Skip to main content

Posts

Showing posts from July, 2024

வயநாடு 2-வது பயங்கர நிலச்சரிவு: மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியா?

வயநாடு 2-வது பயங்கர நிலச்சரிவு: மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியா? கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது இது, இன்று பிற்பகல் 3.30 மணி நிலவரம். இதுவரை 225 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், பெரும் பாதிப்புக்கு உள்ளான முண்டக்கை பகுதி குறித்த  பார்வை இது. கிட்டத்தட்ட 150 பலிகளோடு வயநாட்டின் முண்டக்கை மீண்டுமொரு சோக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. வயநாட்டை பற்றி அறிந்தவர்களுக்கு முண்டக்கை பகுதியை பற்றியும் தெரிந்திருக்கும். அதன் அழகுக்காக அறிந்தவர்கள் மத்தியில் முண்டக்கையின் இருண்ட பக்கத்தை பற்றி அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. பேரிடர்களுக்கு பிடித்த நகரம்தான் இந்த முண்டக்கை என்று கவலையுடன் சொல்வது உண்டு. கடந்த நான்கு தசாப்தங்களில், அதாவது 40 ஆண்டுகளில் இரண்டு மிகப் பெரிய நிலச்சரிவுகளை சந்தித்திருப்பதே இத்தகைய பெயரைப் பிடிக்க காரணம். ஜூலை 1, 1984 அன்றும் இதேபோல் அதி கனமழையை பதிவு செய்த முண்டக்கை, அதனால் 14 உயிர்களைப் பறித்த பெரிய நிலச்சரிவை கண்டத...

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 1 கோடி நிவாரணம்

வயநாடு நிலச்சரிவு :  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 1 கோடி நிவாரணம் சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஐ கடந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 1,000 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய , மாநில மீட்பு படையினர், ராணுவத்தினர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க, அவர்களுக்கு உதவிகள் புரிய தமிழக அரசு சார்பில், 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில், மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், மருத்துவ குழுவினர் இன்று அதிகாலை 4 மணி அளவில் வயநாடு சென்றடைந்தனர். மேலும், தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிவாரண தொகையும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு வங்கி கணக்கு எண் மற்றும் அதனை பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. அதன் மூலம் மக்கள் தங்களால் முடிந்த நிதியை கொடுத்த...

விரைவில் 4 மாநில தேர்தல்..! தேசிய அரசியலில் மாற்றம்.!- சோனியா காந்தி

விரைவில் 4 மாநில தேர்தல்..! தேசிய அரசியலில் மாற்றம்.! - சோனியா காந்தி "ம க்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் விரைவில் நடைபெறவுள்ள நான்கு மாநில சட்டசபை தேர்தலில் செயல்பட்டால், தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும்" என்று சோனியா காந்தி தெரிவித்தார். டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், பேசிய அவர், "வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டில், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர் என்றும் பல முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக கோடிக்கணக்கான குடும்பங்கள் அவதிப்படும் நிலையில், மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது என்று அவர் வேதனை தெரிவித்தார்.  மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து மோடி அரசு சரியான பாடம் கற்கும் என நினைத்தோம், மாறாக, சமூகங்களை பிரித்து அச்சம் மற்றும் விரோத போக்கு கொள்கையை தொடர்ந்து பின்பற்றுகின்றனர் ...

வளர்ச்சி பாதையில் மகுடம் சூட்டும் மன்னார்குடி!

வளர்ச்சி பாதையில் மகுடம் சூட்டும்  மன்னார்குடி! தமிழ்நாட்டை சேர்ந்த சிறிய நகரம் ஒன்று மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த மன்னார்குடி தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது அருள்மிகு ராஜ கோபால சுவாமி திருக்கோயில் அமையப் பெற்ற இடம். திருச்சி, கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வேகமாக வளர தொடங்கி உள்ளது அப் பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  அந் நகரம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அங்கே தற்போது பாதாள சாக்கடை பணிகளிலிருந்து, அனைத்து பணிகளும்  தீவிரமாக நடந்து வருகின்றன. மன்னார்குடி பாதாள சாக்கடை திட்டம் 299 கோடிகள், 125 கீ மீ தூரம் பணிகள் நடைபெற்று கொண்டு உள்ளது 1975 ஆம் ஆண்டு 8 கிமீ தூரம் அமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி அங்கே பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. மன்னார்குடியைச் சுற்றி 22 கி.மீ.க்கு ரிங்ரோடு அமைக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ...

"அதானி - அம்பானி A1, A2" நாடாளுமன்றத்தில் அனல் தெறிக்க பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி!

"அதானி - அம்பானி A1, A2"  நாடாளுமன்றத்தில் அனல் தெறிக்க பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி! 2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜூலை 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, " மோடி ஆட்சியைக் கண்டு அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள், ஏன் இந்த ஆட்சியில் ஒன்றிய அமைச்சர்களே ஒருவித அச்சத்தில் தான் உள்ளார்கள். பாஜக ஆட்சியில் பிரதமராக மோடி மட்டுமே அனைத்தையும் செய்கிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமராக விரும்பினால் அவர் பல பிரச்சனைகளை எதிர்க்கொள்ள நேரிடும். பாஜகவின் பிரச்சனை என்னவென்றால், பிரதமராக வேண்டுமென்ற கனவைக் காண அக்கட்சியில் ஒருவருக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. ஒருவேளை பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரதமராக விரும்பினால், பெரும் ஆபத்து வருமென்கிற அச்சம் இருக்கிறது. என்னுடைய கேள்வி ஒன்றுதான். பாஜகவில் இருக்கும் நண்பர்களும் அமைச்சர்களும் இந்தளவுக்கு பயப்பட என்ன காரணம்...

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்!

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்! தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் விதமாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் சட்டப்பேரவை தொகுதி வாரியாக உள்ள வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலர் கே.பாலசுப்பிரமணியன் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல்களை விரைவில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. தற்போதுள்ள சட்டப்பேரவை வாக்காளர் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை ஓவ்வொரு ஆண்டும் அல்லது தற்செயலாக தேவைப்படும் காலங்களுக்கு தயாரிக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதற்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி மக்களவை தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட சட்டப்பேரவை தொகுதி வ...

சித்தருக்காவூர் புதூர் கிளை நூலகத்தில் "நினைவுகளின்நதி""நீ உதிர்த்த சிறகின் பறவை" கவிதை தொகுப்புகள் அறிமுக விழா!

சித்தருக்காவூர் புதூர் கிளை நூலகத்தில்   "நினைவுகளின் நதி" "நீ உதிர்த்த சிறகின் பறவை"  கவிதை தொகுப்புகள் அறிமுக விழா! திருவண்ணாமலை  மாவட்டம் வந்தவாசி அடுத்த சித்தருக்காவூர் புதூர் கிளை நூலக வாசகர் வட்டம் நிகழ்வில், "நினைவுகளின் நதி" " நீ உதிர்த்த சிறகின் பறவை" என்ற இரண்டு கவிதை தொகுப்புகள் அறிமுக விழா நடைபெற்றது இந்த நிகழ்வில், வாசகர் வட்ட தலைவர் பொன். சந்திரசேகரன் தலைமை வகித்தார். கிளை நூலகர் ஜா.தமீம் அனைவரையும் வரவேற்றார். ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் அ. குலாப் ஜான், தலைமையாசிரியர் டி. ஆர். நம்பெருமாள், ஓய்வு ஆசிரியர் மீராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேராசிரியர் ஆ. மாணிக்கவேலு அவர்கள் இரண்டு நூல்கள் அறிமுகம் செய்து உரையாற்றினார் "இந்த கவிதை தொகுப்பு காதல் சார்ந்து இருக்கிறது எனவும் கவிஞர் மீ. யூசுப் ஜாகீர் அவர்கள் சிறந்த படைப்பாளியாக மிளிருவார்" எனவும் கூறினார். மேலும் கூறுகையில், "இந்த இரண்டு கவிதை தொகுப்புகள் அனைவரும் எளிதில் படித்து தெரியும் வகையில் எழுதியுள்ள...

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா!

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா, தமிழ்நாடு நாள் விழா மற்றும் விண்வெளியில் முதன் முதலில் வீரர்கள் கால் பதித்த தினம் உள்ளிட்ட முப்பெரும் விழாவானது ஆசியன் மெடிக்கல் அகாடமியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா தலைமை தாங்கினார். சங்க செயலாளர் இரா. பாஸ்கரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் லோ. இராஜசேகரன் பங்கேற்று, தமிழ் கல்வியும் அறிவியலும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்வில் துணைத் தலைவர்கள் முகமது அப்துல்லா, பா. சீனிவாசன், துணைச் செயலாளர்கள் சா.ரஷீனா, எ. ராஜ்குமார் ஆகியோர் கவிதை வாசித்தனர். மேலும் துணைத் தலைவர் வந்தை பிரேம், உறுப்பினர் கு. சதானந்தன் ஆகியோர் சிற்றுரை வாசித்தனர். முதன்மை செயற்குழு உறுப்பினர் இரா. அருண்குமார், செல்வி சஹானா ஆகியோர் தமிழிசைப் பாடல்கள்களை பாடினர். இந் நிகழ்வில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் வெ.அரிகிருஷ்ணன், முரளி,...

தெலுங்கானா பட்ஜெட் சிறுபான்மையினர் நலத்துறைக்கு அதிக நிதிஎஸ்சி, எஸ்டி துறைக்கு நிதி குறைப்பு

தெலுங்கானா பட்ஜெட் சிறுபான்மையினர் நலத்துறைக்கு அதிக நிதி எஸ்சி, எஸ்டி துறைக்கு நிதி குறைப்பு காங்கிரஸ் தலைமையிலான தெலுங்கானா அரசு, நடப்பாண்டு பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கான நலனுக்காக ரூ.3,003 கோடியை ஒதுக்கியிருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 36 சதவிகிதம் அதிகமாகும். அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி சமூக வளர்ச்சிக்கான நிதியை குறைத்திருக்கிறது. நேற்று தெலுங்கான மாநில சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பாட்டி விக்ரமார்கா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மொத்த பட்ஜெட் தொகையாக ரூ.2.91 லட்சம் கோடி என்று அறிவித்த அவர்,  "சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பது மாநிலத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்"  என்று கூறியிருந்தார். இந்த பட்ஜெட்டில் சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக ரூ.3,003 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.2,195 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 36% அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசிய விக்ரமார்கா, "பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் பயிற்சி வச...

செய்யாறு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

செய்யாறு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்:- "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கில், வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியை மத்தியப் பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது விழுப்புரம் மாவட்ட காவல்துறை.கள்ளச் சாராய, கஞ்சா வியாபாரிகளையும் கைது செய்வதற்கு திறனற்ற காவல்துறை, திமுகவின் ஏவல் துறையாக மாறி, பாமக நிர்வாகியை பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தேடிச் சென்று கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் போது காணை ஒன்றியம் அத்தியூர் திருக்கை கிராமத்தில் கடந்த ஜூலை 1 ஆம் நாள் நான் பரப்புரை மேற்கொள்ளச் சென்றபோது, எனது கூட்டத்தில் பங்கேற்க முடியாத வகையில் அங்குள்ள மக்களை திமுகவினர் அவர்களால் உருவாக்கப்பட்ட பட்டியில் அடைத்து வைத்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்...

மத்திய அரசு ஜூலை 27-ல் கூட்டவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்போம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு ஜூலை 27-ல் கூட்டவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்போம் -  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், தமிழ்நாட்டில் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. தமிழ்நாடு என்ற சொல் ஒரு இடத்தில் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. வழக்கமாக திருக்குறள் ஒன்று பட்ஜெட்டில் மேற்கோள்காட்டப்படும். அதுவும் இந்த முறை இடம் பெறவில்லை. தமிழ்நாட்டுக்கான திட்டங்களும் இல்லை; தமிழ்நாடு அரசு முன்வைத்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதற்கு பதிலடியாக மத்திய அரசு ஜூலை 27-ல் கூட்டியுள்ள நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்போம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்...

"எங்களை 25 தொகுதிகளிலும் ஜெயிக்க வைத்திருக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

 "எங்களை 25 தொகுதிகளிலும் ஜெயிக்க வைத்திருக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் ஒரு பட்ஜெட் என்றால்இந்தியாவுக்கு பொதுவானது தமிழ்நாட்டுக்கு இது கேரளாவுக்கு இதுதான் என்று தனித்தனியே பெயர் சொல்ல முடியாது. பட்ஜெட்டில் தமிழ்நாடுபெயர் வந்திருக்கவேண்டும் என்றால் எங்களுக்கு 25  எம்பிக்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆட்சி செய்யும் பீகார் மற்றும் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்யும் ஆந்திரா மாநிலங்களுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டுக்கு பிரத்யேகமாக எந்த திட்டமும்அறிவிக்கப்படவில்லை. இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கோபமடைந்துள்ளன. தமிழகத்தை திமுக ஆட்சி செய்யும் நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திம...

செய்யாறு: விடியா திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

விடியா திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில், விடியா திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வை கண்டித்து வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மு.எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது தாலுகா அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் பி.ஜாகீர் உசேன் ஆகியோர்  கலந்து கொண்டு ஆளும் திமுக அரசின் அவலநிலையை பட்டியலிட்டு பேசினர் தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது இந்நிகழ்வில், மாவட்ட அவைத்தலைவர் டிகேபி மணி மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் மாவட்ட துணைச்செயலாளர் விஎஸ்எஸ் லதாகுமார் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.மகேந்திரன் சி.துரை அருகாவூர் அரங்கநாதன் திருமூலன் வயலூர் ராமநாதன் வந்தவாசி எம்கேஏ லோகேஷ்வரன் வெண்குன்றம்...

தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில், தீவிரமாக ஒரு போராட்டம் நடத்தினால்தான் இந்த அரசு பணியும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில்,  தீவிரமாக ஒரு போராட்டம் நடத்தினால்தான் இந்த அரசு பணியும் - பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று வன்னியர் சங்கத்தின் 45-ம் ஆண்டு விழாவையொட்டி வன்னியர் சங்கத்தின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அச்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து வன்னியர் சங்கம்,பாமக நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- "1980ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி வன்னியர் சங்கம் துவக்கப்பட்டது. அப்போது 3 கோரிக்கைகள் அரசுக்கு முன்வைக்கப்பட்டது. அதில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூக மக்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்.வன்னியர்களின் மக்கள் தொகைக்கேற்ப 20 விழுக்காடும், பட்டியல் இன மக்களுக்கு கொடுக்கப்படும் 18 விழுக்காடுக்கு பதில் 22 விழுக்காடும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் 44 ஆண்டுகளாக 90 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து இட ஒதுக்கீட்டில் நாம் பெற்ற சொற்ப விகிதாச்சாரத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்திய பின் 10.5 சதவீத...

வங்கதேசத்தில் வன்முறைக்குக் காரணமான 30 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வங்கதேசத்தில் வன்முறைக்குக் காரணமான 30 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு! கடந்த 1971ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இடையில் சில காலம் ரத்து செய்யப் பட்டிருந்த இந்த இட ஒதுக்கீடு மீண்டும் அமலுக்கு வருவது குறித்து சமீபத்தில் வங்கதேச உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அங்கு போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இந்த கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தை வங்கதேச அரசு களமிறக்கியுள்ளது. நாடு முழுவதும் நடந்த வன்முறையில் இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கக் கூடாது என்றும் வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேச பிரதமர் அலுவலகம் மற்றும் கா...

மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய பாமகவினர் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு!

மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய பாமகவினர் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு! இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- "தமிழ்நாட்டில் பொதுமக்களையும், தொழில் துறையினரையும் கடுமையாக பாதிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடத்தியதற்காக என் மீதும், நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மீதும் சென்னை மாநகரக் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. திமுக அரசின் தூண்டுதலில் சென்னைக் காவல்துறை கட்டவிழ்த்து விட்டுள்ள இந்த அடக்குமுறையும், பொய்வழக்கு பதிவும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு கடந்த 15-ஆம் நாள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளே அதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. அந்தப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த அனுமதி கோரி, பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய சென்னை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பி.கே...

டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை கண்டதும் சுட உத்தரவு!

டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை கண்டதும் சுட உத்தரவு! சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டோரின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் தரப்படும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்களில் இதுவரை 130 க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கைத் தாண்டி வெளியே வருவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு அரசு வேலைகளில் சுமார் 30 இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், இந்த இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ளன. வங்கதேசத்தில் தொடரும் வன்முறையில் இதுவரை குறைந்தது 133 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆளும் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு இந்த போராட்டம் மிகப் பெரிய ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. ஹசீனா வெளிநாடுகளுக்கு அரசு முற...

ஆரணி: விடியா திமுக அரசின் அவல நிலையை கண்டித்து அதிமுக துண்டு பிரசுரம்!

ஆரணி: விடியா திமுக அரசின் அவல நிலையை கண்டித்து அதிமுக துண்டு பிரசுரம்! ஆரணி சட்டமன்ற தொகுதி மேற்கு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் கஞ்சா போதை பொருள் மற்றும் கள்ளச் சாராயம் தலைவிரித்து ஆடுவதை கண்டித்து, முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில், தி,மலை மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதா லட்சுமிகாந்தன் முன்னாள் எம்எல்ஏ  கலந்து கொண்டு அரையாளம், மருசூர், தச்சூர் தேவிகாபுரம், பகுதிகளில் விடியா திமுக அரசின் அவலநிலையை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்கள். இந் நிகழ்வில்,மாவட்ட கழக அவை தலைவர் கோவிந்தராஜன், ஒன்றிய கழக செயலாளர்கள் வழக்கறிஞர்  கே.சங்கர், ஜெயபிரகாஷ் ஆரணி நகர கழக செயலாளர் எ.அசோக்குமார், மாவட்ட கழக பொருளாளர் அரையாளம் எம்.வேலு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரி பி.பாபு, தி,மலை மத்திய மாவட்ட, ஒன்றிய,பேரூராட்சி கழக  நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்  

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம்!

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைபெறும்  கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம்!    திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யார் தொகுதி, வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வயலூர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக  அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே. மோகன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச் செயலாளர் வழக்கறிஞர் பி.ஜாகீர் உசேன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர் உடன் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜ்கணேஷ் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஜெ.சிவா உள்ளிட்ட ஒன்றிய, பேரூராட்சி வ...

தமிழகத்தில்‌ அதிகரித்து வரும்‌ படுகொலை சம்பவங்களுக்கு கடும்‌ நடவடிக்கை எடுக்காமல்‌ வேடிக்கை பார்த்து வரும்‌ விடியா திமுக அரசு! - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில்‌ அதிகரித்து வரும்‌ படுகொலை சம்பவங்களுக்கு கடும்‌ நடவடிக்கை எடுக்காமல்‌ வேடிக்கை பார்த்து வரும்‌ விடியா திமுக அரசு! - எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 'ஆளும்‌ வளரணும்‌, அறிவும்‌ வளரணும்‌, அதுதாண்டா வளர்ச்சி'' என்று பாடினார்‌ புரட்சித்‌ தலைவர்‌. 'புரட்சித்தலைவரின்‌ ரசிகன்‌ நான்‌ என்றும்‌, அவரது படங்களைப் பார்த்தே வளர்ந்தவன்‌ நான்‌' என்றும்‌ தேவைக்கேற்றார் போல்‌, சந்தர்ப்பத்திற்கேற்றார் போல்‌ சொல்லக்கூடிய இந்த விடியா திமுக அரசின்‌ முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌. தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு சட்டம்‌- ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித்‌ தராமல்‌, அவர்களை சிரமத்திற்குள்ளாக்கி தனது நிர்வாகத்‌திறமையின்மையை நாள்தோறும்‌ வெளிக்காட்டி வருகிறார்‌. கடந்த மூன்றாண்டுகளாக திமுக ஆட்சியில்‌ நடைபெறக்கூடிய சமூக விரோதச்‌ செயல்களை சுட்டிக்காட்டினால்‌, தமிழகம்‌ அமைதிப்‌ பூங்காவாக இருக்கிறது என்று வக்கனை பேசும்‌ ஸ்டாலின்‌, நான்‌ எத்தனையோ முறை வேண்டுகோள்‌ விடுத்த பின்னரும்‌ காவல்‌ துறையினரை சுதந்திரமாக செயல்பட விடாமல்‌ வைத்திருப்பது, ...

மனித உயிரையும், மனித உரிமைகள் குறித்தும் கவலைப்படாமல் தொடர் என்கவுண்டர்கள் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குவதாகும் - கே.பாலகிருஷ்ணன்

மனித உயிரையும், மனித உரிமைகள் குறித்தும் கவலைப்படாமல் தொடர் என்கவுண்டர்கள் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குவதாகும் - கே.பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்று, ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் குறியீட்டென் உயர்வுக்கு தகுந்தாற் போல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று மத்திய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு கணக்கி...

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்: திமுக எச்சரிக்கை

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்: திமுக எச்சரிக்கை புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மீண்டு்ம் திறக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. அவற்றைத் திறக்கக்கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ரேஷன் கடைகளை திறந்து அரிசி மற்றும் உணவுப் பொருட்களை தர கடந்த மக்களவைத் தேர்தலின் போது முதல்வர் ரங்கசாமியிடம் மக்கள் வலியுறுத்தினர். தேர்தல் முடிந்த நிலையிலும் இதுவரை ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக இன்று  செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களில் நியாய விலைக்கடைகளில் அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களோடு, எண்ணெய், பருப்பு வகைகள், மாவுப் பொருட்கள், காய்கறிகளும் விநியோகம் செய்யப்படுகின்றன. இவைமட்டுமல்லாது அன்றைய சந்தையில் விலையேறி அரிதாக உள்ள பொருள்களும் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுவது மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் உள்ளன. ஆனால் புதுச்சேரி இதற்கு விதிவ...

மின் கட்டண உயர்வு: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை!

மின் கட்டண உயர்வு: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை! "தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 4.83 விழுக்காடு, அதாவது யூனிட்டுக்கு 20 காசுகள் முதல் 55 காசுகள் வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன.ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து எந்த கவலையும் இல்லாமல் இரு ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாக மின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதே அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு குறைந்தது 6% அல்லது அந்த நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தின் பணவீக்கம், இவற்றில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்த ஆணைக்கு கடும் கண்டனம் தெரிவித்த நான், இனிவரும் ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று வலியுறுத்தினேன். அதையும் மீறி தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுற...

United states Secret Service:ரகசிய சேவை என்றால் என்ன?

United states Secret Service: ரகசிய சேவை என்றால் என்ன? அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் சீக்ரெட் சர்வீஸ் 1865-ல் நிறுவப்பட்டது மற்றும் இது பழமையான மத்திய புலனாய்வு சட்ட அமலாக்க நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் ஆரம்ப வேலை அமெரிக்க நாணயத்தின் கள்ளநோட்டுக்கு எதிராக போராடுவதாக இருந்தது, ஆனால் 1901-ல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லி படுகொலை செய்யப்பட்ட பின்னர் இது மாறியது. அவருக்கு முன், ஜனாதிபதிகள் ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜேம்ஸ் ஏ கார்பீல்ட் ஆகியோர் 1865 மற்றும் 1881 ஆம் ஆண்டுகளில் படுகொலை செய்யப்பட்டனர். அமெரிக்க அரசாங்க ஆவணக் காப்பகம் குறிப்பிடுகையில், "ஒரு தலைமுறைக்கு சற்று அதிகமான காலத்தில் ஜனாதிபதியின் மூன்றாவது படுகொலை - லிங்கன் கொல்லப்பட்டு 36 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது - தேசத்தை உலுக்கியது மற்றும் ஜனாதிபதியின் தனித்துவத்தைப் பற்றிய அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த அலுவலகத்தின் பொறுப்பாளரைச் சூழ்ந்த கடுமையான ஆபத்துகள்." 1902 ஆம் ஆண்டில், ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கான முழுநேரப் பொறுப்பை இரகசிய சேவை ஏற்றுக்கொண்டது. இது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் கீழ் வரு...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொன்விழா தொடக்கம்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொன்விழா தொடக்கம்!     திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொன்விழா தொடக்கக் கூட்டம் கிளைத் தலைவர் பூங்குயில் சிவக்குமார்  தலைமையில் நடைபெற்றது. சங்க துணைத்தலைவர் கவிஞர் தமிழ்ராசா, துணைச்செயலாளர் எம்.பி.வெங்கிடேசன் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர்  த. சாந்தி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருவண்ணாமலை மாவட்ட தலைவர் முத்துவேலன் படைப்பு-பண்பாடு-கருத்துரிமை என்று பொன்விழா மாநாடு முன்னெடுக்கும் கருப்பொருள் குறித்து சிறப்புரை ஆற்றினார். சங்கத்தின் மூத்த தலைவர்களான பெ.அரிதாசு,சோலை. பழனி, என்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். சோலை.பழனி பொன்விழா கொண்டாட்டத்தை வாழ்த்தி பேசினார். கவிக்கோ அபதுல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிஞர் தமிழ்ராசா பாராட்டி கெளரவிக்கப் பட்டார்.    நிகழ்ச்சியில்,வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.பி.வெங்கிடேசன், ஆசிரியைகள் ரசீனா,பூவிழி,வீனஸ் வித்யாலயா ...

தமிழகத்தில் ரௌடிகளின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் ரௌடிகளின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை! தமிழகத்தில் ரௌடிகளின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காவல்துறை வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்தன. தமிழகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா், குற்ற நடவடிக்கை அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டுள்ளனா். சமீபத்தில் இதற்கான மதிப்பீடு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இதில் 'ஏ பிளஸ்' பட்டியலில் 421 போ், 'ஏ' பட்டியலில் 836 போ், 'பி' பட்டியலில் 6,398 போ், 'சி' பட்டியலில் 18,807 போ் என 26,462 ரௌடிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனா். கடந்த காலங்களை ஒப்பிடும் போது தற்போது 'ஏபிளஸ்' மற்றும் 'ஏ' பட்டியல் ரௌடிகளின் எண்ணிக்கை சுமாா் 50 சதவீதம் குறைந்துள்ளது. இதுபோன்ற தொடா் குற்றச்செயலில் ஈடுபடும் ரௌடிகளை கட்டுப்படுத்த காவல் நிலைய அளவில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். தமிழகம் முழுவதும் அதிக குற்றச்செயலில் ஈடுபடும் 550 ரௌடிகள் கண்டறியப்பட்டு அவா்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது. இதில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கொலை வழக்கில் தொடா்ப...