Skip to main content

Posts

Showing posts from August, 2023

செப்.18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் மத்திய அரசு திடீர் அறிவிப்பு

செப்.18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் மத்திய அரசு திடீர் அறிவிப்பு  புதுடெல்லி: செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இந்தக் கூட்டத் தொடரின் பெரும்பாலான அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, நாடாளுமன்றம் முடங்கியது. இந்நிலையில், திடீர் அறிவிப்பாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22 வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22 வரை கூட்டப்படுகிறது. அமிர்த காலத்தை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் நடத்த எதிர்பார்க்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு முடிந்த பிறகு இந்தக் கூட்டத் தொடருக்கு ...

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் கோலாகலம்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், அற்புதங்களின் உறைவிடமாக, உலகப் புகழ் பெற்ற கிறிஸ்துவ பேராலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. பசலிக்கா அந்தஸ்து பெற்ற இத்தலம்,  கீழை நாடுகளின் லூர்து எனவும் போற்றப்படுகிறது. இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஊர்வலமும், அதற்கு முன்பாக தேர் பவனியும் நடைபெற்றது. உற்சாகமான முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஊர்வலம், கடற்கரை சாலை, ஆர்யநாட்டுத் தெரு, கடைவீதி வழியே பேராலய வளாகத்தை வந்தடைந்தது. பின்னர்,  தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில், திருக்கொடியைப் புனிதம் செய்விக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளை நடத்தி அவர், கொடியைப் புனிதம் செய்வித்தார். பேராலய அதிபர் சி. இருதயராஜ், பங்குத் தந்தை எஸ். அற்புதராஜ் உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோர் உடனிருந்து வழிபாடுகளை ந...

திருவண்ணாமலை: 253 பேருக்கு பணி ஆணைகள், ரூ.14.02 கோடி கடனுதவிகள் அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

திருவண்ணாமலை: 253 பேருக்கு பணி ஆணைகள், ரூ.14.02 கோடி கடனுதவிகள் அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா் திருவண்ணாமலையில் நேற்று  நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில், 253 பேருக்கு பணி ஆணைகள், மகளிா் குழுக்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்ட உறுப்பினா்களுக்கு ரூ.14.02 கோடியில் கடனுதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருவண்ணாமலையில் மாபெரும் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நேற்றைய தினம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அருணை பொறியியல் கல்லூரி சாா்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாம் தொடக்க விழாவுக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் எஸ்.அம்பேத்குமாா், பெ.சு.தி.சரவணன், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் திட்ட இயக்குனர் சையத் சுலைமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி வரவேற்றாா். தமிழ...

ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உள்ளதா? - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உள்ளதா? - முதல்வர்  மு.க.ஸ்டாலின் பாஜக ஆட்சியில் 7 விதமான ஊழல்கள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும்  ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உள்ளதா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். நாகை எம்.பி செல்வராஜின் இல்லத் திருமண விழா திருவாரூரில் உள்ள பவித்திரமாணிக்கத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது "நாடாளுமன்ற தேர்தலை நாம் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலை எப்படி சந்திக்கப்போகிறோம் என்றால், ஏதோ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தலாக நினைத்துவிடக்கூடாது. ஆட்சிமாற்றத்துக்கான தேர்தல் என்றுகூட நினைத்துவிட வேண்டாம். இந்திய ஜனநாயகம் காப்பாற்றப் பட வேண்டும். இன்றைக்கு சர்வாதிகார ஆட்சியை, பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தை காப்பாற்றிவிட்டோம். இந்தியாவை காப்பாற்றக்கூடிய நிலைக்கு நாம் தற்போது வந்துள்ளோம். இந்தியாவை காப்பாற்ற தற்போது இந்தியா கூட்டணி அமைந்திருக்கிறது. பீஹார் மாநிலத்தில் நிதிஷ் குமா...

நாகப்பட்டினம்: அரசு துறையை சேர்ந்த 8 பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசுகளை வழங்கினார்

நாகப்பட்டினம்: அரசு துறையை சேர்ந்த 8 பணியாளர்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசுகளை வழங்கினார்  திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் அரசுத் துறையைச் சேர்ந்த 8 பணியாளர்கள் மற்றும்  4 தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். சிறந்த சமூக சேவையாற்றிய அரசுத் துறை பணியாளர்கள் நாகப்பட்டினம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வரும் ஜீ. ஜெயராமன் , கடந்த 15 ஆண்டுகளாக நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 6 வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து கொசு மருந்து தெளிக்கும் பணியை சிறப்பாக மேற்கொண்டு பொதுமக்களிடம் பாராட்டு பெற்றுள்ளார். ஏனங்குடி அரசு ஆரம்ப சகாதார நிலையத்தில் துணை செவிலியராக பணிபுரிந்து வரும் பி. காந்திமதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக பிரசவங்களை கையாண்டு, தாய் மற்றும் சிசு இறப்பின்றி மகப...

காலை உணவுத் திட்டத்தில் தயாரிக்கப்படும் உணவு தரமாக இருக்க வேண்டும் - அமைச்சா் எ.வ.வேலு

காலை உணவுத் திட்டத்தில் தயாரிக்கப்படும் உணவு தரமாக இருக்க வேண்டும் - அமைச்சா் எ.வ.வேலு  திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தில் தயாரிக்கப்படும் உணவு தரமானதாக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், கொளக்குடி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், முதல்வரின் காலை உணவுத் திட்ட துவக்க விழா நேற்று  நடைபெற்றது. இவ் விழாவில், பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்து பேசினார்: "திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் கட்டமாக 75 பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரத்து 522 மாணவ-மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனா். 2-ஆம் கட்டமாக வெள்ளிக்கிழமை முதல் 18 ஊராட்சி ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள், 2 நகராட்சிகளில் இயங்கி வரும் 1,616 பள்ளிகளில் பயிலும் 87 ஆயிரத்து 842 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தயாரிக்கப்படும் உணவு சுவையாகவும், தரமானதாகவும் இருக்க...

திருவண்ணாமலை ஆகஸ்ட் 27-ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 7 ஆயிரம் பேருக்கு வேலை!

திருவண்ணாமலை ஆகஸ்ட் 27-ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 7 ஆயிரம் பேருக்கு வேலை! திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெறும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில், 150 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 7 ஆயிரம் பேரை தோ்வு செய்ய உள்ளன என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகளிா் திட்டம் இணைந்து முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளன. அருணை பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.27) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 150-க்கும் மேற்பட்ட முன்னனி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண்களை தோ்வு செய்ய உள்ளனா். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டம், முதுநிலைப் பட்டம், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல் தோ்ச்சி பெ...

தெள்ளார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் கருத்தரங்கம்

தெள்ளார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் கருத்தரங்கம் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஷாயிராபீ தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் டிகேஜி ஆனந்த், கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இசையாசிரியர் டி.பி. வெங்கடேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தெள்ளார் சப் இன்ஸ்பெக்டர் ஏ. சுந்தரமூர்த்தி  பங்கேற்று, பெண் கல்வியும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் பெண்கள் பல்வேறு நிலைகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றியும், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார். மேலும் இந் நிகழ்வில் தன்னம்பிக்கை பயிற்சியாளர் பி. மனோஜ் குமார், பட்டதாரி ஆசிரியர் சக்திவேல்  உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். பல்திறன் போட்டிகளில்...

அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு  சென்னை: அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய ஆணையிட்டுள்ளனர். மருத்துவப் பணிகள் இயக்குநருக்கு அறிவுறுத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநோயாளிகள் பிரிவுக்கு பொறுப்பான மருத்துவர்கள், பணியாளர்கள் காலை 7.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை பணியில் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் உள்நோயாளிகள் சேர்க்கையை கண்காணிக்க வேண்டும். மருத்துவ கண்காணிப்பாளர் காலை 8 மணி முதல் அவசரகால அடிப்படையில் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 13,211 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும்பாலும் குறித்த நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனைகளில், பல்துறை மருத்துவ...

மதுரை மாநாடு வரலாறு படைத்தது - அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி!

மதுரை மாநாடு வரலாறு படைத்தது - அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி! அதிமுக சார்பில் மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வரலாறு படைப்பதற்குக் காரணமாக இருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "அதிமுகவின் மதுரை மாநாடு,இந்தியாவே திரும்பிப் பார்க்கும்வகையில் வெற்றி அடைந்திருக்கிறது. கடல் அலைபோல ஆர்ப்பரித்துவந்த கட்சித் தொண்டர்கள், எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும், நமது ராணுவக் கட்டுக்கோப்பையும், விசுவாசத்தையும் நிரூபித்துள்ளனர். அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும், தமிழ்நாட்டு மக்களின் துயர்விரைவில் தீரும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் இந்த மாநாடு விதைத்திருக்கிறது. அண்ணாவின் உருவத்துடன் கூடிய கட்சிக் கொடி, மதுரை மண்ணில் லட்சக்கணக்கான தொண்டர்களின் மத்தியில் அசைந்தாடிய காட்சிகள், ஒவ்வொரு தொண்டரையும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ் கடித்தது. கட்சியின் 3-ம் தலைமுறை எழுச்சிய...

ஆரணி: மதுரை அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்!

ஆரணி: மதுரை அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில், வரும் ஆகஸ்ட் 20 மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் ராமச்சந்திரன் தலைமையில், நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர் இந் நிகழ்வில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில  துணைச்செயலாளர் பி.ஜாகீர் உசேன் முன்னாள் எம்எல்ஏ க்கள்  ஏகேஎஸ் அன்பழகன் பாபு முருகவேல் நகர மன்றத் துணை தலைவர் பாரிபாபு நகர கழக செயலாளர் அசோக்குமார் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் துணைச்செயலாளர்கள் டி.பி.துரை எல்.என்.துரை விஎஸ்எஸ் லதாகுமார் முன்னாள் எம்எல்ஏ நளினி மனோகரன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ராஜேஷ் கண்ணா ஒன்றிய கழக செயலாளர்கள் செய்யாறு எம்.மகேந்திரன் அனக்காவூர் சி.துரை அருகாவூர் அரங்கநாதன் வந்தவாசி எம்க...

செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20 மதுரை பொன் விழா மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம்!

செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20 மதுரை பொன் விழா மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், ஆகஸ்ட் 20 மதுரை பொன் விழா மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில  துணைச்செயலாளர் பி.ஜாகீர் உசேன்  வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மு.எம்எல்ஏ முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் செய்திருந்தார் அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது இந் நிகழ்ச்சியை தொடர்ந்து பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான பிரச்சார வாகனம் துவக்கி வைக்கப்பட்டது வாகனத்திற்கு முன்னும்...

பேராசிரியர் முனைவர் மா. நன்னன் நூல்கள் நாட்டுடைமை ரூ.10 இலட்சத்திற்கான நூலுரிமை காசோலையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பேராசிரியர் முனைவர் மா. நன்னன்  நூல்கள் நாட்டுடைமை  ரூ.10 இலட்சத்திற்கான நூலுரிமை காசோலையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்   சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேராசிரியர் மா. நன்னன் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரின் துணைவியார் ந.பார்வதி அம்மாள் அவர்களிடம் நூலுரிமை பரிவுத் தொகையான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 173 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 13.87 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து இது நாள்வரை சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், ப...

மேற்கு ஆரணி வண்ணாங்குளம் பகுதியில் புதியதாய் கட்டப்பட்டு வரும் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டிலான பயணிகள் நிழற்குடை!

மேற்கு ஆரணி வண்ணாங்குளம் பகுதியில் புதியதாய் கட்டப்பட்டு வரும் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டிலான பயணிகள் நிழற்குடை! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வண்ணாங்குளம் பகுதியில் புதியதாய் கட்டப்பட்டு வரும் பேருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியினை, முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் ராமச்சந்திரன் பார்வையிட்டு, விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார் உடன் மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கொளத்தூர் திருமால், ஐ டி விங் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சரவணன், நகர மன்ற உறுப்பினர் வெங்கடேசன், கழக நிர்வாகி உசேன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

செய்யூா்-வந்தவாசி-போளூா் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு!

செய்யூா்-வந்தவாசி-போளூா் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு! செய்யூா்-வந்தவாசி-போளூா் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் எம்.கே.செல்வன் ஆய்வு செய்தாா். சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து செய்யூா், மேல்மருவத்தூா், வந்தவாசி, சேத்துப்பட்டு வழியாக போளூா் வரை செல்லும் 109.27 கி.மீ. தொலைவுள்ள சாலையை ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் சுமாா் ரூ.600 கோடி மதிப்பீட்டில், இரு வழித்தட சாலையாக மேம்படுத்தும் பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதில் 5 உயா்மட்ட பாலங்கள், ஒரு ரயில்வே கீழ்பாலம், 12 சிறு பாலங்கள், 214 வாய்க்கால் பாலங்களும், உள்ளன வந்தவாசி, சேத்துப்பட்டு, மருதாடு பகுதிகளில் புதிய புறவழிச் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலைப் பணிகளில் 82 சதவீதமும், புறவழிச் சாலை பணிகளில் 88 சதவீதமும் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் எம்.கே.செல்வன் நேரில் பாா்வையிட்டாா். அப்போது, அமைக்கப்பட்டு வரும் சாலையின் தரத்தை அவா் ஆய்வு செய்தாா். மேலும், பாலம் கட்டுமானப் பணிகளையும் அவ...

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்!

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில், வேலை வாய்ப்பு, தொழில் வழிகாட்டுதல் பிரிவு, உள்தர மதிப்பீட்டு பிரிவு சாா்பில் கருத்தரங்கு நடைபெற்றது இக் கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் சி.ருக்மணி தலைமை வகித்தாா். கல்லூரி நிறுவனா் பி.முனி ரத்தினம், கல்லூரிச் செயலாளர் எம்.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில், ‘தொழிலில் தயாா் நிலை’ என்ற தலைப்பில் சென்னை ஐசிடி அகாடமியின் இணை துணைத் தலைவா் ஜி.சரவணன், மேலாளா் ஜெ.ஜெய்ரூஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். அப்போது, தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள், அரசு வழங்கும் நிதியுதவிகள் உள்ளிட்டவை குறித்து மாணவிகளுக்கு விளக்கினா். நிகழ்ச்சியை, கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் கி.வான்மதி செல்வி தொகுத்து வழங்கினாா். முன்னதாக, கல்லூரி வேதியியல் துறைத் தலைவா் எ.ஷோபா வரவேற்றாா். இறுதியில் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.சுஜாதா நன்றி கூறினாா்.

வந்தவாசி கிளை நூலகத்தில் தேசிய நூலகர் தினவிழா உரையரங்கம்!

வந்தவாசி கிளை நூலகத்தில் தேசிய நூலகர் தினவிழா உரையரங்கம்! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் தேசிய நூலகர் தினத்தையொட்டி புத்தகங்களை வாசிப்போம், மனிதர்களை நேசிப்போம் என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு நூலகர் எஸ்.ஜோதி தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன், பூங்குயில் சிவக்குமார், மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி நகர மன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனுவாசன் பங்கேற்று, புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார். மேலும் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் அமைத்திட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பிறகு நூலகத் தந்தை அரங்கநாதன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் நான் விரும்பும் புத்தகம் என்ற தலைப்பில் உரையாற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜோதிடர் கு‌.சதானந்தன், முதுகலை ஆசிரியர் முருகன், பட்டதாரி ஆசிரியர் கார்த்திகேயன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். சுதந்திர...

வந்தவாசி: ஆகஸ்ட் 20 மதுரை அதிமுக பொன் விழா மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம்!

வந்தவாசி: ஆகஸ்ட் 20 மதுரை அதிமுக பொன் விழா மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம்!  மதுரையில் அதிமுக சார்பில் நடைபெற உள்ள  பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகள் குறித்து, வந்தவாசி தொகுதி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வீரம்பாக்கம் ஆவின் வளாகத்தில் நடைபெற்றது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட கழக அவைத்தலைவர் டி.கே.பி மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில  துணைச் செயலாளர் பி.ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ  ஆலோசனைகளை வழங்கி பேசினார் இந் நிகழ்வில், மாவட்ட துணைச்செயலாளர் டி.பி துரை ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜ்கணேஷ்  ஒன்றிய கழக செயலாளர்கள் அருகாவூர் அரங்கநாதன் அனக்காவூர் சி.துரை தெள்ளாறு டி.வி.பச்சையப்பன் ஆரணி ஜி.வி.கஜேந்திரன் வழக்கறிஞர் சங்கர் பெரணமல்லூர் ஜி செல்வராஜ் வந்தவாசி எம்.கே.ஏ லோகேஷ்வரன் வெண்குன்றம் முனுசாமி மற்றும் நகர கழக செயலாளர்கள் செய்யாறு கே.வெங்கட...

வந்தவாசி: பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தின தேசபக்தி பாடல்கள் இசைப் பயிற்சி முகாம்!

வந்தவாசி: பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தின தேசபக்தி பாடல்கள் இசைப் பயிற்சி முகாம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான  "தேசபக்தி பாடல்கள்" இலவச இசைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இவ்விழாவுக்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை இரா. மங்கவரதாள்  முன்னிலை வகித்தார். யுரேகா கற்றல் திட்ட மேலாளர் க. முருகன்  வரவேற்றார்.      இசைப்பயிற்சி முகாமை அருவி அறக்கட்டளை நிறுவனர் ஏ.ஜெ.ரூபன்  தொடங்கி வைத்து, இசைப்புத்தகத்தை வெளியிட்டார். மேலும்  தேசபக்தி பாடல்கள் மற்றும் இசையின் சிறப்புகளை விளக்கிப் பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் செய்யாறு சட்டப் பணிக்குழு ஆலோசகர் வி. விஜயகுமார், முதுகலை ஆசிரியர்கள் உமாதேவி, பத்மநாபன் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.   இசைப்பயிற்சியில் பாரதியார், பாரதிதாசன், காந்தியடிகள், கொடி காத்த குமரன், காமராசர் போன்றவர்களின் பாடல்கள் இசையுடன் மாணவர்களுக்கு பய...

மத்திய அரசு அலுவலகங்களை ஆக.12-ல் முற்றுகையிட்டு போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

மத்திய அரசு அலுவலகங்களை ஆக.12-ல் முற்றுகையிட்டு போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு  திருவாரூர்: காவிரி நீரை பெற்றுத் தர வலியுறுத்தி, ஆக.12-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திருவாரூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் பழனிச்சாமி, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கே.மாரிமுத்து, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர்கள் திருவாரூர் வை. செல்வராஜ், தஞ்சை தெற்கு முத்து உத்திராபதி, தஞ்சை வடக்கு மு.அ.பாரதி, மயிலாடுதுறை வீரராஜ் மற்றும் நாகை மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்கர் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியது: "திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது காவிரியில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய தண...

ஆரணி, தேவிகாபுரம், அரசு, சுயநிதியுதவி 14 பள்ளிகளை சோ்ந்த 2,111 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள்!

ஆரணி, தேவிகாபுரம், அரசு, சுயநிதியுதவி 14 பள்ளிகளை சோ்ந்த 2,111 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள்! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்தப் பள்ளியைச் சோ்ந்த 565 மாணவ, மாணவிகள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த -427, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி -151, எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலைப் பள்ளி -78, இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி -29, நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி -65, புனித வளனாா் பள்ளி -147, குன்னத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி -96, அக்ராபாளையம் -57, முள்ளண்டிரம்-56 என 10 பள்ளிகளைச் சோ்ந்த 1,671 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்து, சைக்கிள்களை வழங்கி பேசினாா். ஆரணி நகரமன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி,  ஒன்றிய கழக செயலாளர்  எஸ்.எஸ்.அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.மகேஸ்வரி வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாள...

வந்தவாசி: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அமைச்சர்எ.வ.வேலுநேரடிஆய்வு!

வந்தவாசி: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அமைச்சர்எ.வ.வேலுநேரடிஆய்வு! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட ஆய்வுப் பணிகளை, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மேற்க்கொண்டார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோட்டாட்சியர் அனாமிகா துணைப் பதிவாளர்கள் கமலக்கண்ணன் ராஜசேகர் மேலாண்மை இயக்குநர் பிரகாஷ் கூட்டுறவு சார் பதிவாளர் மூர்த்தி மேலாளர் காலேஷா ஆகியோர்  முன்னிலை வகித்தனர் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் டாக்டர் கலைஞரின் 5 ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப் பட்டிருந்த கலைஞரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் உடன் மாவட்ட திமுக செயலாளர்  எம்.எஸ்.தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்குமார் ஓ.ஜோதி மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன்  வந்தவாசி நகர மன்றத்தலைவர் எச்.ஜலால் துணைத்தல...

செய்யாறு: மாமண்டூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா!

செய்யாறு: மாமண்டூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா!  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாமண்டூா் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி வழங்கினார் செய்யாறு கல்வி மாவட்டம் மாமண்டூா் அரசுப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்குதல், பிளஸ் 2 தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு ரொக்கப் பரிசு, தாய்ப்பால் வார விழா என முப்பெரும் விழா வாக நடைபெற்றது. மாமண்டூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ் விழாவுக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், வெம்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவருமான டி ராஜி தலைமை வகித்தாா். இந் நிகழ்வில்,வெம்பாக்கம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் என்.சங்கா், செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் எல்லப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) ராஜேந்திரன் வரவேற்றாா். இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று 124 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5.98 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை வழங்கி பேசினார் நிகழ்ச்சியை தொடர்ந்து பிளஸ் 2 தோ்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவி தீபாவுக்கு...

"பாஜக ஆட்சியை பிடிக்க எதையும் செய்யும்" மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"பாஜக ஆட்சியை பிடிக்க எதையும் செய்யும்"  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக உரையாடினார். அப்போது பேசிய அவர், "கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும். கட்சியினர் இப்போதே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். திமுக அனைத்து தொண்டர்களுக்கும் பொதுவானது, நிர்வாகிகளுக்கு மட்டுமே சொந்தம் இல்லை. ஆட்சி அனைவருக்கும் பொதுவானது, அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மட்டுமே சொந்தம் அல்ல. ஆட்சியைப் பிடிக்க கட்சி பயன்பட வேண்டும்!  ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து ஒற்றை சிந்தனையுடன் செயல்பட வேண்டும். அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பொது இடங்களில் கவனமுடன் பேச வேண்டும்" என அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், "கலைஞர் நூற்ற...

அவதூறு வழக்கு: ராகுலின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு

அவதூறு வழக்கு: ராகுலின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லி: மோடி பெயர் சர்ச்சை விவகாரத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக மன்னிப்பு கோர முடியாது என ராகுல் காந்தி உறுதியாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில் வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவரது 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தார். இதனால் அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரசார கூட்டத்தில் மோடி பெயர் தொடர்பாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ‛மோடி' என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள் எனும் வகையில் அவர் பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அம்மாநில பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார...

110 கி.மீ., 4 மணி நேர பயணம்: யாழ்ப்பாணம் - நாகப்பட்டினம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை!

110 கி.மீ., 4 மணி நேர பயணம்: யாழ்ப்பாணம் - நாகப்பட்டினம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை! ராமேஸ்வரம்: இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன் துறை துறைமுகம் அந் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது சேதமடைந்தது. இந்த துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு, கடந்த 2018-ம் ஆண்டில் சுமார் ரூ.300 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியது. இந்தியாவின் நிதி உதவி மூலம் இத்துறைமுகமானது, வர்த்தக ரீதியிலான துறைமுகமாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, 16.06.2023-ல் திறக்கப்பட்டது. முன்னதாக, காங்கேசன் துறையிலிருந்து புதுச்சேரியிலுள்ள காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கடந்த மாத இந்திய வருகையின்போது, காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து வவுனியாவில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் செய்தியாளர் களி...

வந்தவாசி: மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,சிஐடியு சார்பில் ஆா்ப்பாட்டம்

வந்தவாசி: மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,சிஐடியு சார்பில் ஆா்ப்பாட்டம் மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு சாா்பில் வந்தவாசி நகரில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வந்தவாசி தேரடியில் உள்ள அஞ்சலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரச் செயலாளர் ஜா.வே.சிவராமன் தலைமை வகித்தாா். சங்க மாவட்டத் தலைவா் கே.வெங்கடேசன் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மற்றும் சிஐடியு நிா்வாகிகள் ந.ராதாகிருஷ்ணன், முரளி, ஆ.உதயகுமாா், இரா.ராமகிருஷ்ணன், கி.பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா்.