாட்களுக்கும் மேலாக ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த, பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டு அக்டோபர் 14 ஆம் தேதி முதல் வழக்கம் போல தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் போராட்டத்தில் இருந்து பணிக்கு திரும்பிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஆலைக்கு உள்ளே முந்தைய பணி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதேபோல, சி.ஐ.டி.யு., தொழிலாளர்களை குறிவைத்து, ஒழுங்கு நடவடிக்கையை மீறியதாக 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளது. அதேபோல நிர்வாகம் உருவாக்கியுள்ள இன்டர்னல் யூனியனில் இணைய, தொழிலாளர்களை வற்புறுத்தி உள்ளது. தொடர்ந்து, தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ...

கடலோர மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கடலோர மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவாகும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக திங்கட்கிழமை (டிச.16) உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், டிச.17,18 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக திங்கட்கிழமை (டிச.16) வலுப்பெறும். இது மேலும் வலுப்பெற்று, டிச.18-ஆம் தேதிக்கு மேல் மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் திங்கட்கிழமை (டிச.16) முதல் டிச.21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை எச்சரிக்கை: இதில், சென்னை தொடங்கி புதுக்கோட்...

காா்த்திகை மாத பௌா்ணமி: திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம்

காா்த்திகை மாத பௌா்ணமி: திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம் கார்த்திகை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) காலை வரை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா். காா்த்திகை மாத பௌா்ணமி சனிக்கிழமை (டிசம்பா் 14) மாலை 4.17 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) பிற்பகல் 3.13 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இந்த நிகழ்வைக் காண வந்த பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். இவா்கள் தொடா்ந்து, சனிக்கிழமை காலை முதல் மாலை வரை கிரிவலம் வந்தபடியே இருந்தனா். மாலை 4.17 மணிக்கு பௌா்ணமி தொடங்கியதும் கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை வரை திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா். இவா்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலை ஆதி அருணாசல...

ஆரஞ்சு அலர்ட்... வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை!

ஆரஞ்சு அலர்ட்... வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை! த மிழ்நாட்டில் டிசம்பர் 18 ஆம் தேதி 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது.தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (15.12.2024) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். இதனிடையே, நேற்று லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (14.12.2024) அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும். இன்று 14.12.2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், ...

வந்தவாசி: கடைசி குளம் ஊராட்சி பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா!

வந்தவாசி: கடைசி குளம் ஊராட்சி பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கடைசி குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதியாரின் 143 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் பங்கேற்ற பேச்சு போட்டிகள், கவிதை போட்டிகள், பாடல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி பாய் தலைமை தாங்கினார். ஆசிரியை அனுசுயா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் பங்கேற்று, பாரதியும் பைந்தமிழும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

"இரண்டாம் நிலை குடிமக்களாக்கப்படும் இஸ்லாமியர்கள்!" - அகிலேஷ்

"இரண்டாம் நிலை குடிமக்களாக்கப்படும் இஸ்லாமியர்கள்!" -  அகிலேஷ் இந்திய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த நவம்பர் 25ஆம் நாள் தொடங்கி சுமார் மூன்று வாரங்களாக நடந்து வருகிறது.எனினும், நாடாளுமன்றத்தில் சரியான விவாதமோ அல்லது ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளோ இடம்பெற்றுள்ளனவா? என்றால் இல்லை என்பதே விடையாக அமைந்துள்ளது. காரணம், இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் விவாதம் வேண்டும் என முன்வைத்த, மணிப்பூர் வன்முறை, அதானி ஊழல், ஃபெஞ்சல் புயல் நிவாரண ஒதுக்கீடு என எவற்றுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு பதிலளிக்கவில்லை இதனால், எதிர்க்கட்சிகளின் இடையூறு தான் காரணம் என குற்றச்சாட்டு வைத்து, நாடாளுமன்ற இரு அவைகளையும் முழுமையாக ஒத்திவைத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. இந்நிலையில், இன்றைய (டிசம்பர் 13) நாடாளுமன்றத்தில்,  இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆவது ஆண்டு தொடங்கியதையொட்டி, அது குறித்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், "இந்திய அரசியலமைப்பு தான் இந்திய மக்களின் பாதுகாப்பு அரண். ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அடக்குமுறைக்கு ஆளானவர்களுக்கும் உரிமை...

24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை மிக தீவிரம் - பாலச்சந்திரன்

 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை மிக தீவிரம் - பாலச்சந்திரன் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 4 இடங்களில் மிக கனமழையும், 72 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறையும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் இன்று (டிச.12) செய்தியாளர்களைச் சந்தித்தபோது: 'கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 4 இடங்களில் மிக கனமழையும், 72 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், வட மற்றும் த...