Skip to main content

Posts

Showing posts from January, 2024

"சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது” - எடப்பாடி பழனிசாமி

"சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது” - எடப்பாடி பழனிசாமி "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் (சிஏஏ) சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பாஜகவுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக. கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுகவுக்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இட்ட பதிவு: “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் (சிஏஏ) சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. குடியரிமை திருத்தச் சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கெனவே எங்களது ஆட்சியின் போது சட்...

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது; 8 மணிநேர விசாரணைக்குப் பின் அமலாக்கத்துறை அதிரடி

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது; 8 மணிநேர விசாரணைக்குப் பின் அமலாக்கத்துறை அதிரடி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய 8 மணிநேர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. கைதாவதை முன்னிட்டு ஜார்க்கண்ட மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். ஆளுநர் ராதாகிருஷ்ணனும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அந்த மாநிலத்தில் தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் சம்பாய் சோரன் அடுத்த முதல்வராகப் பதவியேற்ற இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு, கடந்த 20ஆம் தேதி ஹேமந்த் சோரனின் வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், ஹேமந்த் சோரனிடம் பல்வேறு கேள்விகள் எழுப்ப பட்...

சென்னையில் பெண் உட்பட 26 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

சென்னையில் பெண் உட்பட 26 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது சென்னை: சென்னையில் பல்வேறு தொடர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக கடந்த ஒரு வாரத்தில் பெண் உட்பட 26 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் இதுகுறித்து சென்னை பெரு நகர  காவல்துறை தெரிவித்து உள்ளதாவது, "சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், கடந்த 01.01.2024 முதல் 24.01.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 31 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 14 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 13 குற்றவாளிகள் மற்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் என மொத்த...

மாட்ரிட்: ஸ்பெயின் வந்தடைந்தேன்! - மு.க.ஸ்டாலின்

மாட்ரிட்: ஸ்பெயின் வந்தடைந்தேன்! - மு.க.ஸ்டாலின் மாட்ரிட்: ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக ஐரோப்பியப் பயணம் மேற்க்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாட்கள் அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். ஸ்பெயினில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். ஸ்பெயின் சென்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியதாவது; ஸ்பெயின் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்! ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் தினேஷ் கே.பட்நாயக், அவர்கள் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார். இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் ...

ஊடகங்களின் சுதந்திரத்திற்கு சமாதி கட்டும் மோடியின் குரூர முயற்சி!

ஊடகங்களின் சுதந்திரத்திற்கு சமாதி கட்டும் மோடியின் குரூர முயற்சி! என்ன செய்யப் போகின்றன ஊடகத்துறை? ஒன்றிய மோடி அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தினால் 2023 நவம்பரில் பொது மக்களின் கருத் துரைகளுக்காக சுற்றுக்கு விடப்பட்டி ருக்கும்,  ஒளிபரப்புச் சேவைகள் சட்டமுன் வடிவின் வரைவு, மோடி அரசாங்கத்தால் கருத்துக் கூறும் உரிமையின் கழுத்தை நெரித்திடும் மற்றுமொரு நடவடிக்கை யாகும் என்கின்றனர் ஊடகத்துறையினர்.  இந்தச் சட்டமுன்வடிவானது, சுமார் முப்பதாண்டு காலமாக இருந்துவரும் 1995ஆம் ஆண்டு கேபிள் டிவி நெட்வொர் க்ஸ் முறைப்படுத்தல் சட்டத்தை மாற்றியமைத்திடக் கோருகிறது. இதற்கு முன்பு, அரசாங்கம் 2023ஆம் ஆண்டின் தொலைத்தகவல் சட்டம், 2023 ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம்  மற்றும் அதற்கு முன்பிருந்து வந்த 2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப  விதிகள்  கொண்டு வந்திருந்தது.  இந்தச் சட்டங்கள் மற்றும் விதிகள் அனைத்தும், அரசமைப்புச் சட்டத்தினை மீறுவதா கக் கூறி, மும்பை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களால் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருக்கின்றன.  இப்போது கொண...

நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக முடிவு!

நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக முடிவு! நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க பீகார் பாஜக எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர். 243 உறுப்பினா்களைக் கொண்ட பீகாா் சட்டப் பேரவையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுக்கு 122-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் குமார் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் இன்று வழங்கினார். மேலும், இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று காலை பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், இக்கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழு தலைவராக சாம்ராட் செளத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பாட்னா புறப்பட்டுச் சென்றுள்ளார். பாஜகவின் நிபந்தனைகளுக்கு பச்சைக்கொடி? கூட்டணியில் இருந்து விலகும் நிதிஷ்? இன்றே ராஜினாமா? பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக மீண்டும் பதவியேற்பார் என கூறப்படுகிறது. பீ...

வந்தவாசி: ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இந்தியாவும் குடியரசும் சிறப்பு உரையரங்கம்!

வந்தவாசி: ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இந்தியாவும் குடியரசும் சிறப்பு உரையரங்கம்! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் குடியரசு தினத்தையொட்டி 'இந்தியாவும் குடியரசும்' என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். இரும்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு, பூங்குயில் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக, வழக்கறிஞர் சா.ரா.மணி பங்கேற்று இந்தியாவும் குடியரசும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் சட்டக்கல்லூரி பேராசிரியர் க.முத்துப் பெருமாள் கல்வி உரிமைச் சட்டம் பற்றி விளக்கினார். மேலும் பேச்சு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதுகலை ஆசிரியர்கள் வெங்கடேசன் அஜீத் குமார் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் க. பூபாலன் நன்றி கூறினார்.

திருவண்ணாமலை வாக்காளா் தின விழிப்புணா்வுப்போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு!

திருவண்ணாமலை வாக்காளா் தின விழிப்புணா்வுப்போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு!  திருவண்ணாமலையில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள்  வழங்கப்பட்டது. நாடு முழுவதும் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதுதொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சுவா் இதழ் ஓவியப் போட்டி, கடிதம் எழுதும் போட்டி, பாட்டுப் போட்டி, ரங்கோலி கோலப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும், 14-ஆவது தேசிய வாக்காளா் தின விழாவும் நேற்று  நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பா.முருகேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி முன்னிலை வகித்தாா். மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்க...

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மக்களாட்சி மட்டுமே நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு வித்திட இயலும் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் பூரண சுயராஜ்யம் என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான பிரகடனம் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள...

நியூஸ் 7 செய்தியாளர் மீதான தாக்குதல் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை!

நியூஸ் 7 செய்தியாளர் மீதான தாக்குதல் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை! நியூஸ் 7 செய்தியாளர் மீதான தாக்குதல் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், "திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த விடியா அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழ்நாட்டில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறிதாக்குதலாகும். பாதிக்கப்பட்ட செய்தியாளர் விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மேல...

கார் விபத்தில் சிக்கிய முதலமைச்சர் மம்தா.. மேற்குவங்கத்தில் பரபரப்பு..!

கார் விபத்தில் சிக்கிய முதலமைச்சர் மம்தா.. மேற்குவங்கத்தில் பரபரப்பு..! மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணித்த கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பர்த்வான் நகரில் இருந்து கொல்கத்தாவுக்கு மம்தா காரில் பயணித்தப்போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது முதலமைச்சர் மம்தாவின் கான்வாய் வாகனத்தின் முன்பு கார் ஒன்று திடீரென வந்துள்ளது. இதையடுத்து, கார் ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டுள்ளார். இதனால், மம்தாவின் நெற்றியிலும் கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு கொல்கத்தாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லவிருந்தார் மம்தா. ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால், சாலை மார்க்கமாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், சாலையில் செல்லும்போது விபத்து நடந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின்போதும் மம்தாவுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது. தேர்தலுக்காக நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும்போது தன் மீது தாக்...

வந்தவாசி: ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் வணிகவியல் பயிலரங்கம்!

வந்தவாசி: ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் வணிகவியல்  பயிலரங்கம்! வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் ஒரு நாள் பயிலரங்கம் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.ருக்மணி தலைமை வகித்தாா். செயலாளர் எம்.ரமணன் முன்னிலை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் பி.ப்ரித்தி வரவேற்றாா். வணிக கணக்கியல் குறித்து சென்னை துவாரகதாஸ் கோவா்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை எம்.ஆா்.ஹேமமாலினி, எண்களின் சக்தி உள்ளிட்டவை குறித்து பட்டயக் கணக்காளா் ஹரிணி மாதவன் ஆகியோா் மாணவிகளுக்கு விளக்கிப் பேசினா். இதில், கல்லூரியின் வணிகவியல் துறை இறுதியாண்டு மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை ரம்யா நன்றி கூறினாா்.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் தடுத்து நிறுத்தம்: காங். - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு பதட்டநிலை!

ராகுல் காந்தியின் நடைப்பயணம் தடுத்து நிறுத்தம்: காங். - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு பதட்டநிலை! குவஹாட்டி: அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பியின் நடைப்பயணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் காங்கிரஸ் தொண்டர்கள், போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம்’ என்ற பெயரில் மணிப்பூா் முதல் மகாராஷ்டிரம் வரை (கிழக்கில் இருந்து மேற்கு) இரண்டாம் கட்ட பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறாா். தற்போது ராகுல் காந்தியின் நடைப்பயணம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நடைப்பயணத்தின் போது அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த் பிஸ்வ சர்மாவை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால், பாஜக தொண்டர்கள் ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, குவஹாட்டியில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் நடைப்பயணத்துக்கான அனுமதியை அஸ்ஸாம் அரசு மறுத்திருந்தது. இந்த தடையை மீறி ராகுல் காந்தியை வரவேற்க குவஹாட்டி எல்லையில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கூடியதால், காவல்துறையினர்...

வந்தவாசி எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் சார்பில் போர் தின நினைவு விழா!

வந்தவாசி எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் சார்பில் போர் தின நினைவு விழா! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி எக்ஸ்னோரா கிளை சார்பில் போர் நினைவு தின விழா  தலைவர் மலர் சாதிக் தலைமையில் நடைபெற்றது வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொருளாளர் விஎல்ராஜன் வரவேற்றார்  எஸ். தனசேகரன், வாசு, சீனிவாசன், செல்வராஜ் வந்தை பிரேம் , பூபாலன், வினோத்குமார்  கேசவராஜ் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்தவாசி சரக காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ் , வட்டாட்சியர் பொன்னுசாமி, காவல் ஆய்வாளர் விஸ்வநாதன், ரஷித்கான் தொல்லியல் துறை காப்பாட்சியர் கலந்து கொண்டனர் கருத்துரை மேனாள் வட்டாட்சியர் முருகானந்தம், பூங்குயில் சிவகுமார் வாழ்த்துரை கேப்டன் பிரபாகரன் பூவிழி திருமுகம்  சாரண இயக்க மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிறைவாக சதானந்தன் நன்றி கூறினார்

தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள்: பட்டியலை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்

தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள்: பட்டியலை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் ஆகும். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2024-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான வரைவுப் பட்டியல் கடந்த அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலை பொது மக்கள் பார்வையிடவும், அதில் திருத்தங்கள் செய்யவும், புதிதாக பட்டியலில் ...

வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா, பொதுக் கூட்டம்

வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா, பொதுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளாரில், முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மு.எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது மாவட்ட கழக அவைத்தலைவர் டிகேபி மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார்  ஒன்றிய கழக செயலாளர் டி.வி பச்சையப்பன் முன்னிலை வகிக்க, சிறப்பு அழைப்பாளர்களாக, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் கழக அமைப்புச் செயலாளரும், மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் கழக செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாண சுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர் இந் நிகழ்வில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் பி. ஜாகீர் உசேன் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜி.செல்வராஜ் வெம்பாக்கம் எஸ்.திருமூலன் அனக்காவூர் சி.துரை மாவட்ட கழக பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன்  மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெ...

திமுக இளைஞரணியின் 2 வது மாநில மாநாடு வரலாற்று சிறப்பு மிக்க 25 தீர்மானங்கள்!

திமுக இளைஞரணியின் 2 வது மாநில மாநாடு வரலாற்று சிறப்பு மிக்க 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது சேலம்: திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; தீர்மானம் 1 இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதியளித்த ஜனநாயகப் பாதுகாவலர் கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி!கூட்டாட்சிக் கொள்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில், இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் பெரும்பொறுப்பில் எவ்வித சமரசமுமின்றிப் பாடுபடும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில் முன்னெடுத்துச் செல்லும் கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த பத்தாண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்பட்ட, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் ஜனநாயகப் பாதுகாவலராகத் திகழ்ந்து வரும் நிலையில், தன்னால் வளர்த்தெடுக்கப்பட்ட இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு அனுமதி தந்து, அதனை மா...

இந்தியாவின் விளையாட்டு தலைநகர் தமிழ்நாடு பிரதமரின் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவின் விளையாட்டு தலைநகர் தமிழ்நாடு பிரதமரின் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவது நமது குறிக்கோள் என கேலோ இந்தியா துவக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வீரமங்கை சிலையை நினைவு பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். எல்லோருக்கும் எல்லாம். அனைத்து துறை வளர்ச்சி. அனைத்து சமூக வளர்ச்சிக்காக திராவிட மாடல் ஆட்சியில...

எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் பாடம் கற்பிப்போம் -அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம்

எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் பாடம் கற்பிப்போம் -அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் நேற்று அதிமுகவில் இணைந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்  அதிமுகவில் இணைந்து உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டார் இந் நிலையில் அதிமுகவில் இணைந்த பின்னர் சற்றுமுன் அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: "மக்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டி, அவற்றை நிறைவேற்ற களத்தில் தொடர்ந்து போராடும் இயக்கமாக இருக்கிறது அதிமுக. இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலனுக்கு முன்னுரிமை, பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றங்களுக்கு துணை நிற்பது போன்ற சமூக ஏற்றங்களுக்கு காரணமாக உள்ளது அதிமுக. 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, மக்களின் இதயங்களில் இடம்பெற்றிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சிறப்பாக வழி நடத்தி, ஆட்சி செய்து, மக்களின் இதயங்களில் இடம்பெற்றிருக்கும், எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் உரிய பாடத...

செய்யாறு: முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின்.107வது பிறந்தநாள் விழா

செய்யாறு: முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின்.107வது பிறந்தநாள் விழா திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாள் விழா மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வி.முனுசாமி மாவட்ட மாணவரணி செயலாளர் என்.அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது செய்யாறு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அருகாவூர் எம்.அரங்கநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் 500 பேருக்கு வழங்கப்பட்டது மேலும் கழக நிர்வாகிகளுக்கு வேட்டி சேலைகள் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன உடன் மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் வர்த்தகர் அணி பூக்கட...

"நாட்டு மக்களுக்கு பாரதீய ஜனதா அநீதியை இழைத்து வருகிறது" - ராகுல் காந்தி

"நாட்டு மக்களுக்கு பாரதீய ஜனதா அநீதியை இழைத்து வருகிறது" அசாமில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு அசாமில் 5 வது நாள் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்ட ராகுல்காந்தி, ஊழல் நிறைந்த ஆட்சியை பாஜக நடத்துகிறது என குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி கடந்த 14 ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். இன்று 5 வது நாளில் அசாம் மாநிலத்தில் சிவசாகர் மாவட்டத்தில் பயணத்தை மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி  பேசியதாவது: – "நாங்கள் மணிப்பூரிலிருந்து இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை துவக்கி உள்ளோம். இந்த பயணம் இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் சாதிகளையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது. பாரதீய ஜனதா கட்சி பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக நாட்டு மக்களுக்கு நிறைய அநீதி இழைத்துள்ளது. நாடக ஆசிரியரும், சீர்திருத்தவாதியுமான சங்கர்தேவ் அனைவரையும் ஒன்றிணைக்க முயன்றார். அவர் அநீதிக்கு எதிராக போராடினார். இதனை தான் இந்திய ஒற்றுமை...

சமத்துவப் பொங்கல் விழா அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு!

சமத்துவப் பொங்கல் விழா அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு! திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சே.கூடலூா் ஊராட்சியில் உள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில்  சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இவ் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பொங்கல் வைத்து விழாவை துவக்கிவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: "திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பெரியாா் சமத்துவபுரத்தில் தை திருநாளாம், பொங்கல் திருநாளையொட்டி, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் எண்ணத்தில் உதித்த முத்தான திட்டம்தான் பெரியாா் சமத்துவபுரம் திட்டமாகும். தற்போது, முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த சமயத்தில்தான் இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது. அனைத்துத் தரப்பு மக்களும் சமம் என்றும், சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்...

காஞ்சிபுரம் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா

காஞ்சிபுரம் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது முன்னாள் எம்எல்ஏ க்கள் வாலாஜாபாத் கணேசன் மைதிலி திருநாவுக்கரசு முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதைத்தொடர்ந்து அங்கு குழுமியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது உடன் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்