வந்தவாசி:அமையப்பட்டு,தாழம்பள்ளம் ஈத்கா களில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அமையப்பட்டு ஈத்ஹா மைதானத்தில் ஈகைத் திருநாள் பக்ரீத் தொழுகை அனைத்து ஜமாஅத் சார்பாக நடைபெற்றது சிறப்பு தொழுகையை பயான் சொற்பொழிவுடன் இமாம் சிராஜுதீன் பாகவி நடத்தி வைத்தார். இதில் பெரிய பள்ளிவாசல் பட்டேல் ஷா மீரா பொருளாளர் அப்துல் மஜீத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மாவட்ட தலைவர் டி.எம். பீர் முகமது முன்னிலையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் அனைத்து ஜமாஅத் சார்பாக 3000 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நகர மன்ற தலைவர் எச்.ஜலால், நகர மன்ற உறுப்பினர்கள் நாகூர் மீரான், அப்துல் கரீம், பள்ளிவாசல் முத்தவல்லிகள் உமர் பாய், ஜானி பாஷா, பாபு, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். வந்தவாசி: தாழம்பள்ளம் ஈத்ஹா மைதானத்தில் ஈகைத் திரு நாள்,பக்ரீத் தொழுகை வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் மஸ்ஜிதே அக்ஸா பள்ளி நிர்வாகத்துக்கு உட்பட்ட ஈத்ஹா மைதானத்தில் ஈகைத் திருநாள், பக்ரீத் சிறப்பு தொழுகை அக்ஸா பள்ளி தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடைபெற்றது இமாம் ஆஸிக் இலாஹி யூசுபி பயான...