Skip to main content

Posts

Showing posts from November, 2023

8 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை..!

8 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை..! தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன. புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் டிஎன் ஸ்மார்ட் செயலி மூலமாகவும், டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் 5.23 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று காலை 8...

வங்கக்கடலில் புயல் 3-ந்தேதி சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்பு

வங்கக்கடலில் புயல் 3-ந்தேதி சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்பு வட தமிழகத்தை நோக்கி புயல் வருவதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய இயல்பான அளவு பருவமழை பெய்யவில்லை. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் போதுமான அளவு மழை பொழிவு இல்லை. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் 1-ந் தேதி முதல் நேற்று வரை 32 செ.மீ. மழை பெய்து உள்ளது. இது இயல்பை விட 8 சதவீதம் குறைவாகும். பருவமழை காலத்தில் இதுவரையில் ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி மட்டுமே உருவாகி மழையை கொடுத்து உள்ளது. காற்றின் மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சியால் பருவமழை பெய்து வந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 27-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு-...

"வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை; மீட்புப் பணிகளை விரைவுபடுத்துக" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

"வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை; மீட்புப் பணிகளை விரைவுபடுத்துக" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்   சென்னையில் கனமழை தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணபணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவுபடுத்த வேண்டும். மழை - வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையால், மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. சாலைகளில் வெள்ளம், வீடுகளுக்குள் தண்ணீர், போக்குவரத்து பாதிப்பு என பலவழிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மழை பாதிப்புகளை சரி செய்ய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது. சென்னை பெருநகரப் பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கி 9 மணி வரை இடைவிடாமல் பெய்த கனமழை மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மையான இடங்களில் 10 முதல் 12 செ.மீ வரை மழை கொட்டியுள்ள நிலைய...

தொடர் கனமழை பெய்துவருவதால் அடுத்த 3 நாட்கள் அனைவருக்கும் சவாலாக இருக்கும்! - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

தொடர் கனமழை பெய்துவருவதால் அடுத்த 3 நாட்கள் அனைவருக்கும் சவாலாக இருக்கும்! - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்   தொடர் மழை பெய்து வருவதால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், சென்னையின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. இதனால், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. சாலையில் தேங்கிய நீரை அகற்றம் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதாவது, நேற்று மாலை முதல் கனமழை பெய்துவரும் நிலையில் 4 மணி நேரத்தில் 6.7 செமீ மழை பதிவானது. இதுதொடர்பாக பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தொடர் கனமழையின் காரணமாக அடுத்த 3 நாட்கள் அனைவருக்கும் சவாலாக இருக்கும் என்றும் தேவையில்லாமல் பொதுமக்கள் யாரும் வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தொடர் கனமழை பெய்து வருவதால் சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப...

செய்யாறு: நகர திமுக இளைஞரணி சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா 500 பேருக்கு அன்னதானம்!

செய்யாறு: நகர திமுக இளைஞரணி சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா 500 பேருக்கு அன்னதானம்!  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் நகர திமுக இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அறிஞா் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெற்ற இந் நிகழ்வுக்கு   ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்தாா். இந் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள், 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நகரமன்றத் தலைவா் மோகனவேல், நகர கழக செயலாளர் வழக்கறிஞர்  கே.விஸ்வநாதன், ஒன்றிய திமுக  செயலாளர்கள் ஞானவேல், ஜே.சி.கே.சீனுவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். இதேபோல் வந்தவாசி நகரில் நடைபெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நிகழ்வு  நகர கழக செயலாளர் தயாளன் தலைமையில், நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட திமுக  செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்எல்ஏ க்கள் அம்பேத்குமார் ஓ.ஜோதி  கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் முன்னதாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக திமுக வினர் தேரடி,பழைய ...

விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் ஸ்ரீ அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகா தீபம்

விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் ஸ்ரீ அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகா தீபம்  திருவண்ணாமலை: விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப விழாவை யொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. அரோகரா’ கோஷம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபவிழாவையொட்டி இன்று அதிகாலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என கோஷமிட்டு  பக்தியுடன் தரிசனம் செய்தனர். இதையடுத்து தீபவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். ‘நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம்’ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இக்கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து விமரிசையாக நடந்து வருகிறது. தினமும் காலை...

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நாளை நடைபெறுகிறது

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நாளை  நடைபெறுகிறது புகழ்பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை நடைபெறுகிறது இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகத்தினா், காவல் துறையினா் இணைந்து செய்து வருகின்றனா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் காா்த்திகை மகா தீபத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. இதைக் காண சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருவா். நிகழாண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அன்று காலை 7.40 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி வரை பஞ்ச ரதங்களில் அமா்ந்தபடி மாட வீதிகளில் வந்த உற்சவா் பஞ்சமூா்த்திகள், பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். குதிரை வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலா: காா்த்திகை தீபத் திருவிழாவின் 8-வது நாளான வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறிய குதிரை வாகனத்தில் ஸ்ரீ விநாயகா், பெரிய குதிரை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா ...

விளைநிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கைவிடக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன்பு 29-ஆம் தேதி ஆா்ப்பாட்டம்!

விளைநிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கைவிடக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன்பு 29-ஆம் தேதி ஆா்ப்பாட்டம்!  செய்யாறு சிப்காட் மூன்றாம் அலகு விரிவாக்கத்துக்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதைக் கைவிடக் கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வரும் 29 ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி தெரிவித்தாா். மேலும் கூறுகையில்: "செய்யாறு சிப்காட் மூன்றாம் அலகு விரிவாக்கத்துக்காக மேல்மா கிராம சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிப்காட் விரிவாக்கத் திட்டத்தால், இந்தப் பகுதியிலுள்ள சுமாா் 3,200 ஏக்கா் பரப்பிலான விளைநிலங்கள் பறிபோகும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும், சிப்காட் தொழிற்பூங்கா செயல்பாட்டுக்கு வந்தால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, விளைநிலங்களைக் கொடுக்க மறுத்து 3 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதுபோன்று அறவழியில் போராடிய 7 விவசாயிகள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் வழக்கு...

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருக்கோயில்கள் சார்பில் 1,100 திருமணங்கள் நிறைவு - தமிழக அரசு

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருக்கோயில்கள் சார்பில் 1,100 திருமணங்கள் நிறைவு - தமிழக அரசு  சென்னை: திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, இரண்டு மணமக்களுக்கான திருமணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று இன்று நடத்தி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.24) சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, இரண்டு மணமக்களுக்கான திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்தல்: 2022-2023 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், “ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்...

வந்தவாசி: அதிமுக சார்பில், இளைஞர் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!

வந்தவாசி: அதிமுக சார்பில், இளைஞர் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் ஆவின் வளாகத்தில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மகளிரணியினர் பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே. மோகன் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும்,முன்னாள் எம்எல்ஏ வுமான வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார் இந் நிகழ்வில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் பி.ஜாகீர் உசேன்இணைச்செயலாளர் ஏ.கே.எஸ்.அன்பழகன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னிலை வகிக்க, மாவட்ட துணைச்செயலாளர் டி.பி.துரை இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் அருண் மாவட்ட கலை இலக்கியப் பிரிவு செயலாளர் சித்ரா கலையரசு ஒன்றிய கழக செயலாளர்கள் செய்யாறு எம்.மகேந்திரன் அனக்காவூர் சி.துரை அருகாவூர் அரங்கநாதன் பெரணமல்லூர் ஜி.செல்வராஜ் தெள்ளார் டி.வி.பச்சையப்பன்...

விவசாயத்தைக் காப்பது கொள்கை முடிவு! விளைநிலங்கள் அழிக்கப்படுவதை பா.ம.க அனுமதிக்காது - அன்புமணி ராமதாஸ்

விவசாயத்தைக் காப்பது கொள்கை முடிவு! விளைநிலங்கள் அழிக்கப்படுவதை பா.ம.க அனுமதிக்காது - அன்புமணி ராமதாஸ்   விவசாயத்தைக் காப்பது பாமகவின் கொள்கை முடிவு. விளைநிலங்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த மேல்மா பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி பாமக சாா்பில் நேற்று கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது: "தமிழகத்தில் கடந்த 45 ஆண்டுகளில் விவசாய நிலப் பரப்பு 48 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாகக் குறைந்துள்ளது. 42 லட்சம் ஏக்கா் விளைநிலம் அழிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செங்கம், போளூா் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தரிசு நிலங்கள் உள்ளன. அங்கு சிப்காட் தொடங்கலாம். அதைவிடுத்து, முப்போகம் விளையும் மண்ணை அழிப்பதை ஒருபோதும் பாமக அனுமதிக்காது. விவசாயத்தைக் காப்பது பாமகவின் கொள்கை முடிவு. விவசாயத்தை அழித்து எந்த ...

"எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் காசா, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்” - எலான் மஸ்க்

"எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் காசா, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்” - எலான் மஸ்க்  புதுடெல்லி: "எக்ஸ் வலைதளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை, போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்" என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கிய போருக்கு இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதலை தொடங்கியிருந்தாலும், இஸ்ரேல் போர் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை, 13,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகள் மருத்துவமனைகள், அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடூரப் போரால் தங்களது வாழ்வாதாரம், ...

மேல்மா சிப்காட் விவகாரம்: விவசாயிகள் கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

மேல்மா சிப்காட் விவகாரம்: விவசாயிகள் கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்! வரும் 29-ம் தேதி சென்னையில் அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தையொட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் உட்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்,மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தஞ்சாவூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மணி தலைமையில் மாநில தலைவர் பழனியப்பன், விவசாய சங்க நிர்வாகிகள் சுந்தர விமல்நாதன் உட்பட ஏராளமான ...

64 ஆண்டுகள் கழித்து பட்டா! நெய்வேலியில் 3 வது நிலக்கரி சுரங்கத்துக்கு பா.ம.க தலைவர் அன்புமணி எதிர்ப்பு

64 ஆண்டுகள் கழித்து பட்டா! நெய்வேலியில் 3 வது நிலக்கரி சுரங்கத்துக்கு பா.ம.க தலைவர் அன்புமணி எதிர்ப்பு  சென்னை: என்.எல்.சிக்கு முதன் முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்குவதா சமூகநீதி என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மூன்றாவது சுரங்கத்திற்கு துணை போய் மக்களுக்கு அநீதி இழைத்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டு உள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "கடலூர் மாவட்டம் நெய்வேலியில் முதன்முதலில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்ட போது, அதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை ஆகிய கிராமங்களில் வழங்கப்பட்ட 3543 வீட்டு மனைகளுக்கான பட்டாக்களை 64 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கியிருக்கிறார். நிலம் கொடுத்த மக்களுக்கு இவ்வளவு விரைவாக நீதியும், பட்டாவும் வழங்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய நீதியும் கிடைப்பதில்லை; உரிய விலையும் கிடைக்கவில்லை; வேலைவாய்...

செய்யாறு சிப்காட் திட்டத்தை கைவிட கோரி நாளை பா.ம.க போராட்டம்!

செய்யாறு சிப்காட் திட்டத்தை கைவிட கோரி நாளை பா.ம.க போராட்டம்! செய்யாறு சிப்காட் திட்டத்தை கைவிடக் கோரி திமுக அரசுக்கு எதிராக நாளை பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. "நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மக்களின் உணர்வுகளை மதிக்காத திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி" திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. மொத்தம் 2,937 ஏக்கர் பரப்பளவிலான இந்த தொழிற்பூங்காவில் இரு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது அலகை அமைப்பதற்காக 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருக்கிறது. அதில் 361 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் தவிர மீதமுள்ள 2700க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு சொந்தமான வளமான நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் திமுக அரசு இறங்கியிருப்பது மட்டுமல்லாமல்,விவசாயிகளுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ள திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை பா....

இ.பி.எஸ் தலைமையில் நாளை அதிமுகமாவட்டச்செயலாளர்கள்,பொறுப்பாளர்கள் கூட்டம்

இ.பி.எஸ் தலைமையில் நாளை அதிமுகமாவட்டச்செயலாளர்கள்,பொறுப்பாளர்கள் கூட்டம்   சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாளை (நவ.21) கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச் செயலாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், ஏற்கெனவே அறிவித்தபடி தலைமைக் கழகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், நாளை (நவ.21) மாலை 4 மணிக்கு நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் களமிறக்கப்பட்ட 3 கால் டிரைபாட் சிக்னலுக்கு சிக்னல்!

சென்னையில் களமிறக்கப்பட்ட 3 கால் டிரைபாட் சிக்னலுக்கு சிக்னல்! சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களை பிடிக்க சிக்னலுக்கு சிக்னல் மூன்று கால்கள் கொண்ட டிரைபாட் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதை வைத்து விதி மீறல் செய்யும் நபர்களை போலீசார் எளிதில் பிடித்து விடலாம் போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. உதாரணமாக நீங்கள் வேகமாக ஹெல்மெட் போடாமல் பைக்கில் செல்கிறீர்கள். போலீசால் உங்களை பிடிக்க முடியவில்லை என்றாலும், டிரைபோட் உங்களை போட்டோ எடுத்து விடும் அபராதம் உங்கள் வீடு  தேடி வந்து விடும் பெங்களூர் போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த முறை நடைமுறையில் உள்ளது. நாம் போலீசாரிடம் நம் செல்வாக்கு, தொழில் இவைகளைக் கூறி அந்த நேரத்திற்கு தப்பி விடுகின்றோம் இனிமேல் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அந்த நம்பருக்கு தானாக அபராதம் அனுப்பப்படும். இந்த நடைமுறையை கடந்த...

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்தநாள் விழா நோயாளிகளுக்கு பிஸ்கட், அறுசுவை உணவுகள்!

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்தநாள் விழா நோயாளிகளுக்கு பிஸ்கட், அறுசுவை உணவுகள்! திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் பிறந்தநாளையொட்டி வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழம் பிஸ்கட் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம் எஸ் தரணிவேந்தன் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது  எரமலூர் கிராமத்தில் உள்ள இல்லத்தில் எம்.எல்.ஏக்கள் எஸ்.அம்பேத்குமார், ஓ ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன்,நகரமன்றத் தலைவர் எச் ஜலால்,வட்டாட்சியர்  பொன்னுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை  உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து வந்தவாசியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில்  நகர கழக செயலாளர் ஏ. தயாளன், ஒன்றிய கழக செயலாளர்கள் டி.ராதா, ப. இளங்கோவன், சி.ஆர். பெருமாள், ஏ.சுந்தரேசன், மாவட்ட துணை செயலாளர்கள் என்.பாண்டுரங்கன், க. லோகநாதன், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி,  நகராட்சி துணைத் தல...

"தொழிற்சாலைகள் வந்தால் தான் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் விவசாயிகளை வஞ்சிப்பது நோக்கமல்ல" - அமைச்சர் எ.வ.வேலு

"தொழிற்சாலைகள் வந்தால் தான் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் விவசாயிகளை வஞ்சிப்பது நோக்கமல்ல" - அமைச்சர் எ.வ.வேலு   திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இது குறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:- "விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு ஒரு ஆணி செய்கின்ற தொழிற்சாலை கூட இங்கு கிடையாது. திருவண்ணா மலை மாவட்டம் என்பது விவசாயிகள் நிறைந்த மாவட்டமாகும். கருணாநிதி முதல்வராக இருந்தபோது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தொழிற்சாலை வேண்டும் என்று பொதுமக்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் சிப்காட்டிற்காக 3 கட்டமாக நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்றது. முதல் கட்டமாக 622 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது 13 தொழிற்சாலைகள் வந்தது. குறிப்பா...

செய்யாறு சிப்காட் விவகாரம்: 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது தமிழக அரசு

செய்யாறு சிப்காட் விவகாரம்: 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது தமிழக அரசு சென்னை: செய்யாறு சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தில் முதற்கட்டமாக 645 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்பட்டது. தற்போது, இதில் 13 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 27,432 நபர்கள் நேரடியாகவும், 75,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.  இதே பகுதியில் இரண்டாம் கட்டமாக 2300 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டது. தற்போது, இதில் 55 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 31,645 நபர்கள் நேரடியாகவும், 1,00,000 நபர்கள் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் ஏதுமில்லாத நிலையில், மேற்குறிப்பிட்ட ...

விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் அதிமுக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் - எடப்பாடி பழனிசாமி

விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் அதிமுக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் - எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு தொகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும் என்றும் இல்லையெனில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராட்டம் நடத்தும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில் 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. தொடந்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 126 நாட்களாக நடைபெற்றது போராட்டக்கார்கள் மீது இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், கடந்த 4 ஆம் தேதி அமைதியான முறையில் கோரிக்கை யை வலியுறுத்தி விவசாயிகள்  சென்ற போது பேருந...

செய்யாறு சிப்காட் ஆலைக்கு எதிராக தூண்டுதலின் பேரில் போராட்டம் - அமைச்சர் எ.வ.வேலு

செய்யாறு சிப்காட் ஆலைக்கு எதிராக தூண்டுதலின் பேரில் போராட்டம் - அமைச்சர் எ.வ.வேலு  திருவண்ணாமலை: "தூண்டுதலின் பேரில் திட்டமிட்டு இந்த அரசு எந்தப் பணிகளையும் செய்துவிடக் கூடாது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வரக் கூடாது. பட்டதாரிகள் வேலைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, விவசாய நிலங்களைப் பறிப்பதாக செய்யப்பட்டும் திட்டமிட்ட ஒரு பிரச்சாரம்தான் இந்தப் போராட்டங்கள். விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாய நிலங்களை அபகரிப்பதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல" என்று அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். திருவண்ணாமலையில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் எடுக்கும் பணிகள் 3 கட்டமாக பிரித்து நடைபெற்றது. முதல் கட்டமாக 622 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது அயல்நாட்டு தொழிற்சாலைகள் உள்ளிட்ட 13 தொழிற்சாலைகள் வந்தன. இதன்மூலம் ஏறத்தாழ 30 ஆயிரம் தற்போது பணியில் உள்ளனர். இதில், செய்யாறு, ஆரணி, வந்தவாசி தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் பெர...

தேசிய பத்திரிகையாளர்கள் தினம்: சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம் - முதல்வர் ஸ்டாலின்

தேசிய பத்திரிகையாளர்கள் தினம்: சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம் - முதல்வர் ஸ்டாலின்    தேசியப்பத்திரிகையாளர்கள் தினத்தை ஒட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் நாளாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் பேணிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகையாளர் நாள்கொண்டாடப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் போற்றப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில், "உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர், எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில், சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை மு...

திருவண்ணாமலை பேரிடா் மீட்பு பயிற்சி பெற்றவர்கள் 2,226 பேர் தயாா் நிலையில் 76 உதவி மையங்கள் - மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை பேரிடா் மீட்பு பயிற்சி பெற்றவர்கள் 2,226 பேர் தயாா் நிலையில் 76 உதவி மையங்கள் - மாவட்ட ஆட்சியர்  திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல், மழைக் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட 58 பகுதிகளில், பேரிடா் மீட்புக்காக தயாா் நிலையில் 76 உதவி மையங்களும், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பயிற்சி பெற்ற 2,226 வீரா்கள் தயாா் நிலையில் இருந்து வருவதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா். பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், செய்யாறு சுற்றுலா மாளிகையில், மாவட்ட சிறப்பு அலுவலா் தீரஜ்குமாா் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: "திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மற்றும் மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகள் என பாதிப்பு ஏற்படக் கூடிய 58 இடங்கள் கண்டறிப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் 76 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளன. நீச்சல் தெரிந்தவா்கள், மரம் ஏறுபவா்கள், மரம் வெட்டுபவா்கள், பாம்பு பிடிப்பவா்கள் என அடையாளம் காணப்பட்ட 2,226 பேருக்கு பயிற்சி அளித்து அவா்களை தயாா...

புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட சிறப்பு அலுவலா் ஆய்வு!

புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட சிறப்பு அலுவலா் ஆய்வு! திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் மழை, புயல் பாதிப்புகளுக்கு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட சிறப்பு அலுவலா் தீரஜ்குமாா் நேற்று ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செய்யாறு சுற்றுலா மாளிகையில் மாவட்ட சிறப்பு அலுவலா் தீரஜ்குமாா் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட  சிறப்பு அலுவலா் தீரஜ்குமாா், புளியரம்பாக்கம் கிராமத்தில் பாசனத்துக்குச் செல்லும் ஏரிக்கால்வாயை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதேபோல பிரம்மதேசம், சடந்தாங்கல் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளை பாா்வையிட்டு, ஏரியில் இருந்து தண்ணீா் வெளியேறும் பாசனக் கால்வாய்களை ஆய்வு செய்தாா். மேலும், புளியரம்பாக்கம், சடந்தாங்கல் பகுதிகளில் பொதுமக்கள் தங்க அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை பாா்வையிட்டு வருவாய்த் துறையினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். முன்னதாக, செய்யாறு சுற்றுலா மாளிகையில் செய்தியாளா்களிடம் தீரஜ்குமாா் கூறியதாவத...