"சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது” - எடப்பாடி பழனிசாமி "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் (சிஏஏ) சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பாஜகவுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக. கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுகவுக்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இட்ட பதிவு: “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் (சிஏஏ) சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. குடியரிமை திருத்தச் சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கெனவே எங்களது ஆட்சியின் போது சட்...