Skip to main content

Posts

Showing posts from July, 2023

கையகப்படுத்திய பின் நிலத்தில் சாகுபடி செய்ய என்எல்சி ஏன் அனுமதித்தது? - உயர்நீதிமன்றம் கேள்வி

கையகப்படுத்திய பின் நிலத்தில் சாகுபடி செய்ய என்எல்சி ஏன் அனுமதித்தது? - உயர்நீதிமன்றம் கேள்வி  சென்னை: என்எல்சி கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், என்எல்சி நிறுவனத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் 2 சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை 2007ம் ஆண்டு கையகப்படுத்தியது. இந்த வாய்க்கால் வெட்டும் பணியின் போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, நிலத்தை கையகப்படுத்தி 16 ஆண்டுகளாக அதனை சுவாதீனம் எடுக்...

மணிப்பூர்: தனி நிா்வாகம், குடியரசுத் தலைவா் ஆட்சி: இந்தியா கூட்டணிக்கு மணிப்பூா் பழங்குடிகள் கடிதம்

மணிப்பூர்: தனி நிா்வாகம், குடியரசுத் தலைவா் ஆட்சி: இந்தியா கூட்டணிக்கு மணிப்பூா் பழங்குடிகள் கடிதம் மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும், குகி-ஜோ பழங்குடிகளுக்கென்று தனி நிா்வாகம் வேண்டும் என்ற தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரி, எதிா்க்கட்சிகள் கூட்டணியான ‘இந்தியா’வுக்கு பழங்குடிகள் கடிதம் எழுதியுள்ளனா். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி, சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடி சமூகத்தினா் இடையே நிலவும் மோதலால், அந்த மாநிலத்தில் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் குகி சமூகத்தினா் வாழும் பகுதிகளை உள்ளடக்கி தனி நிா்வாகம் வேண்டும் என்று மாநில அமைச்சா்கள் இருவா் உள்பட குகி சமூகத்தைச் சோ்ந்த 10 எம்எல்ஏக்கள் கடந்த மே மாதம் அறிக்கை வெளியிட்டனா். அந்த மாநிலத்தில் உள்ள சின்-குகி-ஜோமி பழங்குடிகளை பாதுகாக்க மணிப்பூா் அரசு  தவறிவிட்டதாக கூறி, தனி நிா்வாக கோரிக்கையை அவா்கள் எழுப்பினா். இந்த தனி நிா்வாகம் என்பது பழங்குடிகளுக்கென்று தனி மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ இருப்பது மத்திய அரசை பொருத்தது என்று அந்த எம்எல்ஏக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டத...

செய்யாறு: பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் டாக்டர் ஏ. பி.ஜெ. அப்துல் கலாம் நினைவு தினம்!

செய்யாறு: பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் டாக்டர் ஏ. பி.ஜெ. அப்துல் கலாம் நினைவு தினம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் மரக்கன்றுகள் நடுதல், மற்றும் வழங்கும் நிகழ்வு,  ஊராட்சி மன்ற தலைவர் அ. சரவணன் தலைமையில் நடைபெற்றது. நூலக புரவலர் பா. குப்புராஜ் அரிமா சங்க உறுப்பினர் பூ.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அரிமா சங்க மாவட்ட தலைவர் மா. சிவானந்தம் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். அரிமா சங்க மாவட்ட சேவை தலைவர் தி. வடிவேல் அவர்கள் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். இந்த நிகழ்வில் நூலக வாசகர்கள் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை நூலகர் ஜா. தமீம் செய்திருந்தார்.

வந்தவாசி: நூல் மில் தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வந்தவாசி: நூல் மில் தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சேத்பட் சாலையில் உள்ள ஏஎஸ்ஏ அண்ணாமலை நூல் மில்லில் வந்தவாசி வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு நூல்மில் நிர்வாகி அண்ணாமலை தலைமை தாங்கினார். எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக்,  சட்டப் பணிக்குழு ஆலோசகர் ஜெயந்தி, எக்ஸ்னோரா இயக்குநர் மு. பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக. வழக்கறிஞர் இரா. மணி பங்கேற்று, தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு சட்ட விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நகர ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவர் காளிச்செல்வம், ரெட் கிராஸ் சங்க செயலாளர் சீனிவாசன், யுரேகா திட்ட மேற்பார்வையாளர் முருகன் ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர். எக்ஸ்னோரா கிளை ஆலோசகர் சதானந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா: அப்பீலை உயர்நீதிமன்றம் விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா: அப்பீலை உயர்நீதிமன்றம் விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு    டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விரைவாக நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016-ம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வராக்கப்பட்டார். அத்துடன் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இணைந்தே சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர். 2017-ம் ஆண்டு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலா சிறைக்கு சென்றார். முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி இருந்தார் சசிகலா. சசிகலா பெங்களூர் சிறையில் தண்டனையை அனுபவித்த போது, அதிமுகவில் கலகக் குரல் எழுப்பிய ஓ.பன்னீர்செல்வம் திடீரெ...

திருத்துறைப்பூண்டி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மணிப்பூா் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

திருத்துறைப்பூண்டி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மணிப்பூா் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! மாநில குழு உறுப்பினர் ஐவி. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மணிப்பூா் மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டுமென கண்டன முழக்கங்களை எழுப்பினர் இதைத் தொடர்ந்து பிரதமா் மோடியின் உருவ பொம்மையை எரித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளா் காரல்மாா்க்ஸ், வடக்கு ஒன்றிய செயலாளா் கதிரேசன், நகர செயலாளா் கே. கோபு, கோட்டூா் ஒன்றிய செயலாளா் எல்.சண்முகம், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளா் கே. பழனிச்சாமி, நகர செயலாளா் சி. செல்லத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். பிரதமா் உருவ பொம்மை எரிப்பு தொடா்பாக திருத்துறைப்பூண்டி போலீஸாா் 55 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

17 மா.செ.,க்களை மாற்ற தி.மு.க., திட்டம்! அடிபணியாதவர்களுக்கு கவுரவ பதவி

17 மா.செ.,க்களை மாற்ற தி.மு.க., திட்டம்! அடிபணியாதவர்களுக்கு கவுரவ பதவி லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சியில் அதிரடி நடவடிக்கையாக, 17 மாவட்டச் செயலாளர்களை மாற்ற, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்கு அடிபணியாத 'சீனியர்'களை ஒதுக்கி வைக்கும் விதமாக, மண்டல பொறுப்பாளர் என்ற கவுரவ பதவிகளை வழங்கவும், முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஆளும் கட்சியில் அமைப்பு ரீதியாக, 72 மாவட்டங்கள் உள்ளன. அவை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஐந்து அமைச்சர்கள், அவற்றுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். அதாவது, அமைச்சர், மாவட்டச் செயலாளர் என, இரு பதவிகளில் இருப்போரிடமிருந்து, மா.செ., பதவி பறிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, அவர்களுக்கு பதவி உயர்வு என்ற பெயரில், மண்டல பொறுப்பாளராக கவுரவ பதவி வழங்கப்பட உள்ளது. ஒரு சில மாவட்டங்களில், நான்கு முதல் ஆறு சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன. அதற்கு மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் ஒருவரே இருப்பதால், அவர்களால் கட்சி பணிகளையும், அரசு பணிகளையும் சரிவர செய்ய முடியவில்லை. அது போன்றவர்களின் வசம் உள்ள மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு,...

வந்தவாசி: மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை கடும் நடவடிக்கைக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரணி!

வந்தவாசி: மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை கடும் நடவடிக்கைக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரணி!  மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்து வரும் கலவரம், வன்முறைகளை உடனடியாக தடுத்த நிறுத்தவும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியவர்கள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வந்தவாசி வட்டக்குழு சார்பாக, வட்டார செயலாளர் அப்துல்காதர்  தலைமையில் நூற்றுக்கும்  மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்   வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி பஜார் வழியாக சென்று தேரடி அஞ்சலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரா.சரவணன் கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இடைக்குழு உறுப்பினர்கள் யாசர் அராபத், மோகன், நகர செயலாளர்  ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள்  அரிதாசு, ராமகிருஷ்ணன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பொருளாளர் சுகுமார் கலந்துகொண்டனர். இறுதியாக ரா.சேட்டு நன்றியுரை ஆற்றினார்.

வந்தவாசி: மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

வந்தவாசி: மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து  ஆர்ப்பாட்டம்!   திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கு ஒன்றியத் தலைவர் என்.நவநீதி தலைமையில் நடைபெற்றது நகர தலைவர் ஆர்.சுரேஷ் வரவேற்புரையாற்ற, முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் துரை நாடார் மாவட்ட செயலாளர் குருலிங்கம் முன்னிலை வகித்தனர் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பி.பாஸ்கரன் மாவட்ட பொதுச்செயலாளர் பி.முத்துசாமி சிறப்புரையாற்றினார்கள் தமிழகத்தில் அனைத்து மகளிர்களுக்கும் ரூ.1000 தருவதாக கூறிவிட்டு தற்போது பெரும்பாலானோருக்கு உரிமைத் தொகை கிடைக்காமல் செய்தது திமுக அரசு. ஊரெங்கும் பெருக்கெடுத்தோடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை அப்பாவி மக்களை நடுத் தெருவில் நிற்க வைக்கும் ஒரு நம்பர் லாட்டரி. தக்காளி முதல் வெங்காயம் வரை,பருப்பு முதல் அரிசி வரை விலை வாசி உயர்வு இதை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப...

வந்தவாசி: நீட் தேர்வில் 7.5 ஒதுக்கீட்டில் தமிழக அளவில் 4 ஆம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா!

வந்தவாசி: நீட் தேர்வில் 7.5 ஒதுக்கீட்டில் தமிழக அளவில் 4 ஆம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா! ஓராண்டு விடுதி கட்டணத்தை மூத்த மருத்துவர் பஷீர் அஹமது ஏற்றார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அம்மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கண்ணன் என்பவரின் மகள் ரோஜா அரசுப் பள்ளியில் பயின்று நடைபெற்ற நீட் தேர்வில் தமிழக அரசின் மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தமிழக அளவில் 4ஆவது இடம் பிடித்துள்ளார். அவருக்கான பாராட்டு விழா வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மையம் முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வி.எல்.ராஜன், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர் பெ.பார்த்திபன்  வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக, ஓய்வு பெற்ற மூத்த மருத்துவர் கே.பஷீர் அகமது பங்கேற்று, அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அரசு ஒதுக்கீட்டில் நான்காம் இடம் பிடித்த மாணவி ரோஜாவை பாராட்டி சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கினார். மேலும் அவரின் மருத்துவ படிப...

மணிப்பூரில் 114 பேர் பலி.. பெண்கள் பாலியல் வன்கொடுமை! சிபிஐ விசாரணை வேண்டும் - குக்கி எம்எல்ஏக்கள்

மணிப்பூரில் 114 பேர் பலி.. பெண்கள் பாலியல் வன்கொடுமை! சிபிஐ விசாரணை வேண்டும் - குக்கி எம்எல்ஏக்கள்    இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 4ம் தேதி தொடங்கிய வன்முறையில் இதுவரை தங்கள் சமூகத்தை சேர்ந்த 114 பேர் கொல்லப்பட்டிருப்பதாக குக்கி பழங்குடி எம்எல்ஏக்கள் 10 பேர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மணிப்பூரில் சிறுபான்மையினராக இருக்கும் குக்கி, ஜோ, நாகா (40%) உள்ளிட்ட பழங்குடி மக்கள் அங்குள்ள மலை பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலைப்பகுதி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் இவர்களை தவிர வேறு யாரும் நிலங்களை வாங்கவோ விற்கவோ முடியாது. இப்படி இருக்கையில் அங்கு பெரும்பான்மையாக (53%) இருக்கும் மைத்தேயி/மெய்டெய் மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மைத்தேயி/மெய்டெய் மக்களுக்குதான் மாநிலத்தில் அதிக அளவுக்கு வாக்குகள் (53%) இருக்கிறது. எனவே இதனை கவனித்த பாஜக அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புக்கொண்டது. இதையே தனது தேர்தல் வாக...

“சூறையாடப்பட்ட கிராமம்.. நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள்.. தடுக்க சென்ற ஆண்கள் கொலை"- அதிர்ச்சியூட்டும் FIR தகவல்கள்

“சூறையாடப்பட்ட கிராமம்.. நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள்.. தடுக்க சென்ற ஆண்கள் கொலை"- அதிர்ச்சியூட்டும் FIR தகவல்கள்   மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. மணிப்பூரில் கிராமம் மொத்தத்தையும் சூறையாடிய வன்முறை கும்பல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களையும் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றதும் தடுக்க வந்த 2 ஆண்களை கொடூரமாக கொன்றதும் என பல அதிர்ச்சி தகவல்கள் எப்ஐஆர் மூலம் வெளியாகி உள்ளன. மணிப்பூரில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.இந்த சம்பவம், கடந்த மே மாதம் காங்போக்பி மாவட்டத்தில் 4 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. கலவரத்தால் உயிருக்கு பயந்து பலரும் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மே 18 ஆம் தேதியே, பக்கத்து மாவட்டத்தில் உள்ள காவல்நிலையில் புகார் அளித்துள்ளார். 62 நாட்களுக்கு பிறகு ஜூன் 21 ஆம் தேதி வழக்கு பதிவு செய்த போலீசார், வீடியோ பரவி நாட...

மணிப்பூர் கொடூரம்: ஜூலை 26-ல் அனைத்து தொகுதிகளிலும் மெழுவர்த்தி ஏந்தி காங். ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கொடூரம்: ஜூலை 26-ல் அனைத்து தொகுதிகளிலும் மெழுவர்த்தி ஏந்தி காங். ஆர்ப்பாட்டம் சென்னை: மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறவும் வருகிற ஜூலை 26-ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டுக்கொள்வதாக, அக்கட்சியின் தலைவர் கேஎஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த மே முதல் வாரத்தில் இருந்து பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழுகின்ற மைதேயி மக்களுக்கும், குகி பழங்குடியின மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில்தான் அம்மாநிலம் கலவர பூமியாகியுள்ளது. தொடர்ச்சியான வன்முறை கலவரங்களால் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. இதுவரை 120-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தாக்கப்பட்டு, அவற்றில் சில தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து 300 முகாம்களில் 60 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பழங்குடியினத்...

வந்தவாசி: ஸ்ரீ.அகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில், தொழில் ஆலோசனைகள் குறித்த கருத்தரங்கம்

வந்தவாசி: ஸ்ரீ.அகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில், தொழில் ஆலோசனைகள் குறித்த கருத்தரங்கம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ.அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமை வகித்தாா். கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம், செயலாளர் எம்.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் து.ராஜசெல்வி வரவேற்றாா். சென்னை வொ்கோநெட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி சாம்சாலமன்பிரபு சிறப்புரை ஆற்றினாா். அப்போது, தொழில்நுட்ப சிந்தனைகள் மூலம் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அவா் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா். கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை உதவிப் பேராசிரியை சுமிதா நன்றி கூறினாா்.  

வந்தவாசி: கலைஞர் நூற்றாண்டுவிழா, பட்டிமன்றம்!

வந்தவாசி:  கலைஞர் நூற்றாண்டுவிழா, பட்டிமன்றம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் தனியார் கல்வி மையத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது ஜி.முகமது ஜியா இராமு எஸ். அன்சாரி தேசூர் பா.இராஜவேலு ஆதி சந்திரன் தமிழ் ராசா முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில், புதுவை தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  கலைஞர் எழுதுகோல் விருது சமூக ஆர்வலர்களுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் வழங்கி சிறப்புரை ஆற்றினார் சிறப்பு அழைப்பாளர்களாக சமூக ஆர்வலர்கள் மலர் சாதிக். பூங்குயில் சிவக்குமார் பா.சீனுவாசன் வந்தை பிரேம் ஆசிரியர் க.வாசு தனசேகர் உள்ளிட்டோர்  கலந்துக்கொண்டனர் ஆர்.எஸ்.சிவக்குமார் பட்டிமன்ற நடுவராக.அன்னை சீனுவாசன் ஆசிரியை பூ விழி.நல்லாசிரியர் சா.ரஷீனா மா.சுரேஷ்பாபு பெ.செல்வராஜ் நல்லாசிரியர் இரகு பாரதி பட்டிமன்றத்தில் கலந்துக்கொண்டு பேசினார்கள் இரகு பாரதியின் சிகரம் பண்பாட்டு மையம்சார்பில் மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது கு.சதானந்தன் நிகழ்ச்சியை தொகுக்க, இறுதியில் சி.கபிலன் நன்றி கூறினார்

முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் அமைச்சர் பொன்முடி: அமலாக்கத் துறை விசாரணை முடிந்த நிலையில் சந்திப்பு

முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் அமைச்சர் பொன்முடி: அமலாக்கத் துறை விசாரணை முடிந்த நிலையில் சந்திப்பு சென்னை: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார். அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். 13 மணி நேர சோதனைக்கு பிறகு, பொன்முடியை சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விடிய விடிய நடந்த விசாரணைக்கு பிறகு, அதிகாலையில் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந் நிலையில், அமைச்சர் பொன்முடியை, பெங்களூருவில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியது தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். துணிச்சலுடன், சட்டரீதியாக விசாரணையை எதிர்கொள்ளுமாறு முதல்வர் அறிவுரை வழங்கியிருந்தார். நேற்று மாலை இரண்டாவது நாளாக பொன்முடி விசாரணைக்கு ஆஜராகினார். இ...

கட்டுக்கட்டாக பணம்.. ரூ.41.9 கோடி பொன்முடி தொடர்பு இடங்களில் பறிமுதல்! பொன்முடியிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை...

கட்டுக்கட்டாக பணம்.. ரூ.41.9 கோடி பொன்முடி தொடர்பு இடங்களில் பறிமுதல்! பொன்முடியிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை...   சென்னை: அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.41.9 கோடி வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ள அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம், உறவினர்கள், நண்பர்களின் இல்லம், அலுவலகங்களில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதே நாள் இரவே அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இந்த நிலையில் செம்மண் குவாரி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பொன்முடி மற்றும் அவரது மூத்த மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கௌதம் சிகாமணி, அவரது இளைய மகனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவருமான மருத்துவர் அச...

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு..!

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு..! அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை உள்பட 5 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. அதேபோல அவரது மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்த காரில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இரு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்தத...

திருவாரூர்: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் ஆய்வுக்கூட்டம் அரசு கொறடா கோ.வி.செழியன் தலைமையில் நடைபெற்றது

திருவாரூர்: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் ஆய்வுக்கூட்டம் அரசு கொறடா கோ.வி.செழியன் தலைமையில் நடைபெற்றது  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு 2023-2024ஆம் ஆண்டிற்கான ஆய்வுக்கூட்டம்    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழுத்தலைவர் அரசு தலைமை கொறடா முனைவர்  கோ.வி.செழியன் தலைமையில் நடைபெற்றது சட்டமன்ற பேரவை மனுக்கள்குழு உறுப்பினர்கள் கோ.ஐயப்பன்  வி.பி.கந்தசாமி  செ.சுந்தரராஜன் மு.பாபு  கே.பொன்னுசாமி  ஆர்.ராதாகிருஷ்ணன்  டாக்டர்.வை.முத்துராஜா தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன் சட்ட மன்ற பேரவை துணை செயலாளர் கோ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன்  திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் .க.மாரிமுத்து மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ முன்னிலை வகித்தனர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழுத்தலைவர் அரசு தலைமை கொறடா முனைவர...

ஆகஸ்ட்- 20 அதிமுக மதுரை மாநாடு: ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது

  ஆகஸ்ட்- 20 அதிமுக மதுரை மாநாடு:  ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் தனியார் ஹோட்டல் வளாகத்தில் ஆகஸ்ட் 20 ல் நடைபெற உள்ள அதிமுக மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்பித்தனர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் மாவட்ட கழக அவைத்தலைவர் டிகேபி மணி முன்னாள் எம்எல்ஏ க்கள் ஏகேஎஸ் அன்பழகன் நளினி மனோகரன்  மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜ்கணேஷ் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு  முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆகஸ்ட் 20, மதுரை மாநாட்டிற்கு ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் எத்தனை பஸ், வேன்கள்  ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார் மேலும் இம் மாநாட்டிற்கு அதிக அளவில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து தொண்டர்கள்,...

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளது தேர்தல் ஆணையம்

எடப்பாடி பழனிசாமியை அதிமுக  பொதுச் செயலாளராக அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளது தேர்தல் ஆணையம். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம். அ.தி.மு.க.வில் கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த போது அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று முறையிட்டார். ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தலில் பொதுச்செயலாளராக எடப்பாடி ...

’சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது’ புள்ளிவிவரத்துடன் திமுகவை விளாசும் எடப்பாடி பழனிசாமி

’சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது’ புள்ளிவிவரத்துடன் திமுகவை விளாசும் எடப்பாடி பழனிசாமி "காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என அதிமுக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி பேசினார் 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று மகாகவி பாரதி பாடிய நம் தாய் திருநாட்டில், இந்த விடியா தி.மு.க-வின் அலங்கோல ஆட்சியில் எங்கெங்கு காணினும் குற்ற செயல்களாக இருப்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது. ஒரு மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் குற்றங்கள் நடப்பது இயற்கை மாநிலம் முழுவதும் குற்ற பூமியாக காட்சியளிப்பதும், அத்தகைய அராஜகங்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுவது என்பது தமிழகத்தில் நடக்கும் விந்தையாகும். கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு, சுத்தியால் வெட்டிக்கொலை, செல்போனுக்காக ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளிக் கொலை, சாலையில் செல்லும் பெண்களிடம் நகை வழிப்பறி என்று தொடர்ந்து பல நிகழ்வுகள் தமிழகத்தில் பல இடங்களில் நடந்தேறி வருகிறது. இதன் க...

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அதை மேடைக்கு மேடை பேசி, அதன்மூலம் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, இரண்டு ஆண்டுகள் கழித்து அதனை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி அதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருப்பதைப் பார்க்கும்போது "பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது" என்ற ஆப்ரகாம் லிங்கன் அவர்களின் பொன்மொழிதான் நினைவிற்கு வருகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றுதான் அறிவிக்கப்பட்டு இருக்கிறதே தவிர, அதற்கான நிபந்தனைகள் ஏதும் சொல்லப்படவில்லை. இதனால், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது என்று சொன்னால், கிட்டத்தட்ட 2 கோடி குடும்பஅட்டைதாரர்களுக்கும்...

தெய்யார்: ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

தெய்யார்: ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் வந்தவாசியை அடுத்த தெய்யாரில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயிலில்   மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி திருக் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவையொட்டி வியாழக்கிழமை கணபதி ஹோமம், தன பூஜை, பிரவேசபலி, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம், அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்றுக் காலை நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, விசேஷ பூஜைகள், மகா பூா்ணாஹூதி உள்ளிட்டவை நடைபெற்றது. தொடா்ந்து தீா்த்தக்குடங்களை தலையில் சுமந்து கோயில் கோபுரத்துக்கு எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்களால், காலை 10-30 மணிக்கு கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் அன்னையை தரிசனம் செய்தனா்.  

வந்தவாசி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை பட்ட படிப்புகளுக்கான வகுப்புகள் துவக்க விழா கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமையில் நடைபெற்றது கல்லூரி செயலாளர் எம்.ரமணன் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் முதலாம் ஆண்டு இளநிலை பட்ட படிப்புகளுக்கான வகுப்புகளை துவக்கி வைத்து பேசினாா். மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளா் ஆா்.சரவணன் மாணவிகளுக்கு ஊக்க உரை ஆற்றினாா். விழாவில், கடந்த பிளஸ் 2 பொதுத்தோ்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சோ்ந்த 36 மாணவிகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.5 ஆயிரத்தை கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் வழங்கினார் கல்லூரி வேதியியல் துறைத் தலைவா் ஷோபா நன்றி கூறினாா்.

செய்யாறு: அதிமுக அண்ணா தொழிற் சங்கம் சார்பில் பணிமனை உறுப்பினர் களுக்கு கை கடிகாரம் வழங்கும் விழா!

செய்யாறு: அதிமுக அண்ணா தொழிற் சங்கம் சார்பில் பணிமனை உறுப்பினர் களுக்கு கை கடிகாரம் வழங்கும் விழா!    திருவண்ணாமலை (வடக்கு) மாவட்ட அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில், ஆரணி வந்தவாசி செய்யாறு பணிமனை உறுப்பினர்களுக்கு கை கடிகாரம் வழங்கும் விழா மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது செய்யார் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் தாடி.ம.இராசு முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டுக் குழு உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு அண்ணா தொழிற்சங்க பணிமனை உறுப்பினர்களுக்கு கை கடிகாரங்களை வழங்கி வாழ்த்தி பேசினர் அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் அருணகிரி  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில செயலாளர் பி ஜாகீர் உசேன் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ். அன்பழகன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் மாவட்ட அவைத்தலைவர் டிகேபி மணி  முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், ஒன்றிய கழ...

வந்தவாசி: பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் மருத்துவ அலுவலர் காளிசெல்வம் வழங்கினார்

வந்தவாசி: பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் மருத்துவ அலுவலர் காளிசெல்வம் வழங்கினார்  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதையொட்டி நடைபெற்ற  பரிசோதனையில் ஒருசில குறைபாடுகள் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச கண்ணாடிகளை முதன்மை மருத்துவ அலுவலர் காளிச்செல்வம் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை பொ. பத்மாவதி தலைமை தாங்கினார். இந் நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார ஆய்வாளர் வினோத், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன், எக்ஸ்னோரா கிளை இயக்குநர் வெங்கடேசன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் ஆகியோர் பங்கேற்று மாணவிகளுக்கு உடல் நலம் சார்ந்த கருத்துக்களை வழங்கினர். பள்ளி உடற்கல்வி ஆசிரியை மின்னிலா நன்றி கூறினார்.

அதிமுகவில் இணைய இதுவரை 1.60 கோடிபேர் விண்ணப்பித்துள்ளனர் - எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் இணைய இதுவரை 1.60 கோடிபேர் விண்ணப்பித்துள்ளனர் - எடப்பாடி பழனிசாமி  சென்னை: அதிமுகவில் உறுப்பினர்களாக சேருவதற்கு இதுவரை 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 19 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக்கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தில், 5.4.2023 முதல் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 4.5.2023 முதல் பெறப்பட்டு வருகின்றன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2 கோடி பேர்களை உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வந்த நிலையில், இன்றைய தேதி வரை 1 கோடியே 60 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைந்த...