Skip to main content

Posts

Showing posts from April, 2023

மின்னணு ஊடகங்களின் சுய கட்டுப்பாடு வேலை செய்யாது; ஒழுங்குமுறை அமைப்பு தேவை: உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

மின்னணு ஊடகங்களின் சுய கட்டுப்பாடு வேலை செய்யாது; ஒழுங்குமுறை அமைப்பு தேவை: உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா போலிச் செய்திகள்,மஞ்சள் பத்திரிகை மற்றும் ஊடகங்களால் பயமுறுத்துதல் போன்றவற்றின் ஆபத்துகளையும் கோடிட்டுக் காண்பித்தார். மின்னணு ஊடகங்களின் சுய கட்டுப்பாடு பயனற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, அதற்கு ஒரு ஒழுங்குமுறை ஆணையம் தேவை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா மேலும்  தெரிவித்தார். அத்தகைய அமைப்பு பத்திரிகைகளை நசுக்குவதற்காக அல்ல, ஆனால் ஊடகங்களுக்கு எதிரான புகார்களை கவனிக்க  வேண்டும் என்றும் அவர் கூறினார். "செய்தித்தாள்களை ஒழுங்குபடுத்த இந்திய பிரஸ் கவுன்சில் உள்ளது, ஆனால் செய்தி சேனல்களுக்கு சுய கட்டுப்பாடு உள்ளது மற்றும் சுய கட்டுப்பாடு போதுமான தீர்வாகாது, ஏனெனில் இது அத்தகைய ஒழுங்குமுறையில் விருப்பத்துடன் ஒரு பகுதியாக இருப்பவர்களை மட்டுமே பிணைக்கிறது" என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறினார் . அத்தகைய ஊடக நிறுவனங்களுக்கு எதிரான புகார்களை உள்ளிடுவதற்கு ஒரு ஒழுங்குமுறை இருக்க வேண்டும் மற்றும் அத்தகைய ஒழுங்குமுறை அமைப்பு பத்திரிகை அமைப்பின் மீது கட்டுப்பாட்டைப...

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கான கோடைகால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கான கோடைகால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள்!  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் மாணவர்களுக்கான கோடைகால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் ( ஓவியப் பயிற்சி, ஆங்கில உரையாடல் பயிற்சி, யோகாசனம், ஹிந்தி பயிற்சி, திருக்குறள் பயிற்சி, கணினி பயிற்சி, கையெழுத்து பயிற்சி, தன்னம்பிக்கை பயிற்சி உள்ளிட்டவை) தொடங்கப்பட்டது. இந் நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். பிரம்ம குமாரி முத்துலட்சுமி, அரிமா வரதராஜன், பூங்குயில் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர் பெ. பார்த்திபன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார்  அவர்கள் பங்கேற்று, மாணவர்கள் தங்களது அடிப்படைத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், கோடை விடுமுறையில் பயனுள்ள வகையில் இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பேசினார். உடன் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் கு. சதானந்தன், அ. ஷாகுல் அமீது, கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ், யுரேகா திட்ட மேற்பார்...

செய்யாறு: எருமைவெட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் பள்ளியின் தலைமை ஆசிரியா் நன்கொடை!

செய்யாறு:  எருமைவெட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் பள்ளியின் தலைமை ஆசிரியா் நன்கொடை! திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அனக்காவூா் ஒன்றியத்தில் எருமைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ஆம் வகுப்பு படித்து முடித்து  செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் சு.பெருமாள் வருடந்தோறும் தனது சொந்த செலவில் மிதிவண்டிகளை நன்கொடையாக வழங்கி வருகிறாா். நிகழ் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் பத்து மாணவ, மாணவிகளுக்கு ரூ. 55 ஆயிரம் மதிப்பில் மிதிவண்டிகளை தலைமை ஆசிரியர் சு.பெருமாள்  வழங்கினார் இந் நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் மனோகா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சு. பெருமாள் வரவேற்றாா். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், அனக்காவூா் ஒன்றிய குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலந்து கொண்டு மிதி வண்டிகளை பள்ளி மாணவா்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினாா். அப்போது, பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை சீரமைத்த...

இந்தியாவில் புதிதாக 7533 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 44 பேர் பலி

இந்தியாவில் புதிதாக 7533 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 44 பேர் பலி  இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7,533 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறிந்துள்ள நிலையில், 24 மணிநேரத்தில் 44 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 10,000 க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீரானதாக இல்லை. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000-த்தை தாண்டியதாக இருந்தது. ஆனால் கடந்த 24 மணிநேரத்திலான ஒருநாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,533 ஆக பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 53,852 ஆகவும், இதுவரை நாட்டில் 4,49,32,344 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 44 பேர் பலி அதே நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 44 ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 17 பேரும், டெல்லியில் 7 பேரும், சத்தீஸ்கர், மகாராஷ்டிராவில் தலா 3 பேரும், ராஜஸ்தான், அரியானா, மத்திய பிரதேசத்தில் தலா 2 பேரும், தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார், அரியானா, ஒடிசா, உத்தரகாண்ட், கர்நாடகாவ...

அனக்காவூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்!

அனக்காவூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்! திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா கூழமந்தல்  கிராமத்தில் நடைபெற்றது ஒன்றிய கழக செயலாளர் சி.துரை தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மு.எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு, கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இளநீர் மோர் தர்பூசணி வெள்ளரி உள்ளிட்ட பழ வகைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள் உடன் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு ஒன்றிய கழக செயலாளர் அருகாவூர் அரங்கநாதன் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஏ வி சேகர் தனசேகர் குன்னவாக்கம் சுதாகரன் தூசி கன்னியப்பன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் கூழமந்தல் கிளை கழக செயலாளர் பாலாஜி செய்திருந்தனர்

உலக மலேரியா தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு!

உலக மலேரியா தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகராட்சி இணைந்து உலக மலேரியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந் நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காளிச்செல்வம் தலைமை தாங்கினார். செவிலியர் ஸ்டெல்லா வரவேற்றார். நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், விமல் ராஜ், ஹெல்த் இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.‌ சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் பங்கேற்று, மலேரியா எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றியும், அதற்கான விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினார். நகராட்சி மூலம் வந்தவாசி பகுதியில் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தப்பட்டது. மேலும் வழக்கறிஞர் சா‌ இரா. மணி, வெற்றி அறிவொளி வெங்கடேசன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ. ஷாகுல் அமீது உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளையும், புத்தக பரிசுகளையும் வழங்கினர். பிறகு அனைவராலும் உலக மலேரியா ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இறுதியில் ஆரம்ப சுகாதார மருந்தாளுநர் குணசீலன் நன்றி கூறினார். ...

"முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து".. தெலுங்கானாவில் பாஜக வென்றவுடன் நடக்கும் - அமித்ஷா

"முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து".. தெலுங்கானாவில் பாஜக வென்றவுடன் நடக்கும் - அமித்ஷா   தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார். கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரங்கள் பங்கேற்பதற்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்டை மாநிலமான தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. அது தொடர்பாக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முழு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். சட்டத்திற்கு புறம்பாக இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு ரத்து செய்யப்படும். இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும்." என்றார். தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோராக கருதப்பட்டு அவர்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த...

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி வலியுறுத்தல்

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி வலியுறுத்தல் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து செய்யாறை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கிட வேண்டும் என சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி கோரிக்கை வைத்து பேசினார். செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி சட்டப்பேரவையில் நேற்று வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு: திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வேண்டுகோளின்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த தேர்தல் பிரசாரத்தில் செய்யாறை தலைமை இடமாகக்கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். முதலில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து போட்டியிட்ட தேர்தலில் தலைவர் கலைஞரும், செய்யாறு தொகுதியில் புலவர் கோவிந்தனாரும் வெற்றி பெற்றனர். திமுக தன்னுடைய முதல் தேர்தலையே செய்யாறு தொகுதி கழக கோட்டை என்பதை நிரூபித்தது. 1962ல் வருவாய் கோட்டமாக உருவாகி 61 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. மாவட்ட தலைநகருக்கு இணையாக அனைத்து மாவட்ட அலுவலகங்களும், தமிழகத்த...

வந்தவாசி: மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை பூஜை

வந்தவாசி: மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை பூஜை வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம், காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அம்மன் பழ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் உலக நன்மை வேண்டி கோயில் வளாகத்தில் ஸ்ரீசா்வமங்களா வேள்வி நடைபெற்றது. 501 வகை மூலிகை திரவியங்கள் மற்றும் தலா 51 வகை பழங்கள், புஷ்பங்கள், தானியங்கள் உள்ளிட்டவை கொண்டு இந்த வேள்வி பூஜை நடத்தப்பட்டது. விரதம் மேற்கொண்டிருந்த பக்தா்கள் அக்னி கரகம் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். இதைத் தொடா்ந்து, மாலையில் 32 கரங்களுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்தில் உலா வந்தாா். தொடா்ந்து இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினா். கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் அமாவாசை உற்சவ குழுவினா் பூஜைகளை மேற்கொண்டனா்.  

படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் வழிபாட்டில் மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன்

படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் வழிபாட்டில் மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார் உடன் கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழக செயலாளருமான, வி.பன்னீர்செல்வம் ஆரணி நகர மன்ற துணை தலைவர் பாரிபாபு ஒன்றிய கழக செயலாளர்கள் பொய்யாமொழி ஆர்.அன்பழகன் படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் ஒன்றிய குழு உறுப்பினர் தஞ்சையம்மாள் லோகநாதன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

வந்தவாசி: புனித ரமலான் தின சிறப்பு தொழுகை தாழம்பள்ளம் ஈத்ஹா மைதானத்தில் நடைபெற்றது

வந்தவாசி: புனித ரமலான் தின சிறப்பு தொழுகை தாழம்பள்ளம் ஈத்ஹா மைதானத்தில் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் ஈத்ஹா மைதானத்தில் புனித ரமலான் தின சிறப்பு தொழுகை,  மஸ்ஜிதே அக்ஸா பள்ளி நிர்வாகி அப்துல் வஹாப் தலைமையில் நடைபெற்றது முக்தவல்லி அப்துல்லா முன்னிலை வகித்தார் இமாம் ஆஸிக் இலாஹி யூசுபி பயான் சொற்பொழிவாற்றி தொழுகையை நடத்தினார்கள் இச் சிறப்பு தொழுகையில்,ஜமாஅத் தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்  

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,692 பேருக்கு கொரோனா: 28 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,692 பேருக்கு கொரோனா: 28 பேர் பலி இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் ஒன்றிய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 12,491 ஆக அதிகரித்திருந்த கொரோனா தொற்று இன்று 11,692 ஆக சற்று குறைந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 65,286 லிருந்து 66,170 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கேரளாவில் மட்டும் 10 பேரும், உத்தரபிரதேசத்தில் 4 பேரும், மகாராஷ்டிரா, டெல்லி, அரியானாவில் தலா 3 பேரும், சத்தீஸ்கர், பீகாரில் தலா 2 பேர், ராஜஸ்தானில் ஒருவர் என மொத்தம் 28 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இதனா...

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!  அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமியை அங்கீகரித்தும், ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் விழாக் கோலம் பூண்டது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகனின் சீரிய வழிக்காட்டுதலின்படி, வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் தலைமையில், நூற்றுக்கணக்கான அதிமுக வினர் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்  தொடர்ந்து ஐநூறு பேருக்கு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் அன்னதானம் வழங்கினார் உடன் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்

செய்யாறு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் திறந்து வைத்தார்

செய்யாறு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் திறந்து வைத்தார் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர அதிமுக சார்பில்,நீர் மோர் பந்தலை, வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மு எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இளநீர் மோர் தர்பூசணி வெள்ளரி உள்ளிட்ட பழ வகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது நகர கழக செயலாளர் கே. வெங்கடேசன் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவைத்தலைவர் ஜனார்த்தனம் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் ஒன்றிய கழக செயலாளர்கள் எம் மகேந்திரன் சி துரை அருகாவூர் அரங்கநாதன் வெம்பாக்கம் திருமூலன் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் கோமதி ரகு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் அனக்காவூர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.வி.சேகர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்  

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா! வழக்கறிஞர்கள் கட்டாயம் மாஸ்க் போடணும் - தலைமை நீதிபதி

சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகளுக்கு கொரோனா! வழக்கறிஞர்கள் கட்டாயம் மாஸ்க் போடணும் - தலைமை நீதிபதி  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 முதல் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் வழக்கறிஞர்கள் வாதிடும் நேரம் தவிர பிற நேரங்களில் உயர்நீதிமன்றத்தில் முகக் கவசம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளாக நாளாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் 3 முதல் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி ராஜா தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் வழக்கறிஞர் அனைவரும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா பேசுகையில்: "3 - 4 நீதிபதிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கறிஞர்கள் கோர்டில் வாதிடும்போது முகக் கவசத்தை நீக்கிக் கொள்ளலாம். மற்ற சமயங்கள் நீதிமன்ற வி...

அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய அரும் பணிகள்: சிறப்பு உரையரங்கம்!

அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய அரும் பணிகள்: சிறப்பு உரையரங்கம்! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பூங்குயில் பதிப்பகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய அரும் பணிகள் என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் சமுதாய கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பூங்குயில் பதிப்பக ஆசிரியர் டி.எல். சிவக்குமார் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், பட்டதாரி ஆசிரியர் ஆர்.எஸ். சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.ஜி மாடர்ன் சமுதாய கல்லூரி கிளை மேலாளர் விக்னேஷ்  வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, தமுஎகச மாவட்ட தலைவர் கவிஞர் முத்துவேலன் பங்கேற்று, 'அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய அரும் பணிகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் மாணவ மாணவிகள் பங்கேற்ற பேச்சு, கவிதை வாசிப்பு, பாடல்கள் உள்ளிட்டவைகள் நடந்தேறியது. பங்கேற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந் நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர் ம. ரகுபாரதி, பெரணமல்லூர் கௌதம் முத்து, சமூக ஆர்வலர் அறிவொளி வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தெலுங்கானா மாநிலத்தில் உலகத்தில் முதன்முறையாக 125 அடி உய...

வந்தவாசி: நகர திமுக, மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில்,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

வந்தவாசி: நகர திமுக, மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில்,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் நகர திமுக, மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை நடைபெற்றது முக்தவல்லி அப்துல் காதர் ஷரீப் தலைமையில் நடைபெற்ற மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக திகழும் இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ் தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நேரம் அறிவிக்கப்பட்டதும் இஸ்லாமியர்களோடு நோன்பு திறந்தனர் இந் நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் பீர் முகம்மது தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.சீதாபதி முன்னாள் எம்எல்ஏ எதிரொலி மணியன் நகர மன்றத் தலைவர் எச்.ஜலால் துணைத் தலைவர் அன்னை க.சீனு நகர கழக செயலாளர் தயாளன் நகர மன்ற உறுப்பினர் நாகூர் மீரான்  மாவட்ட சிறுபான்மைபிரிவு அமைப்பாளர் அ.ப.ரசூல் அப்துல் வஹாப் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர...

உத்தரப் பிரதேசம்: முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது போலீஸ் காவலில் சுட்டுக் கொலை 3 பேர் சரண்

உத்தரப் பிரதேசம்: முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது போலீஸ் காவலில் சுட்டுக் கொலை 3 பேர் சரண் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அத்திக் அகமது, காவலர்களால் அழைத்து வரப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்த போது அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை தொடர்பாக போலீஸ் கஸ்டடியில் அவர்கள் இருவரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மாநிலத்தில் உள்ள தூமங்கஞ்ச் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று பேர் போலீஸில் சரண் அடைந்துள்ளதாக தகவல். அதோடு இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிகிறது. நேற்று சனி...

என்கவுண்டர்கள் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?

என்கவுண்டர்கள் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன கூறியுள்ளது? செப்டம்பர் 23, 2014 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா மற்றும் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மரணம் தொடர்பான வழக்குகளில் போலீஸ் என்கவுண்டர்களை விசாரிக்கும் விஷயங்களில், முழுமையான, பயனுள்ள மற்றும் சுதந்திரமான விசாரணைக்கான நிலையான நடைமுறையாக, பின்பற்ற வேண்டிய 16 விஷயங்களைப் பற்றிய விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. “மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு எதிராக சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்” வழக்கில் வழிகாட்டுதல்கள் வந்தன, மேலும் மாஜிஸ்திரேட் விசாரணை, உளவுத்துறை உள்ளீடுகளின் எழுத்துப்பூர்வ பதிவுகள் மற்றும் அமைப்புகளின் சுயாதீன விசாரணை ஆகியவற்றுடன் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. “போலீஸ் நடவடிக்கையின் போது ஏற்படும் அனைத்து மரண வழக்குகளிலும் மாஜிஸ்திரேட் விசாரணை தவறாமல் நடத்தப்பட வேண்டும். அத்தகைய விசாரணையில் இறந்தவரின் உறவினர்கள் தவறாமல் தொடர்பு கொள்ள வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 இன் பிரிவு 176 இன் கீழ் இத்தகைய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தனது தீ...

வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது

வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில், ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல், வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில், திறந்து வைக்கப்பட்டது ஒன்றிய கழக செயலாளர் எம்கேஏ லோகேஷ்வரன் மாவட்ட அவைத்தலைவர் டிகேபி மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில், முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இளநீர் மோர் தர்பூசணி வெள்ளரி திராட்சை பழவகைகளை வழங்கினார் மேலும் வந்தவாசி புதிய பஸ்நிலையம் எதிரே,டிராவலர்ஸ் பங்களா அருகே, தெள்ளாறு போன்ற இடங்களில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை மாவட்ட கழக செயலாளர்  தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தை தண...