Skip to main content

Posts

Showing posts from June, 2023

வந்தவாசி:அமையப்பட்டு,தாழம்பள்ளம் ஈத்கா களில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை

வந்தவாசி:அமையப்பட்டு,தாழம்பள்ளம் ஈத்கா களில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அமையப்பட்டு ஈத்ஹா மைதானத்தில் ஈகைத் திருநாள் பக்ரீத் தொழுகை அனைத்து ஜமாஅத் சார்பாக நடைபெற்றது சிறப்பு தொழுகையை பயான் சொற்பொழிவுடன் இமாம் சிராஜுதீன் பாகவி நடத்தி வைத்தார். இதில் பெரிய பள்ளிவாசல் பட்டேல் ஷா மீரா பொருளாளர் அப்துல் மஜீத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மாவட்ட தலைவர் டி.எம். பீர் முகமது முன்னிலையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் அனைத்து ஜமாஅத் சார்பாக 3000 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நகர மன்ற தலைவர் எச்.ஜலால், நகர மன்ற உறுப்பினர்கள் நாகூர் மீரான், அப்துல் கரீம், பள்ளிவாசல் முத்தவல்லிகள் உமர் பாய், ஜானி பாஷா, பாபு, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். வந்தவாசி: தாழம்பள்ளம் ஈத்ஹா மைதானத்தில் ஈகைத் திரு நாள்,பக்ரீத் தொழுகை  வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம்   மஸ்ஜிதே அக்ஸா பள்ளி நிர்வாகத்துக்கு உட்பட்ட ஈத்ஹா மைதானத்தில் ஈகைத் திருநாள், பக்ரீத் சிறப்பு தொழுகை அக்ஸா பள்ளி தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடைபெற்றது இமாம் ஆஸிக் இலாஹி யூசுபி பயான...

மோடியிடம் கேள்வி: அமெரிக்க பெண் பத்திரிகையாளருக்கு டார்ச்சர்! வெள்ளை மாளிகை கண்டனம்

மோடியிடம் கேள்வி: அமெரிக்க பெண் பத்திரிகையாளருக்கு டார்ச்சர்! வெள்ளை மாளிகை கண்டனம் அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறுபான்மையினர் குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க பெண் பத்திரிகையாளரை துன்புறுத்தும் நடவடிக்கைக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. பெண் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கிக்கு எதிரான துன்புறுத்தல்கள், 'மிக மோசமான ஆன்லைன் துன்புறுத்தல்' என்றும் வெள்ளை மாளிகை தனது கண்டனத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள்கள் அமெரிக்க பயணத்தின்போது, ஜூன் 22ஆம் தேதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, வெள்ளை மாளிகைக்கான வால் ஸ்ட்ரீட் இதழின் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கி, இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இந் நிலையில், சிறுபான்மையினர் குறித்து கேள்வி எழுப்பியிருந்த பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கியை, சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாக துன்புறுத்தும் நடவடிக்கைகள் நிகழ்த்தி வருவதையொட்டி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தி...

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரி போராட்டம் : மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரி போராட்டம் : மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு 2024 ல் நடைபெற உள்ள தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். சர்வாதிகாரம் வீழ்த்தப்பட வேண்டும் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் ஜூலை 9 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 37 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும்  ஜூலை 9 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த அறிவிப்பை தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பொது மன்னிப்பு வழங்க  வேண்டும். மேலும் நேற்று...

மத்திய அரசின் 20% மின்சார கட்டண உயர்வு தமிழக மின்நுகர்வோருக்கு பாதிப்பு இல்லை!

மத்திய அரசின் 20% மின்சார கட்டண உயர்வு தமிழக மின்நுகர்வோருக்கு பாதிப்பு இல்லை! மின் உற்பத்தி பகிர்மான கழகம் விளக்கம் மின்சாரம் அதிகமாக பயன்படும் நேரங்களில், மின் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் மின்நுகர்வோருக்கு பாதிப்பு இல்லை என்று மின் உற்பத்தி பகிர்மான கழகம் விளக்கம் அளித்து இருக்கிறது. நாடு முழுவதும் நேரத்துக்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு அமல்படுத்த இருக்கிறது. பொதுவாக தற்போது மின்சாரத்தை ஒரு நாளின் எந்த நேரத்தில் பயன்படுத்தினாலும் ஒரே விதமான கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் மாற்றம் வருகிறது. அதன்படி மின்சாரத்தை மிக அதிக அளவில் பயன்படுத்துகிற நேரத்துக்கு அதிக கட்டணமும், குறைவான அளவில் பயன்படுத்துகிற நேரத்துக்கு இயல்பை விட குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படும். அதற்கு ஏற்ற வகையில், தற்போது நடைமுறையில் இருந்து வரும் மின்கட்டண பட்டியலில் 2 மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 1. நேரத்துக்கு ஏற்றபடி மின் கட்டணம் வசூலிப்பதற்கான ‘டைம் ஆப் டே’ கட்டணமுறை. 2. ஸ்மார்ட் மீட்டர் விதிமுறைகளை எளிதாக்...

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி, ஹால்டிக்கெட் அருவி அறக்கட்டளை நிறுவனர் ரூபன் வழங்கினார்

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி, ஹால்டிக்கெட் அருவி அறக்கட்டளை நிறுவனர் ரூபன் வழங்கினார்   திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 44  மாணவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் அந்த மாணவர்களுக்கான  அரசின் உடனடி மறு தேர்வு  வரும் செவ்வாய்க்கிழமை 27ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற உள்ளது. அத்தகைய சூழலில் தேர்வு எழுதவுள்ள, தோல்வி அடைந்த மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கப்பட்டது. இந் நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். எய்டு இந்தியா திட்ட மேற்பார்வையாளர் க‌.  முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி அருவி அறக்கட்டளை நிறுவனர் ஏ.ஜெ. ரூபன் பங்கேற்று பேசினார். "தோல்வியே வெற்றிக்கு அடிப்படை. எனவே பல்வேறு காரணங்களால் கடந்த தேர்வில்  தோல்வியடைந்த நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று மிகச் சிறந்த சாதனை மாணவர்களாக திகழ்வீர்கள்" என்று வாழ்த்தி பேசினார். மேலும் அவர்களுக்கான தேர்வுக்கூ...

தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் - முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி

தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் - முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி    சேலம் மாவட்டம் எடப்பாடி வடக்கு ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி அம்மன் கோயில் பகுதியில் அதிமுக கொடியை முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி ஏற்றி வைத்தார். அப்போது பேசிய அவர்; "தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் இருந்தாலும் எடப்பாடி தொகுதிக்கு என்று தனிப்பெருமை உண்டு. ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை சிந்தாமல் சிதறாமல் செய்து முடித்தேன். ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 52 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ படிப்பு சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீட்டால் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் 100 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். உலகத்தில் எந்தப் பகுதிக்கு சென்றாலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள் என்று கூறும் அளவிற்கு இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்தார்கள். தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான்" இவ்வாறு கூறினார். ...

வந்தவாசி: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம்

வந்தவாசி: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம்   சிறுபான்மையின மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி விட்டதாக புகாா் தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் வந்தவாசி கோட்டை மூலையில் நேற்று கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கா.யாசா்அராபத் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமாா், தையல் கலைத் தொழிலாளா்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.வீரபத்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் பா.செல்வன், விவசாயிகள் சங்க நிா்வாகி பெ.அரிதாசு ஆகியோா் கண்டன உரையாற்றினர் சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் அ.அப்துல்காதா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் சுகுமாா் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

வந்தவாசி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா பயிற்சி!

வந்தவாசி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா பயிற்சி!  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன்மை மருத்துவ அலுவலர் காளிசெல்வம் தலைமையில், சர்வதேச யோகா தின பயிற்சி அளிக்கப்பட்டது இந் நிகழ்வில், யோகா பயிற்சி மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி மருத்துவர் காளிசெல்வம் விளக்கினார் இதில் மருத்துவர் ரேவதி தேவி மருந்தாளுனர் குணசீலன் ஸ்டெல்லா உள்ளிட்ட செவிலியர்கள், நோயாளிகள் கலந்து கொண்டனர்

தி.மலை: விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

தி.மலை: விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!  திருவண்ணாமலையில் வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பாக, திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரே  நடைபெற்றது திருவண்ணாமலை  மாவட்ட கழக செயலாளர்கள் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ (தெற்கு)  தூசி கே.மோகன் (வடக்கு) தலைமையில் நடைபெற்ற இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர் தொடர்ந்து விடியா திமுக அரசின் அவலநிலை யை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன முன்னதாக இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 2000 பேருக்கு மேற்பட்டோர் பங்கேற்பது என வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே. மோகன்  முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நேற்று முன்தினம்  நடைபெற்ற  ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து ஆரணி செய்யாறு கலசபாக்கம் வந்தவாசி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலிருந்து 150 வாகனங்கள் மூலம் 2000 பேருக்கு மேற்பட்டோர் புறப்பட்டு ...

நாகூர் தர்கா: அமைச்சர் செஞ்சி மஸ்தான் கள ஆய்வு!

நாகூர் தர்கா: அமைச்சர் செஞ்சி மஸ்தான் கள ஆய்வு!   நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் (ரலி) வருடாந்திர உருஸ் நடைபெற்று வருகிறது. இந்த வைபவத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் கலீபா சாஹிப் அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நாகூர் தர்கா சின்ன ஆண்டகை கந்தூரி விழாவில் கலந்து கொண்டு அனைத்து மக்களு க்காகவும், தமிழக முதல்வருக்காகவும் பிரார்த்தனை (துவா) செய்தார். தர்கா மானேஜிங் டிரஸ்டி பாத்திஹா ஓதினார். பின்னர் தமிழக அரசு நாகூர் தர்காவுக்கு வழங்கிய பெருமராமத்து பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார். தர்கா முழுவதும் மேலும் மராமத்து பணி தேவைபடும் இடங்களை பார்வையிட்டார். தமிழக அரசு தொடர்ச்சியாக நாகூர் தர்காவிற்க்கு மராமத்து உதவிகள் செய்யும் என கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அரசு நல திட்ட உதவிகளை பற்றி விளக்கினார். தர்காவில் நடைபெற்ற இரவு மவுலூத் மஜ்லீஸில் கலந்து கொண்டார். நாகூர் தர்கா நிர்வாகம் சார்பாக  அமைச்சர் செஞ்சி ...

வந்தவாசி: பாஜக மக்கள் தொடர்பு பேரியக்கம் - 2023 பட்டியல் அணி மாவட்ட மாநாடு

வந்தவாசி: பாஜக மக்கள் தொடர்பு பேரியக்கம் - 2023 பட்டியல் அணி மாவட்ட மாநாடு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் பாஜக மக்கள் தொடர்பு பேரியக்கம்-2023 பட்டியல் அணிகளின் 7 அணிகளின் மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் முனைவர் எ.முத்து தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் சி.ஏழுமலை மாநில செயற்குழு உறுப்பினர்கள் சா.சா.வெங்கடேசன் ஏழுமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் இந் நிகழ்வில்,மாநில செயற்குழு உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் மாவட்ட பொதுச்செயலாளர் பி. முத்துசாமி மாவட்ட செயலாளர் வி. குருலிங்கம் சிறுபான்மை அணி தங்கராஜ் மண்டல தலைவர்கள் ஆர்.சுரேஷ் என். நவநீதி டி.பாண்டுரங்கன் மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிகள் சரண்ராஜ் கே.பாக்கியராஜ் எம்.அலெக்சாண்டர் சுரேஷ் அமரேசன் ஏழுமலை உதயகுமார் செல்வம் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் மாவட்ட பொருளாளர் எஸ்.ரங்கநாதன் நன்றியுரை ஆற்றினார்

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு இது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- நில சீர்திருத்த ஆணையராக இருந்த பீலா ராஜேஷ், தமிழ்நாடு எரிசக்தித் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரித்துறை இணைஆணையராக இருந்த வீர் பிரதாப் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக விஜயா ராணி நியமிக்கப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் நலத்துறை ஆணையராக ஆசியா மரியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை இணை செயலாளராக இருந்த சந்திர குமார் சக்காமுரியை, சேலம் பட்டு வளர்ச்சித்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போன்று , நகர்ப்புற கட்டமைப்பு நிதிச் சேவை மேலாண் இயக்குனராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடையாறு - கூவம் மறுசீரமைப்பு திட்ட அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டான்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்க...

செந்தில் பாலாஜி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல் முறையீடு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல் முறையீடு   தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையின்போது நெஞ்சு வலி ஏற்பட்டு ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இதய நாளங்களில் மூன்று அடைப்புகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாள்களில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனர...

வெம்பாக்கம்: வெள்ளக்குளம் அதிமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம்

வெம்பாக்கம்: வெள்ளக்குளம் அதிமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம் வெள்ளக்குளம் கிராமத்தில் ஒன்றிய கழக செயலாளர் திருமூலன்(எ) பையாகுட்டி தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை பூர்த்தி செய்தனர் வெள்ளக்குளம் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் இளம்பெண்கள் ஆர்வத்துடன் தங்களது பெயர்களை பதிவு செய்தனர் இந் நிகழ்வில், செய்யாறு ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.மகேந்திரன் அருகாவூர் அரங்கநாதன் அனக்காவூர் சி.துரை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு செய்யாறு கழக அவைத்தலைவர் ஜனார்த்தனம் நகர கழக செயலாளர் கே.வெங்கடேசன் உள்ளிட்டோர்  பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் முன்னிலையில் தங்களை அதிமுக வில் இணைத்துக்...

செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு  இதுதொடர்பாக காணொளி வாயிலாக இன்று ஆஜரான செந்தில்பாலாஜி, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதால் காவல் வழங்கினால் உடல்நிலை பாதிக்கப்படும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே அவரிடம் அமலாக்கத்துறை விசாரிக்கலாம் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், விசாரணைக்குப் பிறகு செந்தில் பாலாஜியை வரும் 23 ஆம் தேதி காணொளி வாயிலாக ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவையும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறையினா் அமைச்சா் செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி புதன்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென...

வந்தவாசி:ஆசியன் இன்ஸ்டிடியூட் சார்பில் உலக இரத்த கொடையாளர் தின கல்வி கருத்தரங்கம்!

வந்தவாசி:ஆசியன் இன்ஸ்டிடியூட் சார்பில் உலக இரத்த கொடையாளர் தின கல்வி கருத்தரங்கம்! ஆசியன் இன்ஸ்டிடியூட் சார்பில் உலக இரத்த கொடையாளர் தினம்  வந்தவாசி முகம்மது இஸ்மாயில் நினைவு அறக்கட்டளை சார்பில், நிறுவனர் பீ.ரகமத்துல்லா தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில், இரத்த கொடையாளர்களை பாராட்டி,  இந்தியன் ரெட்கிராஸ் சங்க வந்தவாசி கிளை துணைத் தலைவர்  இரா.சரவணன் சிறப்புரையாற்றினார்   இதில் இரத்ததானம் குறித்து இந்தியன் ரெட்கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன், நல்லூர் சுகாதார ஆய்வாளர் கே.சேகர் விளக்கயுரையாற்றினர். இந்நிகழ்வில், கவிஞர் தமிழ்ராசா, பயிற்றுநர்கள் ஜாய் ஜான்சிராணி, வினோதினி, ஜீனத் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள்,அன்பால் அறம் செய்வோம் தன்னார்வ குழுவினர்கள் கலந்து கொண்டனர்.        நிறைவாக,முகம்மது இஸ்மாயில் நினைவு அறக்கட்டளை தாளாளர் ஆசியா பர்வீன் நன்றி கூறினார்.

அமமுக - ஓபிஎஸ் இணைப்பால் 14 மக்களவைத் தொகுதிகளில் வலுவாகியுள்ளோம் - டிடிவி தினகரன்

அமமுக - ஓபிஎஸ் இணைப்பால் 14 மக்களவைத் தொகுதிகளில் வலுவாகியுள்ளோம் - டிடிவி தினகரன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:- 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த தலைமைப் பதவியை கபளீகரம் செய்து விட்டனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவோடு அதிமுகவிற்கு சமாதி கட்டி விட்டனர். அமமுக - ஓபிஎஸ் கூட்டணி என்பது இயற்கையாக அமைந்த கூட்டணி. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றுபட்டால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று அமைந்த கூட்டணி. இந்த கூட்டணியால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 14 மக்களவைத் தொகுதிகளில் மிகவும் வலுவாகி விட்டோம். இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க உத்வேகம் பெற்றுள்ளோம். அனைத்து பகுதிகளிலும் இரு இயக்கங்களின் தொண்டர்கள் இணைந்துள்ளனர். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒருகுடையின் கீழ் ஒருங்கிணையும் போது திமுக ஆட்சியை அகற்ற முடியும். ஒருசில சுயநலவாதிகளை அப்புறப்படுத்தி விட்டு, ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம்.' என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

பொது இடங்களில் குப்பையை கொட்டுபவர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.2,500 பரிசு - கேரள அரசு

பொது இடங்களில் குப்பையை கொட்டுபவர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.2,500 பரிசு - கேரள அரசு கேரளாவில் பொது இடங்கள், ஆறு உள்பட நீர்நிலைகளில் குப்பையை கொட்ட அரசு தடை விதித்து உள்ளது. ஆனாலும் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் குப்பை, கழிவுகளை கண்ட இடங்களிலும் சிலர் கொட்டிச் செல்கின்றனர். இந்த நிலையில், கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குப்பை, கழிவுகளை பொது இடங்களிலோ அல்லது ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளிலோ போடுபவர்கள் பற்றி புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்களுடன் உள்ளாட்சித்துறை அலுவலகங்களின் செயலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், தகவல் தரும் நபர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். குப்பை கொட்டுபவருக்கு அபராதமாக விதிக்கப்படும் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2500 வரை தகவல் தருபவருக்கு பரிசாக வழங்கப்படும். இதற்கான வாட்ஸ்அப் எண்கள், மெயில் ஐ.டி. ஆகியவை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக விளம்பரப்படுத்தப்படும். பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவோருக்கு குறைந்தது ரூ.250 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை போடுவோருக்கு ரூ.5 ஆயிரம் முத...

தண்டராம்பட்டு அரூர் வரை ரூ.120 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

தண்டராம்பட்டு அரூர் வரை ரூ.120 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை ரூ.120 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது இதனை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை - அரூர் சாலையில் தமிழக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை அருகிலுள்ள கீழ்செட்டிப்பட்டு முதல் தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் வரை 13.8 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.120 கோடி மதிப்பில் இருவழி சாலையை 4 வழி சாலையாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் அந்த பகுதியில் தென்பெண்ணையாற்றில் குறுக்கே கொளமஞ்சனூரில் பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந் நிலையில் இன்று தானிப்பாடியில் இருவழி சாலையை 4 வழி சாலையாக மாற்றி அமைக்கும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தென்பெண்ணையாற்றில் பாலம் அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம் சாலையின் தரம் மற்றும் பணியின் விவரங்கள் கு...

செய்யாறு: முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஒ.ஜோதி துவக்கி வைத்தார்

செய்யாறு: முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஒ.ஜோதி துவக்கி வைத்தார்  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு  அடுத்த அனக்காவூர் மேற்கு ஒன்றியம்  எச்சூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2023 - 2024   மலைவையாவூர் திருப்பதி தாங்கல்  தார் சாலை ரூபாய் ஒரு கோடியே 11 லட்சத்து 18000 மதிப்பீட்டில்  அமைக்கும்  பணியினை    செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்  ஒ.ஜோதி துவக்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந் நிகழ்வில்,அனக்காவூர் ஒன்றியக் குழு தலைவர்  திலகவதி ராஜ்குமார்,ஒன்றிய கழக செயலாளர்கள் ரவிக்குமார்,திராவிட முருகன்,ஞானவேல், மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வசந்தி ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்  செல்வகுமார், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்  

செய்யாறு: தென் இலுப்பை ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலய கும்பாபிஷேகம் எம்எல்ஏ ஜோதி அன்னையை வழிபட்டார்

செய்யாறு: தென் இலுப்பை ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலய கும்பாபிஷேகம் எம்எல்ஏ ஜோதி அன்னையை வழிபட்டார் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தென் இலுப்பை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ரேணுகாம்பாள் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது காலை 5 மணி இரண்டாம் கால யாக சாலை பூஜை வேத பாராயணம்,மூல மந்திர ஹோமம் நடைபெற்றது 7.45 க்கு பூர்ணாஹூதி 8 க்கு கலச புறப்பாடு 8.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலந்து கொண்டு அன்னை யை வழிப்பட்டார் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அன்னையை வழிப்பட்டனர் இந் நிகழ்வில், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் ஒன்றிய திமுக செயலாளர் திராவிட முருகன் கிளை கழக செயலாளர் பி.ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்  

காயிதே மில்லத் 128 வது பிறந்த தினத்தையொட்டி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு!

காயிதே மில்லத் 128 வது பிறந்த தினத்தையொட்டி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்  காயிதே மில்லத் அவர்களின் 128-வது  பிறந்தநாள் கல்வி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு  நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை  கே.ஏ.வகாப் திருமண மண்டபத்தில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மாவட்ட தலைவர் டி.எம்.பீர் முகமது தலைமையில் நடைபெற்றது. வந்தவாசி பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஆதம் மௌலானா துவா ஓதி துவங்கி வைத்தார். மாவட்டத் துணைத் தலைவர்கள் ஏ. அப்துல் வகாப், காதர் ஒலி, ஹபிபுல்லா, முன்னாள் நிர்வாகி அக்பர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஜே.மன்சூர் அலி வரவேற்பு உரையாற்றினார். இந் நிகழ்வில், அப்துல் காதர், இமாம் இஸ்மாயில்,உள்ளிட்ட  மாவட்ட, நகர நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். 100  மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது. நகர துணைத் தலைவர் அப்துல் வாகித் நன்றி உரையாற்றினார்.

ஆரணி: கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ சேவூர் எஸ் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

ஆரணி: கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ சேவூர் எஸ் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் ஆரணி வடக்கு ஒன்றியம் S.U.வனம் -மேலேரி- சோமந்தாங்கல் செல்லும் வழி கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் பெயரில் ரூபாய் 64- லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியினை முன்னாள் அமைச்சர்,சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்எல்ஏ   பூமி பூஜை செய்து விழாவை துவக்கி வைத்தார். உடன் ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார், ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன்,உள்ளிட்ட ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஆரணி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அம்பேத்கர் நகர் சிமெண்ட் சாலைக்கு பூமி பூஜை!

ஆரணி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அம்பேத்கர் நகர் சிமெண்ட் சாலைக்கு பூமி பூஜை! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் ரூ. 5-லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பக்ககால்வாய் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழாவை முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டுக் குழு உறுப்பினரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் இந் நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் கொளத்தூர் பி.திருமால்,ஜெயபிரகாஷ்  கண்ணமங்கலம் பேரூராட்சி கழக செயலாளர் எம்.பாண்டியன், ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சூழல் மாசு தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு!

வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சூழல் மாசு தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு!  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர், கல்லூரி மாணவிகளுக்கு மற்றும் நோயாளிகளுக்கு சுற்றுச்சூழல் எவ்வாறு மாசுபடுகிறது என்பதனை யும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் விளக்கப்பட்டது வந்தவாசி நகர மன்ற உறுப்பினர் ராம ஜெயம்தலைமையில்,முதன்மை மருத்துவ அலுவலர் காளிசெல்வம் மருத்துவர் ரேவதி தேவி முன்னிலையில், சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுக்கபட்டது அருகில் உள்ள பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டது இந் நிகழ்வில், சுகாதார ஆய்வாளர் வினோத் மருந்தாளுனர் குணசீலன் செவிலியர் காயத்ரி ஆகியோர்  கலந்து கொண்டனர்