Skip to main content

Posts

Showing posts from October, 2023

செய்யாறு: வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், இளைஞர் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

செய்யாறு: வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், இளைஞர் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில், ஆராத்தி வேலூர்,ஏனாதவாடி ஆகிய கிராமங்களில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூத் கமிட்டி பொறுப்பாளருமான வாலாஜாபாத் கணேசன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர் வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் சி.துரை அருகாவூர் அரங்கநாதன் வயலூர் ராமநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யாறு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் செய்திருந்தார்  

ஸ்ரீ இராமாநுசரின் 1006 ஆவது பிறந்த நாள் விழாவில் வைணவச் செம்மல் விருது வழங்கப்பட்டது

ஸ்ரீ இராமாநுசரின் 1006 ஆவது பிறந்த நாள் விழாவில் வைணவச் செம்மல் விருது வழங்கப்பட்டது திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வீனஸ் வித்யாலயா பள்ளியில் பூங்குயில் பதிப்பகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் ஸ்ரீ இராமாநுசரின் 1006 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மறைந்த கலைமாமணி முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் நினைவு வைணவச் செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந் நிகழ்விற்கு ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். டாக்டர் மாதவன், திருமலை திருப்பதி தேவஸ்தான திருப்பாவை சொற்பொழிவாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொளி மணியன் பங்கேற்று இராமாநுசரின் பார்வையில் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் நெய்வேலி தாய் தொண்டு மைய நிறுவனர் ராசி ஜெகதீஸ்வரன் இராமாநுசரின் வாழ்வும் பணியும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். தலைமை ஆசிரியர் வாசு, மலர் சாதிக், அன்னை சீனுவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர்கள் தனசேகரன், சதானந்தன், வந...

செய்யாறு: அனக்காவூா் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!

செய்யாறு: அனக்காவூா் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த  ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது   வெங்கோடு, பையூா், ஆகிய கிராமங்களில் நடைபெற்ற  வாக்குச்சாவடி குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தேர்தல் பொறுப்பாளருமான வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார் ஒன்றிய கழக செயலாளர்கள் சி.துரை முன்னாள் எம்எல்ஏ குணசீலன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் மாவட்ட கழக பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில், " புரட்சித் தமிழர் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும். வருகிற நாடாளுமன்ற தோ்தலில் நாற்பது இடங்களிலும் அதிமுக வெற்றி பெறுவதற்கு அதிமுக நிா்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்" என வேண்டுகோள்...

பெரணமல்லூர்: அதிமுக பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மகளிரணி ஆலோசனை கூட்டம்!

பெரணமல்லூர்: அதிமுக பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மகளிரணி ஆலோசனை கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணமல்லூரில் அதிமுக பூத் கமிட்டி அமைத்தல் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மகளிரணி ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார் ஒன்றிய கழக செயலாளர் ஜி.செல்வராஜ் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளர் ஏ.கே.எஸ்.அன்பழகன் மு.எம்எல்ஏ மாவட்ட கழக அவைத்தலைவர் டிகேபி மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் அனக்காவூர் சி.துரை தெள்ளார் டி.வி.பச்சையப்பன் நகர கழக செயலாளர் ஆர்.மூர்த்தி துணைச்செயலாளர் ஏ.கே.எஸ்.அறிவழகன்(எ) ஜவகர் மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன் அமான் பாஷா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்  

தெள்ளார்: அ.தி.மு.க. பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை,மகளிரணி ஆலோசனை கூட்டம்

வந்தவாசி: அ.தி.மு.க. பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை,மகளிரணி ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர், மழையூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மகளிரணி  ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில், கழக அமைப்புச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார் உடன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான  ஏ.கே.எஸ்.அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் டிகேபி மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் ஒன்றிய கழக  செயலாளர்கள் டி.வி.பச்சையப்பன், தனசேகரன் அனக்காவூர் சி.துரை பெரணமல்லூர் ஜி.செல்வராஜ் உள்ளிட்டோர்  

வந்தவாசி: இளைஞர் இளம்பெண்கள் பாசறை, பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!

வந்தவாசி: இளைஞர் இளம்பெண்கள் பாசறை, பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மகளிரணி சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில், பிருதூர்,வழூர்,வங்காரம்,கீழ்சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக,முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தேர்தல் பொறுப்பாளருமான, வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார் மாவட்ட கழக அவைத்தலைவர் டிகேபி மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளர் ஏ.கே.எஸ்.அன்பழகன் மு.எம்எல்ஏ  முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட கழக  துணைச்செயலாளர் வி.எஸ்.எஸ்.லதாகுமார் மாவட்ட கழக பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன்  ஒன்றிய கழக செயலாளர்கள் எம்கேஏ லோகேஷ்வரன் அர்ச்சுனன் வெண்குன்றம் முனுசாமி  தெள்ளார் டி.வி.பச்சையப்பன் அனக்காவூர் சி.துரை வெம்பாக்கம் வயலூர் ராமநாதன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நமண்டி பாலன் உக்...

பா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ்.தவிர அனைவரும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு; கோவையில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ்.தவிர அனைவரும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு; கோவையில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் காசா உட்பட பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. அப்பாவி பொதுமக்கள்,குழந்தைகள் பலியாகி வர கூடிய நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந் நிலையில் கோவையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், ஜமாஅத் கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்பொழுது இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது எனவும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தனது செயல்பாடுகளை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டது. பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை தவிரஅனைத்து தரப்பினரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை பீக் ஹவரில் ஊர்வலம் ச...

6.5 டன் மருந்து, 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள்: மனிதாபிமான உதவிகளை காசாவுக்கு அனுப்பியது இந்தியா

6.5 டன் மருந்து, 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள்: மனிதாபிமான உதவிகளை காசாவுக்கு அனுப்பியது இந்தியா புதுடெல்லி: இஸ்ரேல்- ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும்நிலையில், உயிர் காக்கும் மனிதாபிமான உதவிப் பொருள்களை காசாவுக்கு அனுப்பி வைத்தது இந்தியா. உலக நாடுகள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தையாக மாறியிருக்கிறது ஹாமாஸ்- இஸ்ரேல் போர். இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் தீக்கிரையாகியிருக்கிறது காசா பகுதி. பிஞ்சுக் குழந்தைகள் தொடங்கி வயதில் முதிர்ந்தவர்கள் வரை அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்குச் சீனா, ஈரான், சிரியா, லெபனான் முதலான நாடுகளும், இஸ்ரேலுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளித்திருக்கின்றன. இந்த நிலையில், இந்தியப் பிரதமர் மோடி, தன்னுடைய எக்ஸ் தளத்தில், “இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் இஸ்ரேலின் பக்கம் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்’’ என்று இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, சில தினங்களுக்குப் பிறகு பாலஸ்தீன அதிபர...

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்! தமிழக அரசே ஏற்றுக்கொண்ட பிறகு ஆளுநருக்கு என்ன வந்தது? - துரை வைகோ

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்! தமிழக அரசே ஏற்றுக்கொண்ட பிறகு ஆளுநருக்கு என்ன வந்தது? - துரை வைகோ சென்னை: சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முடிவை தமிழக அரசே ஏற்றுக்கொண்ட பிறகு ஆளுநருக்கு என்ன வந்தது? என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் ரவி தவறான போக்கில் செல்வதாகவும் இதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது; சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் அரசியல் தலைவருமான அய்யா என்.சங்கரய்யா அவர்களுக்கு, மதுரை காமராசர் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் வழங்க முடிவு செய்திருந்த கோப்பில், ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுத்த செய்தி அனைவரின் பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விடுதலைக்கு பின்பு மூன்று ஆண்டுகள் தலைமறைவு போராட்ட வாழ்க்கையால் கல்லூரிக் கல்வி பாதிப்பு என பல்வேறு தியாகங்களைச் செய்த 101 வயது நிரம்பிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அய்யா சங்கரய்யா அவர்களை தமிழ்நாடு அரசின் ம...

என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் - ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா

என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் - ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா   சென்னை: என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்து, ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்த நூறு வயதைக் கடந்தவர் தோழர் சங்கரய்யா.தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர் மாணவத் தலைவர், சிறந்த பொதுவுடமை சிந்தனையாளர், சிறந்த சட்டமன்ற உறுப்பினருமான என். சங்கரய்யா அவர்களின் ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக 18.08.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (Syndicate) கூட்டத்தில் அவருக்குக் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் 20.09.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் எதிர்வரும் பட்டமளிப...

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!!

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!! புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னையில் எழுந்த புகாரில் கண்டித்தும் மாறாததால் அமைச்சர் பணியை சரியாக செய்யவில்லை என கூறி அவரை டிஸ்மிஸ் செய்து என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த காரைக்கால் எம்எல்ஏ திருமுருகனை புதிய அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று கடந்த 8ம் தேதி ஆளுநர் தமிழிசையை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பரிந்துரை கடிதம் வழங்கினார். இதையறிந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கும், முதல்வருக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், இதுவரை சந்திர பிரியங்கா டிஸ்மிஸ் செய்யப்பட்டாரா? ராஜினாமா ஏற்கப்பட்டதா? என்பதை ஆளுநரும், முதல்வரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. வழக்கமாக அமைச்சர் பதவி நீக்கமோ அல்லது இலாகா மாற்றமோ இருந்தால் முதல்வர், கவர்னருக்கு கடிதம் அளித்து ஒரு சில மணி நேரங்களில் அதற்கான அரசாணை வெளியிடப்படும். 13 நாட்களாகியு...

தமிழகத்தின் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் மறுக்கும் ஆளுநர்! சிபிஐ(எம்) கடும் கண்டனம்!

தமிழகத்தின் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் மறுக்கும் ஆளுநர்! சிபிஐ(எம்) கடும் கண்டனம்! தமிழ்நாட்டின் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரான என்.சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். படிப்பை தொடர்வதா, விடுதலைப் போராட்டத்தில் சிறைக்கு செல்வதா என்ற கேள்வி எழுந்தபோது விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்வதையே தேர்வு செய்தார் ; அதனால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்மூலம் பல்கலை கழக தேர்வு எழுதுகிற வாய்பையும் இழந்து படிப்பையும் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.                 தோழர் என்.சங்கரய்யா விடுதலைப் போராட்ட களத்திலும், இன்றுவரை அரசியல் களத்திலும் மக்கள் நலனை முன்னிறுத்தி போராடி வரும் ஆளுமையாவார். அவரின் மகத்தான தியாக வரலாற்றை இந்தியாவின் தலைசிறந்த பத்திரிக்கையாளரான சாய்நாத் தமது ‘விடுதலைப் போராட்டத்தின் களப் போராளிகள்' என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். விடுதலைக்காகவே தன் படிப்பை...

வந்தவாசி: இளங்காடு உயர்நிலைப் பள்ளியில் கற்றல் திறன் வாசிப்பு விழிப்புணர்வு!

வந்தவாசி: இளங்காடு உயர்நிலைப் பள்ளியில் கற்றல் திறன் வாசிப்பு விழிப்புணர்வு! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இளங்காடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் கற்றல் திறன் வாசிப்பு வழிமுறைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோ.சுரேஷ் தலைமை தாங்கினார். இலவச சட்ட பணிக்குழு ஆலோசகர் வி.விஜயகுமார், பட்டதாரி ஆசிரியர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் இராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாணவர்களின் கற்றல் மேம்பாட்டு வழிமுறைகள் பற்றி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் ஆகியோர் விவரித்து பேசினர். மேலும் தென்னக இரயில்வே  சு.தனசேகரன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக பள்ளி நூலகத்திற்கு 30 புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பட்டதாரி ஆசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

வந்தவாசி: அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!

வந்தவாசி: அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் ஆவின் வளாகத்தில், வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே. மோகன் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் தேர்தல் பொறுப்பாளரும்,முன்னாள் எம்எல்ஏ வுமான வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர் மாவட்ட கழக அவைத்தலைவர் டி.கே.பி.மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் பி.ஜாகீர் உசேன் இணைச்செயலாளர் ஏ.கே.எஸ்.அன்பழகன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னிலை வகிக்க, துணைச்செயலாளர்கள் டி.பி.துரை விஎஸ்எஸ் லதாகுமார் வெம்பாக்கம் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜ்கணேஷ்  ஒன்றிய கழக செயலாளர்கள் செய்யாறு எம்.மகேந்திரன் அனக்காவூர் சி.துரை குணசீலன் மு.எம்எல்ஏ அருகாவூர் அரங்கநாதன் பெரணமல்லூர் ஜி.செல்வராஜ் தெள்ளார் டி....

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடுமையான போர் இன்றுடன் 10 வது நாளை எட்டியிருக்கிறது!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடுமையான போர் இன்றுடன் 10 வது நாளை எட்டியிருக்கிறது!  இஸ்ரேல் ராணுவத்தினரால், காஸா மீது கொத்து கொத்துகளாக குண்டுகள் வீசப்பட்டதில் கடந்த சில மணி நேரத்தில் மட்டும் ஏராளமானோர் பலியானதாகக் அஞ்சப்படுகிறது. பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்தாவிட்டால், இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் நாட்டின் இதர கட்சிகளும் கூட, இஸ்ரேல் மீதான நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும் வான்வழியாகவும் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பது, உலகிலேயே மிகவும் நெரிசலான பகுதியான காஸாவில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது உயிர் பலிகள் குறைந்தது 2,670 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது இவர்களில் கால் பகுதியினர் குழந்தைகள் ஆவர் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் பலியான இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1,400. இவர்களில் 286 பேர் ராணுவ வீரர்கள். காஸா சுகாதார அதிகாரிகள், இஸ்ரேல் வான்வழித்தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் உடல்களை ஐஸ்...

வந்தவாசி: மூத்த பத்திரிகையாளர் இல்லத் திருமணம்

வந்தவாசி: மூத்த பத்திரிகையாளர் இல்லத் திருமணம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் மூத்த பத்திரிகையாளர் அ.ஷாகுல்அமீது இல்லத் திருமணம் பெரிய பள்ளிவாசல் ஷாதி மகாலில் நடைபெற்றது இந் நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள் வி.சோமசுந்தரம் மாவட்ட அதிமுக செயலாளர் காஞ்சிபுரம் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆரணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் நகர அதிமுக செயலாளர்கள் ஆரணி அசோக்குமார் வந்தவாசி ஓட்டல்பாஷா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் ரெட் கிராஸ் மாவட்டத் தலைவர் இந்திர ராஜன் தொழிலதிபர் ஏ.ஜெ.ரூபன் வந்தவாசி நகர மன்றத் தலைவர் எச்.ஜலால் துணைத் தலைவர் அன்னை க.சீனு ரெட் கிராஸ் செயலாளர் பா சீனிவாசன்  எக்ஸ்னோரா தலைவர் மலர் சாதிக் மருத்துவர் காளிசெல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்  

கலாமின் 92 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு உரையரங்கம்!

கலாமின் 92 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு உரையரங்கம்! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 92 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு 'ஆகலாம் கலாம்' சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. தெள்ளார் ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு ஊராட்சி மன்றத் தலைவர் டிகேஜி.ஆனந்த் தலைமை தாங்கினார். தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் தே.ரங்கநாதன், புலவர் ந.பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, புதுவை தமிழ்ச் சங்க தலைவரும், தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி தலைவருமான கலைமாமணி முனைவர் வி‌. முத்து பங்கேற்று, ஆகலாம் கலாம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் பேச்சு, ஒவியம், கட்டுரை போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தெள்ளார் காவல் ஆய்வாளர் ரேகா  மாணவர்களுக்கு புத்தக பரிசுகளை வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அருண் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பங்கேற்றனர். ம...

வந்தவாசி ரெட் கிராஸ் சார்பில் மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு!

வந்தவாசி ரெட் கிராஸ் சார்பில் மாணவர்களுக்கு  டெங்கு விழிப்புணர்வு! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வந்தவாசி ரெட் கிராஸ் சங்க கிளை சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் த.ஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் எஸ். இராமலிங்கம், ரெட் கிராஸ் சங்க நிர்வாக குழு உறுப்பினர் பீ.ரகமத்துல்லா ஆகியோர்  முன்னிலை வகித்தனர். ரெட் கிராஸ் செயலாளர் பா.சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டாட்சியர் ஆர்.பொன்னுசாமி பங்கேற்று, டெங்கு விழிப்புணர்வு பற்றி விளக்கி நிலவேம்பு குடிநீர் வழங்கினார். மேலும் வழூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.ஆர்.ஆனந்தன் பங்கேற்று டெங்கு காய்ச்சல் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றியும் அதிலிருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். மேலும் வட்டார துப்புரவு மேற்பார்வையாளர் இளங்கோவன், சட்டப் பணிக்குழு ஆலோசகர் வி.விஜயகுமார், சுகாதார அலுவலர்கள் சீதாபதி, கணேஷ், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் மொ.ஷாஜகான், ...

இஸ்லாமிய கைதிகள் விடுதலை விவகாரம்: முதல்வரின் பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது - தமிமுன் அன்சாரி

இஸ்லாமிய கைதிகள் விடுதலை விவகாரம்:  முதல்வரின் பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது - தமிமுன் அன்சாரி   ”இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க கோரி நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நாங்கள் அறிவித்துள்ளோம்” இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது ஏமாற்றம் அளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மேலும் கூறுகையில், "இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் பதில் அளித்து பேசினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அமைச்சரவையில் 161ஆவது சட்டப்பிரிவில் தீர்மானம் நிறைவேற்ற இதில் கோரினோம். இந்த அடிப்படையில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, புரட்சி பாரதம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்துள்ளனர். முதலமைச்சர் ஒரு திறந்த மனதோடு ப...

செய்யாறு: சிப்காட்டுக்கு நிலம் கையகம்: விவசாயிகள் தொடர் போராட்டம்!

செய்யாறு: சிப்காட்டுக்கு நிலம் கையகம்: விவசாயிகள் தொடர் போராட்டம்!  திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் அலகு 3 திட்டத்தை கைவிடக் கோரியும் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மேல்மா பகுதி விவசாயிகள் தொடா்ந்து 100-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கப் பகுதி எனப்படும் அலகு - 3 பகுதியில் அனக்காவூா் ஒன்றியம் தேத்துறை உள்வட்டத்தைச் சோ்ந்த வடஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீா்குன்றம், குறும்பூா், நா்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 3174 ஏக்கரில் விவசாய நிலங்கள் இருந்து வருகின்றன. 100-ஆவது நாளாக தொடரும் போராட்டம்... சிப்காட் தொழிற்பேட்டைக்கு மேல்மா பகுதி விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களை கையப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேல்மா உள்ளிட்ட 9 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சாா்பில் மேல்மா கூட்டுச் சாலை அருகே கடந்த ஜூலை 7-இல் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். 100 -ஆவது நாளான நேற்று (அக்.9) செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டக் குழு சாா்பில் விவசாய...

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துக்களை பெற்றார் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துக்களை  பெற்றார் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ  சென்னைபசுமைவழிச்சாலையிலுள்ள செவ்வந்திஇல்லத்தில், முன்னாள் தமிழக முதல்வரும்,எதிர் கட்சித் தலைவரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களை கூறி, வாழ்த்துக்களை பெற்றார் முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ். ராமச்சந்திரன் உடன் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்  

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சோதனை ஓட்டம் தொடங்கியது!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சோதனை ஓட்டம் தொடங்கியது!  நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அக். 10 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் நாகை துறைமுகத்தில் இருந்து இன்று காலை தொடங்கியது. பயணிகள் இல்லாமல் கப்பலை இயக்கும் கேப்டன் பிஜு பி. ஜார்ஜ் தலைமையில் 14 ஊழியர்கள் சோதனை ஓட்டத்தில் கப்பலில் பயணம் செய்தனர். 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறையை சென்றடையும் கப்பல், மீண்டும் இன்று மாலை நாகை துறைமுகம் வந்துசேரும். பின்னர், இதேபோல நாளை காலையும் சோதனை ஓட்டம் நடைபெறுவதைத் தொடர்ந்து, அதிகாரபூர்வமாக நாளை மறுநாள் (அக்.10) பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளது. நாகையில் இருந்து இலங்கை செல்ல ரூ. 6500 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி சேர்த்து ஒரு நபருக்கு ரூ. 7670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், மற்றும் விசாவுடன் நாகை துறைமுகத்தின் உள்ளே அமைந்துள்ள பயணிகள் முனையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை செல்வதற்கு 10 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்ய ஆர்...

ஆரணி சட்ட மன்றத் தொகுதி அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!

ஆரணி சட்ட மன்றத் தொகுதி அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!   ஆரணி சட்ட மன்றத் தொகுதிக் குட்பட்ட சைதாப்பேட்டை, மருசூா், சித்தேரி, சங்கீதவாடி, கொருகாத்தூா், கீழ்நகா், கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் மகளிா் அணி, இளைஞா்-இளம் பெண்கள் பாசறை, மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று  நடைபெற்றது. கூட்டத்துக்கு, முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார் திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளா் ஜெயசுதா லட்சுமி காந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந் நிகழ்ச்சியில், மாவட்ட கழக  பொருளாளா் அ.கோவிந்தராசன், நகர கழக செயலாளா் அசோக்குமாா், நகர மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றிய கழக  செயலாளா்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், ஜெயப்பிரகாஷ், அரங்கநாதன், பேரூராட்சி செயலாளா் பாண்டியன், மாவட்ட விவசாய அணி செயலாளா் அரையாளம் எம்.வேலு, முன்னாள் நகர கூட்டுறவு வங்கியின் தலைவா் ஏ.ஜி.ஆனந்த், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாகை To இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து வரும் 10 ம் தேதி தொடக்கம்!

நாகை To இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து வரும் 10 ம் தேதி தொடக்கம்! நாகை To இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து வரும் 10 ம் தேதி தொடக்கம் 3.30 மணி நேரத்தில் பயணம் நாகை துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் அமைந்துள்ளதால் 3.30 மணி நேரத்தில் கப்பல் மூலம் இலங்கை சென்றடைய முடியும். நாகையில் இருந்து இலங்கைக்கு இம்மாதம் 10ஆம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. ஒரு நபருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் 6500 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏசி வசதியுடன் கொச்சினில் தயாரிக்கப்பட்ட "சிரியாபாணி" என்ற பெயரிடப்பட்ட கப்பல் 7 ஆம் தேதி நாகை துறைமுகம் வரவுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து மத்திய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகை துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது. பின்னர் கடந்த மாதம் 20 ஆம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து  குடியு...

அருட் பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அவதாரத் திருநாள்!

அருட் பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அவதாரத் திருநாள்! மனித குலத்தின் நன்மைக்காகப் பாடுபட்டு, உலகம் உள்ளவரை மக்கள் மனங்களில் நிலைத்து வாழும் மகான்கள் வரிசையில் இராமலிங்க வள்ளலாரும் ஒருவர். மனித வாழ்வின் மகத்துவத்தை போதித்து, ஆன்மீகத்திலும்  மனித மனங்களின் வேறுபாட்டைக் களைந்து சன்மார்க்க வழியில் தன்னை நாடி வருபவர்களை மேன்மை பெற வைக்கும் பேரருளாளர் வள்ளலாரின் அவதாரத் திருநாள் இன்று. அவரைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களோடு அவரது நினைவைப் போற்றுவோம். தமிழகத்தின் கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூர் கிராமத்தில் இராமய்யா - சின்னம்மை தம்பதிக்கு ஐந்தாவது மகவாய் அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள், (5.10.1823) புரட்டாசி மாதம் 21ம் தேதி அவதரித்தார் இராமலிங்கம். இம்மகானின் பிறப்பு இறைவன் அருளால் நிகழ்ந்த ஒன்று. ஆம், சிவபெருமானே சிவனடியாராக இல்லம் தேடி வந்து, தாய் சின்னம்மையின் கைகளால் உணவு உண்டு, உலக உயிர்களின் பசி போக்கும்  ஞானக் குழந்தையாக அவதரித்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இராமலிங்கத்துக்கு குருகுலக் கல்வியில் நாட்டம் ஏற்படவில்லை. இவரது சகோதரர் சபாபதி, மெ...

வந்தவாசி: கற்றல் வழிமுறைகள்: நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான பல்திறன் பயிற்சி..!

வந்தவாசி: கற்றல் வழிமுறைகள்: நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான பல்திறன் பயிற்சி..! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கற்றலை எளிதாக்கும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை கோமதி தலைமை தாங்கினார். தென்னக இரயில்வே காட் சு.தனசேகரன், யுரேகா திட்டம் க.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் பங்கேற்று, கற்றலை எளிதாக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு திறன் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை விளக்கினார். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டது.  பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் கல்விசார் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் வரதராஜன் நன்றி கூறினார்.